ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
தமிழ்மாறன், கொழும்பு 29/10/2009, 16:56 தமிழர்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரிப்பதாக மகிந்தவிடம் அரியநேத்திரன் முறைப்பாடு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசோதி அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் தான் முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முறைப்பாட்டை அடுத்து சிறீலங்கா அதிபரின் செயலக உதவிச் செயலாளர் அன்ரன் பெரேரா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிகளிடம் இது தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரியதுடன், அரியநேத்திரனின் முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதிகளை அரசா…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் – தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு 2009-ஆம் ஆண்டையும் மே மாதத்தையும் குருதி படிந்த ஆண்டும் மாதமும் என்று வரலாறு பதிவு செய்யும். 80.000 ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உறுப்பிழந்து ஊனப் பட்டிருக்கிறார்கள். மூன்று இலட்சம் பேர் வாழ்விழந்து வசிப்பிடம் இழந்து முள்வேலிகளுக்குள் ஏதிலியாக இன்னல்படுகிறார்கள்...... http://www.meenakam.com http://www.meenagam.org/?p=14671
-
- 0 replies
- 745 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இந்தியா புலனாய்வு பிரிவான றோவினால் தற்கொலைதாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவுக்கு நெருக்கிய வட்டாரங்களிலிருந்தே இத் தகவல் கசிய விடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவரும், விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான கே.பி.யின் கைதில் முக்கிய பங்காற்றியவருமான, சிங்கப்பூரை தளமாக கொண்டியங்கும் றொகான் குணவர்த்தன, ராஜீவ் கொலை தொடர்பான ஆய்வில், மேற்கண்ட குற்றச்சாட்டைக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சிறிலங்கா உளவுத்துறைசார் ஊடகங்கள் வாயிலாக இது…
-
- 4 replies
- 1.6k views
-
-
நோயுற்றவரை தெற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதும் அரசியலாக்கப்பட்டுள்ளது‐ 28 October 09 06:12 pm (BST) ஏ9 வீதி உள்ளிட்ட பல்வேறு திறப்புகள் மற்றும் ஏனைய பிரச்சாரங்களில் அரசும் அதனோடு இணைந்த கட்சிகளும் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் நோயாளர்களையும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். யாழ் குடாநாட்டிலிருந்து ஏ9 வீதியூடாக அம்புலன்ஸ் ஊடாக நோயாளிகளை தெற்கிற்கு எடுத்துச் செல்லும் நிகழ்வொன்று ஆரம்பமாகியுள்ளது. சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் எனப்படுகின்ற அமைப்பினூடாக நோயாளி ஒருவர் ஏ9 வீதியூடாக அம்புலன்ஸ் மூலம் தெற்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டார். இந்த ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர் மகாந…
-
- 4 replies
- 738 views
-
-
ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள கிரக தோங்களின் பாதிப்பைக் குறைப்பதற்காக எதிர்வரும் 30ம் திகதி இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் விசேட பூஜையொன்றை நடத்தவுள்ளதாக அலரிமாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்சவின் கணவரான திருநடேசனினால் இந்த விசேடபூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தும் இதற்கான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய கிரக தோசங்களிலிருந்து மீள்வதற்காக இன்று (29) முதல் நாட்டிற்கு வெளியே இருக்குமாறு ஜனாதிபதியின் சோதிடர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையில் எதிர்காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட முன்னர், தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட அந்தக் கூட்டமைப்பின் இணைப்பாளரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவ+ப் ஹக்கீம் யோசனை முன்வைத்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ப…
-
- 0 replies
- 857 views
-
-
தமிழ் மக்களை அடுப்பில் இருந்து நெருப்பிற்குள் தள்ளியவர்கள் யார்? நாம் ஒரு பிரச்சினையை ஆராயும் போது, அந்தப் பிரச்சினை ஆரம்பித்த போதிருந்த சூழ்நிலையென்ன, அதன் வளர்ச்சிப் போக்கென்ன, அதன் இன்றைய நிலையென்ன என்பதை வரலாற்று வளர்ச்சியின் ஊடே புரிந்து கொண்டாலே பிரச்சினைக்குரிய தீர்வைக் காண முடியும். கடந்த காலத்தைப் பற்றிப் பேசாது விடுவோம், இன்றைய நிலை பற்றி மட்டுமே கதைப்போம் என்பது எம்மை மேலும் மேலும் சகதிக்குள் தள்ளும் வேலையேயாகும். இதைத் தான் இன்று தமிழ்த் தேசியவாதிகள் செய்து வருகின்றனர். முப்பது வருடங்கள் சாத்வீகம் பேசிப் பாராளுமன்றம் சென்று பிற்போக்கு அரசியல்வாதிகளுடன் கூடிக் குலாவி, அடுத்த முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்து நின்று, இன்று அதுவும் தோல்வியில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாளம் விஜயம் வீரகேசரி இணையம் 10/29/2009 12:55:35 PM - ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட குழுவினர் நேபாளத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது,நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 412 views
-
-
ஈழ தமிழர்கள் கெளரவத்துடனும் சம உரிமையுடனும் தாயகத்தில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மேற்கொள்ளும் அத்துடன் கச்சதீவையும் மீழப்பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு அ.இ.அ.தி.மு.க பொதுசபை மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.அ.தி.மு.க மாநாட்டில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 601 views
-
-
அக்டோபர் மாதம் 8ம் தேதி. சிதம்பரம் தொகுதியில், இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு முகாம், மாணவர்களுக்குக் கட்டணமில்லா நடமாடும் கணினிப் பயிற்சியகம் ஆகிய வற்றின் தொடக்க விழா. மேடையில் தம்பிகளின் வழக்கமான நெரிசலில் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தேன். கூட்டத்தின் இரைச்சலில் என் கைபேசி ஒலித்தது, சரியாகக் கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து அந்தத் தகவல் அவசரமாக என்னிடம் வந்து சேர்ந்தது. தமிழக முதல்வர் கலைஞர் பேச விரும்புகிறார் என்று சொன்னார்கள். என்னவோ ஏதோ என்கிற பதற்றம் என்னைத் தொற்றிக்கொண்டது. அவரோடு பலமுறை நான் தொலைபேசியில் பேசியிருக்கிறேன் என்றபோதிலும் அப்போதிருந்த சூழ்நிலையில் என் படபடப்புக்கு ஒரு காரணம் இருந்தது. ஆகஸ்ட் 17 அன்று எனது பிறந்த நாளில் வாழ்த்து பெற கலைஞரைச் சந்தித…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இப்போது யுத்தம் முடிந்து விட்டது. இனி அமைதியான முறையில் தமிழ் மக்கள் வாழ்வதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். மீண்டும் ஒரு பிரபாகரன் எமது நாட்டில் உருவாகிவிடக்கூடாது. இப்படித் தெரிவித்திருக்கின்றார் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா. தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜெனரல் பொன்சேகா, வாஷிங்டனில் பௌத்த ஆலயமொன்றில் நடந்த நிகழ்வில் பேசிய போதே இதனைத்தெரிவித்தார். "இலங்கை அழிவுப் பாதையில் சென்றால் அதனைச் சரி செய்து மீட்பதற்கு நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன்'' என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வாஷிங்டனில் தெரிவித்துள்ளார் என "ஸ்ரீலங்கா கார்டியன்" இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.எனினும், இந்த ந…
-
- 17 replies
- 2.5k views
-
-
பொதுசன ஐக்கிய முன்னணியின் பிரபல, சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான நிஷாந்த முத்துகெட்டிகம அவர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுகின்றார். இன்று காலை 9 மணியளவில் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொண்டு வானொலிக்கு கொடுத்த செய்தியில், தான் சுதந்திரமாக வாழப்போவதாகவும், அரசியல் வாழ்க்கை போதும் எனவும் கூறினார். நிஷாந்த முத்துகெட்டிகம அவர்கள் ஆளும் கட்சியின் ஓரவஞ்சகத்திற்கு மகிந்த குடும்பத்தினால் ஆக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் மெது மெதுவாக ஓரம் கட்டப்பட்டார்.இந்த நிலையில் நிஷாந்த அவர்கள் எதிரணியில் இணையப் போவதாகவும் கூறப்பட்டது. பின்னர் புதிய கட்சி உருவாக்க போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் துறந்து தான் வெளினாடு சென்று வாழப்போவதாக கூறி இன்று வெளிய…
-
- 0 replies
- 724 views
-
-
சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மை கட்சிகள் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதகாக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் தேர்தல்களின் போது பொதுவான ஓர் சிறுபான்மைக் கட்சி கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ரேணுகா ஹோட்டலில் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் …
-
- 0 replies
- 393 views
-
-
அய்.நா.மன்றமே முள்வேலிக்குள் வதைபடும் ஈழத்தமிழ் மக்களை விடுதலை செய் – பெரியார் தி.க கண்டன ஆர்ப்பாட்டம் [படங்கள்] ஈழத்தில் முள்வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க அய். நா மன்றத்தை நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று(28.10.2009) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேட்டூர்: இன்று(28.10.2009) மாலை 5 மணியளவில் மேட்டூர் பேருந்து நிலையம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழத்தில் முள்வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க அய். நா மன்றமே நடவடிக்கை எடு,ஈழத்தமிழர்களை விடுதலை செய், தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களவர்களை குடியமர்த்தாதே! என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத…
-
- 1 reply
- 551 views
-
-
ராஜபக்சே..ஆயிரம் மடங்கு ஹிட்லர்!- நெடுமாறன் புதன்கிழமை, அக்டோபர் 28, 2009, 16:29 [iST] ஈரோடு: ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறினார். இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்ககளை விடுவிக்கக் கோரி நெடுமாறன் தலைமையில் கோவையில் தொடங்கிய பிரச்சாரப் பயணம் ஈரோடு வந்தது. அங்கு வீரப்பன்சத்திரத்தில் நடந்த வரவேற்பு பொதுக் கூட்டத்தில் நெடுமாறன் பேசுகையில், இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3.5 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சரியான உணவு, குடிநீர், மருத்துவ வசதி இல்லாமல் அவர்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் பலர் இறக்கிறார்கள். …
-
- 1 reply
- 527 views
-
-
ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஆகியோருக்கு எதிராக இந்த வாரத்திற்குள் வேலையைக் கொடுக்குமாறு (கொலை செய்யுமாறு) மேஜர் சிறிவர்தன என்ற அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச உத்தரவிட்டிருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தால், அவருக்கு வெளிநாட்டுத் தூதரகமொன்றில் பதவியொன்றை வழங்குவதாக உறுதியளித்திருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அநுரகுமார திஸாநாயக்க, மங்கள சமரவீர ஆகியோர் ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசியலுக்குள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் …
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடத்தில் உடனே குடியமர்த்திட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ் மாணவர் பேரவை சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நவம்பர் 3ஆம் தேதியன்று உண்ணாநிலை போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு தமிழ் மாணவர் பேரவை தலைவர் திருமுருகன் தலைமை தாங்குகிறார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கி வைக்கிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார். நன்றி http…
-
- 0 replies
- 608 views
-
-
இலங்கைத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பதற்காக இலங்கையில் மீண்டும் போர் மூளும் என்றும் அதை பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரப் பயணம் ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைகோ பேசியது: 1983-ல் இருந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கையில் உரிமைக்காகப் போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த அத்துமீறல்களை நடத்திய இலங்கையை நமது மத்திய அரசு எச்சரிக்கவில்லை. இந்தச் சூழலில் நாதியற்று கிடக்கும் தமிழக மீனவர்களையும் ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க இலங்கையில் மீண்டும் போர…
-
- 13 replies
- 2.2k views
-
-
பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக தெரிவித்து பொலிசாருடன் இணைந்து செயற்பட்ட இந்நபர், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிவனேசராஜா வினோத்குமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்படையினர், இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளில் குறித்த நபர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த குறித்த நபர் தாமாகவே புலிகள் …
-
- 0 replies
- 951 views
-
-
இலங்கை அகதிகள் 78 பேரை ஏற்றிச் சென்ற அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலிலுள்ள அகதிகளை இந்தோனேஷியாவின் கிஜாங் துறைகத்தில் இறக்குவதற்கு அம்மாகாண ஆளுநர் அனுமதி மறுத்துள்ளார்.இந்தோனேஷியா அகதிகளை கொண்டுவந்து குவிக்கும் இடமல்ல என்று ஆளுநர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவை நோக்கி இலங்கையர்கள் சென்று கொண்டிருந்த படகு கடந்த வாரம் சுமாத்ரா தீவுக்கருகில் கோளாறுக்குள்ளானதை அடுத்து அதிலிருந்த இலங்கையர்களை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேஷியா அவுஸ்திரேலியாவுக்கு இணக்கம் தெரிவித்திருந்தது. அகதிகளை நடத்துவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அமுலாக்கத்தின் முதல் நடவடிக்கையாகவே தற்போது இலங்கை அகதிகள் இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்ல…
-
- 0 replies
- 566 views
-
-
மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் தானே விசாரணை செய்யும் என இலங்கை ஜனாதிபதியும் அமைச்சர்களும் அண்மையில் தெரிவித்திருந்தனர். அமெரிக்காவின் போர் மீறல் குறித்த அறிக்கையின் பின்னர் தாம் ஒரு விசாரணை குழுவினை அமைக்க போவதாகவும் மகிந்த கூறியிருந்தார். ஆனால் இந்த குழு மற்றும் அரசாங்கத்தின் சுய விசாரணைகளின் நம்பிக்கை தன்மை பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் குற்ற விசாரணைகளுக்கான இயக்குனர் பிலிப் அல்ஸ்ரன் கேள்வி எழுப்பி உள்ளார். அரசாங்கம் ஏற்கனவே வெளியான சனல் 4 ஒளி நாடாவினை தாம் இரு நிபுணர்களை கொண்டு ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளது. ஆனால் அந்த இரு நிபுணர்களும் இராணுவ அதிகாரிகள் இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகளை பெரும்பாலும் இராணுவத்தினரையே கொண்டு விசாரிப்பது நம்பக தன்மையாக …
-
- 0 replies
- 667 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் போர்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்ய சர்வதேச விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். மூடியிருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இலங்கை அரச அதிபர் தாம் அமைக்க போவதாக கூறும் விசாரணைகுழு ஓர் கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.இந்த நாடகத்திற்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் சேர்ந்து ஆடக்கூடாது. சுயாதீனமான சர்வதேச விசாரணை குழு கட்டாயம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிராட் அடம்ஸ் அவர்கள். அண்மையில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் போர் குற்றம் தொடர்பான அறிக்கைக்கு பதில் அளிக்கும் போது தாம் சொந்தமாக விசாரணை குழுவினை உள் நாட்டில் அமைத்து விசாரணை செய்ய போவதாக கூறியுள்ளமையும் அத…
-
- 0 replies
- 846 views
-
-
இலங்கை அகதி முகாம்களில் இடம் பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல். முகாம்களிலுள்ள மக்களுக்கு முழுமையான நடமாட்ட சுதந்திரம் மற்றும் நிவாரண உதவிகள் போன்றவை உடனடியாக வழங்கப்படவேண்டும். என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மா நாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகாம்களின் நிலைமைகளை உடனடியாக சீர் செய்து மேம்படுத்துவதோடு தங்கியுள்ளோர் நலன் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும், இலங்கையில் தொடர்ந்து அரங்கேறி வரும் ஆள்கடத்தல்கள், காணாமல் போதல்கள், கைதுகள் கடும் கவலையை ஏற்படுத்துகின்றன எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் சுட்டி காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் நேற்றைய சந்திப…
-
- 0 replies
- 543 views
-
-
அம்பாறை ‐ நிந்தவூர் கடற்கரையிலிருந்து இறந்த நிலையில் கடற்கன்னியொன்று நேற்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய கடற்கன்னி மனித முகத்தோற்றத்தையும், மீனின் வால் போன்ற தோற்றத்தையும் கொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கரையொதுங்கிய கடற்கன்னி மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16505&cat=1
-
- 0 replies
- 2.2k views
-
-
ரத்தக் கறைபடிந்த கரங்களைக் குலுக்கியவர்கள் பழ. நெடுமாறன் 2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாள்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். போர்ப் பகுதியில் இருந்து உயிர் தப்பிய 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நலன்புரி முகாம்கள் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் ராணுவப் பாதுகாப்போடு சிங்கள அரசு அடைத்தது. போர் முடிந்து ஐந்து மாத காலத்துக்கு மேலாகியும் அந்த மக்கள் விடுவிக்கப்பட்டு. தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் போதுமான…
-
- 1 reply
- 831 views
-