Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. களு, குடா, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளில் ஏற்படும் சிறு வெள்ளப்பெருக்குகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம், தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை கோரியுள்ளது . h…

  2. 09 SEP, 2023 | 04:41 PM (பு.கஜிந்தன்) "நடந்தாய் வாழி வழுக்கை ஆறு" எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் இன்று சனிக்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது. இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164180

  3. இலங்கை குண்டுவெடிப்பு! சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பு!

  4. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா ஒரு வலுவான சாட்சி எனவும், 64 பக்கங்களை கொண்ட ஆவணத்தை ஐ. நாவிடம் அவர் வழங்கியுள்ளார் எனவும் புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்கள் குறித்து லங்காசிறியின் uudaruppu நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பில் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ''அசாத் மௌலானா இலங்கையில் இருந்து தப்பி செல்லுகையில் இந்தியாவினூடாகவே சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவிலும் அவரை கொலை செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் அவரது இருப்பிடம் சரியாக தெ…

  5. 10 SEP, 2023 | 09:59 AM (நா.தனுஜா) விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், அதுகுறித்த முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு இலங்கை வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்குக் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது. அக்கடனுதவியின் நிமித்தம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றியிருக்கின்றதா எனக் கண்காணிக…

  6. 10 SEP, 2023 | 11:25 AM தபால் திணைக்களம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்துவதில்லை என வலியுறுத்தியுள்ளது. எனவே, மோசடி நபர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம். ஆர்.பி.குமார அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளார். இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு நிகரான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் வங்கி அட்டைகள் தொடர்பான தகவல்களை பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் இணைய முகவரியும் மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்ட…

  7. தாதியர் சேவைக்கு தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் – ஸ்ரீதரன் ஐரோப்பிய நாடுகளில் சுகாதார துறை அடிப்படை மனித உரிமையாக காணப்படுகின்ற நிலையில் இலங்கையில் சுகாதாரம் வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ‘சுகாதாரதுறை வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளமையானது சுகாதார அமைச்சருக்கும் அமைச்சரை சார்ந்தவர்களுக்கும் வருமானம் தருகின்ற துறையாக மாறியிருக்கின்றது. அத்துடன் சில வைத்திய சங்கங்களும் முகவர்களின் உதவியுடன…

  8. வெளிவந்துள்ள சிறைச்சாலை அதிகாரி பற்றிய தகவல்கள் கசிவு! Vhg செப்டம்பர் 08, 2023 பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருந்த காலப்பகுதியில் அவர் கைத்தொலைபேசி ஒன்றை வைத்திருந்திருக்கின்றார். அந்த கைத்தொலைபேசியை அந்த நேரத்தில் மட்டக்களப்புச் சிறைச்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த குழந்தைவேல் நவனீதன் என்ற சிறை அதிகாரிதான் கொண்டுசென்று பிள்ளையானுக்கு கொடுத்துள்ளதாக ரிஎம்விபி அமைப்பின் முன்நாள் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். சிறையில் பிள்ளையானுக்கென்று ஒரு தனி அறை வழங்கப்பட்டிருந்தது. அந்த அறையில் பல இரகசியச் சந்திப்புக்களை பிள்ளையான் நடத்தியிருக்கின்றார். ஈஸ்டர் அசம்பாவிதத்தை மேற்கொண்ட காத்தான்குடி முஸ்லிம் ஆசாமிகளை பிள்ளையான் தயார்படுத…

  9. வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் கீழ் பணியாற்ற 30 வரையான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொல்லியல் ஆக்கிரமிப்புகள் இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தொல்பொருள் மையங்களில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாது இருக்கும் போது இவ்வாறான வேலைவாய்ப்ப…

  10. 09 SEP, 2023 | 06:09 PM பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. உலக யுத்தங்களின் போதும் 30 வருடகாலம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திலும் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் நினைவாக இலங்கை ஓய்வுபெற்ற போர் வீரர்கள் சங்கத்தினால் வருடாந்தம் பொப்பி மலர் தினம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பொப்பி மலர் விற்பனையினால் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இலங்கை ஓய்வுபெற்ற போர் வீரர்கள் சங்கத்துடன் இணைந்து செயற்படும் முப்படையிலிரு…

  11. 09 SEP, 2023 | 06:46 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் மதுபான பாவனை தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது. இதனைத் தீர்க்கும் பாரிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான பாராளுமன்ற சங்கம் கூடியபோது இதனைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் மதுபான பாவனை தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது. இதனைத் தீர்க்கும் பாரிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உள்ளது. போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புக்கள் இது தொடர்…

  12. லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா? இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை பற்றி சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4, , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை நிகழ்த்தப்பட்டது எனும் தொடர்பாக புதிய குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் குறித்து சனல் 4 டிஸ்பாட்ச் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றி சாட்சியாளர் அசாத் மௌலானா பேசியுள்ளார். …

  13. 09 SEP, 2023 | 04:56 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (08) கைப்பற்றப்பட்டதோடு ஒருவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வத்திராயன் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி தொழிலகம் ஒன்று இயங்கிவருவதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றிரவு குறித்த உற்பத்தி நிலையம் மருதங்கேணி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது நான்கு கொள்கலன்களில் 600 லீட்டருக்கு மேற்பட்ட கோடா…

  14. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி Published By: T. SARANYA 14 MAR, 2023 | 03:03 PM (எம்.மனோசித்ரா) ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …

  15. இலங்கை மீது கடும் அழுத்தங்களை முன்வைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை September 7, 2023 இலங்கைக்கு உதவி வழங்கும் ஐக்கிநாடுகள் சபை அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகள் மற்றும் இனநல்லிணக்கப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வெண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11 ஆம் நாள் ஜெனீவாவில் கூடவுள்ள 54 ஆவது மனித உரிமைகள் சபையின் சமர்ப்பிக்கவுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை அரசு இனநல்லிணக்கப்பாடுகள் மற்றும்உண்மைகளை கண்டறிதல் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மாக…

  16. யாழ்ப்பாணத்தில் பதின்ம வயதினரை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் எனும் குற்றச்சாட்டில் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (07) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மற்றும் பதின்ம வயது இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வரும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரண…

    • 2 replies
    • 496 views
  17. Published By: VISHNU 07 SEP, 2023 | 04:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம், ஆனால் சுகாதார அமைச்சர் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின்மை தீவிரடைந்துள்ளது. வங்குரோத்து நிலையிலும் மருந்து கொள்வனவில் அரச நிதி மோசடி செய்யப்படுவதை முதலில் இல்லாதொழிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …

  18. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று! சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது கடந்த இரண்டு நாட்களாக விவாதம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த அவநம்பிக்கையை முன்வைத்துள்ளதுடன் அதற்கு ஆதரவாக தங்களது தரப்பினர் வாக்களிப்பார்கள் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1348602

  19. ஐரோப்பிய நாடுகளில் சுகாதார துறை அடிப்படை மனித உரிமையாக காணப்படுகின்ற நிலையில் இலங்கையில் சுகாதாரம் வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ‘சுகாதாரதுறை வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளமையானது சுகாதார அமைச்சருக்கும் அமைச்சரை சார்ந்தவர்களுக்கும் வருமானம் தருகின்ற துறையாக மாறியிருக்கின்றது. அத்துடன் சில வைத்திய சங்கங்களும் முகவர்களின் உதவியுடன், தங்களுக்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்கின்றன. நீதியான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் ஒருபோதும் செயற்பட்டதி…

  20. வழிப்பறியில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது! வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் , யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சூழல் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில நாட்களாகப் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையிலேயே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவே இவ்வ…

  21. Published By: VISHNU 08 SEP, 2023 | 11:50 AM வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெள்ளிக்கிழமை (08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமய தலைமைகள் தமது சமய உண்மையில் நின்று சமய அமைப்புக்கள் தந்துள்ள அதிகாரத்தையும், சமூக கௌரவத்தையும், பயன்படுத்தி சமூக நல்லிணக்கம் சமயங்களுக் கிடையிலான நல்லுறவு என்பவற்றை…

  22. 08 SEP, 2023 | 11:16 AM வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார். இவ்விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் e-GN திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க ப…

  23. யாழில் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி adminSeptember 8, 2023 “யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழில். உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஐங்கரன் மீடியா சொலுஷன் பணிப்பாளர் நடராஜா கார்த்திக் தெரிவிக்கையில், கண்காட்சியில், கட்டிட நிர்மாணம் தொடர்பான சகல விதமான சேவைகள், விபரங்…

  24. பிள்ளையானுக்காக அனுதாப வாக்குச் சேகரித்தவர்களும் பதில் கூற வேண்டும் - எழுந்துள்ள கண்டனங்கள்! கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இந்த மிலேச்சத்தனமான ஈஸ்டர் தாக்குதலுக்கு பதில் கூற வேண்டும் என்று பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் சிறைச்சாலையில் இருந்து கொண்டு அனுதாப வாக்கை பெறுவதற்காக மட்டக்களப்பில் பிரபலமான கல்விமான்கள் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் சமூகத்தில் நற்பெயர் கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள் என பலரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஆட்சி பீடம் ஏறிய சந்திரகாந்தனின் கபட நாடகங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்ற…

    • 3 replies
    • 539 views
  25. Published By: VISHNU 07 SEP, 2023 | 07:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வன்னியில் புதிதாக மருந்தகங்களை அமைக்க அனுமதி வழங்குமாறு பலமுறை வலியுறுத்தப்பட்டும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக புதிதாக பல மதுபான சாலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் புதிதாக மதுபானசாலைகளை அமைப்பதால் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.