ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
சிங்களம் நடாத்திய நாகர்கோவில் படுகொலையின் 15வது ஆண்டு நினைவு நாள் திகதி:22.09.2010 அதிகாலைப் பொழுதொன்று குருதியில் உறைந்தது அன்று, அந்த நாளை நாம் மறப்போமா? தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் சென்ற அந்த பிஞ்சுக் குழந்தைகள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததே தெரியவில்லை. பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவி…
-
- 0 replies
- 442 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு பல வெற்றிக்கான அடித்தளங்களை இடட்டும்! – தமிழீழ மக்கள் பேரவை (பிரான்ஸ்)ஈழத் தமிழர்களின் அடிமை விலங்கொடிக்க, அகிம்சைப் பாதையில் உயிரைக் கொடுத்த தியாக தீபம் திலீபன் அவர்களது 23 ஆவது நினைவு தினத்தில் நாடு கடந்த தமிழீழ அரசு தனது இரண்டாவது அமர்வை மேற்கொள்ளுகின்றது. எதிர்வரும் 29 ஆம் திகதி அமெரிக்காவில் ஆரம்பமாகி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த அமர்வு ஆக்க பூர்வமான பல வெற்றிக்கான அடித்தளங்களை இடும் என்று பிரான்ஸ் – தமிழீழ மக்கள் பேரவையினராகிய நாம் பெரும் நம்பிக்கையோடு வாழ்த்துகின்றோம். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ தான் வலிந்து ஏற்றுக்கொண்ட போராட்டப் பாதையின் இலக்குத் தவறாமல், தமிழீழத்தை வென்றெடுக்கும் இலட்சிய…
-
- 0 replies
- 534 views
-
-
இராணுவ துணைக் குழுத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமெரிக்க விசா மறுப்பு சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும், துணைஇராணுவக்குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எதிர்பார்ப்பில் இருந்தாகவும் எனினும், இலங்கைக்கான அமெரிக்க தூதுரகம் அவருக்கு வீசா அனுமதியை வழங்க மறுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தேவானந்த வழமையான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தேவானந்த அமெரிக்கா சென்றுள்ளதாக நினைத்து, பிரதியமைச்சர் வீரக்குமார திஸாநாயக்க பரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் பதில் அமைச்சராக, பிரதமர் டி.எம்.ஜயரத்ன முன்னிலையில் நேற்ற…
-
- 4 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலி ஆதரவாளர்களென குற்றச்சஞ்சாட்டப்பட்டுள்ள இருவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்த வேண்டாம்:கனடிய நீதிமன்றத்தில் கோரிக்கை திகதி: 22.09.2010, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்காவினால் வேண்டப்படும் இருவரின் நாடு கடத்தல் நடவடிக்கை உத்தரவினை இடை நிறுத்துமாறு கனேடிய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதீபன் நடராஜா மற்றும் சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரே குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கடந்த வருடத்தில் கனேடிய அதிகாரிகளிடம் சரணடைந்தனர். இந்தநிலையில் இவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தீர்ப்பினை மறு பரிசீலனை செய்யுமாறு இவர்களின் வழக்கறிஞர்கள் டொரன்டோ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வுப் பொதியினை வைக்க வேண்டுமென்ற கோக்கையை இப்பந்தியில் வைத்திருந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தையும் தவிர பல தரப்பினரும் இந்தக் கோக்கை குறித்து சாதகமாகவே பசீலித்தனர். கருத்துக்களையும் தெவித்திருந்தனர். அரசியல் தீர்வைவைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்கும் உள்ளது என்ற ஒரு கோக்கையின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் சார்பில் இந்தக் கோ க்கை ன்வைக்கப்பட்டதேயன்றி அவர்களைச் சங்கடத்திற்குள்ளாக்குவதற்காக அல்ல என்பதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். வெளிநாட்டு தூதுவர்களையோ அல்லது தூதரக…
-
- 1 reply
- 825 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனிடம் கேட்டபோது, "இவ்வாறான சந்தர்ப்பங்களில் இது போன்ற வதந்திகள் வெளிவருவது வழக்கம். என்றாலும் இப்போதுள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவரும் கட்சி மாறக்கூடிய வாய்ப்பு இல்லை. ஒருவர் கூட மாற மாட்டார் என நான் உறுதியாக நம்புகின்றேன்" என்றார். அதேவேளை, அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் பேசிய, 18 ஆவது அரசியல் திருத்த வாக்களிப்பின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேன, நாடாளுமன்ற உறுப்பின…
-
- 1 reply
- 709 views
-
-
கே.பி கருனா பிள்ளையா போன்ற பயங்கரவாதிகள் சுகத்தை அனுபவிக்க சரத் பொன்சேகா சிறையில் வாடுகிறார் – ரவி கருணாநாயக்க கொழும்பு மக்களின் முக்கிய உரிமையான மாநகரசபையை, அதிகாரசபையாக மாற்ற அரசு முயல்வதைவிட தோதல் நடத்தி அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் கட்சிக்கு சவால் விடுத்துள்ளது. தேர்தல் ஒன்றின் மூலம் கொழும்பு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் ஆளும் கடசி குறுக்கு வழியில்; முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார் பயங்கரவாதிகளின் பிடியில் 30 ஆண்டுகளாக இருந்த இலங்கையை மீட்ட சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதேவேளை, கே.பி கருனா பிள்ளையான் போன்ற ப…
-
- 0 replies
- 868 views
-
-
கனடா செல்லும் ஏதிலிகளை கனடா இனி ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலை பயன் படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழ் ஏதிலிகளுக்கு கனேடிய அரசு இப்போது பச்சைக் கொடி காட்டியுள்ளது. கனடாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டாம் என முன்வைக்கப்பட்ட திட்டத்தை கனடா அரசாங்கம் நிராகரித்துள்ளது குடியுரிமையை வழங்குதல் அல்லது அவர்கள் திருப்பியனுப்புவதல் அல்லது அவர்களை தடுத்து வைத்தல் தொடர்பாக கவனம் செலுத்துவதை விட்டுவட வேண்டும் என கனடா அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் இருந்தோ அல்லது வேறு எந்த நாட்டில் இருந்தோ கனடாவிற்கு அகதிகள் கனடாவிற்குள் வருவதை தடுக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கனேடிய பிரதமர் ஸ்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளின் ஐரோப்பிய பொறுப்பாளர் பாலபாண்டியன் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய பொறுப்பாளர் பாலபாண்டியன் இலங்கைக்குள் வந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலபாண்டியன் சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் ஊடுறுவியுள்ளதாகத் அவை தெரிவித்துள்ளது பாலபாண்டியனை கைது செய்வதற்காக புலனாய்வுப் பிரிவினர் தீவிர கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. எமிரேட்ஸ் விமான சேவை ஊடாக லண்டனிலிருந்து டுபாய் ஊடாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய சொத்துக்களை பாலபாண்டியன் நிர்வாகம் செய்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். யாழ…
-
- 2 replies
- 2.4k views
-
-
உலகின் மிக நீளமான கூந்தலை உடைய ஆணாக இலங்கையர் சாதனை! திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 15:49 உலகின் மிக நீளமான கூந்தலை உடைய ஆண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் கனடாவில் வாழும் இலங்கையரான சுதேஸ் முத்து (வயது 40). இவரது கூந்தலின் நீளம் ஆறு அடி மூன்று அங்குலம். இவரின் உயரமோ ஐந்து அடி ஒன்பது அங்குலம். சர்வதேசப் பிரசித்தி வாய்ந்த பாடகர் Bob Marley இன் இசைப் பிரியனான சுதேஸ் Marley இன் கூந்தலால் கவரப்பட்டவர். 17 ஆவது வயதில் இருந்து இக்கூந்தலை வளர்த்து வருகின்றார். இவர் 1995 ஆம் ஆண்டு கனடாவில் குடியேறினார். 1999 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்று திருமணம் செய்து கொண்டார். அப்போது கூட கூந்தலை வெட்டுகின்றமைக்கு மறுத்து விட்டார். இவரின் தா…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கல்லறையில் கருத்துரிமை -புதிய நூல் திகதி: 21.09.2010, ’தமிழக மீனவர்கள் சிங்களப்படையால் தாக்கப்பட்டால் ஒரு சிங்களன் இனி தமிழ்நாட்டில் உயிருடன் நடமாட முடியாது’,இந்திய அமைதிப்படை ஈழத்தில் எம் மக்களை துன்புறுத்தியது’ என்ற எழுச்சி உரையினை அடிப்படையாக வைத்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு வேலூர் சிறைச்சாலையில் அடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சீமானின் விடுதலையை வலியுறுத்தி ஒரு நூல் பரபரப்பாக வெளிவந்துள்ளது.இதில் தமிழ்நாட்டில் இதுகாறும் வரை கருத்துரிமை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக விளக்கும் கட்டுரைகளும்,சீமானின் கைது சட்ட ரீதியாகவும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம், எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம் – செர்மனி உலகத்தமிழர் பேரவை உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக தமிழின விடியலை நோக்கிச்செலும் எமது மீனகம் தளத்தின் ஓராண்டு நிறைவையொட்டி உலகத்தமிழர் பேரமைப்பின் செர்மனிய பொறுப்பாளர் ஆம்பூர் பெ.மணியரசன் அளித்துள்ள வாழ்த்துச்செய்தியில் “உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம், எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார். அன்பு மீனகத்தார் அனைவருக்கும் தமிழ் வணக்கம். மீனகத்தின் தமிழின விடியல் முன்னெடுப்பின் நடைப் பயணத்தில் ஓராண்டு நிறைவை எட்டயிருக்கும் இவ்வேளையில் எம் வாழ்த்துதனை இணைத்துக்கொள்கின்றேம். அத்துடன் தமிழின விடுதலை முன்னிட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொ…
-
- 0 replies
- 710 views
-
-
இணக்கச் சபைகள் நிறுவப்படும்- நீதி அமைச்சு வடக்கின் சகல மாவட்டங்களிலும் இணக்கச் சபைகள் நிறுவப்படும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இணக்கச் சபைகள் நிறுவப்பட உள்ளதாகத் நீதி அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே மொத்தமாக 14 இணக்கச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது யாழ்ப்பானம் தவிர்ந்த ஏனைய வடக்கு மாவட்டங்களில் முதல் தடவையாக இணக்கச் சபைகள் நிறுவப்பட உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இணக்கச் சபைகளில் இணைய விரும்புவோர் பிரதேச செயலகத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://meenakam.com/2010/09/22/%E0%AE%87%E0%AE%A3%E…
-
- 0 replies
- 455 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகள்! ஜெர்மனியின் மத்திய தொகுதியின் உத்தியோகப்பூர்வமான முடிவுகள் அறிவிப்பு!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெர்மன் மத்திய தேர்தல் தொகுதியின் பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை ஜெர்மன் தேர்தல் ஆணையகம் இன்று (செற்டெம்பர் 21) அறிவித்துள்ளது. 1. திரு. கிரேத்தியன் ஜேம்ஸ் அல்ஸ்ரன் 4. திரு. சுப்பிரமணியம் பரமானந்தன் 5. செல்வி. தனிகா சுப்பிரமணியம் ஆகியோர் தாமாக முன்வந்து இத் தேர்தலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்ததின் பேரில் பின்வரும் நால்வரும் 2. னுச. கணேசரட்னம் சந்திரபாலன் 3. திரு. இந்திரலிங்கம் முகுந்தன் 6. திரு. இராசையா தனபாலசிங்கம் 7. திரு. நடராஜா திருச்செல்வம் ஜ…
-
- 0 replies
- 642 views
-
-
யாழ்.மக்களின் இடம்பெயர் வாழ்வின் அவலம் தொடர்கின்றது யாழ்.குடா நாட்டிற்கான போக்குவரத்து வசதிகள் தற்போது மேம்பட்டுள்ள நிலையில் அங்கு உணவுப்பொருட்களினதும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களினதும் விலைகள் தென்பகுதியுடன் ஒட்பீட்டளவில் பெரியளவில் வித்தியாசம் இல்லை என்றபோதிலும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த நிலையில் வாழும் மக்களின் அவல வாழ்வு தொடரவே செய்கின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் என சிறிலங்கா அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் ஒரு மிகச்சிறிய பகுதிகளில் மக்களை தேர்தல் காலத்தில் சிறிலங்கா அரசு மீளக்குடியமர்த்தினாலும், இன்னும் ஆயிரக்கணக்கிலான ஏக்கர் விவசாய நிலப்பரப்பும், ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்விடங்களும் இன்னும் …
-
- 0 replies
- 892 views
-
-
2010-09-19 12:34:26 [views = 1112] "அண்ணன் சுவிஸ்ல தலையால மண் கிண்டுகிறான். அவன் தங்கை இங்கே நோண்டுகிறாள் நொக்கியாவை" அடிமேல் அடிவிழுந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கின்ற குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம் 90 வீதம் வெளிநாடு வாழ் உறவுகளின் கைகளில் தான் இருக்கின்றது. எத்தனையோ துன்பத்தின் மத்தியில் இன்னொரு இனத்தினால் பொருளாதார ரீதியில் அடிவாங்கி அடிவாங்கி களைத்துவிட்ட குடாநாட்டு மக்களை இவர்கள் மிகவும் நல்லவங்களாடா எவ்வளவு அடிவாங்கினாலும் பேசாமல் இருக்கிறாங்கள் என எண்ணி வடிவேலு பாணியில் அடிக்காமல் விட்டு அட்டை போல் ஒட்டி இரத்தம் உறுஞ்ச நினைக்கும் பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு இரையாக செல்ல துடிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற எவரும் இனி வரப்போவதில்லை. எமது இனத்தின்…
-
- 11 replies
- 2.9k views
-
-
அதிர்ச்சி வைத்தியம் இப்போது [ உதயன் ] - [ Sep 21, 2010 04:00 GMT ] உண்மை இறப்பதில்லை. உண்மையை எவராலும் அழித்துவிடவும் முடியாது. அதனை ஒளித்து மறைத்து வைத்துக் கொள்ளவும் இயலாது. அவ்வாறு ஒரு சில காலத்துக்கு மறைக்க முயன்றாலும் அது ஏதோ வகை யில், ஒரு நாள் வெளிப்படும்; வெளிப்படுத்தப்படும். இது உலக நியதி. வன்னியில் நடைபெற்று முடிந்த போரின் கடைசிக் காலப்பகுதியில், பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பாதுகாப்பு வலயங்களை அறிவித்தது. கடந்த வருடம் (2009 ஆம் ஆண்டு) ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு கிரா மங்களை உள்ளடக்கிய, பரந்தன் முல்லைத்தீவு வீதி யின் 25ஆம் கிலோமீற்றரில் இருந்து 32ஆம் கிலோ மீற்றர் வரையான 7 கிலோ மீற்றர் நீளமான பிரதே சத்தில…
-
- 5 replies
- 769 views
-
-
குடாநாட்டின் கனிய வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு யாரிடம்? Courtesy: உதயன் - புரட்டாதி 21, 2010 உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை யின் பல்வேறு பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. வடமாகா ணத்தில் யாழ்ப்பாணம், முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் படு வேகமாக இந்தக் கட்டுமானப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக யாழ்ப்பா ணத்தில் அவை அமளியாக இடம்பெற்று வருகின்றன. ஒரு புறத்தில் அரச திணைக்களங்களுக்கான புதிய கட்டடங்கள், தொழிற்சாலைகள், பாடசாலை கள், பொது மண்டபங்கள், ஹோட்டல்கள், வியாபார நிறுவனங்கள்…
-
- 0 replies
- 690 views
-
-
டொரன்டோ வாழ் தமிழர்களே! நியூயோர்க் நகரில் நாளை நடைபெறவிருக்கும் கவனயீர்பு நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்தினூடாக பதிவை மேற்கொள்ளலாம்:- 1866 263 8622 இணைப்பு 101 அல்லது 416 880 6057.பேருந்துகள் புறப்படும் நேரம்:-இரவு 8.00 மணி செப்டம்பர்21,2010 (சிறு கட்டணம் அறவிடப்படும்)
-
- 1 reply
- 958 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 72 குளங்களில் முதலில் பூநகரி, பச்சிலைப்பள்ளி, கரச்சி, முழங்கா போன்ற பிரதேசங்களிலுள்ள 36 குளங்கள் 5 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.இந் நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பமாக உள்ளது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 36 குளங்களின் புனரமைப்புப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, பத்தரமுல்ல ஆளுநர் உபகாரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.இக்கலந்துரையாடலில் நீர்பாசனத் திணைக்களப் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்குளங்களைப் புனரமைக்கும் பணி 'சிறு குள நீர்ப்பாசனம்" என்னும் தலைப்பின் கீ…
-
- 1 reply
- 1k views
-
-
செவ்வாய், 21 செப்டம்பர் 2010 18:26 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்தியாவின் தடையை எதிர்காலத்தில் நீடிக்கலாமா? இல்லையா ? என்பது குறித்து விசேட விசாரணை நடத்தி வரும் டில்லி மேல் நீதிமன்றம் அவ்வியக்கத்தின் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அங்கு ஆஜராகி வாதாடுகின்றமைக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது. இவ்விசேட வழக்கு இன்று டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் வந்தது. அப்போது ஆஜரான வைகோ இத்தடை நீடிக்கப்படக் கூடாது என வாதங்களை முன்வைக்கின்றமைக்கு அனுமதி கோரினார். அவரது வாதங்களை செவிமடுத்த பின்பே நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரச ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/100921_vavuniya.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 487 views
-
-
http://www.yarl.com/files/100921_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 503 views
-
-
http://www.yarl.com/files/100921_pon_selvarasa.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 690 views
-
-
http://www.yarl.com/files/100921_colombo_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 672 views
-