Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பெரும் எடுப்பில் சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தரையிறக்க முயற்சி கடற்புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 316 views
  2. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவரும் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை உறக்கத்தில் மக்கள் இருந்தவேளையில் சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணை மற்றும் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  3. இலங்கையில் அறிவிக்கப்பட்டிருப் பது போர் நிறுத்தம்தான் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இலங்கை அதிபர் ராஜபக்சே, கனரக ஆயுதங்களை உபயோகப்படுத்த மாட்டோம் என்றுதான் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். இதை வைத்து, போர் நிறுத் தத்தை நீங்கள் அறிவித்து விட்டதாக இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரே? ராஜபக்சே: கனரக ஆயுதங்களை உபயோகிக்க மாட்டோம் என்றும், விமானத் தாக்குதல்களை நடத்த மாட்டோம் என்றும் சொன்னால் அதற்குப் பெயர் என்ன? அது முழுக்க, முழுக்க ஒரு போர் நிறுத்தம்தான். நான் கூறுகிறேன், படை வீரர்கள் முன்னேறுகிறார்கள். அதைப் பார்க்கும் போது அது போரைப் போல்…

    • 2 replies
    • 1k views
  4. "தெளிவான - உறுதியான - தளம்பலற்ற வார்த்தைகளால் - இலங்கை வாழ் தமிழர்களுக்குத் 'தனி ஈழம்' அமைப்பது தான் சரியான ஒரே தீர்வு என்று தாங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு கண்டு உலகத் தமிழினத்தோடு சேர்ந்து அமெரிக்கத் தமிழர்களும் புளகாங்கிதம் அடைந்து போய் உள்ளோம்" என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 411 views
  5. வவுனியா முகாமில் இருந்து 98 இளைஞர்கள் கைது - ராணுவ புலனாய்வு கைவரிசை வவுனியா நெலுக்குளம் முகாமில் இருந்து நேற்று 98 இளைஞர்கள் கைது செய்யபட்டுள்ளார்கள் . Source Link: http://tamilnational.com/human-rights/dete...n-vavuniya.html

  6. "இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 291 views
  7. புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009, 05:04.11 AM GMT +05:30 ] பிரித்தானிய அரசாங்கம் இலங்கை தமிழர்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என, பிரித்தானியாவின் த கார்டியன் இணையத்தளம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளின் அவதானிப்பு தடையின் காரணமாகவே, அரசாங்கத்தினால் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த நிலையினை பிரித்தானிய அரசாங்கம் மாற்ற வேண்டும் என த கார்டியன் கோரியுள்ளது. சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்த போதும், இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தமிழர்களை கொன்று குவிக்கிறது. மூன்றாயிரத்துக்கும் அதிகமான எறிகனைகளை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் சிறிய பரப்பினை கொண்ட பாதுகாப்பு வலயத்தினுள் அதனை சுற்றி வளைத்துள்ள இராணுவம் வீசியுள்ளது. இதனால…

  8. இந்த மனு மனிதாபிமானமுள்ள சிங்களவர் சிலரால் சிங்கள அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கிறது. விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற மனித நேயமுள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த பெட்டிஷத்தில் நாமும் கைய்யொப்பமிடுவோம். சிலபேருக்கு சிங்களவர் அனுப்பும் மனுவா? என்று அச்சமிருந்தால் அதை ஒரு தடவை வாசித்துப்பாருங்கள். நாம் இன்று கேட்பதற்கும் அவர்கள் சொல்வதற்கும் துளியளவும் வேறுபாடு கிடையாது. ஆகவே அன்பானவர்களே, தயவுசெய்து உங்கள் கைய்யொப்பத்தையும் இங்கே இடுங்கள். மிக்க நன்றி. http://act4lanka.blogspot.com/

    • 1 reply
    • 1.2k views
  9. சிதம்பரங்களின் வாயை மூட வேண்டும் என்றால் அவர்களை தேர்தலில் தோற்கடியுங்கள்! அமைச்சர் சிதம்பரம் வைகைப் புயல் வடிவேலுவை விட நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை எண்பித்துக் கொண்டிருக்கிறார். அமைச்சர் சிதம்பரம் இன்னும் 24 அல்லது 48 மணித்தியாலயத்தில் நல்ல செய்தி வரும் என்றார். அந்தச் செய்தியை இன்னொரு நடிகரான கருணாநிதிக்குத் தொலைபேசி மூலம் சொல்லி அவரது சாகும்வரை உண்ணா நோன்பைச் சில மணித்தியாலங்களில் முடித்து வைத்தார். ஆனால் போர் நிறுத்தம் இல்லை என சிங்கள இராணுவ பேச்சாளர் சொல்லிவிட்டார். சிங்கள அரசும் சொல்லிவிட்டது. விமானத் தாக்குதலும் கனரக ஆயுதத் தாக்குதலும் நிறுத்தப்படும் எனத் தெரிவித்ததும் பொய்யாகிவிட்டது. தாக்குதல் தொடர்கிறது. நேற்று மட்டும் 5000 செல்கள் விழுந்த…

  10. இலங்கைத் தமிழர் பிரச்னையில் 4 வாக்குறுதிகளை வெளியிட முதல்வர் கருணாநிதியும், மத்திய அரசும் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இலங்கைப் பிரச்னை தொடர்பாக முதல்வர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதமும், பின்னர் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என இவர்கள் கூறிக்கொண்டதும், ஏற்கெனவே திட்டமிட்டு தமிழக மக்களை ஏமாற்றியிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த நாடகத்தில் ப. சிதம்பரத்துக்கும் முக்கியப் பங்கு உள்ளது. இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்த மாட்டோம் என்றும், அது உள்நாட்டு விவகாரம் என்றும் மத்திய அமைச்சர் கபில் சிபல் கடந்த சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால், போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இங்கு …

    • 0 replies
    • 545 views
  11. காங்கிரசை வீழ்த்தும் வரை போராடுவோம் - தமிழின உணர்வாளர் சீமான் ஈழ விடுதலையை யார்? அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார்? பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என நிபந்தைப் பிணையில் விடுதலையான இயக்குனரும் தமிழீழ விடுதலை ஆதரவாளருமான சீமான் தெரிவித்துள்ளார். நேற்று நிபந்தனைப் பிணையில் விடுதலையான சீமான நேற்று பெரியார் சிலைக்கு சென்று மாலை அணிவித்துவிட்டு ஊடகவியலாளருக்குக் கருத்துத் தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈழ விடுதலையை யார்? அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார்? பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். இதற்காகப் பலர் பேர் பல வடிவில் போராடி வருகின்றனர். காங்கிரஸ் தான் தமிழ…

  12. நேற்றிரவு மட்டும் ஷெல் நூற்றுகணக்கில் மக்கள் பலி; தொடர்கிறது மக்கள் சாவு. நேற்றிரவு எட்டு மணியளவில் தொடங்கிய மல்டி பரல் மற்றும் ஆடிலரி தாக்குதலில் நூற்றுகணக்கில் மக்கள் பலி.இன்னமும் தொடர்கிறது Source Link: http://tamilnational.com/news-flash/831-mo...n-12-hours.html

  13. Started by mekan,

    http://www.tamilsforobama.com/Final_War.html

    • 1 reply
    • 1.5k views
  14. வன்னியில் தொடரும் போர் நிலைமைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும், தமது வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்தியிருக்கும் அதேவேளையில், அமெரிக்க வெளிவிகார அமைச்சர் ஹிலறி கிளின்ரன் இந்த விடயம் தொடர்பில் இந்தியா வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வாசிங்ரனில் இருந்து வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளின்ரன் அண்மைய நாட்களில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசித் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும்" எனத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட், "இந்தப்…

    • 0 replies
    • 435 views
  15. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டுள்ள படையினரின் குடும்பங்கள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் வருகையை எதிர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்திருக்கின்றார். வன்னியில் நடைபெறும் போர் தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு திடீரென ஏற்பட்டுள்ள இந்த அக்கறையின் பின்னணி என்ன என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது எனவும் விமல் வீரவன்ச நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். "தாம் பொதுமக்களைப் பற்றியே கவலைப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால், இதற்கான காலம் கடந்துவிட்டது. இதனையிட்டு அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் நில…

    • 0 replies
    • 353 views
  16. பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை 5:30 நிமிடமளவில் கொழும்பு போர் சேர்ந்துள்ளதாக கொழும்பில் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று புதன்கிழமை காலை 5:30 நிமிடத்துக்கு பிரான்ஸ் நாட்டின் சிறப்பு வானூர்தி ஒன்றில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோர் தூதரக மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர். கொழும்பு சென்றுள்ள இரு வெளிவிவகார அமைச்சர்களும் இன்று வெளிவிகார அமைச்சர் ரோகித போகல்லாகம மற்றும் அரச தலைவர் …

    • 0 replies
    • 376 views
  17. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்தடைந்தனர் 4/29/2009 9:01:22 AM - பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளனர். யுத்தநிறுத்த அறிவிப்பை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்தே இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாகவும் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் கோர்டன் பிறவுணுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்தே இந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் விஜயம் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தகக்து.

  18. இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் போர் நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. இது ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் கூற்று இரண்டு தசாப்தங்களுக்ளுக்கு முன்னால் ஈழத் தமிழ் மக்களுக்கு அரைகுறையான தீர்வுத் திட்டத்தைக் கூடக் கொடுக்க விரும்பாத ஸ்ரீலங்காவின் சிங்கள இனவாதிகள், இன்று எப்படி ஈழத் தமிழினத்தை தங்களுடன் சமஉரிமை தந்து ஐக்கிய இலங்கையில் ஒன்றாக உயிருடன் வாழ விரும்புவார்கள் என்பதை சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தால் படிக்காத பாமரனால் கூட தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும். அத்தகைய ஓர…

  19. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உணவின்றி அவதிப்படுகின்றனர். தாய்மார்கள் தன் மார்பக பகுதியை கிழித்து இரத்தத்தை ஒரு வேளை பசிக்கு குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர் என்று பேசியவாறே திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைக்கேட்ட பொது மக்களும் கண்ணீர் விட்டு கதறினர். நேற்று நடைபேற்ற ஊட்டி பிரசாரத்தில் மேற்கண்டவாறு பேசினார். கூடலூர் காந்தி திடலில் வைகோ பேசியதாவது:- கூடலூரில் தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்தியாவில் இருந்து ஏராளமான தமிழர்கள் இலங்கைக்கு சென்று அங்கு பொன் விளையும் பூமியாக காபி, இறப்பர் தோட்டங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டனர். 150 ஆண்டுகளுக்கு பிறகு தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்று கூறி வெளியேற்ற இலங்கை அரசு முற்பட்டது. …

  20. Started by Ithayavani,

    Can you give me about any injured or died aid workers link in vanni?

    • 4 replies
    • 1.4k views
  21. EU slams Sri Lanka snub to Sweden as 'grave mistake' LUXEMBOURG (AFP) — The European Union on Tuesday lashed out at Sri Lanka's decision to deny a visa to Swedish Foreign Minister Carl Bildt, describing the move as a "grave mistake" and warning Colombo of repercussions. "It is lamentable that the Sri Lankan government denied him a visa," Czech Foreign Minister Karel Schwarzenberg, whose country holds the EU's rotating presidency, said after talks among the bloc's foreign ministers in Luxembourg. "I do think it is a grave mistake of the Sri Lankan government, which will of course have repercussions in Europe and will influence the further relations between t…

    • 16 replies
    • 3.1k views
  22. புலிகள் சரணடையவேண்டும் இந்தியா கோரிக்கை வீரகேசரி நாளேடு 4/29/2009 8:51:28 AM - விடுதலைப் புலிகள் சரணடைவதுடன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். என்.ரி.ரி.வி.க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தியா இலங்கைக்கு எந்தவிதமான இராணுவ உதவிகளையும் வழங்கவில்லை என்றும் அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  23. இலங்கை தமிழர்களை காப்பாற்ற அமெரிக்காவின் உடனடி தலையீடுதான் ஒரே நம்பிக்கை என்று அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 320 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.