Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Saturday, January 22nd, 2011 | Posted by admin பலாலி வானூர்தி நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் விரைவில் ஆரம்பம் – இந்தியத் தூதுவர் தகவல் பலாலி இராணுவ வானூர்தித்தளத்தை பொதுமக்கள் வானூர்தி நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உதவிகளை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வர்த்தக கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் இந்தியா அக்கறையுடன் உள்ளது. இதற்காக பலாலி வானூர்திப்படைத் தளம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். தலைமன்னார் ப…

    • 1 reply
    • 468 views
  2. தெற்கில் மரக்கறி விற்பனை வடக்கில் மரக்கறிச் செய்கை இராணுவத்தின் புதிய திட்டம் சனி, 22 ஜனவரி 2011 21:18 வடமாகாணத்தில் உள்ள பத்து இராணுவ முகாம்களில் மரக்கறிச் செய்கையை மேற்கொள்ள இராணுவம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து முகாம்களில் மரக்கறிச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 250 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மரக்கறிச் செய்கை மூலம் பெறப்படும் மரக்கறிகள் குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் இராணுதரப்புத் தெரிவித்துள்ளன. tamilcnn

  3. Jan 22, 2011 / பகுதி: செய்தி / சமாதான ஒப்பந்தம் - ஆராய முயன்ற நோர்வே நாட்டவர்களுக்கு சிறீலங்கா வீசா மறுப்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான ஒப்பந்தம் தோல்வியுற்றமைக்கான காரணம் குறித்து ஆராய இலங்கை வரமுயன்ற நோர்வே நாட்டவர் இருவருக்கு அரசாங்கம் வீசா மறுத்துள்ளது. நோர்வேயில் இயங்கும் மிசல்சன் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது பிரதி அதிகாரி இருவரும் - சமாதான ஒப்பந்தத்தின் தோல்வி குறித்து ஆராய - இலங்கைக்கான விஜயத்துக்கு வீசா அனுமதி கோரியிருந்தனர். ஆயினும் அரசாங்கம் அவர்களுக்கான வீசா அனுமதியை மறுத்துள்ளது. pathivu

    • 1 reply
    • 507 views
  4. அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால்முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு. பிரித்தானியாவில் தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று சிங்கள அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள். போர்க்குற்றவாளியை கைதுசெய், ஜ.நாவே தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடாத்து,அமெரிக்காவே தமிழர்களுக்கு உதவி செய் போன்ற பதாதைகளோடு கோசங்களும் எழுப்பப்பட்டன. இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் கோசத்துடன் போராட்டம் நிறைவடைந்தது. info@rste.org

  5. Transnational Government of Tamil Eelam urges United States to investigate Mahinda Rajapaksa! Urges people to actively participate in the demonstrations around the world Transnational Government of Tamil Eelam (TGTE) urged the United States to investigate Sri Lankan President Mahinda Rajapaksa, who arrived on a surprise visit to the United States, for his role in perpetrating Genocide, crimes against humanity and war crimes against Tamil civilians. TGTE also urged Eelam Tamils to actively participate in the demonstrations being held outside the White House & the State Department and outside US Embassies in many centers around the world, calling on…

  6. பிரதமர் மன்மோகன் சிங்கை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில் நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், எதிர்காலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் தளம் அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குக் கேடு செய்யும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று (22.1.2011) காலை பத்து மணி அளவில், டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் சந்தித்தார். பத்து மணிக்கு சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆன…

  7. இலங்கை ஜனாதிபதி அமெரிக்காவுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கிய அமெரிக்க அரசின் செயற்பாடு, இனப்படுகொலை புரிந்த றடொவான் கராஜிட்ஸ், அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு நிகரானதென பேராசிரியர் பிறான்சிஸ் பொய்ல் குற்றம் சாட்டினார். மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்குச் செல்வதற்கு விசா வழங்கிய பறாக் ஒபாமா அரசின் செயற்பாட்டை அவர் கடுமையாக விமர்சித்தார். பொஸ்னிய அமைதிப் பேச்சுக்களின்போது, கராஜிட்ஸ், அமெரிக்கா வருவதற்கு கிளின்ரன் அரசு அனுமதி வழங்கியதெனவும், கராஜிட்ஸ் அமெரிக்காவில் காலடி வைத்தவுடன், அவரைக் கைது செய்து, ஜெனீவா சாசன மீறல்கள், இனப்படுகொலைச் சாசன மீறல்கள் தொடர்பாக விசாரித்து நீதிமன்றத்தில் நிறுத்தும் கடப்பாடு அமெரிக்காவுக்கு இருந்ததெனவும் பேராசிரியர் பொய்ல் த…

    • 4 replies
    • 848 views
  8. செய்திக்குறிப்பு : தமிழீழ தேசிய அட்டை நாதம் ஊடகசேவை - தகவல்துறை அமைச்சகம் 22 சனவரி 2011 புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம், தாங்கள் ஒரு இறைமையுள்ள தேசிய இனம் என குறியீட்டுரீதியாக அடையாளப்படுத்தும், தமிழீழத் தேசிய அட்டையை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கி வருகின்றது. தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் முதல் இந்த அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் முதல்கட்டமாக தேசிய அட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றது. ஏனைய நாடுகளில் விரைவாக விரிவுபடுத்தப்பட இருக்கின்றது. அமெரிக்காவில், தமிழீழ தேசிய அட்டை உத்தியோகபூர்வமாக கை…

    • 1 reply
    • 1.2k views
  9. இராணுவத்தின் கூலிப்படையாக விளங்கிய குழுக்களை கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? சிறிய அளவிலான மக்கள் கூட்டம் கூட இவர்கள் பின்னால் நிக்காத போது, இந்த அமைப்புக்களைச் சேர்ப்பினால் சாதிக்கப் படத்தக்க அநுகூலம்தான் என்ன? சிங்களம் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யக் காத்திருக்கும், இவர்களின் தமிழர்களுக்கான பயன்பாடு என்னவாக இருக்க முடியும்? ஆக சிங்களத்தினதும், இந்தியத்தினதும் கடைக்கண் அருளைப் பெறுதலுக்காகவா இந்த விபச்சாரக் கூட்டணி?

    • 9 replies
    • 2.2k views
  10. முன்னாள் யாழ் மாவட்ட முன்னணி மண்ணெண்ணை பதுக்கல் வியாபாரியும் பின்னாள் ஐ தே க அமைச்சருமான மகேஸ்வரனின் மனைவியும் தற்கால யாழ் மாவட்ட ஐ தே க எம்பியுமான விஜயகலா மகிந்தரோடு கூடி இருந்து பொங்கல் கொண்டாடும் அற்புதக் காட்சியையே தற்போது கண்டு கொண்டிருக்கிறீர்கள். இவரின் கணவர் கொழும்பில் வைத்து அதுவும் கோவிலில் வைத்து இதே மகிந்தரின் ஆட்சியில் போட்டுத்தள்ளப்பட்டதை அக்காச்சி தமிழ் மக்களின் "அதி உன்னத" நலன் கருதி மறந்திட்டாவாமெல்லே...??! காலமடா சாமி. தமிழக அரசியல்வாதிகளை தூக்கிச் சாப்பிட்டிடுவாங்க போல இருக்கு நம்மட ஆக்கள்..! எதுஎப்படியோ அக்காச்சி தாடிக்கார அண்ணாச்சிக்கு ஆப்படிக்க தயாராகிட்டா என்றது மட்டும் விளங்குது. படம்: முகநூல்.

    • 3 replies
    • 2.9k views
  11. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுடனான நேரடி பேச்சுக்களை இலங்கை துண்டித்துள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமை தாங்கியவரான தற்போதைய ஐ.நாவுக்கான பிரதி இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு எழுதிய கடிதமொன்றில், இலங்கை அரசாங்கம் பான் கீ மூனின் ஆலோசகர்களுடன் பேசும் எனவும் போர்க்குற்றங்களுக்கான விசாரணைக்குழுவுடன் பேச்சு நடத்தாது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலம் முடிவடையும் காலத்தை கடத்துவதற்கானதாக இருக்கலாம் என ஐ.நா. அதிகாரிகள் கருதுவதாக டர்டில் பே…

    • 2 replies
    • 1.1k views
  12. மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களை வன்னியில் தேடும் தமிழ்க் கூட்டமைப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் கூட்டம் வவுனியா புகையிரத நிலைய வீதி வைரவப் புளியங்குளத்தில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்தில் இன்று மாலை 5.00மணியளவில் இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழரசுக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எவ் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் மத்தியகுழு உறுப்பினர்களான சிவனேசன் பவான், வவுனியா நகரச…

  13. ''காங்கிரஸ் - தி.மு.க. தரப்புகளை வீழ்த்த சீமான் செமத்தியான ஆயுதம்!'' என எதிர்க்கட்சிகள் ஆர்வத்தோடு இருக்க... சீமானுக்கு குறிவைத்து சிலர் ஆயுதங்களோடு தமிழகத்தில் உலவி வருவதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. புலிகளுடனான தொடர்பில் இருந்த சிலரே இதுகுறித்து பதற்றத்தோடு நம்மிடம் பேசினார்கள். ''தமிழகத்தின் எழுச்சியைத் தணிய​விடாது செய்யும் சீமானின் முழக்கமும், நாளைய அரசியலை நோக்கி அவர் உருவெடுப்பதும் சிங்கள அரசால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அரசியல் அரங்கில் சீமான் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பது சிங்கள அரசுக்கு குடைச்சலாக இருக்கிறது. அதனால் புலிகளுக்குப் போட்டிக் குழுக்களாக விளங்கும் இரு குழுக்களில் இருந்து ஆறு பேர் தயார் செய்யப்பட்டு அவர்கள் முழுவிதமான பயிற்சிகளுடன் தமிழகத…

    • 0 replies
    • 1.8k views
  14. மீள் குடியேற்றம் செய்யப்பட்டோர் குறித்து ஐ நா கவலை இலங்கையின் வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து மீள குடியேறியுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை சேவைகள், இருப்பிடம் மற்றும் குடிநீர் போன்ற விடயங்கள் போதுமான அளவவில் கிடைக்கவில்லை என்று ஐநாவின் துணை பொதுச் செயலாளரான கத்தரின் பரக் கூறியுள்ளார். வியாழக்கிழமை வட பகுதிக்கு சென்று வந்த அவர், வெள்ளிக் கிழமையன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். வடபகுதியில் மீளக்குடியேறிய மக்கள் இன்னமும் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கின் எதிர்காலம் என்பது அங்கு மக்களில் முதலீடு செய்வது என்பதிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடாத…

    • 2 replies
    • 845 views
  15. இலங்கையில் இலக்கிய விழாவா? புயலாக சீறுகிறார் எழுத்தாளர் அருந்ததி வெள்ளி, 21 ஜனவரி 2011 01:29 இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற இலக்கிய விழாவை எழுத்தாளர்கள் அனைவரும் ஒருமித்துப் புறக்கணிக்க வேண்டும் என்று கொக்கரிக்கின்றார் சர்சைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய். இந்நாட்டில் இடம்பெறுகின்ற அடக்குமுறைகள், அநியாயங்கள், சுரண்டல்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக எழுத்தாளர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றும் மஹிந்த அரசின் ஏற்பாட்டில் காலியில் இடம்பெற இருக்கும் இவ்விழாவை பகிஷ்கரிப்புச் செய்ய வேண்டும் என்றும் இவர் குரல் கொடுத்து உள்ளார். பேசும் திராணி அற்றவர்களாக நசுக்கப்பட்டு இருக்கின்ற இலங்கைச் சகோதரர்களுக்காக விழாவை புறக்கணிக்க வே…

    • 23 replies
    • 2.5k views
  16. சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி! சனி, 22 ஜனவரி 2011 01:33 கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இம்மாதம் 15 வீதத்தால் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு 70000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். நாட்டில் நிலவிய மோசமான காலநிலையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தலைவர் டொக்டர். நாலக கொடஹேவ தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது காலநிலை சீரடைந்துள்ளதால் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு அது இலங்கைக்குச் சாதகமாகத் திரும்பும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். tamilcnn.com

    • 5 replies
    • 1.1k views
  17. மாங்குளம் இராணுவ முகாமுக்கு முன்பாக லொறி தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியது * Saturday, January 22, 2011, 5:12 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பொருள்கள் ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்த பார ஊர்தி ஒன்று நேற்றுக்காலை மாங்குளம் பகுதியில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது.மாங்குளம் இராணுவ முகாமுக்கு முன்பாக நேற்றுக்காலை இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது பற்றி மேலும் தெரியவருவதாவது: நேற்றுமுன்தினம் இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டு தனியார் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்த மான பாரஊர்தியில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருள்கள் எடுத்துவரப்பட்டன. அவற்றின் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கு மேல் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டது.ஓடிக்கொண்டிருந்த பார…

  18. குடாநாட்டின் பல பகுதிகளிலும் படையினர் நேற்றிரவு திடீர் சோதனை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-20 09:55:04| யாழ்ப்பாணம்] குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு படையினர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக வலிகாமம், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அத்துடன் யாழ்.நகர நுழைவாயில்களில் அமைந்துள்ள படை முகாம்களில் நகருக்குள் நுழையும் வாகனங்கள் தொடர்பில் படையினர் பதிவுகளை மேற்கொண்டனர். குடாநாட்டில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்களும், திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ள நிலையில் படையினர் நேற்று இரவு வீதிச் சோதனையில் ஈடுபட்டனர். இதேவேளை யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் வன்முறைச் சம்ப…

  19. எம்.வி.சன்.சி தமிழருக்கு வந்தது ஆபத்து, 15 பேர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம்! சனி, 22 ஜனவரி 2011 06:44 .எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழர்கள் சுமார் 400 பேர் வரையானோரில் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்கள் என்று தெரிகின்றது. இவர்கள் 14 பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் என்றும் 15 ஆவது நபர் பயங்கரமான குற்றவாளி என்றும் இவர்களை உடனடியாக நாடு கடத்தியே ஆக வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்து உள்ளார்கள். இவர்கள் குறித்த தகவல்கள் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பேரவைக்கு புலனாய்வாளர்களால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித…

    • 0 replies
    • 1.7k views
  20. சிலரின் சுயநலன்களிற்காக புலிகளின் தியாகங்கள் களங்கப்படலாகாது. வெளிச்சத்துக்கு வராது முடங்கிக்கிடக்கும் சுவிஸ் கொள்ளையர்கள் பற்றி பலவாறான கதைகளை அறிந்துள்ளோம். ஆனாலும் ஒரு காலத்தில் ஈழ விடுதலைக்காக முன்னின்று உழைத்தவர்கள் என்ற வகையில் ஒரு வித பற்றுதல் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்தக் கொள்ளையர்கள் சம்பந்தமாக அவர்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது என்பதை உணரவேண்டிய தருணம் இதுதான். உண்மையாகவே ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏராளமான பணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு இவர்கள் உறுதுணையாய் இருந்தவர்கள். இந்தக் கொள்ளையர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் பின்னடைவை(மே 2009) புலம்பெயர் நாட்டில் குறிப்பாக சுவிசில் முதல் முதல் அறிந்து கொண்டவர்களும் இவர்களே. இந்த உண்மையெல்லாம் ம…

  21. மகேஸ்வரி நிதியம், அங்கீகரிக்கப்படாத நிதியம்! வன்செயல்களுக்குப் பொறுப்பானவரின் வீட்டிற்குச் சென்று ஜனாதிபதி நட்புறவு கொள்கிறார். மணல் அகழ்வு மற்றும் மகேஸ்வரி நிதியம் என்பவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பிணமாகின்றனர். ஆர்ப்பாட்டம் தொடர்பாகச் செய்திகளை வெளியிடக்கூடாது என லொறிகளில் வரும் குண்டர்கள் குடாநாட்டு தமிழ்ப்பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுகின்றனர். இவ்வளவு வன்செயல்களுக்குப் பொறுப்பானவரின் வீட்டிற்குச் சென்று ஜனாதிபதி நட்புறவு கொள்கிறார்.அது தொடர்பான படங்கள் ஊடகங்களிலும் வந்துள்ளன. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு வேதனையளிக்கின்றது என சரவணபவன் எம்.பி தெரிவித்துள்ளார். யாழ். குடாநட்டில் இடம் பெறும் தொடர் கொலை, கொள்ளை மற்றும் சட்டவிரோதச் சம்பவ…

    • 0 replies
    • 1.3k views
  22. பிரித்தானிய போராட்டத்திற்கும் இளையோர்க்கும் செந்தமிழன் சீமான் ஆதரவுச் செய்தி. மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. ராஜபக்சவுக்கு எதிராக இலண்டனில் நடைபெற இருக்கின்ற போராட்டத்திற்கும் பிரித்தானிய இளையோர்களுக்கும் தனது ஆதரவை தெரிவித்து செந்தமிழன் சீமான் அவர்கள் செய்தி ஒன்றை வெளியிட்டார். ..

  23. தமிழினப் படுகொலைகளைத் தடுக்க 'பொறி' முறைகளை அமைப்போம்! இலங்கையில் 'தமிழீழம்' என்ற நாமத்தை உச்சரித்த காலங்கள் தொடக்கி இன்றுவரை நடந்தேறிவரும் இனப்படுகொலைகளையும், காணாமல் போதல்களையும் எண்ணிக்கையில் அடக்கமுடியாது. நியாயம் பேசுகின்ற, சமாதானக் கோபுரங்கள் என தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் உலகின் பல நாடுகள், இலங்கையின் தமிழின அழிப்பைப்பற்றி மெளனமாகவே இருக்கிறது. இதற்கும் மேலாக தமிழர் அமைப்புகளும் தமிழ்மக்களின் பிரதிநிதிகளும் பதவிகளில் மாத்திரம் தம்மைப் பிரதிநிதிப்படுத்தியதோடு தம் கடமைக்கு அரை மாத்திரையிட்டு மந்த வேகத்தில் அல்லது வாயடைத்து நிற்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இலங்கையில் வாழும் சிங்கள மக்களில் மனிதாபிமானத்தோடும், மனித நே…

  24. குடாநாட்டில் அசம்பாவிதம்; நாடாளுமன்றில் காரசாரம் யாழில் நடந்த 10 கொலைகள் சர்வசாதாரணமான விடயம்! பிரதமர் அலட்சியப் பதில் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-21 09:39:38| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று காரசாரமான விவாதம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் ஜனவரி 8ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பத்துக் கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையின் கவனத்தையீர்த்தார். கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் யாரும் இதுவரை கைது செய்யப்படாமை கவலைக்குரிய விடயமாகும் எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.