ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143652 topics in this forum
-
20.01.09 தாயக செய்திகளின் காணொளி தொகுப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது தீபம் செய்திகள் Gtv செய்திகள் நன்றி
-
- 0 replies
- 1.1k views
-
-
உங்களுடைய மாமியாரும் மறைந்த பிரதமருமான இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாகவும் அவரின் முழுமையான நம்பிக்கை பெற்றவனாகவும் இருந்த ஒரு தமிழன் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒரு தியாகப் பாரம்பரியம் உண்டு. அன்னியரின் அடிமைத் தளையிலிருந்து இந்தியாவை விடுவிக்கப் போராடி பல தியாகங்களைச் செய்த இயக்கம் காங்கிரஸ் இயக்கமாகும். இமயம் முதல் குமரி வரை வாழும் பல மொழி பேசும் தேசிய இனங்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இயக்கம் அதுவாகும். மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என நான்கு தலைமுறையினர் காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளனர். அவர்கள் இருந்த நாற்காலியை இன்று நீங்கள் அலங்கரித்துக் க…
-
- 1 reply
- 1.8k views
-
-
''அதிபர் ஒபாமாவுக்கும் கிளின்டன் அம்மையாருக்குமாக பாடுபட்ட நாம் இன்று எதிர்பார்ப்பது உங்கள் நிர்வாகம் இலங்கைத்தீவில் போரை முடிவுக்கு கொண்டுவந்து தமிழீழ தேசத்தை அமைக்க உதவுவதேயாகும்.'' ''அமெரிக்காவில் இன்று உதயமாகும் உங்களின் புதிய ஆட்சியில் நாம் எதிர்பார்ப்பது ஈழத்தமிழர் தொடர்பான கொள்கை திருத்தங்கள்,தமிழரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளின் முன்னெடுப்பு,தமிழீழ தேசத்தை நிறுவும் செல்நெறியில் செயற்படுவதுடன் கொள்கை வகுப்பில் இவற்றை முன்னிலைப்படுத்துவதுமாகும்.''என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அதிபர் ஒபாமா, கிளின்டன் அம்மையாரை ஆட்சிக்கு கொண்டுவர அமேரிக்காவில் பரப்புரை மற்றும் நிதி சேகரிப்பில் ஈட…
-
- 1 reply
- 1.6k views
-
-
இன்று காலை மட்டக்களப்பு நகர்பகுதியில் இரு கிபீர் மிகையொலி விமானங்கள் வான்பறப்பினை மேற்கொண்டன. சரியாக 10.30 மணிக்கு மட்டக்களப்பு நகர்பகுதியை ஊடறுத்து இரு கிபீர் மிகையொலி விமானங்கள் அம்பாறை காட்டுப்பகுதிக்குள் பிரவேசித்ததாக கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நகர்பகுதியில
-
- 6 replies
- 3.3k views
-
-
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச நேற்று பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை செயலாளார் லெப்.ஜென்ரல் சியாட் அத்தார் அலியை சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார். ராவல்பிண்டியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சு இலங்கைக்கு தொடர்சியாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு கோட்டபாய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கு…
-
- 2 replies
- 1.6k views
-
-
சென்னை: பாமகவுக்கு ஆட்சியில் பங்கு வேண்டாம். ஐந்து வருட காலமும் திமுக ஆட்சி நீடிக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவேன் என கூறிய நானா, இந்த அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டும் சதிகாரன் என முதல்வர் கருணாநிதிக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார். இலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்தி உடனடியாக அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் பேசுகையில், கிளிநொச்சி வீழ…
-
- 1 reply
- 2k views
-
-
Another humanitarian tragedy that fails to hit the prime time While the war on Gaza preoccupies the attention of international media, human rights organisations international community and public at large another humanitarian tragedy of equal gravity unfolds largely unnoticed in the northern part of Sri Lanka. The battle front is closing-in from all directions for over 400, 000 Tamil civilians in the North-Western part of Sri Lanka. The Sri Lankan government has imposed a crippling economic, food, medical & fuel blockade for almost a year. The NGOs including various functions of UN such as WFP, UNICEF and UNHCR were ordered to leave the region by the Sri Lan…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா ஊர்காவற் படையை யாழ். குடாநாட்டில் அமைக்க டக்ளஸ் திட்டம்! திகதி: 19.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] கிழக்கில் சிறிலங்கா ஊர்காவல் படையினர் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் நிலையில், யாழ்.குடாநாட்டிலும் அவ்வாறான ஒரு ஊர்காவல் படையினரை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத் துணைக்குழுகளில் ஒன்றான ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் முடிவு செய்துள்ளார். சட்டம் ஒழுங்கைப் பேணவும், பல்வேறு சமூகச் சீர்கேடுகள் மற்றும் பாதிப்புக்களை அகற்றும் என்ற பெயரில் இந்த ஊர்காவல் படையினரை உருவாக்கும் திட்டம் குறித்து டக்ளஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.தேசவள விவசாயிகள் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட யாழ்.மாவட்ட விவசாய மக்களின் பிரதிநிதிக…
-
- 15 replies
- 1.8k views
-
-
பட்சேவுக்கு இந்தியா கூட்டாளி, தமிழனுக்கு பகையாளி! பகையாகளிடம் கெஞ்சும் தமிழக கோமாளிகள்!! கருத்துப்படத்தை காண : http://vinavu.wordpress.com/2009/01/20/carlank1/
-
- 6 replies
- 3.3k views
-
-
தாயகத்தில் பேரவலத்தில் சிக்கியிருக்கும் தங்கள் உறவுகளுக்கு துணையாக தாம் இருப்போம் எனும் உணர்வினை எழுச்சியுடன் வெளிப்படுத்தும் வகையில் பிரான்சில் நடைபெற்ற ஒன்றுகூடலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 692 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
சிறிலங்காவுக்கு உதவும் இந்தியாவை கண்டித்து தமிழகம் முழுவதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் மீள்குடியேறி மக்களை விசேட அதிரடிப்படையினர் மிரட்டிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில் படுவான்கரையில் சில பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் அன்றாடம் உணவு தயாரிக்கப்படும் பாத்திரங்களை கழுவி இராணுவத்தினரின் பார்வைக்கு வைக்குமாறு பொதுமக்களைப் பணித்துள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு தாம் உணவு வழங்குவதாகச் சந்தேகிக்கும் இராணுவத்தினர் குழுக்களாகப் பிரிந்து இதனை மேற்பார்வை செய்துவருவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், கூறுகின்றனர். நன்றி பதிவு . கொம்
-
- 0 replies
- 1.7k views
-
-
உலக வரலாற்றின் மகத்தான மாற்றமாக அமெரிக்க அதிபராக கறுப்பு இனத்தவரான ஒபாமா இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
சிங்கள பேரினவாதத்தின் தமிழினப் படுகொலையை முடிவுக்கு கொண்டு வருமாறு கோரி, நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழ் மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 331 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், மாணிக்கபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 545 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி ஏன் இன்னமும் இலங்கைக்குச் சென்று, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயவில்லையென்பதை மத்திய அரசாங்கம் விளக்கிக் கூறவேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்குச் செல்வதற்கான சரியான நேரத்தையாவது மத்திய அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்க வேண்டும் என கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்குச் சென்று வந்துள்ளபோதும், அமைச்சரின் விஜயம் குறித்து ஒரு வார்த்தை கலந்துரையாடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.கருணாநிதி, “இந்த விடயம் தொட…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி: வடக்கு இலங்கையில் தமிழர்களை வீடுகளை விட்டு வெளியேற்றி அகதிகளாக்கி, காடுகள்-ரோடுகளில் அலையவிட்டு, பட்டினி போட்டு, தாக்குதலும் நடத்தி, காயமடைந்தவர்களுக்கும் நோய்வாய் பட்டவர்களுக்கும் மருததுவ வசதிகள் கிடைத்துவிடாதபடி தடுத்து, குழந்தைகளின் கல்வியையும் முடக்கி அந்த இனத்தையே சமூக-பொருளாதார-உடல் நிலை என்ற தளத்தில் வைத்து ஒடுக்கி, பூண்டோடு அழிக்கும் மாபெரும் சதித் திட்டத்தை இலங்கை அரசு அரங்கேற்றி வருவதாகத் தெரிகிறது. உணவுக்கும், இருப்பிடத்துக்கும் அலையவிட்டு அவர்களை மனரீதியிலும் ஒடுக்கும் பெரும் பாதகச் செயல் அங்கு நடந்து வருகிறது. வன்னியில் இலங்கை ராணுவம் நடத்தி வரும் பயங்கர தாக்குதல்களில் இதுவரை 352 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெர…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை கடலினுள் தள்ளிவிடும் நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுமாறு சிங்கள மக்களிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
"இலங்கை யில் ஈழத் தமிழர்கள் மீது போரை நடத்திக் கொண்டிருப் பது இந்திய அரசுதான்' என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கி ழமை இரவு நடைபெற்ற இந்திய - இலங்கை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்க விழா வில் அவர் மேலும் பேசியது: இலங்கை அதிபராக ராஜ பக்ஷ பதவியேற்ற நாள் முதல் இதுவரை 4 தமிழ் எம்.பி.க்களும், பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளி கள் மீதும் குண்டுகளை வீசி ஏரா ளமானக் குழந்தைகளை இலங்கை ராணுவம் கொன்று வருகிறது. இலங்கைக்கு முழு ராணுவ உதவிகளையும் இந்திய அரசுதான் செய்து வருவதாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சரே ஒப்புக்கொண் டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அ…
-
- 0 replies
- 785 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
சிறிலங்கா படைகளை மூன்று லட்சம் ஆக்கும் திட்டத்துடன் ஆட்களை திரட்டும் நடவடிக்கைகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சிங்கள கிராமங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் தான் என்பதை தாங்கள் நம்பவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பது, அவரும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார். தவிரவும் யுத்தம் நடக்கும் இடங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயராமல் தடுப்பதே விடுதலைப்புலிகள்தான் என்றும் ஜெ…
-
- 19 replies
- 3.1k views
- 1 follower
-
-
நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் ஜெ - திருமா இலங்கையில் நடக்கும் போரில் தமிழர்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்று ஜெயலலிதா கூறியதிலிருந்து அவர் எத்தகைய நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் என்பதை தமிழ் சமுதாயம் உணர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் செத்து மடியும் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது. முதல் அமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்துக்கான வாய்ப்பும் இல்லை என்றாகிவிட்டது. அரசுச் செயலாளர் சிவசங…
-
- 0 replies
- 1.6k views
-