ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142870 topics in this forum
-
விடுதலைக்கான போர், கொடிய தடங்களை அழித்து தனது விழுதுகளை விசாலித்த போது, ‘சமாதானம்', ‘போர்நிறுத்தம்' என்கிற சிங்களத்தை காக்கும் கவசங்களை காவிக்கொண்டு வந்தது, சர்வதேசம் என்று அழைக்கப்படும் மேற்குலகம். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினை, ‘மனித உரிமை மீறல்கள்’ என்கிற பொதுக் கோட்பாட்டினுள் உள்ளடக்கும் அதேவேளை, தேசியத் தலைமை முன்னெடுக்கும் ஆயுதப்போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்கிற வரையறைக்குள் பொருத்திக் கொள்வதுதான் பிராந்திய நலன் பேணும் வல்லரசாளர்களின் போக்காக அமைகிறது. அதாவது அரச பயங்கரவாதம் ‘மனித உரிமை’ சம்பந்தப்பட்டது, உரிமைப்போர், பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என்பதே நவீன உலகில் ஆட்சிசெலுத்தும் அரசியல் சொல்லாடலாக மாறி உள்ளதெனக் கூற லாம். தமது பூகோள, பிராந்திய…
-
- 9 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களுக்கு பொருளாதார வளம் கொண்டவர்கள் மற்றும் உதவி அமைப்புக்கள் உதவ முன்வர வேண்டும் என கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 362 views
-
-
http://www.bbc.co.uk/weather/world/south_asia/#no_url கடந்த சில வாரங்களாக நிசா சூறாவளியால் பாதிக்கப்பட்டு அவதியுறும் தமிழீழ மற்றும் தமிழக மக்கள் அதிலின்றும் வெளிவருவதற்கிடையில் தமிழீழம் மற்றும் தமிழகத்தை நோக்கி இன்னொரு வலுவான புயற்சின்னம் ஒன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அடுத்த 24 - 72 மணி நேரங்களுக்கு கன மழை மற்றும் கடுங்காற்று வீச்சை இப்பிரதேசங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். ஏலவே இராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அசாதாரண இடைவெளியில், எண்ணிக்கையில் தாழமுக்கங்கள் ஏற்படுவதற்கு சூழல் வெப்பமுறுதலும் ஒரு காரணம் என்று அமெரிக்க ஆய்வு மையங்கள் முன்னர் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. - தகவல் திரட்டி கிறீன் பிரிகேட்…
-
- 0 replies
- 769 views
-
-
சீன படைத்துறை அதிகாரிகள் யாழ் விஜயம் யாழ்குடாநாட்டுக்கு சீன படைத்துறை அதிகாரிகள் சென்றுள்ளார்கள்.சீன கடற்படை அதிகாரிகள் இரண்டு பேரும் வான்படை அதிகாரிகள் மூன்று பேரும் சென்றுள்ளார்கள்.யாழ்பாண சிறிலங்கா படைத்துறை அதிகாரிகளை சந்தித்து படைத்துறை சார் நிலமைகளை அறிந்து ஆராய்ந்துள்ளார்கள்.பலாலிஇ காங்கேசன்துறை படைத்துறை இடங்களில் சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளார்கள். ஆதாரம் புலிகளின் குரல் இந்தியா அறியுமா இவற்றை?
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில், இந்திய அதிபர் மன்மோகன்சிங்கை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளனர். இலங்கையில் நடக்கும் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்திலிருந்து சென்றோர், மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தனர். ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்தில் எழுந்த குரல்களினால், இலங்கை அரசும் நடு நடுங்கியது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இல்லாது, இந்திய மத்திய அரசு ஆட்சி நடத்தும் வாய்ப்பு இல்லை. அவர்களுக்கும் தமிழக கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதேபோல், இந்தியாவும் இலங்கையு…
-
- 4 replies
- 2k views
-
-
போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் தாயாரில்லை என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- போர் நிறுத்தம் ஒன்றுக்கு நாம் தயாரில்லை. இதனால் வரும் எந்த சவாலையும் நாம் எதிர்கொள்ளத் தாயாக உள்ளோம். விடுதலைப் புலிகளால் யுத்த நிறுத்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போதும் அதனுள் நாம் சிக்கிக் கொள்ளமாட்டோம்.பயங்கரவாதம் இன்று எம்மிடம் சிக்கியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை இல்லாது அழிக்க வேண…
-
- 9 replies
- 1.6k views
-
-
பத்தரமுல்லயிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டு வரும் யுத்தத் தோல்விகளை நிறுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே இந்தியா அந்நாட்டின் வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவுள்ளது.இதற்கான முழு அழுத்தத்தையும் தமிழ்நாடு அரசாங்கம் புது டில்லிக்கு ஏற்படுத்தியுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் பீட முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான பியசிரி விஜயநாயக்க கூறினார். கடந்த 30 வருட காலமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க முடியாத நிலையேற்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் புலிகளின் பிடியிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டது போன…
-
- 1 reply
- 736 views
-
-
தமிழ்நாடு மக்கள் வழங்கியுள்ள நிவாரணப் பொருள்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வன்னி மக்கள், தமது உரிமைக்காக தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டபோது, அதனைப் பெற்றுக்கொள்ளச் சென்ற மக்களிடம் தமிழ்நெட் இணையத்தளத்தின் செய்தியாளர் கருத்துக் கேட்டிருந்தார். இதன்போது அவர்கள் கூறிய கருத்துக்கள் இந்த இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வன்னியில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக, லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த மக்களிற்கான…
-
- 8 replies
- 1.5k views
-
-
வன்னியில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதால், இவர்களுக்கு ஒரு கோடியே 90 இலட்சம் நிதியுதவி வழங்க இருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. முதலில் ஒரு கோடியே 70 இலட்சம் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இந்தத் தொகை மேலும் 20 இலட்சம் யூரோவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அண்மையில் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த உதவித் தொகை அதிகரிப்பு இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் உதவித் தொகை எந்த வழியில் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது என்ற விடயத்தை ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கவில்லை. …
-
- 1 reply
- 1.3k views
-
-
உளவு நிறுவனங்களின் செயல்பாடுகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது. பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள். இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு முனிச் நகரில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இஸ்லாமாபாத்: தாவூத் இப்ராகீம் உள்ளிட்டோரை ஒப்படைக்குமாறு கேட்டுள்ள இந்தியா, முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை ஒப்படைக்க வேண்டும் என்று லஷ்கர் இ தொய்பா ஆதரவு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி செவ்வாய் கிழமை ஏற்பாடு செய்த கூட்டத்தில் மேற்குரிப்பிட்ட பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. "சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் அதேவேளையில், பாகிஸ்தான் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, எல்.கே.அத்வானி உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்," என்று லஷ்கர் இ தொய்பாவுக்கு ஆதரவான இணையதளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மும்பையில் பயங்கரவாதிகள் நடத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாம் எவரையும் நம்பிப் போராட்டம் நடத்தவில்லை எமது மக்களின் பலத்திலேயே நாம் போராட்டம் நடத்துகின்றோம்: பா.நடேசன் நாங்கள் எந்த நிறுவனத்தையோ, அமைப்பையோ எந்த வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புக்களையோ நம்பிப் போராட்டம் நடத்தவில்லை. எங்களது மக்களுடைய பலத்திலேயே இந்த விடுதலைப் போராட்டம் பெரியதொரு தேசிய விடுதலைப் போராட்டமாக வளர்ந்திருக்கின்றது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களை அகற்றிவிட்டு பெரியதொரு பொருளாதாரத் தடையை ஏற்படுத்த சிங்கள அரசுகள் முயற்சிக்கின்றது. ஆனால், எங்களுடைய மக்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். இவ்வாறு வட்டக்கச்சிக் கோட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளினதும், இடம்பெயர்ந்த பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போ…
-
- 0 replies
- 651 views
-
-
கொஞ்சமேனும் வெட்கமே கிடையாதா? என ராஜபக்ஸ கம்பனியினரிடம் கேள்வி கேட்கிறார் - மங்களசமரவீர: சுயநல அரசியல் இலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் யுத்தத்தினால் இராணுவத்தினர் பலிக்கடாக்களாக்கப்பட்டு உள்ளனர். யுத்தத்தினால் முப்படையினரும் அவர்களது குடும்பத்தினரும் நிர்க்கதி நிலையினை அடைந்துள்ளனர். எனவே, மக்கள் பிள்ளைகளை இராணுவத்துக்கு அனுப்பி பலிக்கடாக்களாக்காது பாதுகாக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார். படையினருக்காக பொதுமக்களிடமிருந்து பணம், பொருள் என்பனவற்றை அரசாங்கம் சேகரித்து வருகின்றது. இன்று இந்த அரசாங்கம் முப்படையினரையும் விற்றுப் பிழைக்கின்றது என்றும் அவர் சொன்னார். நேற்று வியாழக்கிழமை காலை அவரது …
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பில் 40 பஸ்களில் குண்டுப் பார்சல்களை வைத்து பொதுமக்களின் விழிப்புணர்வை அவதானித்தோம் - அரசாங்கம் : http://www.globaltamilnews.net/tamil_news....d=2997&cat= தென் பகுதியைப் பாதுகாப்பதற்கென ஒரு இலட்சத்து 54 ஆயிரம் தொண்டர் படையினரையும் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினரையும் அரசாங்கம் நியமித்திருக்கின்றது. தென் பகுதியிலே பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சித்து வரும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத யுக்திகளை முறியடிக்கும் முயற்சியாகும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகை…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஐ.தே.க அரசாங்கத்தின் அதேகொள்கைகளை வைத்துக் கொணடு அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வது எப்படி? மக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் அல்லவே? மனோ: http://www.globaltamilnews.net/tamil_news....=3003&cat=1 நான் எந்த அதிசயத்தையும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பு செலவினத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி வாக்களித்தால் தான் அது அதிசயம். டீபென்ஸ் வாச் இல் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பங்கேற்றதாக அறிந்ததற்குப் பிறகு நான் நினைத்தேன் ஆகக் குறைந்தது வாக்களிப்பதைத் தவிர்ப்பார்களென்று நினைத்திருந்தேன். அவ்வாறான எனது அபிப்பிராயம் உறுதியானதற்குக் காரணம் இப்போதைய ஆட்சிக்காலத்தில் 12000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான ரங்க பண்டார தெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியில் கடந்த வாரம் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினரின் 120 உடலங்கள் கொழும்பில் உள்ள இரண்டு மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
வன்னியில் சிறீலங்கா வான் படையினர் இன்று 6 தடவைகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஏற்றபட்ட சேத விபரஙகள் இதுவரை தெரியவரவில்லை. அடம்பனில் காலை 6:45 அளவில் இரண்டு தடவைகளும், இதனைத் தொடர்ந்து காலை 8:15 மணியளவில் பரந்தனிற்கு மேற்குப் புறத்திலும் எம்.ஐ.24 உலங்கு வானூர்தி மூலம் தக்குதல் இடம்பெற்றது. இதனையடுத்து காலை 10:00 மணி முதல் பிற்பகல் 4:00 மணிவரை பரந்தனில் மூன்று இடங்களில் தமது வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக சிறீலங்கா வான்படைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். http://www.pathivu.com/news/760/34/6/d,view.aspx
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்புக் கெடுபிடி ஊழியர்கள் சிலமணிநேர பணிப்புறக்கணிப்பு முடிவு – வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புத் தொடர்கிறது: http://www.globaltamilnews.net/tamil_news....=3001&cat=1 பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியசாலை தாதியர் மற்றும் ஊழியர்களுடன் பொலிஸ் உயரதிகாரிகள் சமரசம் பேசுகின்றார்கள். பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரி வவுனியாவிலிருந்து வெளியேறிய சிங்கள வைத்தியர்கள் மீண்டும் கடமைக்குத் திரும்பியுள்ளனர். இந்தநிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள வவுனியா வைத்தியசாலையில் தங்கள்மீது உடல் பரிசோதனை செய்யப்படுவதை எதிர்த்து வவுனியா தாதியரும், சிற்றூழியர்களும் இன்று காலை முதல் மதியம்; வரையில் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். எனினும…
-
- 0 replies
- 446 views
-
-
ஒருபுறம் யுத்த முழக்கங்கள் மறுபுறம் இயற்கையின் சீற்றம் - இதனிடையே - க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வன்னி மாணவர்களின் அபத்தம்: http://www.globaltamilnews.net/tamil_news....=3002&cat=1 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குரிய வன்னிப்பிரதேசத்திற்கான வினாத்தாள்கள் வவுனியாவை அடைந்துள்ள போதிலும் ஓமந்தை சோதனைச்சாவடி இன்று திறக்கப்படாததன் காரணமாக அவற்றை வன்னிப்பகுதிக்கு அனுப்பி வைக்கமுடியவில்லை என்று வன்னிப்பிரதேச கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். ஒன்றுக்கு 10 தடவை என இடப்பெயர்வையே இப்போது வாழ்வாகக்கொண்டுள்ள வன்னிமாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு எவ்வாறு தோற்றுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒருபுறம் யுத்த முழக்கங்கள் மறுபுறம் இயற்கையின் சீற்றம் என வா…
-
- 0 replies
- 588 views
-
-
"பிரபாகரன் கொடுத்த வேலையை மங்கள சமரவீர தற்போது சிறப்பாக செய்துவருகின்றார். இதுவரை "தமிழ் நெட்' செய்த பணியை இப்போது மங்கள சமரவீர செய்துவருகின்றா'ரென அமைச்சரும் பாதுகாப்பு பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ""கடந்த காலங்களில் இராணுவத்தினர் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் இராணுவத்தினரின் நிலை மாற்றியமைக்கப்பட்டது. 500 இராணுவத்தினருக்கு 30 கரும்புலிகள் போதுமானவர்கள் என்று கூறப்பட்ட கருத்துகளும் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. இராணுவத்தினரை கேலி செய்த புலிகள் இன்று அழிக்கப்பட…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், மற்றும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகிய மூவரும் நாட்டை விட்டு வெளியேறாது தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு எந்த நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. ஜேர்…
-
- 0 replies
- 599 views
-
-
நாங்கள் எந்த நிறுவனத்தையோ, அமைப்பையோ எந்த வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புக்களையோ நம்பிப் போராட்டம் நடத்தவில்லை. எங்களது மக்களுடைய பலத்திலேயே இந்த விடுதலைப் போராட்டம் பெரியதொரு தேசிய விடுதலைப் போராட்டமாக வளர்ந்திருக்கின்றது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களை அகற்றிவிட்டு பெரியதொரு பொருளாதாரத் தடையை ஏற்படுத்த சிங்கள அரசுகள் முயற்சிக்கின்றது. ஆனால், எங்களுடைய மக்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். இவ்வாறு வட்டக்கச்சிக் கோட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளினதும், இடம்பெயர்ந்த பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில…
-
- 2 replies
- 936 views
-
-
வீரகேசரி இணையம் - இனிமேல் எந்தவொரு ஊடகத்திற்கோ அல்லது ஊடகவியலாளருக்கோ இடையூறு விளைவிக்க மாட்டேன் என தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். 'சிரச' தொலைக்காட்சி மட்டுமன்றி வேறு ஊடக நிறுவனங்களுக்கும் இனிமேல் தம்மால் எவ்வித இடைஞ்சல்களும் ஏற்படாதென தாம் உறுதியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். களனியில் வைத்து 'சிரச' தொலைக்காட்சி ஊடகவியலாளரைத் தாக்கி வீடியோ கருவிகளைப் பறித்த சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணைகளின் போது மேர்வின் சில்வாவின் சட்டத்தரணி இந்த உறுதிமொழியை நீதிமன்றில் முன்வைத்துள்ளார். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 'சிரச' தொலைக்காட்சி ஊடகவியலாளரும், எம்.ரி.வி நிறுவனத்தினரும் வழக்குத் தாக்கல் …
-
- 1 reply
- 756 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் 10 ஆம் நாளுக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
முல்லைத்தீவு, குமிழமுனைப் பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இம்முறியடிப்புத் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது படை வீரர் ஒருவரின் சடலம் உட்பட ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 வீரகேசரி நாளேடு 12/4/2008 10:39:58 PM - முல்லைத்தீவு, குமிழமுனைப் பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இம்முறியடிப்புத் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது படை வீர…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-