Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்தவின் இரண்டாவது நிறைவேற்று அதிகார பதவி ஏற்பிற்கு பெரும் பொருட்செலவும் பெரும் அதிகாரமும் செலவழிகப்பட்டன. நாட்டின் பத்திரிகை தர்மத்திற்கு ஆப்பு வைத்த மஹிந்த அந்த பத்திரிகை துறையினரை தனது பிறந்த நாளிற்கும், பதவி ஏற்பு வைபவத்தின் போதும் தனது படத்தினை முதல் பக்கத்தில் பிரசுரிக்குமாறும் அத்துடன் அதி மேதகு ஜனாதிபதியினை வாழ்த்துகின்றோம் என போடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாராம். இவ்வாறு த எகொனொமிக் டைம்ஸ் கூறியுள்ளது. இதற்கமைய அனைத்து அரச இயந்திரங்களும் விரட்டியும் மிரட்டியும் பணத்தினை வழங்கியும் இந்த விளம்பரத்தினை செய்தனவாம். வில்லத்தனமான சிரிப்புடன் தனது பதவியினை ஏற்றுகொண்ட மஹிந்தா தமிழ் மக்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்டவர். தேர்தல்களில் தமிழ் மக்கள் அவருக்கு வாக…

  2. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் மோதல்கள் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 மாணவர்கள் உட்பட 14 பேருக்கு ஒரு வருடத்துக்கு பல்கலைக்கழக பாட நடவடிக்கையில் இணைந்துகொள்ள நேற்றைய தினம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார். நேற்று முன்தினம் வர்த்த பீட மாணவி ஒருவரை பகுடி வதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் 5 மாணவர்களுக்கும், அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் இருவருக்குமாக 7 மாணவர்களுக்கும் ஒரு வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா நுண்கலைக் கல்லூரியில் கடந்த மாதம் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 7 மாணவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளத…

  3. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந் துன் நெத்தி மீது யாழ்ப்பாணத்தில் வைத்து இனந் தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட லெபனான் ஜனநாயக இளைஞர் சங்கத்தின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று சக்தி வானொலி தெரிவித்தது. இவர்கள் இருவரும் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். லெபனான் ஜனநாயக இளைஞர் சங்கத்தின் தலைவரான மொஹமட் ஹொடெக் மற்றும் அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கடந்த 14ஆம் திகதி மாலை ஞாயிற்றுக்கிழம…

  4. நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக பல்வேறு நாடுகளும் எமக்கு உதவிகளை வழங்கின. அதேபோன்று அபிவிருத்திக்காகவும் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன. சர்வதேச நாடுகளும் முன்னெடுத்த ஒப்பந்தங்களை அபிவிருத்தி நோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பதவி ஏற்பு வைபவத்தில் கூறினார் மஹிந்தா. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள், யுத்தம், போதைப்பொருள், ஆயுதங்கள், ஊழல் மோசடிகள் ஆகியவை அற்ற நாடே எமக்கு வேண்டும். எனவும் மஹிந்தா பேசினார். தான் ஓய்வு பெற்றதன் பின்னர் இந்த நாட்டின் பிரஜையொருவர் "நீங்கள் இந்த நாட்டுக்காக செய்ய வேண்டிய பொறுப்புகளை ஒழுங்காகச் செய்துள்ளீர்கள்"என்று கூறினால் அதுவே எனது வெற்றியும் நான் செய்த வேலைகளுக்குமான திருப்தியுமாகும். என்…

  5. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்ளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கலந்துரையாடப்பட்டது போன்று இணைந்துசெயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்றுக் கொள்வதையிட்டு தமிழ்…

  6. யுத்தத்தின் முடிவின் பின்னரான புதுடில்லியுடனான சமன்பாட்டில் தொடர்ந்து சீனா காட்டை விளையாட விரும்பும் இலங்கைக்கு நோபாளத்திலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. நேபாளத்துக்குள்ள இந்தியாவுடனான பிரச்சினையை சீனாவை ஈடுபடுத்தாமல் நேபாளம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என சீன அரசுத் தலைமை கூறியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா கூறியுள்ளார் நேபாளம் தொடர்பில் இந்தியாவினதும் சீனாவினதும் பாதுகாப்பு தொடர்பான பயங்களை தீர்ப்பதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை உதவும் என்ற பிரசண்டாவின் கருத்துக்கு பதில் கூறுவதாகவே சீனாவின் அறிவுபூர்வமான இந்தக் கருத்துக் கூறப்பட்டது. இந்தியாவினதும் சீனாவினதும் தலையீட்டின் காரணமாகவே நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கான தீர்வு குழப்பப்படுவதாக ஒரு கருத்த…

    • 4 replies
    • 1.3k views
  7. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் நடைபெற்ற இன்றைய தினத்தில், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா- கொழும்பு கொச்சிகடை ஸ்ரீ வீரமஹா காளி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார். ஜனாதிபதி மஹிந்தவினால் தனது கணவருக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கடவுளின் சந்நிதானத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டதாக அவர் தெரிவித்தார். ஒளிப்பதிவு படங்களுக்குஇங்கே அழுத்தவும்

    • 0 replies
    • 520 views
  8. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்திற்கான பதவியேற்பு வைபவத்தில் பொலிஸ் மாஅதிபர் வழமைக்கு மாறாக முப்படைத்தளபதிகளுடன் மேடையில் காணப்படாதிருந்தமை இன்று நடந்த வைபவத்தில் கலந்துகொண்டோரின் பேசுபொருளாக காணப்பட்டது. ஜனாதிபதி தேசிய மட்ட விழாக்களில் கலந்துகொள்ளும்போது, முப்படைத்தளபதிகளுடன் பொலிஸ் மாஅதிபரும் ஜனாதிபதியின் பின் நிற்பது மரபாகும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் அசோக டி சில்வா முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டபோது, முப்படைகளின் தளபதிகள் மட்டுமே மேடையில் காணப்பட்டனர். இன்றைய அலங்கார அணிவகுப்பில் பொலிஸ் காணப்படாமை பல ஊகங்களுக்கு இட்டுச் சென்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்…

    • 0 replies
    • 592 views
  9. சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது இரண்டாவது ஆட்சிக் காலத்துக்காகப் பதவியேற்கும் இன்றைய நிகழ்வில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இந்தியாவுக்குப் பெரும் அதிருப்தியைக் கொடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று கொழும்பு வந்துள்ள போதிலும் இந்த நிகழ்வில் இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதியின் விஷேட அழைப்பின் பேரிலேயே சீன ஜனாதிபதியின் பிரதிநிதியாக சென் கூ ஓவே உயர் மட்டக்குழு ஒன்றுடன் கொழும்பு வந்துள்ளார். சீன தேசிய காங்கிரஸின் உபதலைவராக செயற்படும் சென் ஓவே, ஜனாத…

    • 2 replies
    • 803 views
  10. இலங்கையில் பிரச்சினை முடிந்துவிட்டது; சமாதானம் வந்துவிட்டது என்று வெளிநாடுகளுக்கு எப்படிச் சொல்லமுடியும்? இவ்வாறு ஒரு பெரிய கேள்வியை நாடாளு மன்றில் எழுப்பியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி யின் உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல. அவர் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இப்படி ஒரு சில்லறைத்தனமான கேள்வியைக் கேட்டார் என்று அர சாங்கம் அதனைப் பொருட்படுத்தாது தனது போக்கில் செல்லும் என்பது சகலரும் அறிந்ததே. யாவருக்கும் தெரிந்ததே. ஆனால், கிரியெல்ல தமது கேள்விக்கு ஆதாராமாக முன்வைத்த விடயங்கள் அனைத்தும் அர்த்தம் உள்ளவை. - மனித உரிமை மீறல்களின் மத்திய நிலையமாக இலங்கை மாறிவருகிறது. - ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சிறையில் அடைக்கப்படு…

    • 0 replies
    • 495 views
  11. கிழக்கு பல்கலைகழகத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு தீவீரமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தமிழர் ஒருவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உயர் கல்வி அமைச்ர் எஸ்.பி.திசநாயக்காவிற்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர் கல்வி அமைச்சருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் கிழக்கு பல்கலைக்கழகமானது பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிராந்தியத்தை கொண்ட பல்கலைக்கழகமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்க வேண்டிய ஒரு பல்கலைக்கழகமாகவும் திகழ்கின்ற நிலையில் தற்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந…

  12. இன்றைய நிலையில் இக் கட்டுரை தவறாக புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இக் கட்டுரை நீக்கப்படுகிறது. மாவீரர் நாள் முடிந்த பின்பு மீண்டும் இணைக்கப்படும்

  13. ஊடகவியலாளரான கார்த்திகேசு திருலோகசுந்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது 19 November 10 01:44 pm (BST) லண்டனைச் சேர்ந்த ஊடகவியலாளரான கார்த்திகேசு திருலோகசுந்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான திருலோகசுந்தர் கொழும்பில் சுகவீனமுற்றிருக்கும் தனது தாயாரைப் பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த போதே கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து புலனாய்வுப்பிரிவினர் அவரைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தீபம் தொலைக்காட்சி, ஜிரிவி ஆகியவற்றில் பணியாற்றிய இவர் தற்போது ஐபிசி வானொலியில் …

  14. 'இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான உளவியல் யுத்தம்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பன்னிரண்டாவது பகுதி வெள்ளி (19.11.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்) கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டி…

  15. தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் விளம்பரப்பலகை பிரச்சாரம் லண்டன் கொறைடன் பகுதியில் மிகப் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் இளையோர் அமைப்பால் முதன் முதலாக பிரித்தானியாவில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. 15 /11 /2010 தொடக்கம் கொறைடன் பகுதியில் இவ் பிரச்சார பலகை நிறுவப்பட்டுள்ளது.

  16. November 19th, 2010 [View all posts in கட்டுரைகள்] கட்டுரைகள், தமிழீழம் Mullivaikal முள்ளிவாய்க்காலில் ஈழ மக்களின் தேசிய விடுதலை ஆயுதப் போராட்டம் மாபெரும் இனப்படுகொலையுடன் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர், இலங்கை அரசு ஆதரவாளர்களின் கை ஓங்கி இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் தங்களை இலங்கை அரசின் ஆதரவாளர்கள் என்று வெளிப்படுத்தி செயல்படுவதில்லை. இலக்கியம், நவீனத்துவம், தலித்தியம், பௌத்தம் போன்ற தங்களுக்குத் தோதான ஏதோ ஒன்றில் ஒளிந்து கொண்டு இலங்கை அரசை ஆதரிக்கிறார்கள். வன்னி மக்கள் மீது கொடூரமான போர் கட்டவிழ்த்து விடப்பட்ட போது அந்தப் போருக்கு எதிராகவோ அங்கு கொன்று குவிக்கப்படும் மக்களுக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூடப் பேசாத இவர்கள், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு இனப்படு…

  17. [TamilNet, Friday, 19 November 2010, 05:12 GMT] Reviewing the recently released 550-page United Nations Report of the Mapping Exercise Documenting the Most Serious Violations of Human Rights and International Humanitarian Law Committed Within the Territory of the Democratic Republic of the Congo (DRC), an article in the American Society of International Law (ASIL) said, "[t]he report detailing killings, rapes, destruction, and other violent attacks is alarming, not least because similar crimes continue to be committed in the DRC, where impunity still reigns large." Professor Boyle of Illinois College of Law, an expert in international law, commenting on the UN report sa…

  18. தேனிலவு கொண்டாடி வந்த லெபனானிய தம்பதி ஒன்று கண்டியில் வைத்து பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். தலதா மாளிகைக்கு அருகில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். கைதுக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை. இவர்கள் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்கந்துநெட்டியின் நெருக்கமான நண்பர்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

  19. மாவீரர் தினத்தில் யாழ் வரும் இந்திய அமைச்சர் கிருஷ்ணா - இனப்பிரச்சினை குறித்துப் பேசுவார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-19 08:04:15| யாழ்ப்பாணம்] krishnaஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மாவீரர் தினமான 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார். இங்கு வரும் அவர் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவார் என கொழும்பு ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 25ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ் விஜயத்தின் போது அவர் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் இந…

    • 1 reply
    • 878 views
  20. கிழக்குப் பல்கலை மாணவர் 14 பேருக்கு இன்று முதல் ஒரு வருட கற்கைத் தடை:-உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார். [Friday, 2010-11-19 04:37:20] கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு வருட கற்கைத் தடைக்குட்படுத்தப்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார். நேற்று பிற்பகல் நடைபெற்ற ஒழுக்காற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இத்தடை விதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வர்த்தக பீட மாணவி ஒருவரை செவ்வாய்க்கிழமை பகிடி வதைக்குட்படுத்திய ஒரு மாணவி அடங்கலான 5 மாணவர்களுக்கும், கடந்த வாரத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்ட இருவருக்கும். மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலாந்…

  21. யாழ். வாகன விபத்தில் இளைஞர் ஸ்தலத்தில் பலி! வெள்ளி, 19 நவம்பர் 2010 11:42 யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இவரின் சகபாடி படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயச்சந்தர் (வயது-30) என்பவரே உயிர் இழந்தவர் ஆவார். அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.கோபு (வயது-30) என்பவரே படுகாயம் அடைந்தவர் ஆவார். கோபு மோட்டார் சைக்கிளை செலுத்த, ஜெயச்சந்தர் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தபோது மருதனார் மடம் பிரதேசத்தில் வைத்து வான் ஒன்றுடன் இடிபட நேர்ந்தது. கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் இவ்விபத…

  22. இன்றைய நிலையில் வரலாறு குறித்து: நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய நிகழ்காலமும் நாளைய எதிர்காலமும் முன்னோக்கி நகர்கின்றது.பெரும்பாலும் தேசிய இன விடுதலைப் போராட்ட வரலாறு பல தலைமுறைகளைக் கடந்தே பயணிக்கின்றது. சேனநாயகாவிலிருந்து மகிந்த இராசபக்சே வரை, சவகர்லால் நேருவிலிருந்து இராகுல் காந்தி வரை என மூன்று தலைமுறைகளைக் கடந்து பயணித்து கொண்டிருக்கின்றது ஈழ விடுதலைப் போராட்டம். 60 ஆண்டுகாலமாக நடந்துவரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்து நிற்கும் கட்டம் இது. இத்தகைய நிலையில், இலங்கை தீவில் இயக்கர், நாகர், வேடர் என்ற இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தைப் படிப்படியாக இழந்து எப்படி இன்றைய நிலையை அடைந்திரு…

    • 0 replies
    • 688 views
  23. தமிழ் பெண்கள் மீது வன்முறைகளை தொடரும் சிறீலங்காப்படை நவ 18, 2010 முல்லைத்தீவின் அளம்பிலில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளுக்கு செல்லும் ஸ்ரீலங்காப்படையினர் பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமமாக அளம்பில் கிராமம் காணப்படுகின்றது. கடல்தொழிலினை முதன்மைத்தொழிலாக கொண்ட மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றார்கள். ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கையினாலும் கடல்தொழில் செய்யும்போது ஸ்ரீலங்காப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களினாலும் துணைவன்மார்களை இழந்த விதவைகளே பெருமளவில் காணப்படுகின்றார்கள். இவ்வாறு கடந்த மாதம் 19ம் 20ம் நாட்களில் அளம்பில் வடக்கு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளில் ஸ்ரீலங்க…

  24. தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர் அனலை நிதிஸ் ச. குமாரன் கோடான கோடி இதயங்களில் குடிகொண்டு மரணத்தையே வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கைகளே மாவீரர்கள். கடந்த வருடத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மரணித்த மாவீரர்களின் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசித்து வழிபட வேண்டும். தமக்காக வாழாது தமது தேசத்தின் விடியலுக்காக தமது உன்னதமான உயிர்களை துறந்த இந்த வேங்கைகள் மறக்க முடியாதவர்கள். விடுதலைப்புலிகளினால் கடந்த வருடமும் இந்த வருடமும் மாவீரர் வார நிகழ்வுகளை நடத்த முடியாது இருந்தாலும் நிச்சியம் ஒவ்வொரு தமிழனும் புலியே என்பதை உணர்ந்து நவம்பர் 21 முதல் 27 வரையான ஒருவார காலப்பகுதியில் பல்வேறுபட்ட …

    • 0 replies
    • 647 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.