Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  2. ஈழத்தில் வாழும் தமிழர்களின் மீது இன அழிப்பினை ஏற்படுத்திவரும் சிறிலங்கா அரசு, வன்னியில் எம்மக்களுக்கு உணவு, மருந்துத் தடைகளை விதித்து வருவதும் தெரிந்ததே. அத்துடன் அழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உலக நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட உதவிகளையும் தடைசெய்தது. வடக்குக் கிழக்கு வாழும் தமிழர்களுக்கு உதவி புரியும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துக்களையும் முடக்கியது. ஆனால் அண்மையில் மும்பாயில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு உதவி செய்ய இந்தியாவில் நடைபெறும் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொள்ள தனது துடுப்பாட்ட அணியினை இந்தியாவுக்கு அனுப்ப சிறிலங்கா அரசு முடிவெடுத்திருக்கிறது. December 3, 2008 Sri Lanka game for charity match Sri Lanka Crick…

    • 1 reply
    • 1.1k views
  3. ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அனைவரோடும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 431 views
  4. ரணிலும் ஊடகங்களும் [04 - December - 2008] டெயிலி மிரர் பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்று தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து ஊடக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியல்வாதிகள் தம்மைப் பற்றி ஊடகங்களில் வெளியிடப்படும் விமர்சனங்கள் தமக்கு சாதகமானதாகவே இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். விமர்சனங்கள் சாதகமாக இல்லாத பட்சத்தில் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் அவர்களால் கடைப்பிடிக்க முடிவதில்லை. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையிலும் அவ்வாறான ஒரு நிலைமை தான் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. அரசாங்கத் தரப்பினரை ரணில் விக்கிரமசிங்க எதற்காக விமர்சித்தாரோ அதனைத்தான் இப்போது அவர் செய்திருக்கின…

  5. பிரபாகரனின் கோரிக்கையை இந்தியா பரிசீலித்து விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் - தொல். திருமாவளவன் பிரபாகரன் விடுத்த கோரிக்கையை இந்திய அரசு பரிசீலித்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கை தமிழர்களின் பிரச்சினை தீர தமிழீழம் உருவாவதே தீர்வாக அமையும். அந்தத் தீர்வை விடுதலைப் புலிகள் அமைப்பால் தான் எட்ட முடியும். இந்தியாவுடன் எப்போதும் நட்புறவு பாராட்டவே விடுதலைப் புலிகள் விரும்புகின்றனர். எனவே, புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என அந்த அமைப்பின் தலைவர் பிரபாக…

  6. அனைத்து கட்சி குழுக் ஒன்றுகூடலில் இருந்து கருணா குழுவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறிலங்கா துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ரி.எம்.வி.பி பிரதிநிதிகள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தபோது பிரசன்னமாயிருந்த கருணா குழுவின் இரு பிரதிநிதிகளால் குழப்பமடைந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, அக்கட்சியின் உண்மையான தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் யாரென்பதை அறியத்தருமாறு தேர்தல்கள் செயலகத்திடம் கோரியது.ரி.எம்.வி.பி கட்சியின் தலைவர் நந்தகோபால் எனவும், பொதுச் செயலாளர் கைலேஸ்வராஜா எனவும் தேர்தல்கள் செயலகம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த கருணா…

    • 2 replies
    • 1.7k views
  7. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூன்று வருட ஆட்சியில் மாத்திரம் யுத்தத்தினால் 12 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:- அத்துடன் யுத்தத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் வலுவிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படையினர் 19 வயதுக்கும் 27 வயதுக்கும் உட்பட்டவர்கள். இவர்களில் எட்டாயிரம் பேர் வரை திருமணம் செய்தவர்கள். எனவே இவர்கள் உயிரிழந்தமையை அடுத்து இவர்களின் மனைவியர் அனைவரும் விதவைகளாகியுள்ளதாக பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மீண்டும் திருமணம…

  8. விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து வன்னிப்பிரதேச மக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான பணியாகவே அங்கு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அரசாங்கம் அடிக்கடி கூறுகின்றது. ஆனால் உண்மையிலேயே மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. நோர்வே அரசு இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தபோதிலும், சமாதான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை. பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் சமாதான ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி போர்நிறுத்தத்தை முறித்துக் கொண்டது. அத்துடன…

  9. சமாதான பேச்சுகள் தோல்விக்கு யார் காரணம்? [03 - December - 2008] * இலங்கையில் 25 வருடகால அழிப்பு யுத்தத்திற்கு முடிவுகட்டி, நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார யுத்தத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய தேவை தட்டிக்கழிக்க முடியாததாகும். வ. திருநாவுக்கரசு இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்குமான விஜயத்தினை தற்போது மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரோமாபுரி சென்று பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்து இலங்கை நிலைமைகளை விளக்கியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நிகழ்வுகள் மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் மற்றும் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ஜனநாயக சுதந்த…

  10. ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இன்று தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என எமது கவலையை வெளியிட்டோம். இதனையடுத்து பிரதமர் இது சம்பந்தமாக இலங்கை அரசை நிச்சயம் வலியுறுத்துவதாக ஆறுதல் அளித்தார் என கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கவிஞர் கனிமொழி, கே.வி.தங்கபாலு உட்பட திமுக, காங்கிரஸ், பாமக மக்களவை உறுப்பினர்கள் பிரதமர் சந்திப்ப…

  11. இணையத்தளம் மூலம் அனைத்துப் பரிமாற்றங்களையும் உடனுக்குடன் செய்யக்கூடியதும் தகவல்களை இரகசியமாக வழங்கக் கூடியதுமான மிக நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு இயங்கி வந்த வலையமைப்பு மத்திய நிலையமொன்றை நீர்கொழும்பு, குடாப்பாடு பிரதேசத்தில் பொலிசார் கண்டு பிடித்துள்ளனர். தமிழீழ விடுமலைப் புலிகள் ஜெர்மனியில் இயங்கும் அமைப்புடன் இந்த வலையமைப்பின் மூலம் தொடர்புகளைப் பேணி வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தை; சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர். படம் இணைப்பு ஆனால் இது இது ஒரு (ஒலி)ஔடிஒ பதிவுக்கூடம், இதை போய், அதி நவீன இணையத்தள மத்திய நிலையம் என்று.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

    • 1 reply
    • 3.2k views
  12. மும்பையின் தாக்குதலுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலட்சியம்தான் காரணம் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 'மும்பை தாக்குதல் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் அளித்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிறீலங்கா அரசுத் தலைவர் ராஜபக்சவுடன் கைகோர்த்துக்கொண்டு அவருக்கு படைத்துறை உதவிகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தினார் எனவும் வைகோ கூறினார். சிறீலங்கா படையினர் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிறீலங்கா வழியாக இந்தியாவின் தெற்கு பகுதியில் நுழைந்து தாக்கும் ஆபத்து உள்ளதாகவும் கூறிய வைகோ, இந்திய அரசு இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். http://www.tami…

    • 6 replies
    • 1.6k views
  13. தினமுரசு வாங்க மறுத்தவர்களை சிறிதர் திரையரங்கு முகாமிற்கு வருமாறு ஈ.பி.டி.பி உத்தரவு www.sankathi.com சிறிலங்கா துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பியினரால் தினமுரசு வார இதழ் வெளியிடப்படுகின்றது. இந்த இதழை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், யாழ் வேலணைப் பகுதியில் தினமுரசுப் பத்திரிகை வாங்க மறுத்ததாக கூறி 5 பேரின் அடையாள அட்டைகளை ஈ.பி.டி.பி யினர் பறித்துவிட்டு குறிப்பிட்ட 5 பேரையும் யாழ்ப்பாணம் சிறிதர் திரையரங்கிலுள்ள தமது முகாமிற்கு வருமாறு எச்சரித்துள்ளனர். இவர்களது எச்சரிக்கையால் அடையாள அட்டையை பறிகொடுத்தவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

  14. வீரகேசரி இணையம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 மிக விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இந்திய புதுடில்லி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக த. தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பெங்களுரில் கருத்துரைக்கும் போது:- இலங்கை அரசாங்கம் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், எதிர்வரும் 10 நாட்களில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் முன்வராவிட்டால், அதற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை தினமாகிய 10 ஆம் திகதியன்று அறிவிக்கவுள்ளதா…

  15. மனித உரிமை மீறலைக் கண்டித்து தீபெத், வியட்நாம், ஒயிகோ, சீன ஜனநாயகக்கட்சி, தாய்வான் மாணவர்கள் சமூகம் ஆகியோர் இணைந்து பிரான்சின் தலைநகரான பாரிசில் ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 487 views
  16. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views
  17. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 413 views
  18. வெள்ளப் பெருக்கை காரணம்காட்டி அரசாங்கத்திற்கு பணம் திரட்டும் டக்ளஸ் sankathi.com தமிழர் தாயகப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அழிவுகளை காரணம் காட்டி, சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள போருக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் துணைக்குழுவின் ஆயுததாரியான டக்ளஸ் தேவானந்தா களமிறங்கியுள்ளார். முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு மட்டும் 3000 மில்லியன் ரூபா தேவையாக உள்ளது எனக்கூறி வெளிநாடுகளின் தூதரகங்களிற்கு கடிதங்களை அனுப்பியுள்ளார். இவருடன் கோத்தபாய ராஜபக்சவும் நிதி சேகரிப்பில் களம் இறங்கியுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  19. ACF இராணுவ பாதுகாப்பு கோரவில்லை – உயர் இராணுவ அதிகாரி: http://www.globaltamilnews.net/tamil_news....d=2903&cat= ஏ.சீ.எப். தொண்டு நிறுவனம் இராணுவப் பாதுகாப்பை கோரியிருக்கவில்லை என மூதூர் தன்னார்வ தொண்டு ஊழியர்கள் படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்த உயர் இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மூதூர் பிரதேசத்தில் தன்னார்வ தொண்டு ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் வழங்கிய தகவல்களை அடுத்து படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்ததாக திருகோணமலை இராணுவ கமாண்டர் சாட்சியமளித்துள்ளார். சடலங்களை பார்வையிட்ட சில பொதுமக்கள் அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும், பின்னர் இரண்டரை மணித்தியாலங்களுக்கு பின்னர் தமது படையினர் அங்கு செ…

    • 0 replies
    • 1.1k views
  20. சர்வகட்சிக் குழுவில் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளே அங்கம் வகிக்கின்றன. இதன் மூலமாக உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள முடியும். மாறாக தமிழ் மக்களையும் உலகத்தையும் முட்டாள்களாக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தற்போதைய நிலை நீடித்தால் அபிவிருத்தியில் சோமாலியாவை விட மோசமான நிலைக்கே நாடு தள்ளப்படும். கருணா, டக்ளஸ், பிள்ளையான் போன்ற சிலரை வைத்துக்கொண்டு நியாயமான தீர்வை முன்வைக்காது தமிழர்களை அடக்கி ஆளலாம் என்று நினைக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாகாண உள்ளுராட்சி சபைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவ…

  21. இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசாங்கம் வலியுறுத்தும்- தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களிடமும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி virakesari.lk இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கம் வலியுறுத்தும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைப் போக்கும் வகையில் உடனடி போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கைவிடுத்தனர். இதனையடுத்தே இலங்கையில் போரை நிறுத்தவும் தமிழ் மக்கள் அமைதியாக வாழவும் ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறு இலங்கை அரசி…

  22. மஹிந்த அரசாங்கத்தின் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது –ஒரேபார்வையில் UNP: http://www.globaltamilnews.net/tamil_news....d=2902&cat= ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்படும் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்கால ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்கள் ஆளும் கூட்டணியின் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஒப்பந்தத்தின் மூலம் பாரியளவு அந்நிய செலாவணி இழக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உலக பொருளாதாரமே நெருக்கடியை எதிர்நோக்கி…

  23. பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 90 வீதமானோர் அப்பாவிகள் ஜே.வீ.பீ: http://www.globaltamilnews.net/tamil_news....d=2907&cat= பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 90 வீதமானோர் அப்பாவிகள். இவர்களில் மலையக இளைஞர்களும் உள்ளனர். ஆனாலும், இந்த அப்பாவிக் கைதிகள் தொடர்பிலான மனித உரிமைகள் அமைச்சின் நடவடிக்கைகள் கேள்விக் குறியாகியுள்ளன என்று ஜே.வி.பி. எம்.பி.யும் குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுதந்திரமாக வாழவேண்டும் என்று எண்ணிய தமிழ் மக்கள் பயங்கரவாதம், பிரிவினைவாதம், இராணுவ நடவடிக்கை ஆகியவற்றால் நசுக்கப்பட்டவர்களாகவும் உரிமை குறித்து பேச …

  24. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் 20 ஆயிரத்து 998 பேர் இடம்பெயர்ந்து 23 பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 485 views
  25. கிளிநொச்சியில் உள்ள கொக்காவில் பகுதியை நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.