ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்சரித்துள்ளார். அரசாங்கம் இதனை எதிர்கொள்வதற்கான திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காலநிலை மாற்றமே குடிநீர்தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணமாக காணப்படும் என அவர்தெரிவித்துள்ளார். இலங்கையின் மழைவீழ்ச்சி காலங்களில் ஏற்கனவே மாற்றங்கள் தென்படத்தொடங்கிவிட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார். வழமையாக வருடாந்தம் இலங்கையில் 2500 மில்லிலீற்றர் மழை பெய்யும் மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியே அதிகளவு மழைக்காலம் என தெரிவித்துள்ள அவர் காலநிலை மாற்றம் காரணமாக மேமா…
-
- 0 replies
- 262 views
-
-
இலங்கையை மீண்டும் சுபீட்சமான பொருளாதார வளமிக்க நாடாக மாற்றுவதை நோக்காக் கொண்டு கனடாவிலுள்ள முதலீட்டாளர்களை இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால், கனடா - இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமிக்கப்பட்டார். இந்த நியமன வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (18) கொழும்பிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது . கனடா - இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமனம் | Virakesari.lk
-
- 0 replies
- 513 views
-
-
Published By: VISHNU 16 AUG, 2023 | 07:28 PM (இராஜதுரை ஹஷான்) குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும். இந்து – பௌத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டா…
-
- 2 replies
- 655 views
- 1 follower
-
-
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச மலைநீலி அம்மன் ஆலயத்தினை இடித்து தற்போது பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் உள்ள மலைநீலி அம்மன் ஆலயத்தின் காணிகள், தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அது பௌத்திற்குரிய பகுதியாக உரிமை கோரி அப்பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். போரால் இடம்பெயர்ந்த மக்கள் 2007 ஆம் ஆண்டு மீள் குடியமர்ந்த போது அந்த ஆலயம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆலயத்தின் இடிபாடுகளை அகற்றி அம்மனின் விக்கிரகம் வீதியில் வீசப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. https://thinakku…
-
- 4 replies
- 510 views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் எந்த சமூகத்தினர் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதாவது சட்டவிரேதமாக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அது தவறு என்பதே எனது நிலைப்பாடு. அதிலும் அரசியல் செல்வாக்குடன் இடம்பெறுகின்ற காணி அபகரிப்புச் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. உதாரணமாக மகாவலி அபிவிருத்தி தொடர்பாக எழுந்த பிரச்சினைகளில் அண்மையில் கோப் குழுவில் நான் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் தற்போது என்ன நடக்கின்றது. …
-
- 1 reply
- 674 views
-
-
தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite) ரிசர்ச் என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான உடன்பாட்டையும் இலங்கை உள்ளடக்கியுள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகள் தொடர்பான 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட்டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளதாக வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க வருவாயை ஈட்டுவதில் வரி வருவா…
-
- 4 replies
- 775 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் இலங்கைக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் தொடர்பான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (16) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. 30 பிரசவ படுக்கைகள், 20 மினி-ஆட்டோகிளேவ்கள், 6 எடை தராசுகள், 16,500 ஜடெல்லே, 31,500 ஹார்மோன் அல்லாத IUDகள், 900 எச்ஐவி பரிசோதன…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று புதன்கிழமை (16) எல்லை தாண்டியபோது கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கையர்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஜோர்தானிய - இஸ்ரேல் எல்லையில் பணிபுரிய ஆபிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்படாமல் நுழைந்ததாகப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த வருடம் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த வருடத்தின் முதல்…
-
- 0 replies
- 222 views
-
-
ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நிலையில், முகவர் ஒருவர் ஊடாக ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுள்ளார். அது தொடர்பில் தகவல் அறிந்த புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாத கால பகுதியில் போலி சாரதி அனுமதி பத்திரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுமார் 10 வரையில் கை…
-
- 0 replies
- 97 views
-
-
17 AUG, 2023 | 02:12 PM 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயை கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள கிளினிக்குகளுக்குச் செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் பத்மக டி சில்வா தெரிவிக்கையில், பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்களாக கருதப்படுபவை கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய்களாகும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு 35 முதல் 45 வயது வரையான பெண்கள்…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 AUG, 2023 | 01:03 PM கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது 30) என்பவரே புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளார். திடீர் வயிற்று வலியினால் துடித்த அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். உடற்கூற்று பரிசோதனையின் போது, கர்ப்பப்பை குழாயினுள், கரு தங்கியமையால் கர்ப்பப்பை குழாய் வெடித்து மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 AUG, 2023 | 01:00 PM கடந்த 11 ஆம் திகதி அநுராதபுரம் - மிகிந்தலை தம்மன்னாவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மூன்று குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. அப்பிரதேச வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்களாவர். 8, 12 வயதுடைய ஆண், 14 வயதுடைய பெண் பிள்ளையின் தந்தை தர்மசிரி ரணதுங்க(வயது 43), 22 வயதுடைய பெண் பிள்ளை, 14, 07 வயதுடைய ஆண் பிள்ளைகளின் தந்தை எஸ்.மஹிந்த குமார(வயது 45), 14 வயதுடைய ஆண், 18, 10 வயதுடைய பெண் பிள்ளைகளின் தந்தையான சரத் சந்திரசிரி தினநாயக்க(வயது 46) ஆகிய மூன்று குடும்பஸ்தர…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 AUG, 2023 | 03:51 PM மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்றது. இலங்கையின் நீர…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
1 மணி நேரம் முன் இது சிங்கள பௌத்த நாடே, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதே வேளை புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறு வழங்க முயன்றால் களனி மக்களோடு வந்து விரட்ட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம். …
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
வவுனியா வைத்தியசாலை விவகாரம்: விசாரணைக்கு விசேட குழு நியமனம்! வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் தலைமையில் மூவர் கொண்ட குழு வடமாகாண சுகாதார பணிப்பாளரால் நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடந்த 4 ஆம் திகதி குழந்தை பேற்றிற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவருடன் பிரசவ விடுதியில் கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் முரண்பட்ட நிலையில் குழந்தை பிறந்த பின்னரும் குறித்த முரண்பாடு தொடர்ந்து …
-
- 0 replies
- 414 views
-
-
16 AUG, 2023 | 04:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. ஆனால் இவர்கள் இனவாதம், மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம், மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்…
-
- 3 replies
- 617 views
- 1 follower
-
-
03 AUG, 2023 | 04:56 PM பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள மடு திருத்தல ஆவணி திருவிழாவில் ஏழு லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மடு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (28) மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது அவர் திருவிழா தொடர்பில் குறிப்பிட்…
-
- 34 replies
- 2.3k views
- 1 follower
-
-
உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கோனகல பிரதேசத்தில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தோல்வியடைந்த வேலைத்திட்டம் காரணமாக அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) அண்மையில் தெரியவந்தது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அவர்களின் தலைமையில் 10.08.2023ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்துக் கலந்துரையாடப்பட்டபோதே இந்த விடயம் தெரியவந்தது. 2008ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் குறித்த ரேடார் …
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 15 AUG, 2023 | 10:00 AM அரசாங்கம் ''சனல் - ஐ" யை லைக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான ''சனல் - ஐ" ஜூன் 30 திகதி முதல் ஆறு மாதங்களிற்கு விஐஎஸ் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ''சனல் - ஐ" யின் ஒளிபரப்பு நேரம் எந்த வெளிப்படை தன்மையுமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரூபவாஹினி ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஊடக அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார் என நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.…
-
- 4 replies
- 355 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு கோரி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்திடமும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றை தமிழ் மக்கள் கோரி வருவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி முறையில் அதனை அடைவதற்காக 1956 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் ஆணை வழங்கி வருவதாகவும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில்…
-
- 5 replies
- 613 views
-
-
“இராணுவ முகாமை அகற்றாதே ! ” – யாழில் போராட்டம் adminAugust 14, 2023 காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லாததால் , தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லை. காவல்துறையினா் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள்…
-
- 10 replies
- 1.3k views
-
-
16 AUG, 2023 | 10:09 AM யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியை வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம் கையடக்கத் தொலைபேசி வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கைதி களுத்துறை சிறைச்சாலையில் நன்னடத்தை இல்லாத காரணத்தினால் நன்னடத்தைக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர். ஒரு கிராம் மற்றும் 04 மில்லிகிராம் ஹெரோயின் வழக்கில் 14வருட தண்டனை கைதியாவர். சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, சிறைச்சாலை அத்தியட்சகர் கே…
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 AUG, 2023 | 08:50 PM (எம்.மனோசித்ரா) 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும் மற்றும் பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் 11(இ) பிரிவின் ஏற்பாட்டுக்கமைய குறித்த அலுவலகத்தின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் புரிதல் மற்றும் நிறைவேற்றுதல் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகளை உள்ளடக்கக்கூடியவையான விதிகளையும் வழிகாட்டு நெறிகளையும் வழங்குதல் வேண்டும். அதற்கமைய, சட்டமா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் மற்றும் சிபாரிசுகளைக் கருத்தில் கொண்டு குறித்த வழிகாட்டுநெறி தயாரிக்கப்பட்டுள்ளதுடன், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் …
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 AUG, 2023 | 08:46 PM பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும், நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்திற்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும், இன்று இவை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மகா சங்க…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி நெடுஞ்சாலையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கோடு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய மண்முனைபற்று பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இன்று இக் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆரையம்பதி வைத்தியசாலை தொடக்கம் பொதுச் சந்தை வரையிலான சுமார் 150 தொடக்கம் 200 மீற்றர் இடைவெளியில் கடந்த ஒரு வருடத்திற்குள் 25 இற்கும் மேற்பட்ட விதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் பாதையை கடக்க முற்பட்ட 06 பேர் மரணமடைந்தனர். குறித்த பாதை …
-
- 4 replies
- 777 views
- 1 follower
-