ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
இமாலயபிரகடனத்தை கையளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தமை உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் இந்த சந்திப்பின் மூலம் ஏற்பட்டுள்ள வலிகள் குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ளது. பன்முகத்தை தன்மை குறித்த ஈடுபாடுகளிற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவு உறுப்பினர்களை கொண்ட பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்தோம் என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செல்வாக்கு செலுத்தக்கூடிய எவரும் இமாலய பிரகடனம் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளிற்கான அதன் ஆணை குறித்து அறிந்துகொள்ளச்செய்வதே இதன் நோக்கம்.எனவும் கனடா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் படங்களும் இந்த சந்திப்பும் கனடா தமிழர…
-
- 0 replies
- 224 views
-
-
Published By: VISHNU 21 DEC, 2023 | 08:18 PM ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயமானது இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுத்தல் போன்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார். அவர் வியாழக்கிழமை (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அடிப்படை மூலோபாய விடயங்கள் சிலவற்றை கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடந்த உள் நாட்டு இறைவரி தொடர்பான கலந்துரையாடலில் முன்வைத்து உரையாற்றினார். ஜனாதிபதி கூறிய மூலோபாயம் ஒன்று வெளிநாடுகளுடன் வர்த்தக…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
21 DEC, 2023 | 08:28 PM (நா.தனுஜா) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அரசியல் தீர்வற்ற வெறும் 'நல்லிணக்கக் கொடியைக்' காண்பித்து தம்மைத் தொடர்ந்து ஏமாற்றவேண்டாம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவைத் தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த அவர், அதில் சர்வதேச மேற்பார்வை மற்றும் புதிய…
-
- 2 replies
- 324 views
- 1 follower
-
-
21 DEC, 2023 | 08:53 PM யாழ்தேவி கடுகதி புகையிரதம் தடம்புரண்டதால் வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸை நோக்கி புறப்பட்ட யாழ்தேவி கடுகதி புகையிரதம் இன்று வியாழக்கிழமை (21) மாலை 07மணியளவில் மஹவ புகையிரத நிலையத்தில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு மலையகத்துக்காக நாளை முதல் விசேட புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/172246
-
- 4 replies
- 541 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 DEC, 2023 | 03:43 PM இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது "கடந்த 18 ஆம் திகதி எங்களுடைய கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் சபைக் கூட்டமும் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகத் தெரிவும் இடம்பெற இருக்கின்றன. எந்தக் காரணம் கொண்டும் கட்சிக்கான புதிய தலைவர் தெரிவ…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 DEC, 2023 | 04:40 PM யாழ்ப்பாணம், குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவத்தின் தொடர்சியாக வியாழக்கிழமை (21) வாள் வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதில் அதே இடத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை புதன்கிழமை (20) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வியாழக்கிழமை (21) இரவு வாள் வெட்டு குழு ஒன்று தமது எதிராளிகளை தேடி குடத்தனை கிழக்கு, அம்பன் க…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
21 DEC, 2023 | 04:23 PM தென்மராட்சி மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பேரின் 23வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை (20) மிருசுவில் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில் இந்நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வில் சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார். மிருசுவில் பகுதியில் கடந்த 2000 டிசம்பர் 20ஆம் திகதி சிறுவர்கள் உட்பட 8 பேரை இ…
-
- 2 replies
- 274 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 DEC, 2023 | 04:15 PM (எம்.வை.எம்.சியாம்) குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் நாள் சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 92 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக…
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
வவுனியாவில் ஆசிரியர்களுக்கிடையே அடிதடி! வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், ஆசிரியர்கள் மூவருக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்தவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை இச் சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்து விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1363848
-
- 3 replies
- 835 views
-
-
பண மோசடியுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வெளியிடப்பட்டே இவர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர்கள் இதற்காக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அறையொன்றை பெற்றிருந்தனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விளம்பரத்தின்படி நேற்று புதன்கிழமை (20) குறித்த இடத்துக்கு இரண்டு கொள்வனவாளர்கள் கார் மற்றும் ஜீப் ஒன்றை கொள்வனவு செய்ய வந்துள்ளனர். இதன்போது சம்பந்தப்பட்ட வாகனங்களை விற்பதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க முற்பணம் தருமாறு குறித்த அலுவலகத்திலிருந்த முகாமையாளரும் மற்றொருவரும் கொள்வனவாள…
-
- 4 replies
- 459 views
- 1 follower
-
-
மன்னார் மாவட்டத்திற்கான மாவட்ட செயலாளராக கே.கனகேஸ்வரன் இன்றைய தினம் ( 21.12.2023 ) நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு ரஞ்சித் அசோக அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும் மன்னார் முல்லைத்தீவு அபிவிருத்தி குழுவின் தலைவர் கே. காதர் மஸ்தான் அவர்களும் கலந்து கொண்டனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை (23.12.2023) காலையில் பதிவியேற்கவுள்ளார். 1998 முதல் 2003 செப்டெம்பர் வரை கொடிகாமம் போகட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர் 2003 முதல் 2004 ஓகஸ்ட் வரை நிர்வாக சேவைக்கான பயிற்சியி…
-
- 0 replies
- 369 views
-
-
21 DEC, 2023 | 07:09 AM ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குற…
-
- 6 replies
- 687 views
- 1 follower
-
-
Published By: VISHNU 20 DEC, 2023 | 04:46 PM (நா.தனுஜா) அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து இலங்கைக்கான நிதியுதவியில் இரண்டாம் கட்டமாக 500 மில்லியன் டொலர்களை உலகவங்கி விடுவித்துள்ளது. இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்கக்கூடிய 'மீளெழுச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான அபிவிருத்தி கொள்கை செயற்திட்டத்துக்கு' கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி உலகவங்கி அனுமதியளித்தது. நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், வறிய மற்றும் நலிவுற்ற சமூகங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்தல், அனைவரையும் உள்ளடக்கிய தனியார்துறை மீட்சிக்கு ஒத்துழைத்…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
Published By: VISHNU 20 DEC, 2023 | 05:15 PM மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் புதன்கிழமை (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதி என்பது சாதாரண தரைத்தோற்றத்தில் இருந்து மிகவும் குறைவான தாழ் நிலப் பிரதேசம் ஆகும். வலிமை குறைந்த கன தியற்ற நொதிய முள்ள தீவு என்பதால் தான் மூன்று மாடிக்கு மேல் கட்டிடம் அமைப்பதற்கு மன்னார் தீவு பகுதியில் அனுமதி வழங்குவதில்லை. ஐம்பது ஆண்டுகளில் நலிவுறும் தீவ…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
Published By: VISHNU 20 DEC, 2023 | 05:53 PM வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மாற்றுத்திட்டமொன்ற வகுத்து புதிய வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்ததா வகையில் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் கண்டாவளை மாகாவித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்க…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
வெற்றி மகுடம் சூடிய கில்மிசாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து! இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட சரிகமபா லிட்டடில் சாம்ப் போட்டியில் வெற்றி மகுடம் சூடிய கில்மிசா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் “Zee Tamil” தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம பா “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 14 வயதுடைய கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், இலங்கைப் பெண் ஒருவர் இந்திய தொலைக்காட்சி பாடல் போட்ட…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 03:11 PM போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபருக்கு சொந்தமான கஹதுடுவ மூனமலவத்த பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் பத்துக் கோடி பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சொத்து எவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதை வீட்டின் உரிமையாளர் வெளிப்படுத்தத் தவறியதால், சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இரண்டு மாடி வீடு, சொகுசு கார், இரண்டு…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
யாழ். புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம் ; 6 பேர் கைது ; மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை Published By: VISHNU 20 DEC, 2023 | 02:53 PM யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே வேளை அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு, அவர்களை பொலிஸார் கடுமையாக எச்சரித்ததுடன், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை வழங்கி பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸா…
-
- 6 replies
- 810 views
- 1 follower
-
-
மியன்மாரில் பயங்கரவாதிகளினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அந்நாட்டு உள்துறை அமைச்சர் இணக்கம் வௌியிட்டுள்ளார். இந்த விடயத்தை மியன்மாருக்கான இலங்கை தூதுவர் உறுதி செய்துள்ளார். மியன்மாரின் தாய்லாந்து எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக இலங்கை இளைஞர்கள் சிலர் பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வௌியாகின. குறித்த பிரதேசம் கூகுள் வரைபடத்தில் “Cyber Criminal Area” எனப்படும் சைபர் குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மியன்மாரின் மியாவெட்டி (Myawaddy) நகரில் இருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி முழுமையாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் காணப்ப…
-
- 2 replies
- 521 views
- 1 follower
-
-
Published By: VISHNU 20 DEC, 2023 | 02:43 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த் தொற்றுக்கள், நோயாளர் பராமரிப்பில் இடையூறுகள் என்பன ஏற்படுவதன் காரணமாக செவ்வாய்கிழமை (19) தொடக்கம் பார்வையாளர் அனுமதிப்பத்திரம் (PASS) மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு நோயாளருக்கு தலா இரு அனுமதிப்பத்திரம் எனும் அடிப்படையில் நோயாளரை அனுமதிக்கும் பகுதியில் பெற்றுக் கொள்ள முடியும். சிறப்பான நோய்ப்பராமரிப்பு வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த ஒழுங்கு முறைக்கு அனைத்து பார்வையாளர்களும் ஒத்துழைப்பினை வழங்கும்படி கோரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, ஸஹ்றி கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 12 நிமிடங்களுக்கு முன்னர் தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை - கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர் - தாடி வைத்துள்ளமையைக் காரணம் காட்டி, ‘அவர் கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியாது’ என, அந்தப் பல்கலைக் கழகம் அண்மையில் தடை விதித்தது. இதனையடுத்து, பல்…
-
- 0 replies
- 584 views
- 1 follower
-
-
இமயமலைப் பிரகடனத்திற்கு வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு! திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும் யுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும், இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிப்பதாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த 69 சிவில் அமைப்புக்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகத் தமிழர் பேரவை – சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட ‘இமயமலைப் பிரகடனம்’ வெளிப்படுத்தும் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு எனும் கூற்றுக்கள், மேற்குறிப்பிட்டவற்றை முற்றிலும் புறமொதுக்கி, இப் பிரச்சினையைப் புரிந்துண…
-
- 2 replies
- 417 views
- 1 follower
-
-
வடமாகாண மீனவர்களுக்கு பாதீட்டில் 500 மில்லியன் ஒதுக்கீடு! அரசதலைவர் ரணிலிற்கு நன்றி அமைச்சர் டக்ளஸ்! வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் வடக்கிற்கு ஒதக்கீடு செய்யபட்டடுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய கடற்றொழில் தினத்தினை கடற்றொழில் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் கொண்டாடியுள்ளனர்.கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன் பாதீட்டில் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு என ரூபாய் 500 மில்லியன்…
-
- 0 replies
- 366 views
-
-
Published By: NANTHINI 20 DEC, 2023 | 10:48 AM நாடளாவிய ரீதியில் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், பாடசாலை அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு பரீட்சை தொடர்பான அட்டவணைகள், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் கிடைக்காவிட்டால், பாடசாலை அதிபர்கள், …
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் புலம்பெயர் அமைப்பான உலகதமிழர் பேரவை பௌத்தமதகுருமார்கள் குழுவொன்றுடன் இணைந்து முன்னெடுத்துள்ள இமாலய பிரகடனம் தெளிவற்றது என தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடம் எனினும் முன்னேற்றகரமான விடயங்கள் இடம்பெற்றால் அதற்கு பௌத்தமதகுருமார் ஆதரவளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் உலக தமிழர் பேரiயும் பௌத்தமதகுருமாரும் இணைந்து இமாலயப்பிரகடனத்தினை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் பேரவைகளின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தேசிய ஐக்கியத்தினையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சிகளையும் அஸ்கிரிய பீடம் குழப்பாது என தெரிவித…
-
- 9 replies
- 593 views
-