ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பாராளுமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் பிரச்சாரத்தை இன்று இரவு நாகர்கோயில் நாகராஜ திடலில் ஆரம்பித்தார். இரவு 8மணிக்கு பேச்சை ஆரம்பித்தவர் 8.45க்கு பேச்சை முடித்தார். அவர் பேசும்போது, ’பிஜேபி ஆட்சி அமைத்தால் தமிழர் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாட்களில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டும்’ என்று தெரிவித்தார்.
-
- 13 replies
- 1.4k views
-
-
கருத்துப்படத்தை காண இங்கே சொடுக்கவும் நீதிபதிகளை இவ்வாறு சித்தரிப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகிவிடுமோ? ஆகலாம். “நீதிபதியை அடிப்பது அவமதிப்பில்லை. அடித்ததை சொன்னால் அவமதிப்பா?” என்று கேட்கிறீர்களா - அது அப்படித்தான். சாக்கடைப் பிரச்சினை, குப்பைத் தொட்டிப் பிரச்சினைகளை suo moto வாக (யாரும் மனுச்செய்யாதபோதிலும தானே முன்வந்து) எடுத்துக் கொண்டு நீதி வழங்குபவர்கள் நீதியரசர்கள். பிப் 19 அன்று தானே அடிபட்ட பிரச்சினையில் “தானே முன்வந்து’ போலீசாரைக் கைது செய்யும்படி அவர்கள் ஆணை பிறப்பிக்கவில்லை. அப்படிப் பிறப்பித்திருந்தால் வழக்குரைஞர் போராட்டம் தேவையில்லை. இரகசியமாக அடி வாங்கியிருந்தால் கூட பரவாயில்லை. டி.வி காமெரா முன் உலகறிய அடிவாங்கியும் நீதித்துறை தன் ஆதிகாரத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழர்களை பாதுகாக்க கோரி 6 பார்வையற்றோர் நடைபயணம் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பார்வையற்ற 6 பேர் சென்னையில் இருந்து கன்னியாக்குமரிக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பார்வையற்றோர் சேவை மையத்தைச் சேர்ந்த மாரிசாமி, வீரப்பன், ஆறுமுகம், நாகராஜ், சக்திவேல் மற்றும் ஜஸ்டின் மாரிமுத்து ஆகிய 6 பார்வை இல்லாதவர்கள் சென்னையில் இருந்து கன்னியாக்குமரிக்கு நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். இலங்கைத் தமிழர்கள் படுகொலையை கண்டித…
-
- 1 reply
- 738 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையில் வாழும் தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசாங்கமே காரணமாகும். இலங்கை தமிழர்களைக் காக்க மத்திய அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்தால் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று இந்திய எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார். நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அத்வானி இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, "பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் தமிழர் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாட்களில் இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு க…
-
- 0 replies
- 804 views
-
-
சுவிற்சர்லாந்தில் ஜெனிவாவிலுள்ள ஐ.நா சபை முன்பாக, ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கோரி, தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த வீரத்தமிழ்மகன் முருகதாசனின் இறுதி ஊர்வலம், இலண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை இங்கே காணலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 8 replies
- 1.7k views
-
-
அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுதந்திரத்துக்கான அணிவகுப்பு' அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் மிகவும் எழுச்சியுடன் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 607 views
-
-
இலங்கையின் உள்நாட்டுப் போரை எல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 12.02.09 தீக்குளித்து மரணமடைந்த முருகதாஸ் விரும்பியிருந்தார் என்று லண்டன் பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: இலங்கையின் உள்நாட்டு போரை எல்லோரினதும் கவனத்திற்கு முருகதாஸ் வர்ணகுலசிங்கம் (வயது 26) கொண்டு வர விரும்பியிருந்தார். பிரித்தானியாவில் வாழும் குடும்பத்தின் அங்கத்தவரான இந்த இளைஞர் சுவிற்சர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற பேரணி ஒன்றில் தன்னைத் தானே தீமூட்டி எரித்திரு…
-
- 2 replies
- 800 views
-
-
'தமிழர்களின் காவலர்' என தன்னை அழைததுக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ஈழத் தமிழர்களை காக்கத் தவறிவிட்டார் என்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 636 views
-
-
சிறிலங்கா படையினரின் அகோர எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இருந்து உடனடியாக வன்னி மக்களை காப்பாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு அனைத்துலக நாடுகளிடம் நான்கு கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 354 views
-
-
வவுனியாவில் சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களில், தெரிவு செய்யப்பட்ட இளம் பெண்கள் விசாரணைக்கு என இரகசிய காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுதந்திரத்துக்கான அணிவகுப்பு' அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் மிகவும் எழுச்சியுடன் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 472 views
-
-
படையினரின் பலப்பரீட்சைக் களமாக மாறியுள்ள புதுக்குடியிருப்புச் சமர்க்களம் [ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2009, 12:45.30 PM GMT +05:30 ] [ வீரகேசரி ] வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 45 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான படையினர் தமது பலத்தைப் பரீட்சிக்கின்ற களமாகி இருக்கிறது. விடுதலைப்புலிகளின் ஆட்பலம் 600 ஐ விடவும் குறைந்து போய் விட்டதாக படைத்தரப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தது. இந்தநிலையில் புலிகளிடம் இருந்து எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் தாக்குதல்களை இராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம் படைத்தரப்பு புதுக்குடியிருப்புச் சந்திப்பகுதியை கைப்பற்றியது. பல வாரங்களாக புதுக்குடியிருப்புக்கான சமர் நீடித்து வந்த நிலை…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒருபுறம் இந்துப் பெருங்கடல் ஏனைய முப்புறமும் சிங்களப் படைகள். சிங்கத் தின் குகைக்குள் சிக்கியிருப்பதுபோன்ற நிலையிலேயே நாமிருப்பது உண்மையே. வெளிப்பார்வைக்குத் தெரிவனவும் இன வாத ஆய்வாளர்களின் ஆய்வுகளும் கோடாரிக்காம்புகளான ஒரு சில தமிழர் களின் கூற்றுக்களும் புலிகளைப் பலமிழந்தவர்களாகவே காட்டி நிற்கின்றன. ஆனால் புலிகளின் பலம் தொடர்பில் வேறெந்த அமைப்பையும் விடவும் சிறப்பாக ஆய்வு செய்யும் இந்தியப் புலனாய்வுத்துறையும் இந்திய அதிகாரபீடமும் புலிகள் பலத்துடன் இருப்பதாக வெளிப் படையாக ஏற்றுக்கொண்டுள்ளன. கடந்த 2009.02.18 அன்று இந்தியப் பாராளு மன்றத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சிங்களத்தின் காலில் விழவேண்டும் என்று தனது அர…
-
- 4 replies
- 2.8k views
-
-
பெப் 1 தொடக்கம் 3 வரை புலிகள் சிறீலங்காவின் 59 வது படையணியை தாக்கி அதற்கு சில சேதங்களை ஏற்படுத்தி அதன் பிரதேசங்களுக்குள்ளும் ஊடுருவி விட்டனராம். இதனால் அந்தப் படையணி இப்போ தாக்குதல் படையணி என்ற நிலையை இழந்துள்ளதாம். விடுதலைப்புலிகள் சாலைப் பகுதியூடு பல தாக்குதல்களைச் செய்துள்ளனராம். அதில் 55 படையணி மீதி பதுங்கித் தாக்குதல்கள் உட்பட பல நிகழ்ந்துள்ளனவாம். விடுதலைப்புலிகள் காடுகளுக்குள் ஊடுருவி நிலை கொண்டுள்ளனராம். ஏ9 சாலையின் இரு மருங்கிலும் கூட புலிகள் நிலை கொண்டுள்ளனராம். விடுதலைப்புலிகளுக்கு சிறிய படகுகளில் ஆயுதங்கள் வருகின்றனவாம். விடுதலைப்புலிகளின் போராளிகள் முல்லைத்தீவில் இருந்து படகுகளில் எங்கோ போகிறார்களாம். ஆனால் எங்கென்றுதான் தெரியல்லையாம். …
-
- 17 replies
- 4.7k views
- 1 follower
-
-
Mulaitivu: Ferociously heavy battles ensued between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan Security Forces (SF) in many areas in Vanni including Puthukudiyirupui, (PTK) Mulaitivu starting for the midnight on Saturday. The raging fighting in Vanni, perhaps the fieriest fighting this country has ever seen throughout history, fighting still raging, cannot give details due to operational. reasons, according to the unnamed Sri Lankan military sources. Yesterday, the sources in Vanni said, LTTE counter attacked the forces in the Forward Defence Line (FDL) area and killed at least 450 SF troopers and injured over 1272 SF troopers in the Southe…
-
- 6 replies
- 2.4k views
-
-
நீண்ட நாட்களுக்கு சிறிலங்கா படையினரின் பின்னணி நிலைகளுக்குள் தங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு பயிற்சி பெற்ற அணிகள் ஊடுருவியுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
எம்மினமே நாளாந்தம் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவ்வினைத்தைக் காப்பாற்றுவதற்கு கடமையும், பொறுப்பும் உள்ளவர்கள் ஏதாவது செய்வார்கள் என அம்மக்கள் நம்பி தமது இறுதி மூச்சை கையில் பிடித்தபடி பங்கர்களுக்குள் காத்திருக்கும்போது, அக்கடமையும், பொறுப்பும் உள்ள தலைவர்கள் தமது அப்பொறுப்பை தட்டிக்கழித்து வருகின்றனர். அதற்காய் அவர்கள் பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போகிறார்கள். அதில் ஓர் காரணம்தான் புலிகள் சர்வதிகாரிகளாம்! (ஆகவே புலிகளை நம்பிய மக்களும் சாகத்தான் வேண்டும் என்ற கணக்கில் அல்லவா கதை சொல்லுகிறார்கள்.) முதலில் புலிகள் சர்வதிகாரம்தான் பண்ணுவர்கள் என்ற கூற்றுக்கு அவர்கள் சொல்லும் முதல் எடுத்துக்காட்டு என்னவென்று பார்ப்போம், 80-களின் ஆரம்பத்தில் விடுதலைப் …
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கைக்கு சட்ட விரோத இரசாயன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக http://www.greenleft.org.au/ என்னும் இணையத்தளம் அறிவித்துள்ளது. http://www.greenleft.org.au/2009/786/40464என்னும் இணைப்பில் இதைக்காணலாம். அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, பாக்கிஸ்த்தான் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதாக குற்றம் சாட்டும் அத்தளம் இலங்கை இராணுவம் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு வரச்சொல்லி அங்கு குண்டுகளை வீசி அவர்களைக் கொல்லுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அறிந்து கொள்ளப் படாத இனப்படு கொலை என்ற தலைப்புடன் வெளியான செய்திக் குறிப்பில் இலங்கை இராணுவம் தடைசெய்யப்பட்ட பரவல் குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் பாவித்து வருவதாகவும் தெரிவித்தள்ளது. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையு…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 554 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.pathivu.com/news/714/54/.aspx
-
- 0 replies
- 1.1k views
-
-
புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 450 பேர் பலி; 1,272 பேர் காயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் முன்னணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் நான்கு டிவிசன் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தை முடித்து விட்டதாக பெரும் பரப்புரையை சிறிலங்கா படைகள் மேற்கொண்டு 'இறுதி நடவடிக்கை' என்ற பெயரில் மார்ச் முதலாம் நாள் தொடக்கம் பாரிய எடுப்பிலான …
-
- 4 replies
- 2.3k views
-
-
வன்னியில் பட்டினியில் இருந்து மக்களை காப்பாற்ற விடுதலைப் புலிகள் துரித நடவடிக்கை [ சனிக்கிழமை, 07 மார்ச் 2009, 12:24.08 PM GMT +05:30 ] [ புதினம் ] வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தின் தடைகளினால் பெரும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பட்டினி அவலத்தை தடுக்கும் செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு பால்மா வழங்கப்படுவதற்கான நிலையங்கள் அமைக்கப்பட்டு காலையில் பால்மா வழங்கப்படவுள்ளதுடன் கஞ்சி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதில் சிறுவர்களுக்கு பயற்றம் கஞ்சியும் பெரியவர்களுக்கு உப்புக்கஞ்சியும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், பட்டினி நிலையில் உள்ள குடும்பங்களுக்…
-
- 2 replies
- 864 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா அரச படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதனை வெளிப்படுத்தும் வகையிலான பேரணி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் கடற்கரையில் மக்கள் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 627 views
-
-
பூண்டோடு அழிபடும் ஈழத் தமிழினத்தின் இறுதிப் போர் ! வெற்றி ஒன்றே எமது அறுதி இலக்கு ! ஆய்வு:ஈழப்பிரியன் வன்னி மக்களின் அவலம் வரலாறு காணாத அளவுக்கு விரிந்து கிடக்கிறது. காணி நிலத் தோடு வீடு வளவோடு கைகால் உழைத்துத் தேடிய செல்வம் அனத்தும் பறிக்கப் பட்டு அனல் காற்று வீசும் பாலை நிலத்துக்குள் பாதுகாப்பு என இந்திய இலங்கை அரசுகளின் மரணப் பொறிக்குள் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று அழிக்கப் படுகின்றனர். வாரம் 80 பொதி ஊர்திகள் மூலம் கொடுக்கப் பட்ட உணவால் அரைப் பட்டினியில் தவித்த மக்கள் கடந்த 1 மாதமாக ஒரு பார ஊர்தி அளவு உணவுப் பொருளும் வழங்கப் படாத நிலையில் பட்டினிச் சாவுக்குள் ஒரு நேர உப்புக் கஞ்சிக்கும் வரிசையில் கை ஏந்திக் காத்திருக்கும் காட்சி அங்கே ! வீடுகளி…
-
- 0 replies
- 1.9k views
-
-
யார் பயங்கரவாதிகள்? தேவை சர்வதேச நீதிமன்ற விசாரணை! - த.எதிர்மனசிங்கம் - 1980 முதல் வட மாகாணத்தில் வலிகாமம் வடக்கில் இருந்த தமிழர்களை கடற்படைப் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் வெளியேற்றிய இலங்கையின் முப்படைகளும் சுமார் 25 சதுரக் கியோமீற்றர் பரப்பளவு பயிர்ச் செய்கை நிலங்களையும் குடியிருப்புகளையும் வன்பறிப்புச் செய்து வெளியேற்றி அப்பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலைமாக்கிக் கொண்டன. இன்று 25 வருடங்களுக்கு மேலாகியும் அப்பிரதேச மக்களை மீண்டும் குடியேற அனுமதிக்காது இருக்கிறது இலங்கை அரசு. 1987 இல் கொக்கட்டிச்சோலை முதல் இன்று முல்லைத் தீவு வரை தொடரும் ஈழத் தமிழரின் இனப் படு கொலைகளுக்கு பதில் கூற வேண்டியவை இலங்கை, இந்திய அரசுகளே. கடந்த இரண்டு வருடங்களாகக் கிழக்கிலும் வன்…
-
- 0 replies
- 1k views
-