ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
கிண்ணியா குரங்குபாஞ்சான் விவகாரம் : இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் - இம்ரான் எம்.பி.! kugenOctober 9, 2023 முழுமையாக முஸ்லிம்கள் வாழும் கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்துக்கு பௌத்த பிக்குகள் விஜயம் செய்து, அங்குள்ள பழைய இராணுவ முகாம் காணியை பார்வையிட்டுச் சென்றுள்ளமை பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை நான் கேட்டுக் கொள்கிறேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், அதனூடாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் மஜீத் நகர் கிராம உத்தியோகத்…
-
- 0 replies
- 460 views
-
-
டக்ளஸ் உள்ளடக்கிய ஐவர் கொண்ட குழு பு. கஜிந்தன் இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை வழங்குவதற்காக ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா,நிமல் சிறிபாலடி சில்வா, ஜீவன் தொண்டமான் மற்றும் பிரசன்ன ரணதுங்க குறித்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள் குறித்த விடயம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சமர்ப்பித்த பரிந்துரை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருக்க வேண்டும், அவர்களில் 160 பேர் அந்தந்த தொகுதிகளில் இருந்து நேரடியாக வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டு…
-
- 0 replies
- 277 views
-
-
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி யாழ் நகர வீதி வழியாக சென்று, இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினை கையளிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்தனர். குறிப்பாக அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தே குறித…
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
09 OCT, 2023 | 09:15 PM இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் எனும் இரு நாட்டுக் கொள்கையை இலங்கை எப்போதும் ஆதரித்து வருகிறது. அதற்கு நாம் நிச்சயம் ஆதரவு வழங்குவோம். சில சமயங்களில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நாம் கண்டித்திருக்கிறோம். இருப்பினும், இவை அனைத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தாது. முன்னெப்போதும் இல்லாத இந்தத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது’’. மோதல்கள் மற்றும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேலில் பல இலங்கையர்கள் பணிபுரிக…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 09 OCT, 2023 | 02:45 PM பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்று திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் காங்கேசன்துறை பொலி…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 09 OCT, 2023 | 02:39 PM யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் குடும்பத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு சென்று இருந்தார். ஒரு சில நாட்கள் மட்டக்களப்பில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த மின் மோட்டார், தொலைக்காட்டி பெட்டி, மடிக்கணனி, கையடக்க தொலைபேசி உள்ளிட்…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 09 OCT, 2023 | 09:13 AM வவுனியா சிதம்பரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை இம்மாதம் 4 ஆம் திகதியில் இருந்து தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்து சென…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 07:09 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்துக்கு வரி வருமானம் என்பது அத்தியாவசியமானதாகும். எனவே வரி அறவிடப்படக் கூடாது என நாம் கூறவில்லை. அடிப்படை சம்பளம் 50,000 முதல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு 6 - 24 சதவீதம் வரை படிப்படியாக வருமான வரி அறவிடப்பட வேண்டும் என்ற மாற்று யோசனையை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , பணவீக்கம் வீழ்ச்சி என்பது பொருட்களின் விலை குறைவடைவதல்ல. பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வேகம் குறைவடைவ…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
யாழில். முகநூலில் வன்முறை கும்பல் தொடர்பில் பதிவிட்டவர் மீது வாள் வெட்டு! adminOctober 9, 2023 முகநூலில் தம்மை பற்றி பதிவிட்டவர் மீது வன்முறை கும்பல் ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (08.10.23) இரவு வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் மீதே அவரது வீட்டுக்கு அருகில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெள்ளைநிற கார் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலைய…
-
- 0 replies
- 697 views
-
-
அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்! எதிர்காலத்தில் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும் என்றும் மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும்.ஆகவே இது பெரும் சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1352882
-
- 0 replies
- 407 views
-
-
Published By: VISHNU 08 OCT, 2023 | 03:45 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு கோரி பண்ணையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) மட்டக்களப்பு கொம்மாதுறையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கலடி மத்திய கல்லூரிக்கு விஷேட நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தாங்கள் மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் முறைப்பாடு செய்வதற்காக பண்ணையாளர்கள் எடுத்த முயற்சிக்கு பொலிஸார் தடை ஏற்படுத்தியதால் பண்ணையாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. ஆர்ப்…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 07:17 PM பெண் கிராம அலுவலரிடம் இருந்து பெருந் தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளது. உரும்பிராயிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உரும்பிராய் சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பெண் கிராம அலுவலர் அணிந்திருந்த கைப்பையை, மோட்டார்சைக்கிளில் வேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் கிராம அலுவலரால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . கைப்பைக்குள் அலைபேசி மற்றும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் என்பன இருந்தன என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
Published By: VISHNU 08 OCT, 2023 | 01:46 PM (எம்.வை.எம்.சியாம்) இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு சனிக்கிழமை (7) வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது கேள்வி- எமது இரு நாட்டு கடற்பரப்பிலும் வாழக்கூடிய தமிழ் பேசும் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் மீனவ பிரச்சினைகளுக்க…
-
- 4 replies
- 613 views
- 1 follower
-
-
Published By: VISHNU 08 OCT, 2023 | 01:50 PM இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதன் உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஏனைய சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/166385
-
- 4 replies
- 777 views
- 1 follower
-
-
எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரச சேவையானது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். “15 இலட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன். மக்கள் தொகையில் சராசரியாக 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். எனவே இது பெரிய சுமை இனி அதை செய்ய முடியாது என்றார். https://thinakkural.lk/article/276119
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
“இன, மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது” இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூ…
-
- 3 replies
- 375 views
-
-
08 OCT, 2023 | 11:05 AM (லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு செல்கின்றது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசின் முக்கியஸ்தர்களுடன் பெய்ஜிங்கில் பரந்துப்பட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே சீனா செல்கின்றது. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்ட தடைப்பட்ட திட்டங்களுக்கு நிதி பெறுதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் என்று பரந்துப்பட்ட இலக்குகளை உள்ளடக்கியதாகவே இந்த வி…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 07:41 PM ஆர்.ராம் சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாக நீதி மறுக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும், நீதிபதி ரி.சரவணராஜாவின் வெளியேற்றம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் வடக்கு,கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு தமிழ் கட்சிகள் ஒன்று கூடி கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் ஆகிய ஏழு கட்சிகளே இந்தக் ஹர்த்தாலுக்கான பகிரங்கமான அழைப்பினை விடுத்து…
-
- 4 replies
- 453 views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 10:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். எனினும் அந்த கலந்துரையாடல்களின் உள்ளடக்கத்தின் இரகசியத்தன்மை பாதுகாக்க இருதரப்பும் தீர்மானித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருந்ததுடன் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த விஜயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தல…
-
- 2 replies
- 372 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு நீதிபதியாக இருந்த சரவணராஜா தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் அது தொடர்பாக அவரே தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி குறிப்பில் - “நீதிபதி சரவணராஜாவிற்கு மொழிப்பிரச்சனை இருந்திருக்கும்” கூறுகின்றார் சி.வி.விக்னேஸ்வரன் மேற்படி தலையங்கத்துடன் வெளியாகியிருக்கும் காணொளி எம் மக்களிடையே என் மீது ஒரு தவறான கருத்தை ஏற்படுத்தியிருப்பதை நான் அவதானிக்கின்றேன். சட்டத்துறை தலைமையதிபதி நீதிபதி சரவணராஜாவை அழைத்து அவரின் தீர்ப்பை மாற்றும்படி கோரியதாக வந்த…
-
- 2 replies
- 474 views
- 1 follower
-
-
வழக்கம் போன்று, காசி ஆனந்தனும் கூவுகின்றார் கொடுத்த கூலிக்கு? காசி கூவுவதன் மூலம், இந்த சதித்திட்டங்களின் பின்னால் இந்திய உளவு அமைப்புகள் உள்ளன என்பது தெளிவாகின்றது.
-
- 20 replies
- 2.2k views
-
-
07 OCT, 2023 | 06:21 PM யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் மின்சார கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் வீதி அகலிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வீதியோரத்தில் நின்ற பனைமரம் ஒன்று வெட்டப்பட்டது. இவ்வாறு வெட்டப்பட்ட பனைமரமானது மின்சார கம்பி மீது விழுந்தது. பனை விழுந்ததால் மின்சார கம்பி அறுந்து வீதியில் நின்ற பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள் மீது முட்டியது. இந…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
WhatsUp செய்தி. அனுப்பியவர்கள் தனிப்பட்ட வகையில் தெரியும் என்பதால் பகிர்கிறேன். முடிந்தால் விரைவாக பகிருங்கள்: இன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டமென்றில் , அந்த வைத்திய சாலையில் உள்ள Endoskopie இயந்திரம் பழுது அடைந்து விட்டதால் , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட மெசினை , முல்லைத்தீவிலிருந்து , அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அறியப்பட்டது . அப்போது ஒரு தமிழ் வைத்தியநிபுணர் அதற்க்கு ஆட்சேபம் தெரிவித்தார் . அது அரசால் வழங்கப்பட்டது இல்லை . புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டது என ! அதற்க்கு ஒரு சிங்கள வைத்திய நிபுணர் … வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டால் அதற்க்கு தமிழர்கள் உரிமை கொண…
-
- 3 replies
- 446 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 12:55 PM யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களுக்கு மேலாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அந்நிலையில் கடந்த ஜூன் மாத கால பகுதியில் அப்பகுதியில் இருந்த நிலைகொண்டு இருந்த இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறினார். இராணுவத்தினர் வெளியேறிய போதிலும் அப்பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாததால், மக்கள் மீள் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டது. …
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 03:05 PM இலங்கையில் முதல் முதலாக ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் பாடசாலை ஒன்றிற்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகனின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட யானை பாதுகாப்பு வேலி (தொங்குவேலி) இலங்கையில் முதல் முறையாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் அ.த.க.பாடசாலையினை யானையில் இருந்து பாதுகாப்பதற்காக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஏற…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-