Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறது. இராணுவத்தின் அதி உச்சத் திறன் கொண்ட நான்கு டிவிசன்கள்…

    • 0 replies
    • 1.6k views
  2. சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களை இராணுவ முப்படைக் கொண்டு குண்டுவீசி குழந்தைகள் , சிறுவர்கள் , பெண்கள் , முதியோர் உள்ளிட்ட அனைவரையும் படுகொலை செய்து வருகிறது. இப்படுகொலைக்கு இந்திய அரசுதான் பின்புலமாகவும், பக்கபலமாகவும் இருந்து வருகிறது. இராணுவ தளவாடங்கள் , பொருளாதார உதவிகள், இந்திய இராணுவ கூலிபடைகள் உள்ளிட்ட சகல உதவிகளையும் அளித்து வருகிறது. எனவே இந்திய அரசே ! சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப்போரை உடனே தடுத்து நிறுத்து ! சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ , பொருளாதார உதவிகளைச் செய்யாதே ! செய்த உதவிகளைத் திரும்பப்பெறு ! விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு ! தமிழீழத்தை அங்கீகரி ! என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை அடுத்த பம்மலில் இன்று 21…

  3. தமிழர்களை இழிவுப்படுத்திய சிங்கள இனவெறியன் சரத் பொன்சேகா, இராஜபக்சே-வை சென்னை ஆவடியில் இன்று (20.12,2008) மாலை 6.00 மணியளவில் பு.இ.மு, பு.தொ.மு, ஒ.ம.வி.மு உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர், ஈழத்தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு சகல உதவிகளையும் செய்து வருகிறது. மறுபுறம் தமிழர்களை சரத் பொன்சேகா இழிவுப்படுத்தி வருகிறான். இந்திய அரசே ! *சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப்போரை உடனே தடுத்துநிறுத்து ! *சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ , பொருளாதார உதவிகளைச் செய்யாதே செய்த உதவிகளைத் திரும்பப்பெறு ! *விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு ! *தமிழீழத்தை அங்கீகரி என்ற இதனை கண்டித்து தமிழர…

  4. சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு [ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2008, 11:52.10 AM GMT +05:30 ] [ புதினம் ] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோமீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீ…

  5. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடைய சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  6. முல்லைக்கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை விடுதலைப் புலிகளிற்குச் சொந்தமான நடுத்தர அளவுடைய கப்பலொன்றைத் தாக்கியழித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதன்போது கடற்புலிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

    • 10 replies
    • 3.3k views
  7. சிறீலங்கா படையினரால் வடபகுதி போரில் காணாமல் போனவர்கள் எனப்பட்டியலிடப்பட்டு, இறப்பு எண்ணிக்கையில் இருந்து தவிர்க்கப்பட்ட பலர், இறந்தவர்களின் பட்டியலில் இடப்பட்டிருந்தமையால் உறவினர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளுடன் முரண்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பாணமையில் இடம்பெற்றுள்ளது. வடபகுதி போரில் இறந்தவர் எண்ணிக்கையை குறைத்து கூறுவதற்காக, இறந்த பலரை காணமல்போனவர்களாக கூறி களமுனையிலேயே சிறீலங்கா படையினர் நீண்ட காலமாக புதைத்து வருகின்றனர். இந்த விடயம் பல தடைவகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அண்மையில் பாணமை படை முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறான பெயர் பட்டியலில் காணாமல் போனவர்களாக கூறப்பட்ட தமது உறவுகள் பெயரைக்கண்ட உறவினர்கள் ஆத்திரத்துடன் படை அதிகாரிகளைத்தாக்க முற்பட்ட…

  8. 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அரசாங்கம் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம், பெப்ரவரி மாதத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வருமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதத்திற்குப் பின்னர் புலிகள் இயக்கத்திற்குச் சாதமான சூழ்நிலைகள் காணப்படுவதாகவும்,ராவய பத்திரிகையின் செய்திகள் தெரிவிக்கின்றன இதை அரசாங்க அமைச்சர் 2009 இல் வரப்போகும் பொருளாதாரச்சீர்ரளிவை பற்றி கருத்து வெளியிட்டுள்ளார் அதனால் அரசாங்கம் யுத்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. உலக அரசியல் களம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை போன்றவை அரசாங்கத்…

  9. சிங்களர் புதைத்த உடன்பாடு பழ. நெடுமாறன் "ஈழத் தமிழர் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி வழிகண்டார். அதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாடு முழுமையாக நிறைவேற்றப்படுவதுதான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அளிக்கும்" என தமிழ்நாட்டிலும் அகில இந்திய அளவிலும் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் பேசிவரு கிறார்கள். அவர்கள் பேச்சில் ஏதாவது உண்மை இருக்கிறதா? 1987ஆம் ஆண்டு சூலை மாதம் 29ம் தேதி ராஜீவ் - செயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தாகி ஓராண்டுக்குப்பிறகுகூட இந்த உடன்பாட்டில் கூறப்பட்ட முக்கிய அம்சங்களை செயவர்த்தனா நிறைவேற்ற மறுத்ததை மறைப்பதுஏன்? 1. இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகு…

  10. பிரதமரின் தடுமாற்றத்திற்குக் காரணம்? போரின் பின்னணியில் இந்தியா! - பழ. நெடுமாறன் "இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்திற்கு இராணுவ ரீதியான உதவி எதையும் இந்திய அரசு செய்யக்கூடாது". மேற்கண்ட இரு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாத காலத்திற்கு மேலாக கட்சி வேறுபாடின்றி ஒட்டு மொத்த தமிழகமும் போராடி வருகிறது. கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழக அரசைச் செயல்படவைத்தன. …

  11. இந்தப் போர் எங்களோடு தொடங்கியது..... -டி.அருள்எழிலன்- 'இந்த ஒப்பந்தம் எமது அரசியல் இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது. எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மை பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவத்தினர் ஏற்கிறார்கள். நாம் ஆயுதங்களை கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனதும் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான்…

  12. கிளிநொச்சியில் கட்டட வேலைக்கென அழைத்து வந்த 500 பேர் கட்டாய இராணுவ பயிற்சி - ஐ.தே.க. குற்றச்சாட்டு திகதி: 21.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] கிளநொச்சி இதுவரை சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்படவில்லை. ஆனால், கிளிநொச்சியில் படையினருக்கான கட்டட வேலைகளைச் செய்ய வேண்டுமெனக் கூறி இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் குருநாகல் பகுதியில் இருந்து 500 இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பகுதிக்கென பலாலி படைத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என ஐ.தே.க. குற்றம்சாட்டியுள்ளது. தற்போது குறித்த 500 இளைஞர்களும் படையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனா குற்றம் சாட்டியுள்ளார். sankathi

  13. ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் வன்னியில் நிகழ்ந்தேறுகின்றனஆழ ஊடுருவும் அரக்கர்களும், பேரினவாத எறிகணைகளும் அகதிகளைக் கொன்று குவிக்க, ஜனநாயக மீட்பு யுத்தம் புரிவதாக உலகை ஏமாற்றுகிறது சிங்கள தேசம். பகலிலும் இருள் சூழ்ந்த பதுங்கு குழி வாழ்விற்கும் பழக்கப்பட்ட மனிதர்கள். மகாவம்சப் பேரிரைச்சல் தரும் வான் தாக்குதல்களால் திசைமாறிச் சரணடைவார்களென்று நம்பப்ப டுகின்றது. வன்னி மக்களின் வாழ்வுரிமை மீது உக்கிரமான போராட்சி புரியும் பெருந்தேசிய இனவாதம், நிவாரணங்களை இடைமறிக்க, எறிகணை யுத்தம் புரிகிறது.கழுத்து முறிக்கப்பட்ட தென்னை மரங்களும் கூடு கலைக்கப்பட்ட பறவைக் கூட்டங்களும் தாயக மக்களின் அவல வாழ்வின் சாட்சிப் பதிவுகளாகின்றன. வலிதரும் இடர் நீக்கப் போராட்டம் தொடர்கின்ற…

  14. தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். அண்மையில் நூல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்; தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நூல் சட்டத்திற்கு புறம்பான நூல் அல்ல என நீதிபதிகள் தீர்ப்புரைத்துள்ளனர். இத்தனை தடைகளை கடந்த இந்நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அந்நூலில் இருந்து சிலப் பகுதிகள…

  15. கிளிநொச்சியில் புலிகளின் விஸ்வரூபம். அரசியல்வாதிகளின் விருப்பு, வெறுப்புகளுக்கும், அரசியல் சுய இலாபங்களுக்கும் ஏற்ற விதத்தில் யுத்த நடவடிக்கைகளை வகுக்கும் தவறுக்கான பாடத்தை இவ்வாரத்தில் கிளிநொச்சி சுற்றாடலில் இலங்கைப் படைகள் நன்கு படிக்க வேண்டியதாயிற்று. இலங்கையில் யுத்தத்தை நிறுத்தக்கோரும் வற்புறுத்தல் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றது. தமிழகத்தின் இந்தக் கருத்து நிலைப்பாட்டை இலங்கை அரசுத் தரப்புக்கு நேரில் எடுத்துரைப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தமிழக முதல்வரிடம் இசைவு தெரிவித்து இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச இலங்க…

  16. வீரகேசரி வாரவெளியீடு - ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறும். தமிழ் நாடு பேராசிரியர் முனைவர் இரா. செல்வக்கணபதி திருவெம்பாவையில் சைவ சித்தாந்த நுண் பொருள் என்றும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றுவார். ""பத்திரிகையின் பார்வையில் மகேஸ்வரன்'', ""பாராளுமன்றம் சூட்டிய புகழாரம்'' ""பாராளுமன்றத்தால் மகேஸ்வரன்'' என்னும் மூன்று நூல்கள் மற்றும் இறுவட்டு என்பனவம் இன்று வெளியிடப்படவுள்ளன.

  17. ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களை எதிர்கொண்ட புலிகளின் படையணிகள் வீரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப…

  18. 20-12-2008 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்கு திருப்பூரில் ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. 'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், துரைசாமி, ஆகியோர் பேசினார்கள்.'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும்,தீர்வு குறித்தும் விளக்கமாக பேசினார். முக்கியமான கடைத்தெருவானஅரிசிக்கடை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல் துறை தடை விதித்தது. உடனே கூட்ட அமைப்பளர்கள் அரங்கம் ஏற்பாடு செய்துகூட்டத்தை நடத்தினார்கள். மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். http://www.tamilseythi.com/tamilnaadu/thir...2008-12-21.html

  19. புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு [ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2008, 05:36.17 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து இந்தியப் பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த புதிய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் அமெரிக்காவின் எவ்.பி.ஐ. புலனாய்வு நிறுவனத்திற்கு இணையான அதிகாரங்களை உடையதெனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை 180 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளக் கூடிய அத…

  20. இந்தியாவில் தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொய்ச் செய்திகளை பரப்புவதில் சிங்களவர்களை விட முனைப்புக் காட்டுவது யார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 388 views
  22. வன்னிப்போர் நடவடிக்கை எதுவரைக்கும்? - வன்னியன் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 08:51 மணி தமிழீழம் [] கடந்த ஒன்றரை வருடங்களாக வன்னிமீது மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை திறப்பு, கிளிநொச்சியைக் கைப்பற்றுதல், புலிகளை அழித்தொழித்தல் என படைநடவடிக்கையின் இலக்குகள் பலவாறாக மாற்றமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை ஏ32 வீதி கைப்பற்றப்பட்ட பின்னும் இதனூடான போக்குவரத்துப் பாதை திறக்கப்படவில்லை. தற்போது ஏ9 வீதியூடான பாதைதான் பாதுகாப்பானது. ஏ9 வீதியை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு கிளிநொச்சி தொடக்கம் முகமாலை வரையான பகுதியை கைப்பற்ற வேண்டும். அதற்காகவே கிளிநொச்சி மீது படைநடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டிருக்கிறது என இலக்குக ளையும்…

  23. பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு என தெரிவித்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றனர் பொதுமக்கள் விசனம்! ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 12:50 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பு மாவட்டத்தில சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில் பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு என தெரிவித்து இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பெண்கள் அழைத்துச் சென்றதாக தொண்டு நிறுவனத்தின் மீது சீற்றம். பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் கடந்த புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. எனினும் வெள்ளி மாலை 4.00 மணியளவில் கருத்தரங்கு முடிவுற்றதும் 55 பெண்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமான வெபர் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்…

  24. யாழ். வடபோர்முனையான கிளாலியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 608 views
  25. வெற்றியா? தோல்வியா? திகதி: 20.12.2008 // தமிழீழம் // த.தமிழ்நேசன் 2008.09.12ம் நாளிலிருந்தே அதிர்ந்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சி - பூநகரி - பரந்தன் சாலையிலும் சூடு பறக்கிறது. வன்னியின் கிழக்கே அளம்பில் வரைக்கும் வந்து விட்டது சிங்களப்படை. மாங்குளம் ஒலுமடு என்றொல்லாம் பரவியுள்ளனர். முகமாலையிலும் முறுகல் நிலையே நிலவுகிறது. இதுதான் இன்றைய களநிலவரம். எத்தனையும் மறக்க வேண்டிய தேவையில்லை. மறைப்பதானால் விளையப்போகும் நலன்களுமில்லை. உள்ளதை உள்ளபடியே உரைப்பதன் மூலம் உண்மைநிலையை உணர்ந்து கொள்வோம். சிங்களப்படையின் வலுமிகு படைப்பிரிவுகள் களத்தில் நிற்கின்றன. சிறப்புக் கமாண்டோக்கள், கெமுனுகோவா, கஐபா போன்ற சிறப்புப் பயிற்சி பெற்ற அணிகளே களத்தில் நிற்பதை காண முடிகிறது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.