ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
புதிதாக குடியேறியவர்களின் விபரங்களை திரட்டும் படையினர் திகதி: 24.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] வவுனியாப் பகுதியில் 2004ம் ஆண்டிற்கு பின்னர் புதிதாகக் குடியேறியவர்கள் பற்றிய விபரங்களை சிறிலங்காப் படையினர் கிராம அலுவலர்கள் ஊடாகத்திரட்டி வருகின்றனர். வவுனியாவில் இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாக படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் படையினர் விபரங்களைத் திரட்டி வருவதானது அங்குள்ள மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 493 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய பொறிவெடித் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 306 views
-
-
இடம்பெயா்ந்து வரும் பொதுமக்களை தடுத்து வைப்பதை சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும், இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 434 views
-
-
கிளிநொச்சி வரை வந்திருக்கும் சிறிலங்கா படையினருக்கு முடிவு கட்டுவோமாக இருந்தால் தமிழீழத்திற்கான விடுதலை விரைவாக கிடைக்கும் என்பது தான் உண்மை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் இன்று நால்வர் சரண்: யாழ் குடா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் இன்று நால்வர் சரணடைந்திருப்பதாக அவ்வலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வறணி வடக்குப் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் உட்பட இருவர் கடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக கூலித் தொழிலாளர்களாகிய சகோதரர்கள் இருவர் சரணடைந்துள்ளனர். 26 வயதுடைய அண்ணனும் 25 வயதுடைய அவரது தம்பியுமே சரணடைந்துள்ளனர். வரணி வடக்கைச் சேர்ந்த விவசாயியான மற்றுமொரு 28 வயதுடைய நபரும் வல்வெட்டித்துறை வடக்கை சேர்ந்த 20 வயதான கூலித் தொழிலாளி ஒருவரும் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமது குடும்பங்கள் ஊடாக மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தினூடாக ஆஜர்ப்படுத்தப்…
-
- 1 reply
- 532 views
-
-
சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்நகர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்: வடக்கில் அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்களின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழச் சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்நகர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் சிவிலியன்கள் முகாம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சிவிலியன்கள் இவ்வாறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில…
-
- 0 replies
- 572 views
-
-
2009ம் ஆண்டை 'படையினரின் வெற்றி ஆண்டு' என்று அறிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் புலிகளைத் தடைசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஓர் கொடியின் கீழ் இலங்கை இனத்தினரை திரட்டல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மகி…
-
- 17 replies
- 3.1k views
-
-
வி.புலிகளால் பிடிக்கப்பட்ட சிங்கள கைதியின் வாக்குமூலம் (16.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160 பேர் காயமடைந்திருந்தனர். இம்முறியடிப்பின் போது விடுதலைப் புலிகளால் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53 ஆவது கொமாண்டோ டிவிசனில் ஆறாவது சிங்க படைப் பிரிவில் இருந்துள்ளார். அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த நிசாந்த றணசிங்க என்பவரே இவர் ஆவார். ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: ">" type="application/x-shockwave-flash" allowscr…
-
- 2 replies
- 2.2k views
-
-
இந்தப் போரில் நாங்கள் வெல்லுவோம். சிங்களப்படைகளுக்கு எமது மண்ணிலேயே சமாதி கட்டப்படும்" இவ்வாறு மணலாறு கட்டளைப பணியக ஆளுகைப் பொறுப்பாளர் சிவதேவன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து விசுவமடுவில் இயங்கும் முரளி முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் சார்பாக ஆயிரம் உலர்உணவுப்பொதிகளை மணலாறுப் போராளிகளுக்கு வழங்கும் நிகழ்விலும், முன்பள்ளிக் கல்வியை முடித்துப் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளை வழியனுப்பும் நிகழ்விலும் நேற்றுக்காலை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். முன்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் எஸ்.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மைச்சுடரினை தமிழர்புனர்வாழ்வுக்கழக துணைநிறைவேற்றுப்பணிப்பாளர் நரேன் ஏற்றிவைக்க, தேசியக்கொடியை பிரமந்தனாறு வட்டப்பொறுப்பாளர் வ…
-
- 1 reply
- 2.7k views
-
-
மரம் அமைதியை நாடினாலும், காற்று விடுவதாயில்லை? என்று சீனத்தின் பெருந்தலைவர் மாவோ கூறியிருந்தார். தேசியத் தலைவர், இந்தியாவை நோக்கி நீட்டிய நட்புக் கரத்தினைத் தட்டிவிடும் வகையில், முன்னாள் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருத்துக் கூற ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் தென்னாசிய பிராந்திய நலனைவிட, தேசியத் தலைமை மீது கொண்ட பொறுப்புணர்வைத் தூக்கிப் பிடிப்பதிலேயே இவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு, விடுதலைப் புலிகள் தடை ஏற்படுத்தி விட்டதாக பழி சுமத்துகிறார் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன். எமது தேசியத் தலைமை மீது குற்றம் சாட்டும் அறிவுப் பெருந்தகை ஹரிஹர…
-
- 2 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் தமிழ் பெண்ணொருவர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் குறிப்பிட்ட பெண்ணை மோசமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் நஞ்சூட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மட்டக்களப்பில் உள்ள மாவிலிஆறு என்ற பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ள உறவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். முறைப்பாடு செய்தால் படையினரால் தாமும் படுகொலை செய்யப்படலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களைக் காப்பாற்றப் போவதாகவும், விமோசனம் கொ…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 07:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தொடர்கின்றன. இதில் 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இத் தகவலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. _________________ மூலம்: புதினம்
-
- 20 replies
- 6.2k views
-
-
வி.புலிகளால் பிடிக்கப்பட்ட சிங்கள கைதியின் வாக்குமூலம் (16.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160 பேர் காயமடைந்திருந்தனர். இம்முறியடிப்பின் போது விடுதலைப் புலிகளால் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53 ஆவது கொமாண்டோ டிவிசனில் ஆறாவது சிங்க படைப் பிரிவில் இருந்துள்ளார். அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த நிசாந்த றணசிங்க என்பவரே இவர் ஆவார். ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: ">" type="application/x-shockwave-flash" allowscript…
-
- 1 reply
- 747 views
-
-
அத்துடன், அவரது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களின்போது தமது குடும்ப அங்கத்தவர்களையும் அரச செலவில் அழைத்து செல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அண்மையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, றோஹித போகொல்லகமவிற்கு வேறு அமைச்சுப் பதவி கொடுக்கப்படலாம் எனவும், அல்லது அமைச்சுப் பதவியே பறிக்கப்படலாம் என்றும் பேசப்பட்டுகின்றது. அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட மேலதிகமாக தனது வெளிநாட்டுப் பயணங்களில் போகொல்லாகம செலவழித்து வருவதால், இந்த கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும், வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகமவிற்கும் இடையிலான முறுகல் நிலை வலுப்பெற்று வருகின்றது…
-
- 0 replies
- 1.2k views
-
-
தென் தமிழீழ படுகொலைக்கு படையும், ஒட்டுக்குழுக்களுமே காரணம் - விடுதலைப் புலிகள் செவ்வாய், 23 டிசம்பர் 2008, 23:12 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] கிழக்கில் கடந்த 11 மாதங்களில் 193ற்கு மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்திருப்பதுடன், 110ற்கு மேற்பட்ட ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். "அமைதியாக அரங்கேறும் கிழக்கின் படுகொலைகள்" என்ற தலைப்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைப் புலிகள் இந்தத் தகவலைக் கூறினர். அறிக்கையின் முழு விபரம்:- அமைதியாக அரங்கேறும் கிழக்கின் படுகொலைகள்சிறிலங்கா அரசு கிழக்கு மண்ணை ஆக்கிரமித்து அங்கே சனநாயகத்தை நிலைநாட்டி விட்டதாக பொய்ப் பரப்புரைகளைச் செய்…
-
- 1 reply
- 1k views
-
-
கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்த்ததாம் ஆடு. இன்று சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறவைக்கு. இந்தப் பழமொழிதான் நன்கு பொருந்தும்.‘பேசித் தீருங்கள், பேசித் தீருங்கள்' என்று இன்னும் கீறல் விழுந்த ஒலித்தட்டுபோல் புலம்பிக் கொண்டிருக்கும் உலக நாடுகள் முதலில் சிறீலங்காவிடம் சென்று கேட்கட்டும், தமிழர்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று. தமிழர்களுக்கு சாவையும் அழிவையும்தான் தருவோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும். உலகின் எந்த நாடும் தனது நாட்டு மக்கள் மீதே வான் வழியான தாக்குதலை நடத்தியது கிடையாது. ஏன் அருகிலுள்ள இந்தியா கூட இலங்கையில் தமிழர்கள் மீதும், பாகிஸ்தானுடனான போரின் போது மட்டுமே விமானத் …
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ் குடாநாட்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொலை: யாழ் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சுந்தரலிங்கம் ஹெங்காதரன் என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்தில் ஏறிய இவர் யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை காலை 7.10 அளவில் நல்லூர் வீதியின் பின்புறத்தில் ஆலையத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழீழ அங்கிகார மானாட்டுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதிதித்ததாக தமிழ் ஊடமொன்றினூடாக அறிந்தேன், தகவல் அறிந்தவர்கள் மேலதிக தகவல்களைத்தாருங்கள்
-
- 3 replies
- 2.7k views
-
-
யாழ் குடாநாட்டில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹலோ ரஸ்ட் மற்றும் டனிஷ் அமைப்புக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. இந்த இரண்டு அமைப்புக்களின் ஒப்பந்தங்களும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த வருடத்துக்கான கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்கும் பகுதிகளை பாதுகாப்புத் தரப்பினர் ஒதுக்கிக் கொடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது. எனினும், 2009ஆம் ஆண்டில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளைத் தீர்மானிக்கும் கூட்டம் ஜனவரி மாதம் 6ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளபோதும், அதுவரை யாழ் குடாநாட்டில் தங்கியிருக்காது வெளியேறுவதற்கு டனிஸ் அமைப்பின் சர்வதேசப் பிரதிநிதிகள் இருவர் வெளியேறியிருப்பதாக யா…
-
- 0 replies
- 844 views
-
-
நாடாளுமன்றத்தை எதிர்வரும் தை மாதம் 6 ஆம் நாளுக்கு முன்னர் கூட்டுவதற்கான அவசியம் எதுவும் இல்லை என்று சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
சிறிலங்கா அரசால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்குப் பகுதியில் கடந்த 11 மாதங்களில் 295 படுகொலைகளும் 176 ஆட்கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கு சிறிலங்கா படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களுமே காரணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 518 views
-
-
ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
விஷவாயு மழை பெய்தாலும் படையினரை பின்வாங்கச் செய்ய முடியாது: ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின்போது படையினர் மீது விஷவாயு மழை பெய்தாலும் அவர்களை பின்வாங்கச் செய்ய முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிப்படையாக தெரியும், மற்றும் தெரியாத எதிரிகளை படையினர் வெற்றிகரமாக வீழ்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படையினர் அடையும் வெற்றிகள் குறித்த மக்கள் கோஷத்தின் முன்னால் கிளிநொச்சியிலிருந்து வெளிப்படும் துப்பாக்கிச் சத்தங்கள் வலுவிழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையொன்றை இராணுவத்த…
-
- 9 replies
- 2.7k views
-