ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
கொழும்பின் பல பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கொச்சிக்கடை, மட்டக்குளி, முகத்துவாரம் உட்பட பல பகுதிகளிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த தேடுதல் சுற்றிவளைப்பின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் தமது பதிவை உறுதிப்படுத்தத் தவறியவர்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சுற்றிவளைப்புத் தேடுதலின் போது கொழும்பின் பிரதான வீதி…
-
- 0 replies
- 493 views
-
-
இராஜிவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களுள் ஒருவருமான இராகுல் காந்தி உலங்கு வானூர்தி மூலம் மக்களாவை பிரச்சாரத்திற்காக மாலை திருச்சிக்கு வந்து சேர்ந்தார். அப்போது மக்களவையின் திருச்சி வேட்பாளரும் நடிகருமான மன்சூர் அலிக்கான் மத்திய பேருந்து நிலையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து, கையில் கருப்பு கொடியேந்தி, 'லட்சம் தமிழர்களை கொன்ற இராகுல் காந்தியே திரும்பிப் போ!", தமிழின துரோகி இராகுல் காந்தியே தமிழகத்தில் கால் வைக்காதே!" என்று முழக்கமிட்டனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி, திடீரென மத்திய பேருந்து நிலையம் முன் முழக்கமிட்டதால், காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இராகுல் காந்தியின் உலங்கு வானூர்தி வெஸ்ட்ரீ என்னும் பள்ளி மைதானத்தில் இறக்கப்படும் இடம் மத்திய பேருந்து நில…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசாங்கத்தின் வரைமுறை கட்டுப்பாட்டுகளுக்கு அமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுமானால், அவற்றுக்கான பூரண ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வரையறைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய அமைய தொழில் படும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு, இலங்கையில் தொழில்படுவதற்கான உரிமைகளை வழங்க அரசாங்கம் தயார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில், ஜனாதிபதிக்கும், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டார். இந்த சந்திப்பின் போது, வடக்கு மக்களிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதானால், அரச சார்பற்…
-
- 0 replies
- 509 views
-
-
இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என வர்ணிக்கமுடியாது - பிரித்தானிய பிரபுக்கள் சபை திகதி: 08.05.2009 // தமிழீழம் இலங்கைத் தமிழர்களுடனான இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சித்தரித்துவருவதாக பிரிட்டன் போர்ட்ஸ்மௌத் ஆயர் விமர்சித்துள்ளார். இலண்டனில் பிரபுக்கள் சபையில் கேள்வி நேரத்தில் கருத்து வெளியிடுகையிலேயே போர்ட்ஸ்மௌத் ஆயர் ஹெலனத் சிறி வென்சன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பற்றி விமர்சித்துள்ளார். இலங்ககைத் தமிழர்கள் எனப்படுவோர் அந்த நாட்டின் புராதன மக்கள். அங்கு அவர்களுக்கு பெரும்பான்மை சிங்களவர்களுடன் இன, மத, கலாசார முரண்பாடுகள் உள்ளதுடன் இது ஒரு புதிய விடயம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். பய…
-
- 2 replies
- 877 views
-
-
மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு வீரகேசரி இணையம் 5/8/2009 2:08:09 PM - மாளிகாவத்தை ஜும்மா பள்ளி வாசல் அருகே இன்று பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
-
- 0 replies
- 458 views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
08/05/2009, 14:36 [சுடர்நிலா ] 'சிறிலங்கா பாதுகாப்பு படை வன்னி யுத்தத்தை முன்னெடுக்காமல் இருந்திருந்தால் ஈழம் உருவாகியிருக்கும்' - கோத்தபாய சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சிறிலங்கா வானொலியொன்றிற்கு கொடுத்த செவ்வியொன்றில், தமது பாதுகாப்புப் படையினர் புலிகளுக்கெதிரான வன்னிப் போரை நடாத்தாமல் விட்டிருந்தால் இந்நேரம் விடுதலைப்புலிகள் ஈழம் அமைத்திருப்பார்கள் என்றும் இலங்கை இரண்டு நாடுகளாக பிரியும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதாகத் தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 639 views
-
-
கடலூர்: தமிழர்கள் மீதோ, தமிழக மக்கள் மீதோ கருணாநிதிக்கு அக்கரை இல்லை. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல கருணாநிதி கையில் ஆட்சி சிக்கி தவிக்கிறது என ஜெ., குற்றம் சாட்டினார். சிதம்பரம் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி, கடலூர் அ.தி.மு.க., வேட்பாளர் எம்.சி.சம்பத்தை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். சிதம்பரம், கடலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தன்நலம் மிகுந்த குடும்ப ஆட்சி தமிழகத்தில் உள்ளது. அதைக் கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் உங்கள் ஓட்டுகளை பெற்று மத்தியில் தி.மு.க., அங்கம் வகிக்கும் காங்., கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது. இரண்டும் சேர்ந்ததால் நீங்கள் அடைந்த பயன் என்ன... பொருள…
-
- 5 replies
- 1.9k views
-
-
வெள்ளிக்கிழமை, 08 மே 2009, 04:49.18 AM GMT +05:30 ] வன்னியில் விடுதலைப்புலிகளிடம் எஞ்சியிருக்கும் பகுதியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு எதிராக அதிகளவான தற்கொலைத் தாக்குதல்கள் இடம் பெறுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேறிச் செல்லும் படையினர் தற்கொலைத் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார, இதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்த விபரங்களை வெளியிட மறுத்துள்ளார். இதேவேளை தொடரும் மோதல்களில் படையினர் பாதுகாப்பு வலயத்திலுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மண்ணரணை கைப்பற்றியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெர…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐரோப்பிய பாராளுமன்றத்தேர்தலில் முதன்முறையாக பிரத்தானியாவில் வாழும் தமிழ்ப்பெண் ஒருவர் போட்டியிடுகின்றார் பிரித்தானியாவைச் செர்ந்தவரும் தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளருமாக பணியாற்றும் ஜனனி ஜனநாயகம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தேர்தலில் போட்.டியிடுகிறார். இது தொடர்பில் முதன்முதலில் போட்டியுடும் இவரை பிரித்தானிவாழ் அனைத்து தமிழ் மக்களையும் இவர் வெற்றிபெறுவதற்கு துணை நிற்குமாறு அனைத்து பிரித்தானிய தமிழ் அமைப்புக்களும் கேட்டுக்கொண்டதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/news/1682/54//d,view.aspx
-
- 2 replies
- 1.2k views
-
-
தேர்தலுக்கு பிறகும் ஜெயலலிதா தனி ஈழம் பற்றி பேசுவாரா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் பேசிய அவர், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவரது வாய்க்கு போயஸ் தோட்டத்தில் பிளாஸ்திரி ஒட்டித்தான் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்கள். தொகுதியின் மேம்பாடு, கோரிக்கைகள் பற்றி பேசவே முடியாது. எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இன்று அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இவைகள் கடந்த காலங்களில் ஜெயலலிதாவை குறை கூறியவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார்கள். தனிஈழம் என்று பேசும் ஜெயலலிதா, இந்த தேர்தலுக்கு பிறகும் பேசுவாரா? தமிழன் வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? என்ற ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
புலம் பெயர் தேசத்தில் வாழும் ஈழத்து உறவுகளுக்கென விழித்து, தமிழகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மடலை, அம் மடலில் குறிப்பிட்டுள்ள விடயங்கள், கேட்கப்படும் கேள்விகளில் உள்ள உண்மைகள், கருதி அப்படியே தருகின்றோம். ஆயினும் சில குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களின் பெயர்களை மட்டும் தவிர்த்திருக்கின்றோம். அன்பான புலம் பெயர் தமிழ் உறவுகளே, உங்கள் உறவுகளின் சோகங்களில் நிலைகுலைந்திருக்கும் உங்களிடம் இப்போது இதனைக் கேட்பது நியாயமாகாது என்பதை நன்கறிவேன். ஆனால் இதை இப்போதுதான் உங்களிடம் கேட்க வேண்டியுமுள்ளது. நாளைக்கே காட்சிகள் மாறிப் போய்விடக் கூடும். ஆனால் நியாயங்களும் உண்மைகளும் மாறிப்போய்விடாது. ஆதலால் இம் மடல் உன்னைக் கவலைக்குள்ளாக்குமாயின்…
-
- 6 replies
- 2.5k views
-
-
"மத்தியில் வரப் போகும் ஆட்சி மாற்றமே ஈழத் தமிழர்களின் இன்னல்ளை நீக்கும். இது தான் ஒரே வழி. இந்த தேர்தலில் ஈழத் தமிழ் ஆதரவு அணியாக திகழும் - புரட்சித் தலைவியின் தலைமையில் ஒன்று சேர்ந்துள்ள - அ.தி.மு.க. கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றியீட்ட வைப்பதே ஈழத் தமிழரின் இன்றைய இன்னல்களை நீக்க ஒரே வழி. ஈழத் தமிழ் இனத்தைக் காக்க அதனைச் செய்வீர்களா எம் உறவுகளே?" என்று அவுஸ்திரேலிய இந்து சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
வீரகேசரி இணையம் 5/8/2009 1:13:13 PM - ''இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசே காரணம்'' என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி குற்றம்சாற்றினார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை ஆதரித்து பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எல்.கே.அத்வானி பேசுகையில் அவர் குற்றம்சாட்டினார். அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில், ''தற்போது 15ஆவது மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். அவர் இந்தக் கட…
-
- 0 replies
- 842 views
-
-
வவுனியாவில் இருந்து கொழும்புக்கு வரும் பயணிகள் கடந்த சில நாட்களாக மதவாச்சி சோதனை சாவடியில் கடுமையான விசாரனைக்கு உட்படுத்தப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 329 views
-
-
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் நாளை சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார். ஆனால், அவர் பொதுக் கூட்டம் எதிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. காங்கிரஸ்-திமுக உறவு குலைந்து வரும் நிலையில் பிரதமரின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் அதிமுகவுடன் உறவு என்று பேச ஆரம்பித்துவிட்ட நிலையில், திமுக தரப்பில் காங்கிரஸ் தலைமையிடம் உணர்ச்சிவசமாக சில பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து சென்னையில் முதல்வர் கருணாநிதியுடன் பொதுக் கூட்டத்தில் பேச சோனியா காந்தி நாளை மறுதினம் வர ஒப்புக் கொண்டுள்ளார். அதே போல நாளை பிரதமரும் வருகிறார். சிறப்பு விமானத்தில் மீனம்பாக்கம் வரும் அவர், அங…
-
- 0 replies
- 768 views
-
-
மன்னிக்கவும்.. தமிழ் ஆக்கம் செய்யமுடியவில்லை.. M.I.A. to Michelle Obama, Oprah: "STOP THE BOMBING OF THE TAMILS IN SRI LANKA" By Zach Baron in Featured, M.I.A., awesomeThursday, May. 7 2009 @ 4:45PM This amazing photo brought to you by M.I.A. The weird Time 100 fairy tale gets even weirder for M.I.A.. On Tuesday, she was invited to, and then attended--as this amazing picture to the left clearly shows--a gala at Lincoln Center in celebration of the most influential people list the mag just released. There, she apparently met not just Tavis Smiley (on whose show she appeared back in January), Stella McCartney, and the "Twitter guys," but Oprah herself, who "sq…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழ மக்களுக்குத் தற்காலிக தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளளோம். அவர்களது பிரச்சனைக்க நிரந்தரத் தீர்வாக ஈழத்தையும் பெற்றுக் கொடுப்போம் எனத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சி உரையில் தெரிவித்திருப்பதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு கடுமையான காச்சல் காரணமாக வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சாதரண பகுதிக்கு நேற்று மாற்றப்பட்டிருந்தார். நேற்றைய தினம், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருவதாகவும், அவருடன் இனைந்து, கலைஞர் அவர்களும், தேர்தற் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆ…
-
- 23 replies
- 2.9k views
-
-
"வடபகுதியில் இடம்பெறும் போரில் விடுதலைப் புலிகளின் தடைகளைத் தகர்த்து முன்னேறுவதற்கு சிறிலங்கா படையினர் எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள். அந்தவிடயத்தில் அவர்களுக்கு எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்படவில்லை" என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். "விடுதலைப் புலிகளைத் தாக்குவது என்பது வேறு. அப்பகுதியில் உள்ள மக்களை மீட்பது என்பது வேறு. இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான ஆயுதங்களைத்தான் படையினர் பயன்படுத்துவார்கள். அத்துடன், இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான இராணுவ உபாயங்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்" எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டிருக்கின்றார். சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்…
-
- 0 replies
- 704 views
-
-
கிழக்கில் புலிகளின் உதயம் இன்று (07.05.2009) இரவு 9 மணியளவில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலில் படையினர் ஒருவர் பலி , ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி - ஐயங்கேணி வீதியில் இன்று இரவு ஒன்பது மணியளவில் நடாத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். மூலம்: மீனகம்.கொம்
-
- 1 reply
- 1.2k views
-
-
இரண்டு பேர் செல்லக்கூடிய உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு வானூர்தியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் இப்போதும் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் இவற்றை அவர்கள் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் வசம் மற்றொரு வானூர்தி இருப்பதாக இப்போதும் இருப்பதாக சில செய்திகள் தெரிவித்த போதிலும், இராணுவ மற்றும் புலனாய்வு வட்டாரங்களை அதனை மறுத்தே வந்தன. அவர்களிடம் இருந்த இரு வானூர்திகளும் கடந்த பெப்ரவரி மாதத்தில் கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இழக்கப்பட்டு விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. …
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் தொடரும் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் மலேசியாவில் உள்ள ஈப்போ மாநகரில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
நோர்வே தமிழர்கள் மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க 'வட்டுக்கோட்டை தீர்மானம்' மீதான மீள் வாக்குப்பதிவு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (10.05.09) நடத்தப்படவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
அவுஸ்திரேலியாவின் விக்டோறிய மாநிலத்தில் ஓயாத உரிமைக்குரலின் ஒரு பகுதியாக கவனயீர்ப்பு கண்டனப் பேரணி நாளை நடைபெறவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 431 views
-
-
அனைத்துலக அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு போன்ற அனைத்து நிறுவனங்களும் அமைப்புக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவியின் நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் அமைதியையும் கொண்டு வரவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-