ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
மனித புதைகுழி விவகாரம் : கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமது உறவுகளும் இருக்கலாமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச விதிமுறைகளை கடைபிடித்து வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்கள் ஆகியோரின…
-
- 0 replies
- 260 views
-
-
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும் - பிரான்சிஸ் ரட்ணகுமார் Published By: Digital Desk 3 08 Jul, 2023 | 09:39 AM இந்தியாவிற்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் கோரிக்கை முன்வைத்தார். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்…
-
- 0 replies
- 167 views
-
-
வவுனியா - பெரிய விளாத்திக்குளம் வீதியை பார்வையிட்ட நீதிபதி : வீதியை அமைக்க உடனடி நடவடிக்கை Published By: Nanthini 08 Jul, 2023 | 10:49 AM வவுனியா - பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதியை தமது பாவனைக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அவ்வீதியை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (07) பார்வையிட்டார். அதனையடுத்து, அவ்வீதியை மக்களின் பாவனைக்கு உகந்ததாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வவுனியா - பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி ஓமந்தை புகையிரத நிலையம் அமைப்பதற்காக 2012ஆம் ஆண்டளவில் நிரந்தரமாக மூடப்பட்…
-
- 0 replies
- 342 views
-
-
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு 08 Jul, 2023 | 11:29 AM கிளிநொச்சியில் காணாமல் போனவர்களது விபரங்களை பதிவு செய்யும் அலுவலகமான ஓ.எம்.பி. அலுவலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன்று சனிக்கிழமை (08) காலை ஆரம்பமானபோது, அலுவலக செயற்பாடுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், அவர்கள் குறித்த அலுவலகத்தினால் பதிவுகளுக்காக வழங்கப்பட்டிருந்த அழைப்புக் கடிதங்களையும் அலுவலகத்தின் முன்னால் வைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பெ…
-
- 0 replies
- 319 views
-
-
08 JUL, 2023 | 11:25 AM 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோர ஆரம்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று சனிக்கிழமை (08) அறிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமாகியுள்ளதாகவும் ஜூலை 28ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி விண்ணப்பதாரர்கள் இணையவழி ஊடாக மாத்திரமே தமது விண்ணப்பத்தை செலுத்த முடியும் எனவும், www.doenets.lk, www.onlineexams.gov.lk/eic ஆகிய திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலோ அல்லது கையடக்கத்தொலைப…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 JUL, 2023 | 08:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ''கல்வெட்டு'' என தொல்லியல் திணைக்களத்தினால் ஆதாரமாக காட்டப்படும் ''செங்கல்'' எவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டதென கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் பல விடயங்களைக் கூறியதுடன் அந்த ''கல்வெட்டு'' உண்மையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என்றால் யுனெஸ்கோவையும் சர்வதேச தொல்பொருள் ஆய்வாளர்களையும் அழைத்து ஆய்வு செய்ய அரசு தயாரா எனவும் சவால் விடுத்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் …
-
- 2 replies
- 404 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 30 JUN, 2023 | 09:28 AM யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது, குறித்த பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் எருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/158888
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
07 JUL, 2023 | 05:05 PM (எம்.மனோசித்ரா) சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் இலங்கை மின்சாரசபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின்உற்பத்தி கூட்டுத்தாபனம் என்பன ஆரம்பிக்கவுள்ள 130 மெகா வோல்ட் மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இலங்கை மின்சாரசபை, இந்தியாவின் தேசிய அனல் மின் உற்பத்தி கூட்டுத்தாபனம், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பவற்றின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. முதல் கட்டமாக 50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்துக்கான எரிசக்தி அனுமதி அடுத்த வாரம் வழங்கப்படும். பரிம…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
பல விமான நிலையங்களை இணைக்கும் உள்நாட்டு விமான போக்குவரத்து வலையமைப்பை இலங்கை உருவாக்க உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையம் , பலாலி விமான நிலையம் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையங்களை இணைத்து உள்நாட்டு விமான போக்குவரத்து வலையமைப்பு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் உள்நாட்டு விமான போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கினால் உயர்தர சுற்றுலா பயணிகளை கவர முடியும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். “இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையத்தில் ஓடுபாதையை விரிவுபடுத்தவும் நாங்கள் உத்தேசித்துள்ளோ…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
07 JUL, 2023 | 03:11 PM இலங்கை தன்னிடம் பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்கு 12 வருடகால அவகாசத்தை இந்தியா வழங்கவுள்ளது. இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்காக இலங்கை தன்னிடம் பெற்ற கடன்களை மீள திருப்பி செலுத்துவதற்கு 12 வருடகால அவகாசத்தை வழங்ககூடும் என இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. அதன் பின்னர் மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் வெளியாகும், நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எங்கள் பணத்தை மீட்டெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். மூன்று நான்கு வருடங்களில் இவற்றை பெறவேண்டும், ஆனால் அதனை 10-…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மே நாளான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக A9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது. https://athavannews.com/2023/1331192
-
- 1 reply
- 552 views
- 1 follower
-
-
பொருளாதாரக் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என மீண்டும் வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாட்டில் நிலவும் மோசமான அரசியல் கலாசாரத்தினால் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டமூலம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் பேசிய அவர், தற்போதுள்ள சட்டங்களான பொதுச் சொத்துச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம், இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டங்களே பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தடுக்க போதுமானவை எனவும் தெரிவித்துள்ளார். சிறிய குற்றங்களில் ஈடுபடும் சாதாரண …
-
- 1 reply
- 262 views
- 1 follower
-
-
இலங்கை உயர் ஸ்தானிகர் - லண்டன் பதவி யாருக்கு? இப்போது அந்த பதவியை வைத்திருப்பவர் Saroja Sirisena. அம்மணிக்கு அந்த பதவியை விட்டுப்போக மனமில்லை. காத்திரமான பதவி. லண்டன் பத்திரிகை ஒன்று, ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தியது என்று தாம், தோம் என்று குதித்து, அதனை இலங்கையில் பெரிய செய்தியாக்கி தனது இருப்பினை உறுதி செய்தவர். ஆனால் இலங்கையின் தமிழ் தேசிய கீதத்தில், ஈழம் என்ற சொல் உள்ளதே என்று பத்திரிகையின் கருத்துக்கு பதில் கொடாமல் நழுவியவர் இந்த அம்மணி. கொழும்பில் பெரும் அரசியல் முயல்வுகள் செய்தார். பலனளிக்க வில்லை. இறுதியாக மலையாள மாந்திரீகர் இருவரை வரவழைத்து பூஜைகள் செய்வித்தார். முதல் கட்ட பூசைகள் முடிந்து, இம்மாதம் இரண்டாம் கட்ட பூசைகள் நடக்க உள்ள நிலையில், பழைய அர…
-
- 1 reply
- 308 views
-
-
வடக்கில் பதிவு செய்யப்படாத தனியார் சுகாதார சேவை துறையினரை பதிவு செய்ய அறிவுறுத்தல் adminJuly 6, 2023 தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை கூட்டமானது (Private Health Services Regulatory Council – PHSRC ) வடமாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை செயலாளர் வைத்திய கலாநிதி டிலீப் லியனகே அவர்களின் பங்களிப்புடன் தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை (PHSRC) சார்ந்த பூரண விளக்கங்களும் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வட மாகாணத்தில் உள்ள தனியார் வைத்திய துறையினர் என பலர் கல…
-
- 0 replies
- 313 views
-
-
யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி adminJune 3, 2023 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என பல்கலை தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக் கழகப் பேரவையின் பதவி வழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையாகும். அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக்…
-
- 10 replies
- 1k views
-
-
வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக பணியாற்றுகின்றார்கள். அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகி…
-
- 21 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதிக்கு கௌரவம்! யாழ்ப்பாணம் – நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு சர்வமதங்களின் பங்கேற்புடன் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நயினாதீவு மேகலை அரங்கத்தில் இன்று புதன்கிழமை(05) காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையின் நான்கு பிரதான பௌத்த பீடங்களின் தேரர்கள் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டார். விக…
-
- 6 replies
- 575 views
-
-
கலைஞர் கருணாநிதி போற்றுதலுக்குரியவர், ஆனால் அவருக்கான நூற்றாண்டுவிழாவை தமிழர் தாயகத்தில் நடத்துவது பொருத்தமற்றது-பா.அரியநேத்திரன் July 6, 2023 தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில். தமிழ்நாட்டு முதல்வர் அமரர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டுவிழா இந்தியாவில் தமிழ்நாடு முழுவதும் தற்போது இடம்பெறுவதற்கான முன் ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. அவர் பிறந்த நாட்டில் அவர் ஆட்சிசெய்த தமிழ்நாட்டில் கட்டாயம் அந்த மக்கள் செய்வது நல்லது. அவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவரும், …
-
- 0 replies
- 230 views
-
-
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, வியாழக்கிழமை (06) கொழும்பு செட்டியார் தெருவில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 148,000 ஆக குறைந்துள்ளது. இதன் விலை புதன்கிழமை (05) 149,000 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 160,000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்தது! | Virakesari.lk
-
- 0 replies
- 421 views
-
-
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார். இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. அதாவது பரமேஸ்வராக் கல்லூரியை தானமாக வழங்கி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்கள். ஒரு கல்விக் கூடத்திற்காக ஒரு கல்விக் கூடத்தை தானம் கொடுத்து உருவாக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர்களாக இருந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் வித்தியானந்தன் மற்றும் பேராசிரியர் துரைராஜா போன்றவர…
-
- 0 replies
- 348 views
-
-
இலங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் தென்கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சமீபத்தில், தென்கிழக்கு கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட அதிர்வு இலங்கையின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதாவது தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் அதிர்வுகளால் மேல் மாகாணத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிச்சயம் பாதிக்கப்படலாம். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்படுவதா…
-
- 3 replies
- 334 views
- 1 follower
-
-
https://thinakkural.lk/article/261547 இலங்கையில் திருப்பதி கோவிலை நிர்மாணிக்குமாறு ஆந்திர முதல்வரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாயம் , மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடியுள்ளனர். BOI ஆடைகள் தொழிற்சாலை குறித்தும் , திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்தி…
-
- 3 replies
- 607 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 06 JUL, 2023 | 12:47 PM தனது மகன் நாடு கடத்தப்படுவதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தலையிட்டு நிறுத்தவேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரீட்டா அருள்ரூபன் என்ற இலங்கை பெண்ணே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ரீட்டா அருள்ரூபன் 2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். பல வருடங்களாக பாதுகாப்பு விசாவில் வாழ்ந்த அவருக்கு அரசாங்கம் நிரந்தர விசாவை வழங்கியுள்ளது. அவர் தனது மகனை அவுஸ்திரேலியாவிற்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி அழைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார், எனினும் 2016 இல் அவரது விண்ணப்பத்தை அவுஸ்திரே…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
உதயநிதி ஸ்டாலின் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு! தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதாகவும் செந்தில் தொண்டமான் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தார். …
-
- 0 replies
- 280 views
-
-
”பணம் செலுத்தாதவர்களின் முகத்தில் வெந்நீரை ஊற்றுங்கள்” ”உணவருந்திவிட்டு அதற்குறிய பணத்தை வழங்க மறுப்பவர்களின் முகத்தில் வெந்நீரை அல்லது கழிவு நீரை ஊற்றுங்கள்” என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் சமன் டி சில்வாவுக்கும் பாணந்துறையில் உள்ள உணவகம் ஒன்றின் ஊழியர்களுக்கு இடையிலும் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள், உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இலவச உணவு யாருக்கும் கொடுக்க வேண்…
-
- 2 replies
- 618 views
-