ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143290 topics in this forum
-
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் நடவடிக்கைகளால் சர்வதேசத்தின் மத்தியில் தலைகுனியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது வெளிவிவகார அமைச்சரை பொய் கூறுபவராகவே உலகம் பார்க்கிறது. நேபாள நாட்டு ஜனாதிபதி எமது நாட்டின் ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக அழைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதற்கு உடனடியாக நேபாள அரசு மறுப்பு தெரிவித்ததுடன் உள்நாட்ட…
-
- 1 reply
- 423 views
-
-
தெளிவடைந்த இலட்சிய உறுதியை தலைமேல் சுமந்து பணி செய்தவரே எமது தலைவரும், மாவீரர்களும். அதேபோல் நாமும் இலட்சியத் தெளிவையும், உறுதியையும் வளர்த்து அதில்தான் உண்மையான ஒற்றுமையைத் தேடவேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் கலாநிதி எஸ் யே இம்மானுவேல் அவர்கள் புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு நேற்று (28) விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு: உலக சமாதான தினத்தில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு அன்பும், பண்பும் கலந்த எமது புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகுக. ஆன்ம வளங்கள், உடல் வளங்கள், சமூக வளங்கள் உங்களை அன்பிலும், ஒற்றுமையிலும், சமாதானத்தில…
-
- 0 replies
- 1.3k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு தனது விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை பூஸா முகாமுக்கு விஜயம் செய்த நிலையில் அதன் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆரம்பத்தில் முகாமுக்குள் அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னரே முகாமுக்குள்ளிருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த விசாரணை தொடர்பான செய்தி சேகரிப்புக்காக ஊடகவியலாளர் அனுமதிக்கப்படுவர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறியதை அடுத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உட்பட பெருமளவிலான ஊடகவியலாளர்கள் இன்று காலை பூஸா முகாமைச் சென்றடைந்தனர். இருப்பினும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியோ அல்லது பொலிஸ் மா அதிபரின் அனுமதியோ உள…
-
- 0 replies
- 929 views
-
-
ஆயிரத்து 400 இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய பாதுகாப்பு கல்லூரிகளில் பயிற்சி : 30 டிசம்பர் 2010 ஆயிரத்து 400 இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் உள்ள பாதுகாப்பு கல்லூரிகளில் பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க இந்தியா பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இணக்கம் தெரிவித்துள்ளார். அதேவேளை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இலங்கை-இந்திய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்தியாவுக்கு வருமாறு, அவர், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை தவிர அடுத்த வருடம் நடைபெறவுள்ள இலங்கை விமானப்படையின் 60வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக்கொள்வதற்காக இந்தியா விமானப்படைத் தளபதி நாயக் இலங்கை செல்வார் எனவும் இந்திய பாதுகாப்புச் செயலா…
-
- 0 replies
- 893 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவிற்கு, ஜனாதிபதி நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்க மாத்திரமே விசா வழங்கப்படவுள்ளதாகவும் இதன் போது அவர்கள் எதுவித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும், முன்பு விசாரணைக்கு என நிபுணர் குழு விசா கோரியதினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தற்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க மாத்திரம் விசா வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். My link
-
- 0 replies
- 978 views
-
-
18 மாத காலப்பகுதியினுள் 97 முதல் 98 சதவீதமானோரை மீள்குடியேற்றியுள்ளதுடன், மின்சாரம் உட்பட சகல அடிப்படை வசதிகளையும் அரசு மீள்குடியேறியோருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும், ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட வசதிகள் முற்று முழுதானவையாக இல்லாத போதும் மிகவும் இக்கட்டான ஒரு நிலையில் அவ்வாறான வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தது மிகவும் சிறப்பானது. 3 லட்சம் மக்களுக்கு பிரபாகரனிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொடுத்துள்ளோம். இன்னும் சிறந்ததொரு தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். ரம்புக்வல அவர்களே மூன்று இலட்சம் மக்களை வன்னியில் இருந்து விரட்டி அடித்தோம் அதற்காக 50 ஆயிரம் பேர்களை கொன்ற…
-
- 0 replies
- 965 views
-
-
வெளி நாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பசில் இராஜபக்ஷ தனது அமைச்சிற்கு முழு நேர அமைச்சு செயலர் ஒருவரை தருமாறு கேட்டுள்ளார். தற்போது திறைசேரி செயலர் டி.பி. ஜயசுந்தரவையே மஹிந்த பசிலின் பொருளாதார அமைச்சுக்கு பகுதி நேர செலராக நியமித்துள்ளார். பசில் இராஜபக்ஷ கண் மண் தெரியாமல் பெருவாரியாக பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்றார் இதில் பங்குகள் சரியாக மஹிந்தவிற்கு போய் சேரவில்லை. கோத்தபாயவை விட பசில் இராஜபக்ஷவே பணம் சுருட்டுவதில் வல்லவராம். இதனை அறிந்த மஹிந்த தானே டி.பி,.ஜெயசுந்தரவை நியமித்துள்ளார். ஆனால் பசிலிற்கு ஜயசுந்தர இடைஞ்சலாக உள்ளார் என கூறப்படுகின்றது. எனவே தான் பசில் இராஜபக்ஷ தனக்கு தனியான ஓர் செயலரை தருமாறும் அதுவும் தான் சிபார்சு செய்யும் சா…
-
- 0 replies
- 1.3k views
-
-
கூட்டுப்படை செயலக காணியினை ஹோட்டல் கட்டுவதற்கு 75 மில்லியன் டொலருக்கு விற்றார் கோத்தபாய.ஹொங்கொங் முதலீட்டாளர் 500 மில்லியன் டொலர்கள் முதலீட்டில் 500 ரூம் கொண்ட ஏழு நடசத்திர ஹோட்டல் ஒன்றினை கட்ட முன்வந்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கே தற்போது கூட்டுப்படை செயலகம் அமைந்திருக்கும் 10 ஏக்கர் காணியினை கோத்தா வழங்கியுள்ளார்.கூட்டுப்படைச்செயலகம் இப்போது இருக்கும் இடத்தில் தேவை இல்லை என கூறியதுடன் கொழும்பிற்கு வெளியே கூட்டுப்படை செயலகத்தை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் படைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளகியுள்ளனராம். eelanatham
-
- 0 replies
- 806 views
-
-
பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் பெருமளவில் அதிகரித்திருப்பதாகவும் முன்னாள் பிரதமரும் நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இங்கிரிய றைகம்வத்தை பிரகதியபுர மின் விநியோகத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்; அமைச்சர் ஒருவரது அலுவலகம்பற்றி வினவிய போது, தனது அமைச்சு வானத்திலுள்ளதாக அந்த அமைச்சர் தெரிவித்திருந்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏதாவதொரு பணியை செய்யும் போது திட்டமிட்டு செயற்பட வேண்டும். பொறுப்பற்ற முறையில் செயற்படுவதன் மூலம் இந்த அரசு குறித்து மக்கள்…
-
- 0 replies
- 486 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களை விரைவில் கலைக்கத் திட்டம் மார்ச் மாதம் தேர்தல்? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-30 09:10:52| யாழ்ப்பாணம்] பிரதேச சபைகள், மாநகர சபைகள் மற்றும் நகர சபைகள் என்பன விரைவில் கலைக்கப்படவுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் நோக்கில் அவை கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள் ஆகியன விரைவில் கலைக்கப்பட உள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளார் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் சனவரி மாதம் 4ம் திகதி உள்ளூராட்சி மன்றத் திருத்தச் சட்ட மூலம் தொடார்பான யோசனைத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி மன்றப் புதி…
-
- 0 replies
- 310 views
-
-
சவேந்திர சில்வாவிற்கு அரசாங்கம் காணி அன்பளிப்பு!! [ பிரசுரித்த திகதி : 2010-12-30 07:08:20 AM GMT ] ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் 58ம் படைப்பிரிவின் பொறுப்பதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு, அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்பு செய்துள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இவ்வாறு காணித் துண்டொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. சாவேந்திர சில்வாவிற்கு காணி வழங்கும் யோசனைத் திட்டம் அமைச்சரவையில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு பத்தரமுல்ல பிரதேசத்தில் 24 பேர்சஸ் காணியொன்று வழங்கப்பட்டுள்…
-
- 0 replies
- 300 views
-
-
சிலோன் என்ற பெயருக்கு பதிலாக இனி ஸ்ரீலங்கா என்ற பெயர்:- மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு! [ பிரசுரித்த திகதி : 2010-12-30 07:06:03 AM GMT ] சிலோன் என்ற பெயருக்கு பதிலாக ஸ்ரீலங்கா என்ற பெயர் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சிலோன் என்ற பெயரைத் தாங்கிய சகல அரச நிறுவனங்களிலும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிலோன் மின்சாரசபை என்ற பெயரை ஸ்ரீலங்கா மின்சாரசபை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாதாலீ சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்படி, சிலோன் …
-
- 0 replies
- 378 views
-
-
முல்லைத்தீவிலிருந்து மண்ணை எடுத்துச் செல்லும் தெற்கு மக்கள் பிரபாகரன் வாழ்ந்த ஊர் மண்ணாம்! விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டின் கீழிருந்த முல்லைத்தீவு மண் தெற்கிற்குப் போகத் தொடங்கியிருக்கின்றது. நாள்தோறும் லட்சக் கணக்கில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்குச் செல்லும் சிங்கள மக்கள் பிரபாகரன் வாழ்ந்த ஊர் எனத் தெரிவித்து அங்கிருந்து மண்ணை எடுத்துச் செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இதுவரை 28 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வடக்கிற்கு சுற்றுலாவாக வந்து சென்றிருப்பதாக அண்மையில் படையதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவிற்கு வருகின்ற மக்களின் முக்கிய நோக்கமாக புதுக்குடியிருப்பு மண்ணே பிரதானமாக இருக்கின்றது.அவர்கள்…
-
- 0 replies
- 422 views
-
-
குடாநாட்டில் தொடர்கிறது படுகொலைப் பயங்கரம்! மூன்று வாரங்களுக்குள் மூன்றாவது சம்பவம் சரசாலையில் மூன்று நாள்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து தந்திரமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் நடை பெற்றுள்ளது. மீசாலை, புத்தூர் சந்தியைச் சேர்ந்த மகேந்திரசெல்வம் திருவருட்செல் வன் (செல்வன்) (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வராவார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் பயத்தால் உறைந்துபோயுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது : வாகனங்களைக் கொள்வனவு செய்து பின்னர் அவற்றை விற் பனை செய்யும்…
-
- 0 replies
- 305 views
-
-
வடக்கு, கிழக்கின் சகல உள்ளூராட்சி சபைகளிலும் கூட்டமைப்பு போட்டி வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு போட்டியிடும். போட்டி யிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பின் செயற்குழு கூடி முடிவு செய்யும். இப்படி தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந் திரன் நேற்று "உதயனு"க்குத் தெரிவித் தார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஜனவரி 4ஆம் திகதி நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் எதிர்வரும் 3ஆம் திகதி உத்தேச உள்ளூ ராட்சி திருத்தச் சட்டமூலத்தில் கொண்டு வரப்படவுள்ள தி…
-
- 0 replies
- 283 views
-
-
புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க ஒட்டுக்குழுவினரின் ஆயுதமாக பாலியல் ஆபாச இணையதளங்கள் தமிழீழம்தாயகத்தில் தமிழர்களின் பண்பாட்டை அழித்து சமூகச்சீர்கேடுகளை ஏற்படுத்திவரும் ஒட்டுக்குழுவினர் புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க பாலியல் செய்திகளை முதன்மைப்படுத்தி இணைய ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்திவருகின்றனர். மேலும் தமிழ் பேசும் உறவுகளான ஈழத்தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் மற்றும் இசுலாமிய தமிழர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். வெண்ணெய்த்திருடனின் (கண்ணன்) பெயரைக்கொண்ட 2 நபர் புலத்தில் இத்தகைய செயல்பாட்டில் செயல்பட்டுவருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஈழ ஆதரவு இணையதளங்களோடு தொடர்புகொண்டு நட்புடன் பழகி அவ் இணையங்களு…
-
- 1 reply
- 2.1k views
-
-
கைதின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு செனற கே.பி அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வடமராட்ச்சிப்பகுதியில் சந்தித்தபோது தெரிவிப்பு!
-
- 0 replies
- 1k views
-
-
சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட பாதிரியார் மீது ஏனைய கைதிகள் இன்று தாக்குதல் நடத்தியதையடுத்து சிறைச்சாலையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. தாக்குதலில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் இளைஞர் ஒருவர் அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட ஆத்திரமடைந்த சிறைக்கைதிகளில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவைச் சேர்ந்த 84 கைதிகளைப் பணயமாகப் பிடித்துவைத்தனர். வவுனியா சிறைச்சாலையில் பெரும் பதற்றநிலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கப்படுவதாவது: மன்னார் மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாகத் தேடப்பட்ட பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள…
-
- 0 replies
- 743 views
-
-
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ் பொறியியலாளர்! புதன், 29 டிசம்பர் 2010 17:47 .இலங்கையைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதான அமரசிங்கம் சுஜன் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவர் என அறிவிக்கப்படுகிறது. இவர் பணி புரியும் அலுவலகத்துக்குள் நுழைந்த சிலரே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையிடும் நோக்கில் வந்தவர்களே இவரைக் கொலை செய்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. tamil cnn.com
-
- 1 reply
- 1.4k views
-
-
மாற்று அரசியல் கருத்து ஒன்றிற்கான தேவையை உணரும் போக்கு புலம்பெயர் நாடுகளில் உருவாகியுள்ளது : சி.கா.செந்தில்வேல் அண்மையில் புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்தில்வேல் கனடா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் அரசியல் சுற்றுப் பயணம் மேற் கொண்டு நாடு திரும்பியுள்ளார். அவர் பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், ஊடக நேர்காணல்கள் என்பனவற்றில் பங்கு கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்களின் சமகால எண்ணங்கள் போக்குகள் நிலைப்பாடுகள் பற்றி கண்டறிந்தும் கேட்டறிந்தும் வந்துள்ளார். அவரது மேற்படி பயண அனுபவங்களை இந் நேர்காணல் எடுத்துக் கூறுகிறது. கேள்வி: அண்மையில் நீங்கள் கனடா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண…
-
- 9 replies
- 864 views
-
-
தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ? ராசீவ் கொலை வழக்கில் பல்லாண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி ஈரோடை நாம் தமிழர் கட்சியினர் “தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ?” என்ற துண்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர். மரணதண்டனை எனக்கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிஅ.ஞா. பேரறிவாளன் மரண தண்டனைச் சிறைவாசித.சி.எண். 13906நடுவண் சிறை, வேலூர் – 2 அன்புக்குரியீர், வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக…
-
- 0 replies
- 995 views
-
-
http://www.youtube.com/watch?v=eSs00hNXiYw
-
- 0 replies
- 948 views
-
-
“ஊரில் எங்கோ ஒரு மூலையில் நாய் குரைத்தாலும் குலைநடுங்கிப்போகும். கண்ணிமைக்கப் பயந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே எங்கள் இரவுப்பொழுதுகள் கழிகின்றன” சுன்னாகத்திலுள்ள குடும்பத் தலைவியொரு வரின் வலிசுமந்த இதயத்திலிருந்து வெளிப்பட்ட வேதனைமிக்க வார்த்தைகள் இவை. மூன்று தசாப்த யுத்தம் – கோரமான கொலைகள் – எண்ணிக்கை யில் அடங்காத இழப்புகள் – அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என சோகங்களோடும் சோதனைகளோடும் வாழ்ந்த இருள் காலம் தள்ளிப்போய் ஓரடி முன்னால் நகர்ந்திருக்கும் நேரம் இது. உள்ளங்களில் நிறைந்திருக்கும் ஒவ்வொரு வலிநிறைந்த சுவடுகளுக்கும் காலம் என்றாவது காத்திரமான பதில்சொல்லும் என்ற எதிர்பார்ப்போடு நம் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். யுத்தம் என்பதைத்தவிர தாம்…
-
- 0 replies
- 869 views
-
-
யாழில் படையினரின் பின்னணியில் இயங்கும் "மின்னல் குறூப்" டிச 27, 2010 யாழ்ப்பணத்தில் நடைபெறும் கொலைகள் கொள்ளைகளுக்கெல்லாம் ஸ்ரீலங்காப்படையின் புலனாய்வுப்பிரிவின் "மின்னல் குறூப்" காரணம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். அண்மைக்காலமாக ஸ்ரீலங்காப்படையின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் உள்ள யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கொலைகள் கொள்ளை நிகழ்வுகளின் பின்னணியில் ஸ்ரீலங்காப்படையின் புலனாய்வாளர்களே ஈடுபட்டுள்ளார்கள் என்பது தற்போது மக்கள் மத்தியில் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்காப்படையின் 52, 53 ஆவது டிவிசன் படையணிகள் மற்றும் கடற்படையினர், வான்படையினர், ஸ்ரீலங்கா காவல்துறையினர் மற்றும், சிறப்பு புலனாய்வு அணியினர் என்று நாற்பதாயிரித்திற்கு மேற்பட்ட படையினர்கள் நிலைகொண்டுள…
-
- 2 replies
- 901 views
-
-
இந்திய ராணுவம் இலங்கை வந்தபோது, இந்தியாவின் ஒரு பாகமாக இலங்கை மாறப்போகிறது என்று ஓலமிட்டபடியே திரிந்த அரசியல் அனாதை வேறுயாரும் அல்ல மகிந்தரே தான் (manithan.com)
-
- 0 replies
- 978 views
-