ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
வியாழக்கிழமை, 13, ஜனவரி 2011 (12:37 IST) தமிழக மாணவர்களுக்கு ராஜபக்சே காலண்டர் : பெதிக ஆவேசம் இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த மனிதாபிமானமற்ற சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் ப…
-
- 1 reply
- 780 views
-
-
President Mahinda Rajapaksa shouted at EPDP Leader and Minister Douglas Devananda at last week’s UPFA Parliamentary Group meeting. When the UPFA Parliamentary Group met at Temple Trees last Monday (3) with the President in the chair, Devananda had requested for time to be allocated to him to make a statement on the situation in Jaffna. He had said the statement on the security situation in Jaffna had to be made by him as the head of the Jaffna District Committee. Rajapaksa had responded by saying that Devananda had the right to make a statement in parliament as a parliamentarian and a minister. It was then that Devananda asked as to who would make the respon…
-
- 12 replies
- 1.7k views
-
-
மறைமலையில் திரண்டது தமிழ்நாடு எரிமலையாய்ச் சினந்தது மாநாடு - தணிகைச்செல்வன் நீலச்செங்கொடி நட்சத்திரங்கள் நிறைந்து பறந்த பெருந்திடலில் ஈழச் சங்கொலி முழக்கிடத் திரண்ட இளஞ்சிறுத்தையர் இனத் திரளில் தேகத் தீயினில் சாகத் துணிந்த ஈகப் புலிகளின் எரி தழலை தேசத் தலைவன் திருமா ஏந்தித் தொடர்வான் ‘தம்பி’யின் அடிநிழலை தமிழர் இறையாண்மை மாநாட்டிலிருந்து கிளம்பித் தமிழ்நாட்டின் திக்கெட்டும் திரும்பிக் கொண்டிருந்த சிறுத்தைகளின் ஒவ்வொருவர் நெஞ்சிலும் மேலே உள்ள வரிகளின் சாரம்தான் அழுத்தமாய்ப் பதிவாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், ஈழத்துக…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி பற்றிய விபரம் காணொளியின் தொகுப்பாக உங்கள் முன் thx http://www.newjaffna.com/
-
- 0 replies
- 825 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் கைது சுவிஸ் கிளையின் முன்னால் பொறுப்பாளர் குலம், பரப்புரை பொறுப்பாளர் ஆல்பேர்ட், நிதித்துறைப்பொறுப்பாளர் அப்துல்லா, படப்பிடிப்பாளரும் ரகுபதி இன்னும் மூன்று செயற்பாட்டாளர்களையும் இன்று சுவிஸ் காவல்துறை கைதுசெய்துள்ளாதாக அறிய வந்துள்ளது.வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் யேர்மனில் கூடி தங்களின் தேசியச்செயற்பாடு குறித்து ஆலோசித்த குழுவினர் இன்று இந்த கைதுடன் என்ன சொல்லபொகின்றார்கள் என்பதும், இன்னும் எத்தனை தேசியச்செயற்பாட்டாளர்களை குறிவைத்து இவர்களின் சந்திப்புக்கள் செல்கின்றன என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த கைதுகள் அதன் பின்னனிகள் குறித்து விரிவான செய்திகள் ஏதிர்பார்க்கப்படுகின்றது. http:…
-
- 30 replies
- 4.2k views
-
-
விடுதலைப் புலிகளின் எட்டுக் கப்பல்கள்’ அரசாங்கம் ஊடகங்கள் வாயிலாக கட்டுக்கதை * Thursday, January 13, 2011, 4:42 விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்த எட்டு கப்பல்களைக் கைப்பற்றி அவற்றை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப் போவதாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் பிரசாரம் கட்டுக்கதையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பிரசாரம் உள்ளுராட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டது எனத் தெரியவருகிறது. பாதுகாப்பு அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள்படி, அண்மைக் காலத்தில் அப்படியான எந்தவிதக் கப்பலும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கே.பி என்ற குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்ட போது கே.பியிடம் உள்ள எட்டு முதல் 10 கப்பல்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியது. …
-
- 0 replies
- 744 views
-
-
18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி தவிக்கும் போராளி * Thursday, January 13, 2011, 4:52 1993ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட போராளி ஒருவர் கடந்த 18 வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற இந்தச் சந்தேக நபர் 1993 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் அன்று முதல் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் .தற்போது மகேந்திரனுக்கு தற்போது 34 வயதாகிறது. கடந்த 18 வருடங்களாக இவர் பல தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதும், பாதுகாப்பு தரப்பினரால் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது போனது. அதிகாரிகளும் இந்த சந்தேக நபர் குறித்து எ…
-
- 0 replies
- 667 views
-
-
வேட்பு மனுத்தாக்கல் ஜன.20 முதல் 7 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி [13 ஜனவரி 2011, வியாழக்கிழமை 7:05 மு.ப இலங்கை] யாழ்ப்பாணம்,ஜன.13 இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மேற்கொள்ளலாம் என்று யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்தார் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவியரீதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 16 பிரதேச சபைகளிலும் 3 நகர சபைகளிலும் நடைபெறவுள்ளன. இதில் 6 லட்சத்து 96 ஆயிரத்து 587 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டபின்…
-
- 0 replies
- 359 views
-
-
இப்படியும் நடந்தது ! இது எனது சொந்த அனுபவம்... கடந்த வருடம் இங்கு அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள்வாக்கெடுப்பில் நான் ஈடுபட்டிருந்தேன். கடுமையான பிரச்சாரங்கள், கூட்டங்கள், விளக்கவுரைகள் என்று மிகவும் சிரமப்பட்ட காலமது. இன உணர்வுள்ள ஒரு சிலரின் உதவியுடன் கருத்துக்கணிப்புக்குழுவினர் செயற்பட்டு வந்தனர். எமது நோக்கம் முடிந்தளவிற்கு எல்லாத் தமிழரையும் சென்றடைய வேண்டுமென்பதில் நாம் விடாமுயற்சியுடன் ஈடுபட்டிருந்தோம். அதற்காக எமக்குக் கிடைத்த எல்லா வழிகளிலும் பிரச்சாரம் செய்தோம். இந்நிலையில் ஒருநாள் இனம்தெரியாத நபர் ஒருவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழர். சிட்னியில் மாதாந்தம் வெளிவரும் ஒரு தமிழ் விளம்பரப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
61 வருடங்களுக்கு பின்னர் கொழும்பில் பதிவாகிய ஆகக் குறைந்த வெப்பநிலை! வியாழன், 13 ஜனவரி 2011 10:43 தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உட்பட இன்று நாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் 18.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இதற்கு முன்னர் கொழும்பில் ஆகக் குறைந்த வெப்பநிலை 1950ஆம் ஆண்டு ஜனவரியில் 15.2 பாகையாக பதியப்பட்டுள்ளது. நுவரெலியாவில் 7.9 பாகை வெப்பநிலை நிலவுகின்றது. 1929ஆம் ஆண்டு ஆகக் குறைந்த வெப்பநிலை -2.6 பாகையாக பதியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமையாகவே குளிரான காலநிலை நிலவுகின்றது. ஆனால் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமா…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடாது பெய்யும் மழையால் பேரழிவு ஏற்படும் அபாயம்! இதுவரை 10 லட்சம் மக்கள் பாதிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-13 09:06:18| யாழ்ப்பாணம்] நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரண மாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பேரழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இந்த இயற்கை அனர்த்தத்தால் இதுவரை 10 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அசாதாரண காலநிலை எந்தவித மாற்றமுமின்றி இருப்பதால் வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதாகப் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த அசாதாரண காலநிலையால் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, நுவரெலியா, கேகாலை, கண்டி, பதுளை, இரத்தினபுரி, பொலநறுவை, அனுராதபுரம் ஆ…
-
- 0 replies
- 500 views
-
-
நாட்டில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 90 சதவீதமான பகுதிகள் நீரில் மூழ்கி மக்கள் வாழ்வாதாரத்துக்கே தவிக்கும் நிலையில், வடக்கில் அரசு பெரும் பொருள் செலவில் பொங்கல் விழா கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் இப்படி கிராண்பாஸ்ஸ்ரீ ஐயப்பன் சேவா பீடாதிபதி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு: நாட்டில் கடும் மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. அம்மக்கள் கடும் வாழ்வாதார அடிப்படை பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளனர். உலர் உணவுக்காகவும், நிவாரண உதவிகளுக்காகவும் கையேந்தி பெரும் அவ…
-
- 0 replies
- 677 views
-
-
பொருள்களுடன் குறிகாட்டுவான் துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் வீதியில் காணப்பட்ட குண்டு, குழிகளைத் தவிர்த்து ஓட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.மூவர் காயமடைந்தனர்.புங்குடுதீவு மடத்து வெளிப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. நயினாதீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பாலசிங்கம் விஜயதீபன் (வயது 35) என்பவர் விபத்து நடந்த இடத்திலேயே மரணமானார். வாங்க வந்தவர்களான கு.தில்லையம்பலம் (வயது 75) கை முறிந்த நிலையிலும் சு.சுரேஷ்கரன் (வயது 24) தலையில் காயத்துடனும் வாகனச் சாரதியான புங்குடுதீவைச் சேர்ந்த எஸ்.குகதாஸ் (வயது 26) சிறு காயத்துடனும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டாட…
-
- 0 replies
- 646 views
-
-
கனேடிய குடிவரவு சபையின் புதிய நிலைப்பாடு; தமிழ் இளைஞனுக்கு அகதி அந்தஸ்து நிராகரிப்பு! வியாழன், 13 ஜனவரி 2011 00:59 இலங்கையில் தமது அரசியல் கருத்து வேறுபாடுகளுக்காக தமிழர்கள் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் விசாரணைக்குள்ளாக்கப்படும் நிலை இல்லை என்று கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை தெரிவித்துள்ள கருத்து கனடா வாழ் மக்கள் பலரின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. ஒட்டாவாவின் அரசியல் நெருக்குதல் காரணமாகவா இவ்வாறான ஒரு முடிவு அறிவிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 25 வயதான இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை நிராகரித்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் 2009 இல் கனடா வந்தவர். சர்ச்சைக்குரிய எந்தக் கப்பலகள் மூலமாகவும் வந்…
-
- 1 reply
- 964 views
-
-
ஈழத் துரோகிகளை அடையாளம் காண்க: வைகோ தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ் ஈழ மக்களின் துயரமும் தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கைவன்னியன்களும், கருணாக்களும், தொடர்ந்து துரோகம் இழைப்பவர்களும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும்.சோனியா காந்தி இயக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயுதங்களும் ஆயிரமாயிரம் கோடிப் பணமும் கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையு…
-
- 0 replies
- 761 views
-
-
அவசர மனிதாபிமான உதவி வழங்க அவசர அழைப்பு – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயகப் பிரதேசங்களில் கடந்த பல வாரங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தமிழ்த் தேசத்தின் வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 80410 குடும்பங்களைச் சேர்ந்த 306998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24300பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பபு மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 127980 குடும்பங்களைச் சேர்ந்த 482830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14549 குடும்பங்களைச் சோந்த 55345பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு;ளனர். திருமலையில் 220…
-
- 2 replies
- 527 views
-
-
கிழக்கு மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் மக்கள் உதவி கிழக்கில் இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அத்தியாவசியப் பொருளுதவி செய்வதற்கு யாழ் மக்கள் முன்வந்துள்ளனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இன்று (புதன்கிழமை) அரை நாளுக்குள் ஒன்றரை மில்லியன் (15 இலட்சம்) ரூபா பெறுமதியான உடனடித் தேவைப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளன. கிழக்கில் தொடரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல இலட்சம் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களின் உடனடித் தேவகைள் சிலற்றை பூர்த்தி செய்யும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணர்கள் ஒருங்கிணைப…
-
- 2 replies
- 634 views
-
-
புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களிடம் மீள விசாரணை ... புதன்கிழமை, 12 ஜனவரி 2011 15:07 வவுனியா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களிடம் மீளவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும், புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து புலிச் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து சென்ற 300 பேர் அடங்கிய விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர்களை வகையீடு செய்து அதன் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது. பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடை…
-
- 0 replies
- 662 views
-
-
யுத்த வெற்றி மமதையிலிருந்து விலகாத இராணுவம்; ஆனையிறவில் பாரிய தைப்பொங்கலுக்கு ஏற்பாடு! வியாழன், 13 ஜனவரி 2011 00:31 யுத்த வெற்றியை நினைவு கூரும் வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத்தினரால் பாரிய தைப்பொங்கல் விழாவொன்று ஆனையிறவுப் பகுதியில் நடாத்தப்படவுள்ளது. யுத்தவெற்றியை நினைவு கூறும் வகையில் இராணுவத்தினரால் ஏற்கனவே பல இடங்களில் வெற்றிச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆனையிறவிலும் யுத்த வெற்றி சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அந்த இடத்திலேயே இவ் விழா நடாத்தப்படவுள்ளது. இதன்போது தென்பகுதியிலிருந்து வருகை தரும் சிங்கள மக்களுக்காக பொங்கலும் பிரமாண்ட அளவில் வழங்குவதற்குரிய நடிவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக இராணுவத…
-
- 0 replies
- 946 views
-
-
தென் தமிழீழ மக்களிற்கு உதவ முன்வாருங்கள் – பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு தென் தமிழீழத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அவசர அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் தென் தமிழீழத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், பொது நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பாதுகாப்பான இடங்கள் நோக்கி தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மிக அத்தியாவசியமாக * அவசர உணவுப்பொருட்கள்/ உலர் உணவுப்பொருட்கள் * குழந்தைகளுக்குரிய பால்மா வகைகள், மற்றும் பாலுட்ட…
-
- 0 replies
- 604 views
-
-
வெள்ளம் சொல்லும் செய்தி - தமிழருக்கு தனிநாடு தேவை பத்து இலட்சம் மக்களுக்கு மேலே பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கு செல்லாத மகிந்தர். பொலநறுவைக்கு மட்டுமே சென்றார் மக்களுக்கு அனுப்பப்பட்ட உதவிகள் குடும்பிமலை இராணுவத்திடம் மக்களுக்கான உதவிகள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன - சந்திரகாந்தன், முரளீதரன், ஹிஸ்புல்லா- இவர்களுக்கிடையில் இயற்கை அனர்த்தத்தில் கூட ஈழத்தமிழர்கள் அரசற்று , உதவியற்று கைவிடப்பட்டுள்ளனர் முரளீதரன் ஒரு சிங்களத்தின் அமைச்சர், புலம்பெயர் மக்களிடம் உதவி கேட்கின்றார் புலம்பெயர் மக்கள் பணம்- உதவி அனுப்பும் போது கவனமாக இருக்க வேண்டும் என தாயக அமைப்புகள் தெரிவிக்கின்றன மகிந்தர் வெளிநாடுகளிடம் உதவிகோர உள்ளார் Floods: Eezh…
-
- 0 replies
- 626 views
-
-
புதன்கிழமை, ஜனவரி 12, 2011 மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. பெரிய குளங்கள் மற்றும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலப் பிரதேச மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழைகப் காரணமாக நாட்டில் 11 மாவட்டங்களில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 993 குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களுக்கென நாடு முழுவதும் தற்காலிகமாக 502 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம்களில் தற்போது 52 ஆயிரத்து 391 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளன. வெள்ளம், இடி மின்னல…
-
- 0 replies
- 500 views
-
-
புதன்கிழமை, ஜனவரி 12, 2011 நாட்டில் அவசர கால சட்டத்தினை நீக்குமாறு ஜேவிபி அரசாங்கத்தை கோரியுள்ளது. போர் முடிவடைந்துள்ளது. இனி அவசர கால சட்டம் தேவை இல்லை. இந்த அவசர கால சட்டமானது நாட்டில் ஜனனாயக செயற்பாடுகளை அரசாங்கம் ஆயுத படைகளைக்கொண்டு முடக்குவதற்கு வழி செய்கின்றது. நாட்டில் 300 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் பொலிசாரும் இராணுவத்தினரும் அவசர கால சட்டத்தினை பயன்படுத்தி எதுவும் செய்யலாம் இதனால் எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படமுடியாது என ஜே.வி.பி கூறியுள்ளது. Add new commen ஈழ நாதம் t
-
- 0 replies
- 445 views
-
-
சமீப நாட்களாக முக்கியமாகக் கனடாவிற்கு வருகை தந்த இரு கப்பல்களின் பின்னர், தமிழர் தொடர்பாகக் கனடா அரசு ஒரு எதிர்மறையான நடவடிக்கைகளையே எடுக்க முயல்கின்றது. தமிழரின் புலப்பெயர்வு தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனிக்கின்றது. அதற்கு கனடா அரசு மட்டும் பொறுப்பல்ல. இக்காலப்பகுதியில் சிறிலங்காவுக்குச் செல்கின்ற எம் தமிழ்மக்களாலும் தான் இவ்வித நடவடிக்கையைக் கனடா அரசு மேற்கொள்ளக் காரணமாகவும் அமைகின்றது. பாதுகாப்பில்லாத நாடு என்று குற்றம்சாட்டிய நாட்டிற்குள், அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் திரும்பிப் போய் வருவதை தனக்குச் செய்ய ஏமாற்றுவேலையாகவே கனடா அரசு நோக்குகின்றது. தன்னை நாங்கள் ஏமாற்றிவிட்டதாகவே அது நினைக்கின்றது. இதனால் மெதுமெதுவாக எம் மீது அழுத்தங்களைப் பி…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் இருந்த அதி உயர் பாதுகாப்பு பிரதேசம்: தெரியாத உண்மை!! [ பிரசுரித்த திகதி : 2011-01-12 11:01:38 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவர் மெய்ப் பாதுகாப்பாளர்களால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேறு எங்கும் பார்க்க முடியாத அளவு பாதுகாப்பு வாய்ந்தது என இலங்கை இராணுவத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தேசியத் தலைவர் இரவு நேரத்தில் தங்கும் இடம் ஒன்றை தற்போது இராணுவம் தனது இரகசியக் கட்டளைபீடம் ஒன்றாக மாற்றியுள்ளதாக அறியப்படுகிறது. இந்த இரகசியக் கட்டளை பீடத்துக்குச் சென்ற நபர் ஒருவருக்கு மேற்படி இராணுவம் இத் தகவல்களைத் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய நபர் ஒருவருக்கு "மொசாட் படை" எவ்வாறு பாதுகாப்பு வழங்கும…
-
- 0 replies
- 2.3k views
-