ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
விடுதலைப்புலிகளின் ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் சில தற்கொலைப்படைப் படகுகளையும் சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாத இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. srilanka army. இப்படங்களைப் பார்க்கின்ற போது நகர்த்திச் செல்லக் கூடிய நிலையில் இருந்தும்.. ஏன் விடுதலைப்புலிகள் இவற்றை விட்டுச் சென்றனர் என்பது.. கேள்விக்குரியதாகவே இருக்கிறது..! இது.. உண்மையில்.. கைப்பற்றப்பட்டதா அல்லது பிரச்சார நோக்கில்.. திசை திருப்பச் செய்யப்பட்டதா..??! (டம்மியா)
-
- 21 replies
- 4.3k views
-
-
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை ஏன் உலகம் வாழ் தமிழர்களைப் பொறுத்தவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மூன்று மணிநேர கொழும்பு விஜயம் முதுகில் குத்தும் செயல் போல மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போல அமைந்து விட்டது. இலங்கையில் யுத்த நிறுத்தத்தை உடன் ஏற்படுத்தி, ஈழத் தமிழர்களின் அவலச் சாவுகளையும் அழிவுகளை யும் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையி லான தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் கோர, அதற் குத் தமது வெளிவிவகார அமைச்சரைக் கொழும்புக்கு அனுப்பி இது குறித்துப் பேசுவோம் என்று பதிலளித்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்.ஆனால், அப்படி உறுதியளித்து சுமார் இரண்டு மாத காலமாக ஏதும் நடக்கவில்லை யுத்த முனையி…
-
- 0 replies
- 561 views
-
-
இலங்கையில்போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று வாலிபர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார்.பிரேத பரிசோதனைக்கு பிறகு முத்துக்குமாரின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.முத்துக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபாகரன் மாவீரன் - புலிகள் சரணடைய மாட்டார்கள்: திருமாவளவன் வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009, 10:31 [iST] சென்னை: வரலாற்றுக்கு முன்பும் சரி, வரலாற்றுக்கு பின்பும் சரி பிரபாகரன் போல மாவீரன் உலகத்தில் இதுவரை பிறக்கவில்லை. அப்படிப்பட்ட விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரண் அடையமாட்டார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். சிங்கள அரசு இலங்கை தமிழர்கள் மீது நடத்திவரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஒ…
-
- 1 reply
- 847 views
-
-
ஈழத்ற்காகத் தீக்குளித்து தியாகியானான் ஒரு தமிழன் ! ஈழத்திற்காக தமிழக ஓட்டுக்கட்சிகள் குறிப்பாக தி.மு.கவின் நாடக உணர்ச்சியைத் திருப்தி படுத்துவதற்காக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ஈழத்தமிழர்களைக் கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவை அளித்து விட்டு உடன் திரும்பி விட்டார். காங்கிரசுக் கூட்டணி அரசின் தமிழகப் பங்காளிகள் ஏதோ பெரிய கோரிக்கையைச் சாதித்து விட்டதாக பீற்றி வருகின்றனர். இந்த பசப்பலுக்கு மத்தியில்தான் முல்லைத் தீவில் நூற்றுக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் இந்த வேடதாரி அரசியலுக்கு மத்தியில் தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல பரவி வருகின்றன. மக்களின் இந்தப் போரா…
-
- 12 replies
- 2.3k views
-
-
ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தாங்கள் அறிவீர்கள் என யாழில் இருந்து ஒரு தமிழ் மகன் புலம்பெயர் தமிழர்களுக்கு யாழ். நிலைவரம் குறித்தும் அங்கு அகிம்சைப் போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை எனவும் நீங்கள் தான் எங்கள் நிலையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தவேண்டும் எனவும் விளக்கி தமிழர் ஒருங்கிணைப்பு குழு, பிரான்ஸ் என முகவரியிட்டு ஓர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன் முழு வடிவம்:- ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தாங்கள் அறிவீர்கள். எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வன்னியில் வசிக்கும் எம் உடன்பிறப்புக்கள் கொடூரமாக இலங்கை அரச இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு இந்திய அரசும் துணை போகின்றது. அகிம்சை வழியி…
-
- 0 replies
- 638 views
-
-
விடுதலைப்புலிகள் கல்மடு குளத்தை குண்டு வைத்து தகர்த்ததில் சுமார் 4ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் கொல்லப்பட்டவர்கள் 200 இந்திய படையினர் அடங்கியிருப்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று மேற்கொண்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத போராட்டத்தில் உரையாற்றும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியா அரசாங்கம் தமிழ் மக்களை படுகொலை செய்யும் படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் திருமாவளவன் குற்றம்சுமத்தியுள்ளார். நன்றி : www.globaltamilnews.ne
-
- 4 replies
- 2k views
-
-
ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள மனதனுக்கு மரணம் என்றால் அச்சம்தான். இயல்பான வாழ்க்கையில் முதுமை காரணமாகவோ, உடலை வதைக்கும் நோய் காரணமாகவோதான் பெரும்பான்மையினர் இறக்கிறார்கள். ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கத்திற்காக நடத்ததப்படும் போரில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இங்கு இறப்பு கொலையாக மாறி நிற்கிறது. ஈழத்தில் முல்லைத்தீவில் அடைக்கலம்புகுந்திருக்கும் மக்களை இப்படித்தான் இலங்கை ராணுவம் கொன்று வருகிறது. மரணத்தின் காரணங்களும், தோற்றுவ…
-
- 1 reply
- 666 views
-
-
இலங்கையில் தமிழருக்குப் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை, என ஐநா சபை கூறியுள்ளது.இலங்கை வன்னிப் பகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நடக்கும் கொடூரமான தாக்குதல்களை 48 மணிநேரம் நிறுத்துவதாகவும் அதற்குள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்திருந்தார். உடனே அந்த அறிவிப்பை இந்திய அரசாங்கம் ஆரத்தி எடுக்காத குறையாக வரவேற்று மகிழ்ந்ததோடு, புலிகள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றிவிட வேண்டும் என கிட்டத்தட்ட உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து புலிகள் எதுவும் கூறாமல் உள்ளனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள ஐநா மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்டன் விஸ், இலங்கையில் தமிழர்களுக்…
-
- 0 replies
- 546 views
-
-
கட்டு நாயக்கா விமான நிலையத்தில் பலர் கைது இதை முதல் நான் நம்பவில்லை. இப்போது எனது உறவினர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.மேலதிக விபரம் கிடைத்ததும் அறியத்தருகிறேன்.
-
- 2 replies
- 1.2k views
-
-
வவுனியா உள்ளிட்ட வன்னிப்பெரு நிலப்பரப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி அளிக்குமாறு பிரான்ஸ் நாட்டில் இருந்து செயற்படும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 390 views
-
-
ஈழக் கொலைகளை நிகழ்த்தும் இரண்டு அமெரிக்கர்கள்! - நிகேத்தனா, படம்: கே.ராஜசேகரன் ''விடுதலைப் புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்வது இரண்டு அமெரிக்கர்கள்!'' என்று திடுக்கிடவைக்கிறார் ஒரு வழக்கறிஞர். ''ஒருவர், கோத்தபய ராஜபக்ஷே. இன்னொருவர், சரத் ஃபொன்சேகா. முன்னவர், ஜனாதிபதியின் சகோதரர். பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருக்கிறார். சரத் ஃபொன்சேகா, ராணுவத் தளபதியாக இருக்கிறார். எங்கள் கணக்கின்படி இவர்கள் இருவரும் சேர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அமெரிக்கப் பிரஜைகள் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். கோத்தபய ராஜபக்ஷே, அமெரிக் கக் குடியுரிமை பெற்றவர். சரத் …
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை பிரச்சனை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை தூதரகம் மீது மாணவர்கள் ஆவேசத்தாக்குதல் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஈழத்தமிழர்களுக்காக சென்னையில் நேற்று முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்தார். இதன் எதிரொலியாக மேலும் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கின்றன. இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 40பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.tamilskynews.com/index.php
-
- 0 replies
- 940 views
-
-
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவனில் (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்காக ஆதவான கோஷங்கை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்தார். அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்துக்குமரனின் உடல் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி: நக்கீர்ன்
-
- 81 replies
- 7.5k views
- 1 follower
-
-
ஈழத்தமிழருக்காக (தூத்துக்குடி) பத்திரிக்கையாளர் முத்துக்குமார் நேற்று சென்னையில் தீக்குளித்து இறந்தார். இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெருகிறது. முத்துக்குமாரின் மரணம் குறித்து அவரது தந்தை, ‘’என் மகன் இறந்ததை நினைத்தால் மனசுக்கு வருத்தமாயிருக்கு(அழுகிறார்). ஆனால் அவன் நாட்டுக்காக, தமிழருக்காக இறந்திருக்கிறான் என்று நினைக்கிற போது ரொம்ப பெருமையாயிருக்கு(அழுகையை துடைத்துக்கொள்கிறார்) என்று தெரிவித்தார். http://www.tamilskynews.com/
-
- 2 replies
- 970 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக ஊடகங்கள் ஊடாக செய்திகளை வெளியிட்டிருந்தது. ஆனால், இன்றும் வழமை போலவே பொதுமக்கள் குடியிருப்புக்கள், சந்தைகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் எனப் பாராது கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 344 views
-
-
The Hindu , a leading Indian newspaper depicted the plight of the Tamil civilians in Wanni in a cartoon published on Wednesday (Jan 28
-
- 8 replies
- 1.7k views
-
-
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை ஏன் உலகம் வாழ் தமிழர்களைப் பொறுத்தவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மூன்று மணிநேர கொழும்பு விஜயம் முதுகில் குத்தும் செயல் போல மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போல அமைந்து விட்டது. இலங்கையில் யுத்த நிறுத்தத்தை உடன் ஏற்படுத்தி, ஈழத் தமிழர்களின் அவலச் சாவுகளையும் அழிவுகளை யும் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையி லான தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் கோர, அதற் குத் தமது வெளிவிவகார அமைச்சரைக் கொழும்புக்கு அனுப்பி இது குறித்துப் பேசுவோம் என்று பதிலளித்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்.ஆனால், அப்படி உறுதியளித்து சுமார் இரண்டு மாத காலமாக ஏதும் நடக்கவில்லை யுத்த முனையி…
-
- 0 replies
- 570 views
-
-
Clicke here: http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=117
-
- 0 replies
- 736 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனையைச் சுற்றி நேற்று வியாழக்கிழமை இரண்டு மணிநேரம் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 443 views
-
-
சிறிலங்காவின் 61 ஆவது சுதந்திர நாளை புறக்கணிக்கும் நோக்கில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் புதன்கிழமை (04.02.09) மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 549 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 493 views
-
-
முல்லைத்தீவில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கும் 48 மணிநேர காலக்கெடுவானது ஒரு மோசடி நாடகம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றசம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று தீக்குளித்து உயிர்க்கொடை செய்த இளைஞர் முத்துக்குமாருக்கு அரசியல் தலைவர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வணக்கம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 557 views
-
-
கடந்த 26ம் திகதி உடையார் கட்டு பகுதியில் நடந்த கடுமையான எறிகணை வீச்சில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் கா. வே பாலகுமாரன் அண்ணா படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக 28/01/2009 அண்றைய புலிகளின் குரல் செய்தி சேவை தெரிவித்தது.. இந்த காயம் அடைந்த விபரத்தை புலிகளின் குரல் முக்கியத்துவம் கொடுத்து இணைத்தமையால் இதை எல்லோரும் அறியும் வண்ணம் இங்கு இணைத்து விட்டு இருக்கிறேன்... புலிகளின் குரலை கேட்பதுக்கு...( 2. 40 நிமிடத்தில் சொல்ல படுகிறது.) http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...09/News7_00.m3u http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...09/News7_00.mp3
-
- 34 replies
- 3.7k views
-