ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார். ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற சந்தேக நபர்களை பிரித்தானியாவின் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என எழுந்த…
-
- 0 replies
- 444 views
-
-
ஜனாதிபதி சற்றுமுன் லண்டன் பயணம் வீரகேசரி இணையம் 11/29/2010 4:17:36 PM ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்று முன் லண்டன் சென்றடைந்தாக விமான நிலைய செய்தியாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நாளை லண்டனுக்கு விஜயம் செய்வார் என குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் யு.எல்.509 என்ற விஷேட விமானத்தில் சென்றடைந்தாக மேலும் தெரித்தார்.
-
- 11 replies
- 1.3k views
-
-
“ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழ் அரசியல் தலைமைகள் சரிவர கையாளவேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்; அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “தமிழருவி“ மாத இதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை விசாரணை, போர்க்குற்ற விசாரணை, வடமாகாண சபைத் தேர்தல், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழர்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நிலைப்பாடு, உலகத் தமிழர்களின் கடமை ஆகிய விடயங்கள் குறித்து “தமிழருவி“க்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரிவாக பதிலளித்துள்ளார். தமிழ் தே…
-
- 0 replies
- 737 views
-
-
கால் ஒன்றையும் கையொன்றையும் போராட்டக் களத்தில் இழந்து இன்று தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறாள் இந்தப் பெண் போராளி. வீட்டின் வறுமை நிலைமை இவர்களை வாட்டுகிறது. அங்கவீனமடைந்த பின்னர் நவம் அறிவுக்கூடத்தில் கணணியைக் கற்று கணணியில் தேர்ச்சி பெற்றவள். ஆயினும் கடைசிவரை களத்திலேயே நின்றவள். இன்று திருமண வயதைத் தாண்டி நிற்கும் அக்காக்கள் அவர்களும் காயமடைந்து பாதிப்படைந்து இருக்கிறார்கள் தம்பி 27வயது அவனும் காயமடைந்து பாதிக்கப்பட்டுள்ளான். 62வயது அம்மா உழைக்கும் வலுவை இழந்த நிலமையில் இவர்கள் 6பேருக்கும் உயிர்வாழ்வதற்காக தற்போது கிடைக்கும் சிறியளவிலான நிவாரணம் மட்டுமே கைகொடுக்கிறது. பசியும் உடல் அங்க இழப்புகளும் இக்குடும்பத்தை மிகவும் தளர்வித்துள்ளது. தான் கற்…
-
- 2 replies
- 934 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று பரவலாக இடம்பெற்ற மாவீரர் தின வைபவங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்ததாக எமது தகவல் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக பெருமெடுப்பிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இலங்கை அரசாங்கமானது மாவீரர் வாரத்தை முன்னிட்டு படைத்தரப்பை உச்சகட்ட உசார் நிலையில் வைத்திருந்தது. அதனையும் மீறி நேற்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் பரவலாக மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதுடன், ஏராளம் பொதுமக்களும் அதில் ஆர்வம் காட்டியிருந்தனர். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான முறையில் இராணுவக் கண்காணிப்பும் படைப்புலனாய்வாளர்களின் கடுமையான அவதானிப்புகளுக்கும் மத்தியில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின அனுஷ்டானங்கள…
-
- 5 replies
- 1k views
-
-
இன்று கார்த்திகை 27. இலட்சியத்தை நெஞ்சில் சுமந்து தாயகக் கனவோடு களங்களில் சமராடி விதையுண்ட வீரர்களை நினைவு கொள்ளும் நாளிது. எங்கள் கனவுகளுக்காகத் தங்கள் இனிமைகளை மறந்து வசந்தங்களை எங்களுக்காய் வாரித்தந்த வள்ளல்களை நினைவு கொள்ளும் நாளிது. இதோ இன்றைய குரலுக்குரியவள் ஒரு முன்னாள் போராளி. அண்மையில் தடுப்பிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறாள். இதோ இவளது துயரை இந்த மாவீரர் நாளில் கொண்டு வருகிறோம். வீட்டில் அனைத்தும் பெண் சகோதரிகள். 2மாவீரர்களைக் கொடுத்தவள் தானும் தாயக விடுதலைக்காக தன்னை இழந்தவள். இன்று ஒற்றைக் கையும் காலும் இழுத்து நடக்கவே பெரும சிரமங்களுடன் வாழ்கிறாள். காதுகள் கேட்காது இவளுக்கு செவிப்பறைகள் பாதிக்கப்பட்டு கேள்விப்புலன் அற்ற நிலையில் இருக்கிறாள். க…
-
- 8 replies
- 1.3k views
-
-
கொழும்பின் மையப் பகுதி சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பு நவ 29, 2010 கொழும்பின் மையப் பகுதியில் பெருமளவு நிலப்பரப்பை சீன நிறுவனம் ஒன்றிடம் ஒப் படைப்பதற்கு அரசாங்கம் முடிபு செய்துள் ளது. இது குறித்த ஒப்பந்தம் இலங்கையின் நிதியமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உலகின் முன்னணி சுற்றுலாக் கைத் தொழில் நிறுவனங்களில் ஒன்றான சீனா வின் சங்கிரிலா நிறுவனம் இப்பகுதியில் 450 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய் யவுள்ளது.இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைப் படைத் தலைமையகம் உள்ள இப்பகுதியில் பிர மாண்டமான உல்லாச விடுதியயான்றை இந் நிறுவனம் நிர்மாணிக்கும். அதேவேளை படைத்தலைமையகம் உட் பட முப்படைகளின் தலைமையகங்களும் பத்தரமுல்லைப் பிரதே…
-
- 1 reply
- 735 views
-
-
மகிந்த பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார். ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற ச…
-
- 1 reply
- 772 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான தகவல்களை திரட்டிய பொலிஸ் பரிசோதகர் நிலாப்தீன் ராஜினாமா திங்கட்கிழமை, 29 நவம்பர் 2010 11:03 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கை விரல் அடையாளம் தொடர்பான தகவல்களை திரட்டிய பொலிஸ் பரிசோதகர் நிலாப்தீன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். போர் இடம் பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பல்வேறு விசாரணைகளை நிலாப்தீன் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார் என திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் நான்கு தடவை நிலாப்தீன் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் நிறுத்த காலத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்று வா…
-
- 3 replies
- 1.6k views
-
-
தேசியத்தலைவரின் அகவை 56ல் ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவிய நாம் தமிழர் கட்சியினர் தேசியத்தலைவர் அவர்களின் அகவை 56 பிறந்தநாள் அன்று அரசபாளையம் (இராசபாளையம்) மொட்டைமலை ஈழ ஏதிலி முகாமில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சியினர் உதவிகளை வழங்கியுள்ளனர். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அரசபாளையம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை.தமிழினி, கண்ணன், கௌதம், யாழினி யாதுமாகி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலதிக படங்களுக்கு: http://meenakam.com/2010/11/29/14950.html
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் பிரான்சில் உள்ள கப்டன் கஜன் – கேணல் நாதன் ஆகிய மாவீரர்களது கல்லறையில் மாவீரர் வணக்க நாள் வெகுசிறப்பாக இடம்பெற்றது. வீடியோ: http://www.dailymotion.com/video/xftng7_yyyyyy-yyyy-yyyyy-yyyyy-yyyyyyyyyyyy-yyyyyyyyyyy-yyyyyyyyy_news#from=embed http://www.tamilthai.com/?p=5856
-
- 0 replies
- 663 views
-
-
தேசியத்தலைவர் பிறந்த நாள் மற்றும் இந்திய சட்ட எரிப்பு போராளிகள் நாள் பொதுக்கூட்டம் [காணொளி]பெரியார் இயக்க வரலாற்றில் பெரியார் தொண்டர்கள் கடும் விலையை கொடுத்தப் போராட்டம் 1957 நவம்பர் 26 நாள் நடந்த சட்ட எரிப்புப் போராட்டம் தான். இந்த நாளில் பெரியார் தனது இறுதி இலட்சியமான சாதியை ஒழிக்க இந்திய அரசியல் சட்டத்தை எரித்த நாள். பெரியாரின் ஆணையை ஏற்று பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்ற நாள். மரணம் என்பது ஒரு வீரன் தன் இலட்சியத்திற்கு கொடுக்கும் விலை என்பார் பெரியார். சாதியை ஒழிக்க வேண்டும் என்கின்ற இலட்சியத்தோடு தங்களின் இன்னுயிரையே பதினெட்டு பேர் விலையாக கொடுத்தப் போராட்டம். சாதி ஒழிப்பிற்காக பல்லாயிரக்கனக்கானோர்…
-
- 0 replies
- 867 views
-
-
ஐக்கிய இராச்சியத்தில் கடைத்தொகுதி ஒன்றை நடத்தி வந்த 48 வயதுடைய இலங்கையரான சுப்பபையா தர்மசீலன் என்பவர் கொள்ளையர்களால் கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கடைத்தொகுதியின் மேல் வீட்டில் உயிரிழந்தவரின் மகள் பாதுகாப்பு கமராவிலே தனது தந்தையாரை கொள்ளையர்கள் மிரட்டி பணம் பறிக்க முற்பட்டு வருவதை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனாலும் கொள்ளையர்கள், குறித்த இலங்கையரை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். தனது தந்தையாரை கொள்ளையர்கள் மூன்று முறை கத்தியால் வயிற்றில் குத்தியதாக உயிரிழந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட பவுன்ஸ் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அயலி…
-
- 0 replies
- 925 views
-
-
அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிக்குடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய இடங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறிய குடும்பங்கள் இதுவரை மீள் குடியேற்றப்படவில்லை என அக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் கவலை தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் தளங்கள் அமைந்திருந்த பிரதேசம் என கருதப்படும் கஞ்சிக்குடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் 2006 ம் ஆண்டு அன்றைய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி திருக்கோவில் பிரதேசத்தில் தற்காலிக இருப்பிடங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். யுத்தம் முடிவடைந்த…
-
- 0 replies
- 425 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாளை பிரித்தானியவுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி பிரித்தானியவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின்ன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி விசேட உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவ்விஜயத்தின் போது பல அரசியல் பிரமுகர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைகழகத்…
-
- 0 replies
- 390 views
-
-
கல்லடியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் பாரிய கடற்படை முகாம் அமைக்கும் பணியில் கடற்படையினர் [Monday, 2010-11-29 03:37:00] மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு பின்பகுதியில் உள்ள இந்து மயானத்துக்கு அருகில் கடற்படையினர் பாரிய முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இந்த கடற்முகாம் அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கல்லடி டச்பார் வீதியில் பாரிய கடற்படை தளம் அமைக்கம் பணியில் ஈடுபட்டு வருகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துவரும் நிலையில் அவசர அவசரமாக இந்த படைமுகாம் அம…
-
- 0 replies
- 364 views
-
-
உருத்திரகுமாரன் அமெரிக்கச் சட்டங்களை மீறிச் செயற்படவில்லை! இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திங்கட்கிழமை, 29 நவம்பர் 2010 11:39 நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக இருக்கும் உருத்திரகுமாரன் அமெரிக்கச் சட்டங்களை மீறிச் செயற்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்றிக்கா புற்ரெனிஸ் (Patricia Butenis) தெரிவித்துள்ளார். அவர் இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ளமை வருமாறு, நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான உருத்ரகுமாரனின் நடவடிக்கைகள் தமது நாட்டு சட்டங்களை மீறும் வகையில் அமையவில்லை. அமெரிக்காவில் வாழும் மக்கள் வேறும் நாட்டு அரசையோ அல்லது அமெரிக்க அரசையோ விமர்சனம் செய்வதனை தட…
-
- 0 replies
- 759 views
-
-
Nov 28, 2010 / பகுதி: செய்தி / கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு! கொழும்பில் துறைமுகத்துக்கு அருகில் நேற்று நள்ளிரவு12.10 மணி அளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. சடலத்தில் காயங்களும் எதுவும் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 4 அடி 5 அங்குலம் உயரமுடைய, 40,-45 வயது மதிக்கத் தக்க ஒருவரே இறந்திருக்கின்றார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 326 views
-
-
சவூதி மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி: அமைச்சர் ராஜித _ வீரகேசரி இணையம் 11/29/2010 9:26:42 AM Share இலங்கை ஆழ்கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சவூதி அரேபிய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ''இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 400 சவூதி அரேபிய மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன் வகைகளில் 20 சதவீதத்தை இலங்கைக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பான ஒப்பந்தம் டிசம்பர் முதல் வாரமளவில் கைச்சாத்திடப்படவுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார். _
-
- 0 replies
- 312 views
-
-
சிறீலங்காவுக்கும் பாகிஸ்த்தானுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் திங்கட்கிழமை, 29 நவம்பர் 2010 04:44 சிறீலங்கா அரசுக்கும், பாகிஸ்த்தானுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஓப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நான்கு நாள் பயணமாக சிறீலங்கா வந்துள்ள பாகிஸ்த்தான் அதிபரும், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவும் இந்த உடன்பாடுகளை எட்டியுள்ளனர். இராணுவத்தளபாடங்களை பரிமாற்றம் செய்தல், இராணுவத்தினருக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்த்தான் சிறீலங்காவுக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இந்த உடன்படிக்கையால் இரு நாடுகளும் படைத்துறை ரீதியாக பெரும் நன்மை அடையும் என அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்த…
-
- 1 reply
- 456 views
-
-
அடை மழையினால் 55 ஆயிரம் பேர் நிர்க்கதி 250 வீடுகள் சேதம்; தொற்றுப்பரவும் அபாயம் [29 நவம்பர் 2010, திங்கட்கிழமை 7:15 மு.ப இலங்கை] கொழும்பு, நவ. 29 தற்போது நிலவிவரும் அசாதாரண கால நிலை காரணமாக இதுவரையில் நாடு முழு வதும் 55 ஆயிரத்து 520 பேர் இருக்க இடமின் றிப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 58 வீடுகள் முற்றாகச் சேதத்துக்குள்ளாகியுள்ளன. மேலும் 192 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட் டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. கால நிலையால் பாதிக்கப்பட்டவர்களைத் தற்காலி கமாகத் தங்க வைப்பதற்கு நாடு முழுவதும் 22 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவான நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்தி…
-
- 0 replies
- 411 views
-
-
வடக்கில் சிங்களவர்களின் குடியமர்வு சர்ச்சைக்குரிய முக்கிய விவகாரங்களில் ஒன்றாகியுள்ளது. இதுபற்றி அடிக்கடி நாடாளுமன்றத்திலும் குரல்கள் ஒலிக்கின்றன. விவாதங்களின் போதும் இதுபற்றிய பேச்சு எடுபடுகிறது. போர் முடிவுக்கு வந்து வன்னியில் மீள்குடியமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய சர்ச்சைகளும் எழத் தொடங்கின. அரசாங்கம் வன்னியில் இராணுவ முகாம்களுக்கு அருகிலேயே சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்தப் போவதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அப்படியான எந்தத் திட்டமும் தம்மிடம் இல்லை என்று அரசாங்கம் கூறியது. அதேவேளை, முக்கிய நிரந்தரப் படைத்தளங்களுக்கு அருகிலேயே படையினர் மற்றும் அதிகாரிகளுக்கான தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்கும் தி…
-
- 1 reply
- 602 views
-
-
பாதுகாப்பை வலுப்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராகவுள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா ஏ. பியூடெனிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் பூராக ஐக்கிய அமெரிக்காவின் உறவுகளுக்கு ஜீவனூட்ட ஜனாதிபதி ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஹிலரி ரொட்ஹம் கிளின்டனும் முன்னுரிமை கொடுத்துள்ளனர். அவர்கள் தற்போதைய அமெரிக்க உறவுகளுக்கு வலுவூட்டவும் அன்றாட சவால்களை முறியடிக்கக் கட்டியெழுப்பப்படும் உறவுகளுக்கு அதாவது காலநிலை மாற்றங்கள், அணு ஆயுத அச்சுறுத்தல்கள், நோய் மற்றும் வறுமை ஒழித்தல் போன்ற சவால்களை புதிய உற…
-
- 0 replies
- 569 views
-
-
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எனது தமிழ் உறவுகளே! கடந்த வருடம் உங்களுடன் மலேசியாவில் இருந்து உரையாடிய பின்பு தனிமைச் சிறையிலிருந்து உங்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு நான் சோகம் கலந்த மகிழ்ச்சியுடன் இம்மடலை வரைகின்றேன். நான் பிடிபட்ட போது எனது வாழ்க்கை முடிந்து விட்டது. என்று நினைத்தேன், எனது மக்களுக்காக எனது நினைவலையில் கட்டிய மாளிகைகள் தூளாகி நொருங்கி துண்டு, துண்டாக விழுந்த போது சில மணிநேரம் அதிர்ச்சியில், மயக்கநிலையிலேயே இருந்தேன். மனம், நினைவு எல்லாம் மங்கலாகி ஏதோ சித்து பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால் இன்று இதையெல்லாம் தாண்டி நான் ஒரு மறு பிறவி எடுத்தது போல தான் உணர்கிறேன். பல சந்தர்பங்களீல் மரணத்தின் வாய்க்குள் ப…
-
- 80 replies
- 5.2k views
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைவிட அதிக நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைத்துள்ளதாக ஜே.வி.பி. இன்று கூறியுள்ளது. இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பாக கூறுகையில், அரசாங்கம், மூலதனக் கணக்கை ஆரம்பிப்பதற்கான ஒரு படியாக வெளிநாட்டு நாணய மாற்று விதிகளை தளர்த்தியுள்து. கடந்த தசாப்தங்களில் முந்தைய தலைவர்கள் இதற்கு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யத் தவறிய விடயம் இது என்றார். ஆளுங்கட்சியிலுள்ள, தேசாபிமானம் மற்றும் தேசிய பொருளாதாரம் குறித்து ஜம்பமடித்தவர்கள் தற்போது என்ன செய்கின்றன என்பதை தெரிந்துகொள்ள…
-
- 0 replies
- 454 views
-