Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்பாணத்தில் இரண்டு இலட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லை [ சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2010, 06:51 GMT ] [ கி.வேணி ] யாழ்ப்பாணத்தில் அண்ணளவாக 200,000 இளைஞர்கள் வேலையின்றி இருப்பதாகவும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண வணிக நிறுவனங்கள் அமைப்பின் தலைவரான கே. பூரணச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடந்த வர்த்தக கண்காட்சில் கலந்து கொண்ட அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, வேலையில்லாத் திண்டாட்டம், மிக அதிக வாழ்வாதாரக் செலவு போன்ற பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்படவில்லை என்றால் போர் முடிவுற்றதாக கூறிக் கொள்வதில் எந்த அர்த…

    • 2 replies
    • 1.3k views
  2. ”இந்திய வீடுகளில் குடியிருக்கும் சிங்களவன்!” - பழ.நெடுமாறன் மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன! நெஞ்சில் கொஞ்சம் இரக்கத்தையும் ஈரத்தையும் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரையும் ரத்தக் கண்ணீர் வடிக்கவைத்த ஈழத்துக் கொடூரங்கள் அரங்கேறி ஓராண்டு முடியப்போகிறது. இறந்து மண்ணுக்குப் போனவர் எண்ணிக்கைகூட முழுமையாக இன்னமும் எடுக்கப்படவில்லை. மனரீதியாக இறந்துபோய் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போர் நிலை குறித்தும் முழுமையாக அறிய முடியவில்லை. ஆனால், அவர்கள் இரண்டு தேர்தலை நடத்தி முடித்துவிட்டார்கள். கோமா நிலையில் கிடக்கும் ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் குறித்து அறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்தோம்… ”ஈழத்துக் கொடூரங்கள் நடந்து முடிந்து ஓராண்டு ஆகப்ப…

  3. அமிதாப்பச்சன் வீட்டின் முன் நாம் தமிழர் முற்றுகைப்போராட்டம் [2ஆம் இணைப்பு] நாம் தமிழர் பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்று சேர்ந்து மும்பையில் இன்று நடிகர் அமிதாப் இன் வீட்டின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி திரைப்பட துறை அவர்களின் மிக பெரிய விருது வழங்கும் விழாவை சிறிலங்காவில் நடத்த திட்டமிட்டு உள்ளது. இலங்கையின் போர் குற்றங்களையும் தமிழின அழிப்பையும் மறைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்வின் தூதர் இந்தி திரையுலகின் முன்னணி நாயகன் அமிதாப் பச்சன் ஆகும். இன்று அவர் வீட்டின் முன் நாம் தமிழர் பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெர…

  4. மலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது – சென்னை மலேசியத் தூதரகத்தில் மனு சிங்கள இனவெறி அரசு நடத்தியப் போரில் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் 75 பேர், வாழ வழியின்றி மலேசியாவிற்கு அகதிகளாக சென்றனர். அவர்களை மலேசிய அரசு கைது செய்து இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தஞ்சம் கோரி வந்த தமிழர்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழகத் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டது. இன்று(25.04.2010) காலை சென்னை நுங்கம்பாக்கம் மலேசியத் தூதரகத்திற்குச் சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன்…

  5. சில நிகழ்வுகள் முடிவே தெரியாமல் நீண்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஒருநாள் அவை முடிவுகளை சந்தித்தே தீரும். அப்படி முடிவுகளை சந்திக்கும்போது, அதில் இருக்கும் துயரும் மகிழ்வும் சேர்ந்தே வெளிப்படும். தேசியத் தலைவரின் அன்னையை திரும்ப அனுப்பிவிட்டு நடத்தும் அரசியல் கேலிக்கூத்து நம்மை அறுவெறுக்கச் செய்கிறது. ஒருநாட்டின் அரசத் தலைவர் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் தாய், தமிழீழ அரசின் தலைவர், மேதகு தேசிய தலைவர் அவர்களை அறியாத உலகம் இல்லை. அப்படிப்பட்ட ஒருவரின் தாய், ஒரு நாட்டிற்கு வருவது, ஒரு அரச தலைவருக்கு தெரியாது என்று சொல்லும் அளவிற்கு அந்த அரச தலைவரும், அதை கேட்கும் அளவிற்கு இந்த நாட்டின் மக்களும் எவ்வளவு முட்டாள் தனமாக இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும்போது, நமக்கு வ…

    • 4 replies
    • 1.7k views
  6. ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. படுகொலைச் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்காத 12 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை நிகழ்த்தப்பட்ட ஊடகவியலாளர் மீதான படுகொலைகளை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் ஈராக் மீதான அமெரிக்க தலையீட்டின் பின்னர் அந்நாட்டில் 88 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் இலங்கையில் 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டாலும் எவரும் தண்டிக்கப்படவில்லையென்பதை அழுத்திக் கூறுகிறது அவ்வறிக்கை. ஏனைய நாடுகளில் நடந்த படுகொலை குறித்து தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ள…

  7. http://www.yarl.com/phpbb/viewtopic.php?f=33&t=7813 http://www.uktamilnews.com/ இந்த ஆக்கத்தை படிக்கச் செல்லும் உறவுகளே உங்களோடு ஒரு நிமிடம்…… நடுநிலைமை என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டு- தமிழ்த் தேசிய இனத்துக்கு நன்மை தரமுடியாத விடயங்களை உள்ளீர்த்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதை- சொல்லாமல் விடும் தவறையும் நாம் இழைக்க மாட்டோம். இன்றைய உலகில் மலிந்து போயுள்ள ஊடக யுத்தத்துக்குள்ளே சிக்கிக் கொள்வதற்கும் நாம் தயாரில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதே இன்றைய தேவை. தமிழ் மக்களின் வெளிக் கொணர வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் போது- வீண் விவாதங்களில் நேரத்தைய…

    • 40 replies
    • 4.7k views
  8. யாழ் போதனா வைத்திய சாலையில் கண் சிகிச்சை பிரிவில் சிங்களவர்கள் இடையே கத்திக்குத்து யாழ் நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சைப் பகுதிக்கு தொழில்நுட்பவியலாளராக நியமனம் பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் 26 வயதுடைய கமகே என்பவர் வந்திருந்தார். அவரைச் சந்திப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் 22 வயதுடைய அஞ்சலி என்பவர் வந்திருந்தார். காதலர்களான இருவரும் உரையாடிக் கொண்டு இருக்கையில் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டது. இருவரும் தம் கைகளில் வைத்திருந்த கத்தியினால் மாறி மாறி குத்திக் கொண்டனர். இதனால் கண்சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளர்கள் கதிகலங்கினர். கத்திக்குத்துப…

  9. பல முக்கிய முன்நாள் அமைச்சர்களுக்கு பதவிகள் இல்லை வவுனியா நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 24, 2010 முன்னைய அரசில் மஹிந்தவிற்கு அதீத விசுவாசம் காட்டிய பலருக்கு இந்த முறை அமைச்சு பதவி உட்பட எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை. இதில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரத் அமுனுகம , கேகலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த கமகே, அனைத்து கட்சி குழு தலைவர் பேராசிரியர் விஸ்வ விதாரண, எஸ்.பி.திஸ்ஸ நாயக்க, காமினி திஸ்ஸ நாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸ நாயக்க உட்பட பலருக்கு அமைச்சுப்பதவிகள் உட்பட எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இதுவரை எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை என அறியப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில…

  10. சர்வதேச இந்தியத்திரைப்பட விழா கொழும்பில் நடைபெறபோவதையொட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலைகலையும் ஏற்றுக்கொள்கிறவர்கள் கலைஞர்கள் இல்லை. இவை அனைத்தையும் உலகிற்கு எடுத்து செல்பவர்கள் தான் உண்மையான மக்கள் கலைஞர்கள் குர்திசு இன மக்களின் விடுதலைக்காக போராடிய ஒச்சலான் கைது செய்யப்பட்டபோதும்,ஸ்பெயின் சர்வாதிகாரி பிராங்கோவுக்கு எதிராக போராடியதும் வியட்நாமிய யுத்தத்திற்கெதிராக குரல்கொடுத்ததும்,இலத்தீன அமெரிக்கப் புரட்சியில் கலந்து கொண்டதும்,கலைஞர்கள் தான் இன்னும் சொல்ல போனால் இட்லரின் செய்கைகளை தன்னுடைய திரைபடங்களின் மூலம் வெளிபடுத்தியவர் சார்லின் சாப்லின். இதே வழியில் வந்த கலைஞர்கள் இன்று ஒரு இனபடுகொலையை,மாபெரும் மனித அவலத்…

  11. இலங்கையில் சூன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் விளம்பரத்தூதராக நடிகர் அமிதாப் பச்சன் இருந்து வருகிறார். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவை இலங்கைக் குடியரசுத் தலைவர் இராசபக்சே தலைமையில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தியப் படங்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்குரிய விருதுகளை இராசபக்சே வழங்குவார். இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்களை கொன்று குவித்து மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்துக் கொடுமை செய்தும் இராசபக்சே நடத்திய வெறித்தாண்டவத்தின் சாயல் இன்னும் மறையவில்லை. தமிழர்கள் சிந்திய இரத்தம் இன்னும…

  12. ஏப் 24, 2010 மணி தமிழீழம் மகிந்த பூட்டானுக்கு செல்லவுள்ளார் எதிர்வரும் 28, 29 ம் திகதி நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிற்கு மகிந்த புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மற்றும் வெளியுறவுச் செயலர் றோமேஸ் ஜெயசிங்க ஆகியோர் செல்லவுள்ளதாக தெரியவருகிறது. 16வது சார்க் மாநாட்டில் பங்காளதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இந்தியா, ஆப்பானிஸ்தான், மற்றும் சிறீலங்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. சார்க்மாநாட்டில் 32ம் அமர்வில் வெளிவிவகார அமைச்சர்கள் நிலையில் கூட்டம் எதிர்வரும் 27ம் திகதியும் 37 ம் அமர்வில் வெளிவிவகார செயலர்கள் மத்தியில் 25 மற்றும் 26 ம் திகதியும் கூட்டங்கள் நடைபெறவுள்ளது.

  13. ஏப் 24, 2010 மணி தமிழீழம் ஈரான் அரசாங்கத்தால் 105 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி சிறீலங்காவில் கிராமப்புறங்களில் மின்சாரதேவைகளை பூர்திசெய்வதற்காக சுமார் 105 மில்லியன் அமெரிக்கடொலர் செலவில் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈரானிய அரசாங்கம் நிதியுதவி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1000 பின்தங்கிய கிராமங்கள் மின்சாரத்தை பெறும் எனத்தெரியவருகிறது. இக் கடன் உதவித்தொகையானது மகிந்த ராஜபக்ஸ அவர்களின் வேண்டுகோளுக்க இணங்க ஈரானிய ஜனாதிபதி முகமட் மஜீட் அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்திட்டம் மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதன்கீழ் கிழக்கு, மத்திய, தெற்கு, சப்பிரகமுவ, ஊவா, வடமத்திய மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் என தெரியவருக…

  14. தமிழர்கள் கண்ணீர் கடலில் மிதக்க இலங்கையில் ராஜபக்சேவை மகிழ்விக்க சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்துவதா என்று அமிதாப்பச்சனுக்கு இயக்குனர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமிதாப் அழைப்பை புறக்கணித்த ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான். இதுகுறித்து சீமான் மேலும் கூறியதாவது, இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. இவ்விழாவில் பங்கேற்க கமல், ரஜினி இருவருக்கும் அமிதாப் விடுத்த அழைப்பை அவர்கள் இருவரும் புறக்கணித்துவிட்டதாக செய்தி வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க மறுத்த அந்த …

    • 2 replies
    • 1.4k views
  15. இலங்கை கடற்பரப்பில் சீனாவின் பிரசன்னம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்திய விமானப் படையினருக்கான தளம் ஒன்றை வன்னியில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கச்சதீவு இந்தியா தொடர்பான பிரச்சினையில் சீனாவின் தலையீடு தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வன்னியில் விடுதலைப் புலிகள் அப்பினால் அமைத்துப் பயன்படுத்தப்பட்டு வந்த இரணைமடு விமானத் தளத்தை இந்திய விமானப்படையினர் பயன்படுத்துவதற்காக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கமைவாக இந்திய உயரதிகாரிகள் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமிடையில் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து தொலைத் தொடர்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் …

  16. இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்த கூடாது என்றும், இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத் திரைப்படத் துறையினர் வெளிப்படையாக அறிக்கை தர வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் மரணபூமி ஆக்கப்பட்டு விட்ட இலங்கையில், கொடுமையான கொலைபாதகன் ராஜபக்சே ராஜாங்கம் நடத்தும் தலைநகர் கொழும்பில், ஜூன் மாதத்தில், சர்வதேச இந்தியத்திரைப்பட விழா நடைபெற இருப்பது, மேலும் மேலும் தமிழர்களின் உள்ளத்தில் நெருப்பைக் கொட்டுகின்ற செய்தி ஆகும். லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, மீதம் இருக்கின்ற தமிழர்களின் கண்ணீர்க் கதறலும், வேதனைப் புலம்பலும் வீசும் காற்றையே ஓலக்காற்றாக ஆக்கிவிட்ட ந…

  17. இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்றும், அமிதாப் வீட்டு முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராயும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக கேள்வியுறுகிறோம். இதற்காக மனவருத்தப்படுகிறோம். தமிழ் ரசிகர்கள் முழுமையாக அவரை நேசிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்த விழாவில் அவர் …

  18. Srilanka: If this isn't Genocide, War Crime, Then What on Earth is? http://criminaljustice.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is Muthamizh Chennai

  19. If this isn't Genocide, War Crime, Then What on Earth is? http://criminaljustice.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is People from across the globe are condemning the Human rights violations of Srilankan government. And civilized society is fighting hard to establish the justice to the tamils. Killing of nearly 1,40,000 innocents, war crimes, ongoing slaughter on the journalists, moderates, reformists, artists and having opposition leader behind the bars make the Srilanka as a criminal and a failed state. We ask People to sign here to save Human Rights & Justice in Srilanka. Thanks & Regards, …

  20. தமிமீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இரு தமிழர்கள் தேசியப்பட்டியலில் இணைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கருணா மற்றயவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொருளாளர் முத்து சிவலிங்கம். குறிப்பாக கருணாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட மாட்டாது எனத் முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதற்கு குறிப்பாக 30 வருடகால யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு தனக்கு புரண உதிவியளித்தவர்களை …

  21. நான் மஹிந்தவிடம் பதவி கேட்கமாட்டேன் ஆனால் அவருக்கு உதவ விருப்பம் - ரோஹித வவுனியா நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 24, 2010 இன்று வெளி நாட்டு தனது அமைச்சு பொறுப்புக்களை கொடுத்துவிட்டு வெளியேறினார் போகொல்லாம. இதன் போது கருத்து தெரிவிக்கையில் தான் பதவிகளை கேட்கமாட்டேன் அதே வேளை மஹிந்தவிற்கு என்னாலான உதவிகளை செய்வேன் என்றார். ரோஹித போகொல்லாம இறுதிவரை தனக்கும் அமைச்சு பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்குலகத்தினை சமாளிக்க சரியான ஆள் பேராசிரியர் பீரிஸ்தான் என்பதனை புரிந்து கொண்டுள்ளார் மஹிந்த ஆகவேதான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். போகொல்லாம தான் மஹிந்தவிடம் பதவி கேட்கவில்லை மாறாக மக்களிடம் வாக்கினை கேட்கின்றேன் என கூறியுள்ளார். …

    • 0 replies
    • 672 views
  22. இலங்கை ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தினால் மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வவுனியா நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 24, 2010 இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டுள்ள பிரகடனங்கள் அனைத்தையும் அமுல்படுத்தும் பட்சத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்கத் தாயார் என ஐரோப்பிய யூனியனின் இலங்கைக்கான பிரதிநிதி போர்நாட் சாவேஜ் தெரிவித்தார். இன்று நண்பகல் மாகாண ஊடகவியலாளர்களை கண்டியில் சந்தித்த போதே அவர் இக்கருத்தை தெரிவித்தார். மேலும் யுத்ததினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவியை அதிகரிக்கவுள்ளதாகவும் உறுதியாளித்தார். http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%A…

    • 0 replies
    • 615 views
  23. சம்பந்தனின் கருத்தினை அரசாங்கம் வரவேற்பு; பேச ஏற்பாடு செய்யுமாறு மஹிந்த ஆலோசனை வவுனியா நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 24, 2010 ஒரே இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட தயராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழஹப்பெரும இக்கருத்தினை வெளியிட்டார். தமிழ் தரப்பிலிருந்து கடந்த 30, 40 வருடங்களில் கிடைக்கபெற்ற சிறந்த சமிக்ஞை இதுவென தெரிவித்துள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழஹப்பெரும…

    • 0 replies
    • 597 views
  24. புலிகளின் பயமில்லாத் துணிவால் எழும் கலாசாரச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது யார்? விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பதற்காக அவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட சில விடயங்களை மறப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாமல் உள்ளது. அதில் ஒரு விடயம் கலாசாரச் சீரழிவை அவர்கள் கட்டுப்படுத்திய விதமாகும். அதாவது பாலியல் வல்லுறவு, கொள்ளை, கசிப்பு, கோஷ்டி மோதல் போன்ற சமூக சீரழிவை அவர்கள் பூரண மாகக் கட்டுப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அச்சமற்ற வாழ்வை மக்கள் அனுபவித்தனர். இரவு வேளையிலும் பெண்கள் தனித்து நடமாடக்கூடியதாக இருந்தது. சந்திகளில் கூடி நின்று இளைஞர்களுடன் சேட்டைகள், கோஷ்டி சண்டைகள் இல்லாமல் போக சந்திகள் நல்ல சங்கதிகளை பேசக்கூடிய இடமாக மாறின. இவ்விதம் சமூகச…

    • 9 replies
    • 1k views
  25. 'புதிய உலக ஒழுங்கு' என்ற சொற் பதத்தினூடாக தமிழீழ மக்கள் கேட்பாரில்லாத நிலையில் அழிக்கப்பட்டு, தமிழீழ மக்களது சுதந்திரப் போர் முடக்கப்பட்டு விட்ட பின்னர், தமது சுதந்திர வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்த அனைத்துத் தமிழர்களும் சிங்கள தேசத்தால் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களால் வாய் திறந்து எதையுமே கேட்க முடியாது. அவர்களுக்காகக் கேட்பதற்கு யாருக்கும் அனுமதியும் கிடையாது. தற்போது, நாடாளுமனறம் சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிங்கள வரம்பிற்குட்பட்டே வாய் திறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினுள்ளேயே உள்ளார்கள். ஆனால், சிங்கள தேசத்தின் இந்த இன அழிப்பிற்கும், இன அடக்குமுறைக்கும், இன அச்சுறுத்தலுக்கும் ஆளாகாத ஈழத் தமிழர்களாக புலம்பெயர் தமிழர்கள் இருப்பதே இந…

    • 1 reply
    • 855 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.