Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபகுதியில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டடுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக மேற்குலக நாடுகள் எந்தளவுக்குத்தான் அழுத்தங்களைக் கொடுத்தாலும், போர் இடம்பெற்ற பகுதிகளில் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில் அவர்களை மீள குடியமர்த்தப்போவதில்லை என சிறிலங்கா அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதில் சிறிலங்கா அரசு காலம் கடத்துவதாக மேற்குலக நாடுகள் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகக் கேட்டபோதே சிறிலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார். "போர் இடம்பெற்ற பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள முடியாது. அந்தப் பகுதியில் குடிமக்கள் வசிக்க முடியும் என ஐக்கி…

    • 0 replies
    • 351 views
  2. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை தொடங்கிய உண்ணாநிலைப் போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதியை அடுத்து நேற்று பிற்பகலிலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று சனிக்கிழமை காலை மகசீன் சிறையில் உள்ள 90 தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர். தமது கோரிக்கைகள் தொடர்பாக இவர்கள் சிறிலஙகா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட ஆகியோருக்கும் அறிவித்திருந்தனர். இந்ந…

    • 0 replies
    • 305 views
  3. திருகோணமலை மாவட்டம் உப்புவெளி கடற்கரையோரத்தில் உள்ள அரச காணியை கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் பொய்யான ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர் என்று புதிய குற்றச்சாட்டு கிளப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பகுதியில் கடற்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கரையோரமாக நிலப்பகுதி 15 பேர்ச் கொண்ட 25 துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது எனவும் இதில் கிழக்கு மாகாண சபை மற்றும் திருகோணமலை நகர சபைகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருக்கின்றது என்றும் 'சண்டே ரைம்ஸ்' வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம அளவுக்கு மீறி மாகாண சபை விவகாரங்களில் தலைய…

    • 0 replies
    • 406 views
  4. யாழ்ப்பாணத்துக்கும் தென்பகுதிகளுக்கும் இடையே நூற்றுக்கணக்கான பயணிகள் நாளாந்தம் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள் என யாழ். மாவட்ட அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 352 views
  5. இலங்கையில் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான அவசியம் இல்லை என்று சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இருப்பவருமான பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் 'டெய்லி மிரர்' ஆங்கில நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போரில் வெற்றிபெற்ற எவருக்கு எதிராகவும் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டதாக வரலாறு இல்லை என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செயற்படவேண்டும் என்றும் கருத்துக் கூறியுள்ளார். அவரது நேர்காணலில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு: கேபியின் கைது உண்மையிலேயே அரசுக்க…

    • 0 replies
    • 494 views
  6. தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், ஆனால் அதற்கு தர்க்க ரீதியில் எந்த அடிப்படையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை எனவும் இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கோஹன கூறியுள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" எனும் நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அரசின் மீது எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு, தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? என்று இவர் கேள்வி எழுப்பியுள்ளார். நமது பிரச்சினைகள் அனைத்திற்கும் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றே யோசிக்கிறோம். ஆனால் அதற்கு தர்க்க ரீதியில் எந்த அடிப்படையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளா…

    • 7 replies
    • 917 views
  7. உலகில் உள்ள ஏனைய நாடுகளின் வான்படைகளுடன் ஒப்பிடும்போது சிறிலங்காவின் வான்படையே மிகவும் சிறப்பானதாகவுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சீனன்குடா வான்படைத் தளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்தார். சிறிலங்கா வான்படையில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அதிகாரிகள் மற்றும் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் வான்படையினர் மத்தியில் உரையாற்றியபோதே கோத்தபாய இதனைக் குறிப்பிட்டார். "வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் சிறிலங்காவின் வான்படை விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டிருக்கின்ற…

  8. டக்கில் உள்ள முகாம்களில் உள்ள மக்கள் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கம், அரசாங்கத்திற்கு நாளாந்தம் லட்சக்கணக்கான மக்களுக்கும் உணவு மற்றும் குடி போன்றவற்றை வழங்க நேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் மனிதநேயமற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி மேற்கொள்ளும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளித்துள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், விமர்சனங்களை மேற்கொள்வது எவருக்கும் இலகுவான காரியமாக இருந்த போதிலும், அரசாங்கம் தற்போது மிகவும் சிரமமான காரியத்தை செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசாங்கம் என்ற வகையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு போதுமான நிவாரணங்களை அரசாங்கம் பெற்றுக் …

  9. இன்று தம் இனத்தைப்பற்றி, ஏளனம் செய்பவர்கள், மனதிலே வஞ்சம் வைத்துக்கொண்டு உலகத்திற்கு பரிதாபம் காட்டுகின்றோம் பேர்வழிகளாக அவர்களுக்கு இத்தனை மில்லியன் வழங்குகின்றோம் என்று தெரிவிப்பவர்களை எல்லாம் பார்த்தும், எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும், தன்கபடங்களை மறைக்க எதிரிகள் எடுக்கும் கபட நடவடிக்கைகள் குறித்தும் யூதர்கள் அன்று விழிப்பாகவே இருந்தனர். இன்று அவர்களை ஏளனம் செய்யும் எதிரியின் குரல் அவர்களுக்கு அப்போது கேட்கவில்லை! “ ஏனெனில் யூதர்கள் சில பொழுதுகளில் யுத்தங்களில் தோற்றாலும், அவர்களுக்குரிய நாடு என்ற கொள்கையில் அவர்கள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப்போய்விட்டவர்கள

  10. யாழ் செய்தியாளர் சிறீதரன் 22/08/2009, 16:04 தடுப்பு முகாங்களில் 8,000 மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது நிலை - சொலமன் சிறில் வடக்கில் யுத்த முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்டு ஏதிலிகள் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 8,000 மாணவர்கள் பாடசாலை சென்று கல்வியைத் முடியாத நிலையில் அவதியுறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: ஏதிலிகள் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 8,000 மாணவர்கள் பாடசாலை சென்று கல்வியைத் முடியாத நிலையில் அவதியுறுகின்றனர். வடக்கில் இடம்பெற்ற போரையடுத்து அப்பகுதியில் இயங்கி வந்த 300 பாடசாலைகள் மூட…

  11. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 22/08/2009, 14:06 விடுதலைப் புலிகளுடன் போரில் 14 ஆயிரம் படையினர் கால்களை இழந்துள்ளனர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த 25 வருடங்களாக இடம்பெற்ற போரில் 14,000 படையினர் தங்களது கால்களை இழந்துள்ளனர் என செயற்கைக் கால் பொருத்தும் நிறுவனமாக அவாஸ் இன்டர்நெஷனல் கூறியுள்ளது. இவர்களில் ஒரு காலை இழந்தவர்களும், இரண்டு கால்களை இழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். எதிர்வரும் செப்ரெம்பர் 3 நாள் இவர்களுக்கு கால்கைளப் பொருத்தும் பணியை இந்த நிறுவனம் ஆரம்பிகக உள்ளது என அறிவித்துள்ளது. படையினர் கால்களை இழந்த விடயம் தொடர்பில் சிறீலங்கா இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது அவர் எண்ணிக்கை தொடர்பில் கருத்துக் கூற மறுத்துவிட்டார் என தென்னிலங்க…

  12. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் மறைமுகமாக உதவியது என்பதை அம்பலப்படுத்தும் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. "ஸ்ரீலங்கா - போரிலிருந்து அமைதிக்கு" ("Sri Lanka - From War to Peace") என்ற புத்தகம் ஒன்றை நிதின் கோகலே என்பவர் எழுதியுள்ளார். அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் ரகசியமாக உதவியது என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய கடற்படை அளித்த முக்கியமான புலனாய்வு தகவல் காரணமாகவே, புலிகளின் ஆயுத கப்பல்கள் நிற்கும் இடம்பற்றிய தகவல்கள் இலங்கை கடற்படைக்கு தெரிய வந்து, 12 க்கும் அதிகமான ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் நிதின் அதில் கூறியுள்ளார். இலங்கைக்கு ஆயுத…

    • 0 replies
    • 692 views
  13. ஈழச் செய்திகளை பிரசுரிக்கத் தயங்கும் தமிழ் நாட்டுப் பத்திரிகைகள். தமிழக அரசின் அச்சுறுத்தலுக்குப் பணிந்தது தமிழக பத்திரிகைகள் ! தமிழ் ஈழம் தொடர்பான செய்திகளை தவிர்த்து வருகிறது. இலங்கையில் இன உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி தடை விதித்துள்ளது. அதை தமிழன் ஆட்சி செய்யும் தமிழகம் ஏற்று செயல்படுத்தி வருகிறது. சிங்கள அரசின் கொடுங்கோள் ஆட்சியில் தமிழர்கள் தங்கள் உரிமைகளை இழந்து, உடமைகளை இழந்து அகதிகளாய் தவித்து வருகின்றனர். அவர்களின் உரிமை மீட்கப்பட வேண்டும் என தமிழகத்தில் இருந்து, வை.கோ, பழ.நெடுமாறன், தா.பாண்டியன், ராமதாஸ் போன்ற தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு தடை செ…

  14. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம் நிலவரங்கள் தொடர்பில் உண்மையை அறிந்து கொள்ளாது அமெரிக்கா கருத்து வெளியிட்டு வருவதாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் ரொபர்ட் ஓ பிளெக் முகாம்களுக்கு விஜயம் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அகதி முகாம் நிலவரங்களை நேரில் பார்வையிட்டவர் என்ற வகையில் இலங்கை மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஏனைய உயர் ராஜதந்திரிகள் அகதி முகாம் …

  15. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை சிறிலங்கா இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என அமெரிக்கா கடுமையாக எச்சரித்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தோற்கடித்திருப்பதை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்த அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும், சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான றொபேர்ட் ஓ பிளேக், "இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை உடனடியாக சிறிலங்கா அரசு மீளக்குடியமர்த்துவதுடன், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனவும் வலியுறுத்தினார். அன…

  16. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியாப் பிரதேசங்களில் சிறீலங்காப் படையினருக்கும், வெளிநாட்டுப் படையினருக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு படைத்துறைப் பள்ளிகளை நிர்மாணிக்கப் போவதாக சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூர்ய கூறியுள்ளார். கவச வாகன படைப் பிரிவினரின் நிகழ்வு ஒன்றில் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூர்ய உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு புதிய படைத்துறைப் பள்ளிகளை முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் நிறுவவுள்ளோம். சிறிய படைக் குழுக்களை இயக்குவது, தீவிரவாதத்துக்கு எதிரான போர்த் தந்திரங்களை உருவாக்குவது என்பன தொடர்பில் தமக்குப்…

  17. சேற்றில் விளையாடினால் எலிக் காய்ச்சல் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.பாடசாலை விடுமுறைக் காலத்தில் சிறுவர்கள் சேற்று நிலங்களிலும் வயல்களில் பெற்றோருக்கு உதவியாக செயற்படும் போது, சேற்றில் நடமாடக் கூடிய நிலைமை இருப்பதாகவும் இதனால் எலிக் காய்ச்சல் சிறுவர்களுக்கு பரவக்கூடும் எனவும் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தில் ஒரு சில மாதங்களில் மாத்திரம் எலிக் காய்ச்சல் என்ற லெப்டோஸ்பைரேசிஸ் என்ற நோய் 81 பேருக்கு ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இரண்டாயிரத்து 193 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொடர்பாக மக்களின் கவனமின்மை காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்த…

  18. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுத உபகரணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளன என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூய தெவித்தார். இந்நிலையில், பாதுகாப்புத் தரப்பினரால் வடக்கிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் கூறினார். இராணுவத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவை வரவேற்கும் நிகழ்வொன்று தம்புளை கெக்கிராவையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் நேற்றுக்காலை நடைபெற…

    • 0 replies
    • 1k views
  19. குடும்பத்தை மேம்படுத்தவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இராஜதந்திரம் என்கிற பெயரில் நாடகமாடும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியை, ஈழத்தில் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கும் அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்கவே மன்னிக்காது என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 428 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்கா வெற்றிகரமாக நடத்துவதற்கு, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை வழங்கியது உட்பட மிக முக்கியமான, மூடிமறைக்கப்பட்ட பங்களிப்பை இந்தியா வழங்கியுள்ளது என்று 'சிறிலங்கா - போரில் இருந்து அமைதிக்கு' என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 475 views
  21. இலங்கையில் முப்பதாண்டுகலாமாக நிலவிய போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை இராணுவ ரீதியாக வலுவான நாடாக கணிக்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இலங்கை இராணுவத்தினர் இன்றளவும் பயிர்ச்சி பெற்று வந்தாலும் கூட இலங்கையின் இராணுவத்திறன் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்கை ஆக்ரமித்திருக்கும் அல்கொய்தா, தலிபான் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜெகதா ஜெயசூர்யா, இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பயங்கரவாத அமைப்பான த…

  22. தமது சொந்த பந்தங்களுடன் நல்ல வாழ்வை தமிழ்ப் பெண்களும் குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் வாழ்வதை எப்படி அரசு தடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அதேசமயம் வன்னி தடுப்பு முகாம்களில் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுவதை அடியோடு நிராகரித்துள்ள சிறிலங்கா அரசு, ஒவ்வொரு நாளும் பத்து லட்சம் பேர்களுக்கு தான் உணவூட்டி வருவதாகக் கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views
  23. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு அண்மையில் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் திகைப்பை வெளிப்படுத்தியுள்ள 'சுதந்திரத்துக்கான அடித்தளம்' என்ற அமைப்பு அச்செயலை வன்மையாகக் கண்டித்தும் உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  24. சிங்கள இனவாத அரசு உலக நாடுகளிற்கு 180 நாட்களில் உறவுகளை தத்தம் இடங்களில் மீளக்குடியமர்த்துவதாக பொய் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனாலும் இன்று 100 நாட்களைக்கடந்து எம் உறவுகள் பலரை இழந்துகெண்டிருக்கின்றோம். ஆகவே இதை உலக நாடுகளிற்குத் தெரிவிக்கும் பொருட்டு தத்தம் நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் ஒரு அரசியல் அணுகுமுறையாக இருக்குமென்பது இன்று புலம் பெயர் தமிழ்மக்களினுடைய விருப்பாகும். அதாவது நாம் மீண்டுமொரு முறை உலகத்தை தட்டி எழுப்பவேண்டும், ” கதவைத்தட்டினால் தான் திறக்கப்படும்” . உலகம் துாங்குவது போல் இன்று நடித்துக்கொண்டிருக்கின்றது. எங்களிற்கு ஏதாவது தேவையெனில் நாங்கள் தான் அதனைப்பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஆகவே …

  25. அது சரி, நாங்கள் போர்க்குற்றம் புரிந்திருந்தாலும் நாம் வெற்றி பெற்ற படியால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதாம் என்று சொல்லுகிறது பாலித கோகண என்ற சிங்கள இனவெறி மிருகம். இவனை ஐ நா நுளைய விடாமல் ஏதவது பெட்டிசன் அனுப்ப முடியாதா??????????? http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30056

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.