ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கையால் இடம்பெயர்ந்துள்ள மூன்று இலட்சம் மக்கள் வெள்ளப் பெருக்கினாலும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். அவர்களின் துயிரினைத் துடைப்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இருந்து தமிழ் மக்களிடம் உதவிகள் கோரப்படுகின்றன. தற்போது பிரித்தானியாவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுத்துமாத்துக்கள்
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
வேகமான இடப்பெயர்வுகளின் பின்னணி யில் எமது பொருளாதார பலம் நொருக்கப்பட்டு வருகிறது. பொருளாதார பலம் நொருக்கப்பட்டால், முதலில் தொழில்வாய்ப்புக்கள் அருகிப் போவதும், அன்றாட வருமானம் இல்லாது போவதும் தொடரும் இடர்களாகும். தனி நபராகவுள்ள தொழில் கொள்வோர், தமது வேலையாட்களிடம் அதிக வேலையைச் செய்விக்கவும், குறைந்த கூலியை வழங்கவும் முடிகிறது. குறிப்பாக சாதாரண மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்து போய் விட்டது. இந்த நிலையில் வாழ்வாதாரத்தையும், அதேயளவு வாழ்க்கைத் துணையையும் இழந்த பெண்களின் நிலை மிக மோசமாகி வருகிறது. பெண்களால் செய்யப்பட்டு வந்த தொழில்களில் அதிகமானவை சந்தை வாய்ப்பை இழந்துள்ளன. இதேயளவுக்கு கட்டடப் பொருட்கள், மரவேலை செய்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆயினும் கூட,…
-
- 0 replies
- 1.6k views
-
-
"விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை, அவர்கள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26க்குள் கைப்பற்றிவிடுவோம்" என அறிவித்துத்தான் யுத்தத்தை தொடங்கினார்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும். கெடு முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. யுத்தத்தைத் தீவிரப்படுத்தி, நான்கு முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தியும் கிளிநொச்சிக்குள் நுழைய முடியாதது மட்டுமின்றி, புலிகளின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தினர் பின்வாங்கும் செய்திகள்தான் அங்கிருந்து வந்துகொண்டிருக்கின்றன. புலிகள் மீண்டும் பலமடைந்துவிட்டார்களா? கிளிநொச்சியில் உண்மையில் இப்பொழுது நிலவரம் எப்படி இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன் பதி…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தின் பார்வையில் 2008! இந்தாண்டு தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை இந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பரவலாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களில் இறங்கின. ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் தமிழீழ ஆதரவு அலை வீசத் தொடங்கியதும் இந்த ஆண்டுதான். தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அரசியலில் இலங்கைத் தமிழர்கள் மீதான வன்முறை மிகப் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியலில் ஈழப்பிரச்னையும் இப்போது தனியிடம் பிடித்திருக்கிறது. அத்தோடு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கன்னடர்களின் எதிர்ப்பும், அதற்காக நடிகர் ரஜினிகாந்தின் ‘‘உதைக்க வேண்டாமா?’’ என்கிற உணர்ச்சிப் பேச்சும் முக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் மக்களே சிந்தித்துச் செயற்படுங்கள் - எல்லாளன் படை யாழ் குடாநாட்டு மக்களே! உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தனித் தமிழீழத்துக்கான போராட்டமானது தனது இறுதியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். இப் போராட்டத்திற்காக இரண்டு தசாப்த காலங்களாக போராளிகளும் மக்களும் உயிரை துச்சமென மதித்து போராடிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் போராட்டத்தின் நியாயமான கோட்பாட்டினால் போராட்டமானது இன்று உலகளாவிய ரீதியில் ஒருபரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதனைப் பொறுக்காத மகிந்த அரசு தனது தோல்வியையும் எமது மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் சர்வதேசத்திடம் இருந்து மறைப்பதற்காக அதனுடன் ஒட்டுண்ணி போல் ஒட்டி வாழும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் துரோ…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஆழிப்பேரலை அனர்த்த மீட்சியிலும் இனப்பாகுபாடும் ஓரவஞ்சனையும் - இன்று 1462 நாள் சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு நினைவு நாள் இன்றாகும். பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது. இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்துகளை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது.இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்க…
-
- 0 replies
- 558 views
-
-
போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சு நடத்துகிறதாம் இந்தியா; பிரணாப் விரைவில் கொழும்பு வருவார்: சிங்வி [ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2008, 04:55.09 AM GMT +05:30 ] இலங்கையில் நடைபெற்று வரும் போரை உடன் நிறுத்துவது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இந்தியா இராஜதந்திர ரீதியாகப் பேச்சு நடத்தி வருகிறது. அங்கு போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்வார்.இவ்வாறு ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிசேக் சிங்வி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் டில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார். அப்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:- தி.மு.க. அரசுக்கு காங்கிரஸ் தலை…
-
- 0 replies
- 934 views
-
-
இலங்கையில் சிங்கள இனவெறி அரசால் ஈழத் தமிழர்கள் நாள்தோறும் இனப்படுகொலைக்கு ஆளாகி வருகிறார்கள். சிங்கள ராணுவத்தின் முப்படைகளும் தமிழர்களை வாழ விடாமல் குண்டு வீசி படுகொலை செய்து வருகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் / அமைப்புகள் சிங்கள இனவெறி போரை எதிர்த்துப் போராடி வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள இராணுவ தளபதி பொன் செகா தமிழர்களை 'அரசியல் கோமாளி' என்று திமிராக இழிவு படுத்தியுள்ளான். இந்த அவமானத்தை இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்திய அரசு வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே…
-
- 2 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் அம்மையார், இந்தியா - பாகிஸ்தான் - இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய உபகண்டப் பிரதேசத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தமது பிரதிநிதியாகத் தமது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டனின் பெயரைப் பிரேரித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி பராக் ஒபாமா பதவியேற்கும் சமயத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பார். அவர், சர்வதேச ரீதியான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இராஜதந்திரிகள் அடங்கிய செயலணி ஒன்றை உருவாக்கி வருகின்றார் என்று கூறப்படுகின்றது.இந்திய உபகண்டப் பிரதேசம் பெரும் பதற்றத்துக்கு…
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
யாழில் இருந்து மேலும் படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைப்பு திகதி: 26.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் இராணுவப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா அரசு தற்போது கிழக்கு மற்றும் யாழ்குடாவில் நிலைகொண்டுள்ள படையினரை அங்கிருந்து எடுத்து வன்னிக் களமுனைக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கிழக்கில் இருந்து 500 படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளங்களிலுள்ள படையினர் குறைக்கப்பட்டு அங்குள்ள படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் பருத்துறை, அச்சுவேலி, யாழ்ப்பாணம் படைத்தளங்களில் படையினர் இவ்வாறு குறைக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்…
-
- 4 replies
- 2.9k views
-
-
கொழும்பு நீதிமன்றத்திற்கு முன்பாக ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு வெள்ளி, 26 டிசம்பர் 2008, 10:39 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] கொழும்பு, மவுன்ரிலவினியா நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் படுகாயமடைந்துள்ளார். முச்சக்கர ஊர்தியில் சென்ற இனம் தெரியாத ஆயுததாரி குறிப்பிட்ட நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. pathivu
-
- 0 replies
- 868 views
-
-
15 அடி விட்டத்தில் உழவனூரில் நில இறக்கம் திகதி: 26.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] தருமபுரம் உழவனூரில் நேற்று அதிகாலை 15 அடிவிட்டத்தில் நில இறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. உழவுனூர் தம்பிராசபுரத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்காணி ஒன்றிலேயே 10 அடி ஆழமும் 15 அடி விட்டமும் கொண்டதாக நில இறக்கம் காணப்படுகிறது. இது தொடர்பாக இக்குடியிருப்பு மக்கள் கருத்துத் தெரிவிக்கும் போது நேற்று அதிகாலை பெரிய சத்தம் ஒன்றுகேட்டது எங்களால் அச்சத்தை ஊகித்தறிய முடியவில்லை. விடிந்தபின்பு பார்த்தபோது எமது குடியிருப்புக் காணியிலுள்ள சமதரையில் திடீரென குழிஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் நீர் காணப்பட்டது. பின்னர் இதுகொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிவிட்டது. இது இப்பொழுது பெரிய …
-
- 1 reply
- 4.6k views
-
-
வன்னிப் பெருநில பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வரும் மக்கள் மீது சிறிலங்கா படையினர் கடுமையான சோதனை கெடுபிடிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
வன்னியில் மக்கள் படும் அவலத்தைக்கண்டும் வெளிநாடுகள் மௌனம் சாதிப்பது கவலையளிக்கின்றது என வடக்கு கிழக்கு ஆயர்கள் விடுத்துள்ள நத்தார் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இராஜப்பு யோசப் விடுத்துள்ள செய்தியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக சமூகத்திடம் மன்றாட்டமாகக்கேட்ட எதுவும் கிடைக்கவில்லை. வன்னியில் தொடர்கின்ற போரினால் மக்கள் 10 தொடக்கம் 15 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது இடம்பெயர்ந்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் தொடரும் குண்டுவீச்சுக்கும், எறிகணைத்தாக்குதல்களுக்குமி
-
- 1 reply
- 994 views
-
-
சிறிலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்க ஏழு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டது கவலை அளிப்பதாக வன்னி தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 553 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கித்துள் பகுதியில் உள்ள பொத்தானைவடிச்சல் எனுமிடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 491 views
-
-
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இடம்பெயர்ந்து தங்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கமே பிரகடனப்படுத்திய விசுவமடு மற்றும் ஒட்டுசுட்டான் "பாதுகாப்புப் பிரதேசங்கள்" மீது கடுமையான தாக்குதலை சிறிலங்கா படைகள் நடத்தின. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 427 views
-
-
சிறிலங்காவின் இனப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டின் பொன்னேரி பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 478 views
-
-
இந்திய விமானப்படை அதிகாரிகள் குடாநாட்டுக்கு இரகசிய பயணம் திகதி: 26.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] இந்தியாவின் விமானப்படை அதிகாரிகள் இருவர் நேற்றைய தினம் யாழ். குடாநாட்டிற்கு இரகசிய பயணமொன்றை மேற்கொண்டு பலாலி விமான நிலையத்தில் படைத்துறை அதிகாரிகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடாத்தினர். இதன்பின்னர் வரணி படைத்தளத்திற்குச் சென்று படை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு கொழும்பு சென்றுள்ளனர். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 2 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அந்நாட்டு புலனாய்வுத்துறை அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 451 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பை சித்திரிக்கும் வகையில் வன்னி மறைக் கோட்டத்தில் நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 720 views
-
-
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உள்ள மகா ஓயா பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 597 views
-
-
வன்னியில் மக்கள் படும் அவலத்தைக்கண்டும் வெளிநாடுகள் மௌனம் சாதிப்பது கவலையளிக்கின்றது என வடக்கு கிழக்கு ஆயர்கள் விடுத்துள்ள நத்தார் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இராஜப்பு யோசப் விடுத்துள்ள செய்தியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக சமூகத்திடம் மன்றாட்டமாகக்கேட்ட எதுவும் கிடைக்கவில்லை. வன்னியில் தொடர்கின்ற போரினால் மக்கள் 10 தொடக்கம் 15 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது இடம்பெயர்ந்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் தொடரும் குண்டுவீச்சுக்கும், எறிகணைத்தாக்குதல்களுக்குமி
-
- 0 replies
- 752 views
-
-
ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் எத்தகைய உதவிகளையும் கோரக்கூடாது என்று வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி அரசாங்க அதிபர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார். கடந்தவாரம் இந்தக் கடிதத்தினை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியீன் ஆலோசகரும், எம். பியுமான பசில் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் ஐ.நா. அமைப்புக்களிடமோ, சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமோ, எ…
-
- 0 replies
- 637 views
-
-
கிளாலி படைமுகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர். இவ்வெடிப்புச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கிளாலி படை முகாமைச் சேர்ந்த எச்.பி.யு. வீரசிங்க (வயது 28) என்பவரே சம்பவத்தில் மரணமானவர் ஆவார்.இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சாவகச்சேரி பதில் நீதவான் செ. கணபதிப்பிள்ளை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த இரண்டு படையினரும் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwin.com
-
- 0 replies
- 783 views
-