ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
04 DEC, 2023 | 10:58 AM அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்திருப்பீர்கள் எங்களுக்கு அவ்வாறான அரசியல் கலாச்சாரம் இங்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நாங்கள் அந்த மாற்றத்தை அரசியல்கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை பொறுப்பேற்பதற்கான ப…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
இலங்கை சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் ! நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, மரண தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியதாவ…
-
- 0 replies
- 190 views
-
-
ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குபவர்களுக்கு மாதாந்தம் செலவிடப்படும் தொகை ஜனாதிபதி ஆலோசகர்களாக பணியாற்றும் பதினைந்து பேருக்கான மாதாந்த செலவு இருபத்தி இரண்டு இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுப்பனவுகள் உட்பட இவ்வாறு செலுத்தப்பட்ட தொகை இருபத்தி ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தேழு ரூபாயாகும். பொருளாதார நிலைப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியன தொடர்பான ஆலோசகருக்கு மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். ஊடகம் மற்றும் தொடர்பாடல் ஆலோசகருக்கு இரண்டு இலட்சத்து பதின்மூன்றாயிரம் ர…
-
- 2 replies
- 338 views
-
-
80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள் இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தத் தவறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் பாதுகாப்பு பெறும் அந்த பத்து வாடிக்கையாளர்களை நாட்டிற்கு வெளிப்படுத்த பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் நேற்று (02) நடைபெற்ற மாநாட்டில் அவர் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், "இந்த வங்கிகள் நாட்டின் மறுமுனையில் உள்ள விவசாயிகள் முதல் கொழும்பில் உள்ள பெ…
-
- 1 reply
- 525 views
-
-
ஜனாதிபதி மற்றும் பில்கேட்ஸூக்கும் இடையில் சந்திப்பு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும்மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்தார். டுபாயில் நடைபெறும் COP 28 மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில்கேட்ஸ்க்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) இடம்பெற்றது. காலநிலை மாற்றத்தைக் குறைக்கும்உலகளாவிய சவால் மற்றும் வெப்பவலயப் பிராந்தியத்தில் இலங்கையின் பங்களிப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் காலநிலை மாற்றத…
-
- 2 replies
- 540 views
-
-
அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு. டிசம்பர் இரண்டாம் வாரத்திற்குள் இலங்கைக்கு எழுநூற்று எண்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடன் தொகை முந்நூற்று முப்பது மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையாகவும், உலக வங்கியின் உதவியாக இருநூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெறப்பட உள்ளன. சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக, கடனாளர் மறுசீரமைப்பு பாரிஸ் கிளப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் சீனா மற்றும் இந்தியா முன்பு அதன் ஒப்புதலை வழங்கியிருந்தன. அதன்படி, 5.9 பில்லியன் அமெரிக்க…
-
- 0 replies
- 286 views
-
-
”மேய்ச்சல் தரையை மீட்டுத்தராவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்படும்” எங்கள் மேய்ச்சல் தரையினை மீட்டுத்தராவிட்டால் நாங்கள் இங்கு தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்படும் என மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக தமது கால்நடைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுவருவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று (02) பசு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக தமது கால்நடைகள் மீது அத்துமீறிய பயிர்செய்கையாளர்களினால் தாக்குதல் நடாத்தப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெ…
-
- 0 replies
- 201 views
-
-
வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சியாளர்களுக்காக 30 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் 2.8% தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. 2024 – 2028 வரையான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்களின் அளவை 10% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும். ஒவ்வொரு துறைகளின் கீழும் காணப்படும் …
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால மற்றும் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பிரதிநிதி வைத்தியர் லகா சிங்கிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 1. டெங்குவை கட்டுப்படுத்த தேவையான தொழில்நுட்ப மற்றும் திட்டங்களுக்கு ஆதரவு. 2. நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் ஏற்படும் எதிர்ப்பைத் தடுப்பதற்கான ஆதரவு. 3. அடுத்த 10 ஆண்டுகளுக்கு சுகாதாரக் கொள்கைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான தரவுகளை வழங்குதல். 4. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) ஊழியர்களுக்கான பகுப்பாய்வு, தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவு. https:…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
02 DEC, 2023 | 06:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பலஸ்தீனம் - காஸாவின் இன்றைய நிலை தொடர்பில் அரசாங்கம் பலவீனமான நிலைப்பாட்டில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த நிலையில் உள்ளதா என்பதை அறியவில்லை. காஸாவில் போர் குற்றங்கள் இடம்பெறுகின்றன. நாளாந்தம் 100க்கு அதிகமானோர் மரணிக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியமும் வேண்டும், மேற்குலகமும் வேண்டும். ஆனால், தர்மத்தின் நிலையில் இருந்து நாம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இஸ்ரேல் என்ற நாடு ஆரம்பத்தில் இருக்கவில்லை என்பதை முழு உலகும் அறியும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செ…
-
- 2 replies
- 288 views
- 1 follower
-
-
02 DEC, 2023 | 06:54 PM "புனர்வாழ்வளித்தல் தொடர்பான சட்டம் அண்மையில் இயற்றப்பட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 520 பேரும், சேனபுர மத்திய நிலையத்தில் 471 பேரும், வவுனியா மத்திய நிலையத்தில் 93 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்" என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/170831
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
அரசின் கடன்களை அடைப்பதற்காக நாட்டு மக்களின் வங்கிகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உதவி செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை அரசின் நியாயமற்ற வரிக்கொள்கைகளால் வங்கி ஊழியர்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதாக ஊழியர் சங்கத்தின் உதவி செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (2.12.2023) கொழும்பு - விகாரமாதேவி பூங்காவில் வங்கி ஊழியர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்றுள்ளது. மேலும் அரசாங்கம் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க விட்டால் நாடு முழுவதும் சென்று போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/protest-in-colombo-srilanka-t…
-
- 1 reply
- 283 views
-
-
மேதகுவுக்கு கேக் வெட்டிய பெண்ணும் – விற்பனை செய்த ஆணும் கைது! adminDecember 2, 2023 மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த ஆண் உட்பட இருவரையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், பெண்ணை சட்டவைத்தியரிடம் உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். நாவற்குடாவில் வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான கடந்த 26ம் திகதி விடுதலைப் புலிகளி…
-
- 7 replies
- 794 views
-
-
NurtureLeap: யாழ்ப்பாணத்தின் திறன்வளம் கொண்டோரை வல்லுனர்களாக்கும் நிறுவனம் வளரும் வடக்கு ஜெகன் அருளையா ஜெகன் அருளையா கோவிட்-19 பெருந்தொற்றின் பேரழிவு கொண்டுவந்த பொதுமுடக்கம் சில காரியங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. முதல் தடவையாக, மேற்கு மாகாணத்துக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த நகரங்கள் விழித்தெழ ஆரம்பித்தன. கொழும்பில் பணிபுரிந்த பலர் சொந்த ஊர்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டு அங்கு தமது குடும்பங்களுடன் வீடுகளுக்குள் முடக்கப்படலாயினர். துர்ப்பாக்கியமாகச் சிலர் வேலைகளை இழக்கவேண்டியேற்பட்டதும் உண்மை தான். உடலுழைப்பு அவசியமான பணிகளைச் செய்தவர்கள் நகர் முடக்கம் காரணமாக…
-
- 0 replies
- 370 views
-
-
நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – ஜனக்க வக்கும்புர நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆசிரியர்கள் ஓய்வுபெற்றமையினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்குரிய பாடங்களுக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. மாகாண சபைகளின் கீழ் காணப்படும் பாடசாலைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படும் பாடசாலைகளுக்காக இவ்வாறு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்ப…
-
- 0 replies
- 332 views
-
-
சிறையில் தாக்குதல் - கைதி ஒருவர் உயிரிழப்பு மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் மற்ற கைதிகளால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய எஸ். துரைராசா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மதுபான வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்த நிலையில், அவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்த மற்ற 8 கைதிகளுடன் உயிரிழந்த நபர் தகராறு செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஏனைய கைதிகளின் தாக்குதலால் காய…
-
- 0 replies
- 323 views
-
-
புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் இன்று(01.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டனர். இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறினார். இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச…
-
- 0 replies
- 249 views
-
-
02 DEC, 2023 | 02:41 PM மன்னார், சாந்திபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (01) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர். தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், அவர்களை மீட்டு, முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர். விசாரணையின்போது அவர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே தாம் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் படகு கட்டணமாக இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வ…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் ! இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை கட்சியின் தற்காலிக செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திடம் கையளித்துள்ளனர். சுமந்திரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து, சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இதேநேரம், சிறிதரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து குருகுலராஜா, வேழமாலிகிதன், விஜகுமார், உள்ளிட்ட 6 பேர் கையொப்பமிட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக…
-
- 33 replies
- 2.9k views
- 1 follower
-
-
இரட்டை குழந்தையின் தாயின் மரணத்தில் மர்மம்! யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் வைத்தியசாலையினால் பணிக்கப்பட்டமையினாலேயே நோய் தொற்று அதிகமாகி அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது” எமது பிள்ளையின் மரணம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிட்டோம். இதன்போது குறித்த சம்பவம் தொடர…
-
- 0 replies
- 204 views
-
-
போதைப்பொருள் பாவனையால் அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை! யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாகக் கூடிக் கொண்டே போகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது பெருமளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் இரத்த நாளங்களின் ஊடாக உடலில் போதைப்பொருளை ஏற்றிக்கொள்கின்றார்கள். அதனால் எயிட்ஸ் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. சாதாரண ஒரு ஸ்…
-
- 1 reply
- 385 views
-
-
01 DEC, 2023 | 05:13 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கில் உள்ள அரச தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கு அமைச்சுக்களில் பிரிவுகள் உருவாக்கப்பட்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டு பெரும்தொகை சம்பளம்,வாகன வசதிகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திட்டம் இல்லை. அபிவிருத்திகளிலும் வேறுப்பாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சு…
-
- 3 replies
- 518 views
- 1 follower
-
-
02 DEC, 2023 | 06:51 AM நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். …
-
- 3 replies
- 401 views
- 1 follower
-
-
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கரிசனையளிக்கின்றன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவது சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் உட்பட பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து தகவல்கள் கிடைப்பது கரிசனையைi ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். கருத்துசுதந்திரத்தையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதி…
-
- 3 replies
- 324 views
- 1 follower
-
-
01 DEC, 2023 | 09:07 PM மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் ஒழுங்கு செய்தவர்களை குறிவைத்தே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைகள் அனைத்துமே மோசமான இன அழிப்பு விளைவுகளுக்கு தடை எதுவும் இல்லாமல் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அரசியல் பாதையில் இருந்து விலகிச் செல்ல செய்து முடிப்பதற்கான முயற்சியாக இடம்பெறுகின்றன. இதனால் பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பனர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக மாவீரர் தின நினைவேந்தலில் ஈடுபட்டு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர், அவரது மகன் உட்பட 10 பேரை …
-
- 0 replies
- 212 views
- 1 follower
-