ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இந்த வருடம் மட்டும் சிறிலங்கா படைத்தரப்பில் 191 பேர் கொல்லப்பட்டுள்ளளதுடன் மேலும் 247 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
சிறிலங்காவில் எரிபொருட்களின் விலையை திடீரென மகிந்த ராஜபக்ச அரசு குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 755 views
-
-
வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை பிரதான கட்சிகள் நேற்று தாக்கல் செய்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 471 views
-
-
திருகோணமலை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 453 views
-
-
சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்ப்பு தொடர்பாக சிறிலங்கா விளக்கம் [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:19 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்க்கப்படுவது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது. சிறிலங்கா படைத்தரப்பு பேச்சாளர் உதய நாணயக்கர கூறியுள்ளதாவது: முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த மொகொட்டிக ரவி துஸ்மந்த (அடையாள அட்டை எண்: 911780313 V) என்பவரின் புகைப்படத்தை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளம் வெளியிட்டது. அந்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படமும் பெயரும் சரி. ஆனால் அடையாள அட்டை மட்டும் போலியாக விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டது. படைத்தரப்புக்கு எதிரான பரப்புரைக்காக அது உர…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
உல்லாச பயணிகள் சிறிலங்கா செல்வதை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டுக்குச் செல்வதாக இந்திய உல்லாச பயண சபையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 582 views
-
-
கிளிநொச்சிக் கனவில் தடுமாறும் அரசு - இதயச்சந்திரன். கிளிநொச்சி கனவில் தடுமாறும் அரசு - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 16:56 மணி தமிழீழம் [] வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு தடைசெய்யப்படுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டு விட்டன.83இலும் 98 இலும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87இல், 2002 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
வருடத்தின் இறுதிப்பகுதியில் களத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் விடுதலைப்புலிகளின் வலிந்த சமரானது படைத்தரப்புக்கு கசப்பான செய்தி வேல்ஸிலிருந்து அருஷ் உக்கிரமான போர் எழுச்சி கொண்ட 2008 ஆம் ஆண்டு விடை பெற்று செல்வதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் மோதல்களிலும், அரசியல் வன்முறைகளிலும், இயற்கை அனர்த்தங்களினாலும் இழக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு போர் உக்கிரம் அடைந்த போதும் கடந்த மூன்று வருடங்களில் 2008 ஆம் ஆண்டே மிகவும் கொடூரம் நிறைந்த ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விடைபெற்று செல்கின்ற போதும் அது போரை அடுத்த வருடத்திற்கு விட்டு செல்கின்றது என்பதை மறுக்க முடியாது. வன்னிப் பகுதியின் முக்கிய நகரங்களான …
-
- 0 replies
- 2.7k views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவை கைப்பற்றும் இறுதிச் சமர் ஆரம்பம் * படைத்தரப்பு தெரிவிப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு களமுனைகளில் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வரும் படையினர், இவ்விரு நகர்களையும் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர்களை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதேநேரம், கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நோக்கி இரு முனைகளில் பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட படையினர் மீது, தாங்கள் நடத்திய தாக்குதலில் 68 படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்த அதேநேரம், முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் 31 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நடைபெ…
-
- 0 replies
- 2.6k views
-
-
விடுதலைப்புலிகள் தலை நகரான கிளிநொச்சியை, பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26&க்குள் கைப்பற்றி விடுவோம் என அறிவித்துதான் யுத்தத்தை தொடங்கினார்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும். அவர்கள் கெடு முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் புலிகளின் கோட்டையைப் பிடிக்க இயல வில்லை. கிளிநொச்சியில் உண்மையில் இப்பொழுது நிலவரம் எப்படி இருக்கிறது? அங்கிருக்கும் சிலருடன் பேசினோம். கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் சொல்கிறார். "கிளிநொச்சியை முற்றுகை யிட்டுள்ள இராணுவம் அதனைப் பிடித்தே தீருவதென்று நான்கு முனைகளில் இருந்தும் விடாப்பிடியாக கடுமையான யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கமும் வீ…
-
- 8 replies
- 3.6k views
-
-
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அமல்படுத்துவதே இலங்கை பிரச்சனைக்கு தீர்வு: on 30-12-2008 15:59 ராஜீவ்-ஜெயவர்த்தனே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் பேச்சுவார்த்தை மூலமுமே இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா கருதுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அவர் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 'எனது கொழும்பு பயணம் எப்போது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பான குழு அளிக்கும் அறிக்கையை அமல்படுத்துவதே நீண்டகால இலங்கை பிரச்னைக்கு உறுதியான தீர்வாகும். இந்த பிரச்னையை ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க முடியாது. 1987ல் ராஜீவ் காந்தி - ஜெயவர்த…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
ஜனாதிபதி மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளாராம்: எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலான பொருளாதார சலுகைகளை வழங்க ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு சலுகைத் திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலை 2 ரூபாவினால் குறைப்பதற்கும், முச்சக்கர வண்டிகளுக்கான பெற்றோலுக்கு 20 ரூபா விலைக் கழிவு வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. டீசல் விலையும் மண்ணெண்ணையும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. லாப் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் 276 ரூபாவினாலும், ஷெல் எரிவாயு நிறுவனத்தின் சிலிண்டர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முகமாலைப் பகுதியில் 18 வயதான படைச் சிப்பாயின் சடலம் மீட்பு: யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முகமாலைப் பகுதியில் 18 வயதான படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகாமலையில் உள்ள இராணுவத்தினர் கொடிகாமம் காவற்துறையினருக்கு வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கூடிய இந்த சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. தென்மராட்சியின் வரணிப் பிரதேசத்தில் உள்ள 52 வது படைப்பிரிவின் முகாமில் இருந்து இந்த சிப்பாய் முகமாலை முன்னரங்கப் பகுதிக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் குறித்த விசாரணைகளை சாவகச்சேரி நீதவான் நடத்தியுள்ளார். சடலத்தை கொழும்பில் உள்ள நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம்; பிரேத பரிசோதனைகளுக்காக…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் - அப்பாவி மாணவர்களை விடுவிக்கக் கோரிக்கை: http://www.globaltamilnews.net/tamil_news....=4005&cat=1 கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழக சிங்கள மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட மாணவன் உள்ளிட்ட இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமது மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக…
-
- 0 replies
- 849 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கையில் தடைசெய்வது தொடர்பாக இலங்கையின் அமைச்சரவை இன்று மாலை (30.12.2008)ஆராய்வதாக ஏ எப் பி செய்திசேவை தெரிவித்துள்ளது.இன்று இடம்பெறும் கூட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் விசேட அமைச்சவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறும் என எ.எப்.பி தெரிவித்துள்ளது. விரிவான செய்தி....விரைவில் http://www.tamilseythi.com/srilanka/breaki...2008-12-30.html
-
- 0 replies
- 1.3k views
-
-
'நான் இவனுக்கு சரியான பாடமொன்று கற்பிக்கின்றேன்' ஜனாதிபதி - பிரதம நீதியரசருடன் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வி : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி கண்டுள்ளதாக ட்ரான்ஸ் கல்ப் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ' நான் இவனுக்கு சரியான பாடமொன்று கற்பிக்கின்றேன்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், பிரதம நீதியரசருக்கும் இடையிலான முறுகலை தீர்க்க சில அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரத்திற்கும், நீதிமன்ற அதிகாரத்திற்கும் இடையில் ஏற்பட்டு…
-
- 0 replies
- 2.6k views
-
-
அதிகாரப் பகிர்வு குறித்த இலங்கையின் மெத்தனப் போக்கு ஏமாற்றமளிப்பதாக முகர்ஜீ விசனம்: தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரப் பகிர்வினை அமுல்படுத்தப்படுத்தாத இலங்கையின் மெத்தனப் போக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார். அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உக்கிர மோதல்களினால் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு அதிகாரப் பகிர்வினை துரித கதியில் அமுல்படுத்துமாறு இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வகட்சிப் பேரவையினால் முன்மொழியப்படும் தீர்வுத் திட்டமே இறுதித் தீர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 4 replies
- 1.7k views
-
-
வன்னியில் அவலப்படும் மக்களின் நிலைமையை நேரில் அறிய ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன இன்று செவ்வாய்க்கிழமை அங்கு விஜயம் மேற்கொள்கிறார். அங்கு அல்லற்படும் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவே இன்று தான் அங்கு செல்கிறார் என அவர் தெரிவித்தார். தமது விஜயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தனது விஜயம் குறித்து அவர் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளவை வருமாறு:- இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும், மனித உரிமைகள் பாது…
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்னார், முருங்கன் ஓயாவில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். முருங்கன் ஓயாவில் சட்ட விரோதமாக மண் அகழ்ந்து கொண்டிருந்த நால்வர் கொண்ட குழு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே ஒருவர் கொல்லப்பட்டார். மூவர் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடமம்பெற்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 976 views
-
-
மாலைதீவின் புதிய ஜனாதிபதி இலங்கை வரவுள்ளார் வீரகேசரி இணையம் 12/30/2008 2:43:28 PM - மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் நசீத் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இலங்கை வரவுள்ள மொஹமட் நசீத், மாலைதீவின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். ஜனவரி மாதம் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி, இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாகக் கலந்த…
-
- 1 reply
- 802 views
-
-
இலங்கைத் தீவில் அப்பாவித் தமிழர்கள் மீது நாளாந்தம் எண்ணில்லா வான்குண்டுகளை வீசி படுகொலை செய்து வரும் சிறிலங்காவின் மகிந்த அரசு, பலஸ்தீன அப்பாவிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாகக் கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 715 views
-
-
சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தடைவிதிக்க மகிந்த ராஜபக்ச தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 532 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு கப்பல்கள் கடந்த சில வாரங்களில் ஆயுதங்களையும் மருத்துவ உபகரணங்களையும் தரையிறக்கியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு ஆய்வு இணையத்தளம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 587 views
-