Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. EU கொசோவோவில் செய்தது போலவே, இலங்கையின் போர்த் தலைவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முனைகிறது – விமல்: ஆணையிறவு, பூநகரி பிரதேசங்களில் புலிகளின் பலத்தை அழிக்கும் முன்னர், ஐக்கிய தேசிய கட்சியும், சர்வதேச சக்திகளும் இணைந்து கொழும்பைக் கேந்திரமாக கொண்டுள்ள அரசியலை வீழ்த்தி, நாடாளுமன்றத்தை நிலைகுலைய வைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். குருணாகலில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் கொசோவோ நாட்டுக்கு செய்தது போலவே, இலங்கையின் போர்த் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதேவேளை சில நாடாளுமன்ற உறுப்பினர்…

    • 0 replies
    • 1.1k views
  2. குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்க வேண்டுமென வெளிநாட்டு தூதுவர்களிடம் கருணா கோரத் திட்டம் - தகவல்கள் வெளியாகி உள்ளன: மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு கருணா வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளார். குறிப்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு, பாராளுமன்ற உறுப்பினர் கருணா கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவோ அல்லது பிரித்தானியோ தமக்கு வீசா வழங்க மறுப்பு தெரிவிக்காது என்பதில் பூரண நம்பிக்கை இருப்பதாக கருணா குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு த…

  3. ஈழத்தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்பாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ள அவர், அதேநாளில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வை.கோபாலசாமியும் இந்தப் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை எனவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர் மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகவேண்டும் என்றும் செ…

  4. இலங்கை தமிழருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் போராட்டம் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகத்தினர் நேற்று முதல் கறுப்புப் பட்டி அணிந்து தமது பணிகளை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதன் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்டப் போராட்டம் தொடர்பாக மீண்டும் ஆலோசனைக்கூட்டம் கூட்டப்பட்டதாகவும் தமிழ்த் திரையுலகினர் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ள நிலையில் திரைத்துறையினரும் தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அ…

  5. ஒன்று சேர்வோம்; குரல் கொடுப்போம்! வெகு அபூர்வமாகத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருசேர இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக குரல் கொடுத்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதத்துடன் தங்கள் எதிர்ப்பைக் காட்டின. தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு உடனடியாகத் தலையிடக் கோரியதுடன் - `தி.மு.க. அரசு தேவையா என்பதற்கு விடை காணவேண்டும்' என்று உணர்வுபூர்வமாகப் பேசியிருக்கிறார். இலங்கையின் முற்றிவரும் போர் நெருக்கடியும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களும், இந்திய மீனவர்கள் மீது நடக்கும் அத்துமீறல்களும் இலங்கை அரசின் வரம்பற்ற சர்வாதிகாரத்தையே வெளிப்படுத்துகின்றன. ஏற்கெனவே சுமார் 70000 பேர் வரை தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் நிரம்ப…

  6. ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளும் சிறிலங்கா அரசைக் கண்டித்து சென்னையில் நடந் மறியற் போராட்டத்தின் போது வை.கோ ஆற்றியஉரையில், இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பதாக எண்ணி, இந்திய ஒருமைப்பாட்டைக் குலைத்துவிடாதீர்கள் எனக்குறிப்பிட்டார். உரையின் முழுமையான ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது. உரையின் ஒலிவடிம்

    • 0 replies
    • 882 views
  7. ஆயுதங்களைக் களைந்து விட்டுச் சரண் அடையுமாறு மிகத் தெளிவாக விடுதலைப் புலிகளை மீண்டும் அழைக்கின்றேன். அவர்கள் அவ்வாறு செய்துவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும். தமிழ்ச் சகோதரர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளை வழங்குவதை நாம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் வைத்து ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார். எந்தளவு கடினமாக இருப்பினும், அரசி யல் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர் வுகள் காணப்பட வேண்டும், அதற்கான வழி முறைகள் தொடரப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும். அரசியல் பிரச்சினைகளுக்கு இராணு வத் தீர்வுகள் இல்லை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் தமது நோக் கங்களையும் அபிலாசைகளையும் உணர்ந்து அதற்காகப் பணி…

  8. நாளை தமிழகம் முழுவதும் பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்திய அரசே சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத் தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்குவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்! ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிர்க்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு,உடை,மருந்துகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத் தடை போட்டாய்! சிங்களப் படைக்குப் போர்க்கப்பல்,நவீனப்படைக்கரு

  9. லண்டனிலிருந்து வன்னியன் "கிளிநொச்சி' இது சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை வெல்லப்படமுடியாத ஆனால் வீழ்த்தப்பட வேண்டிய இலக்கு. அதேநேரம் புலிகளின் இராஜதந்திர நகரம் என உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட கிளிநொச்சி மிகக் கடுமையான போரழிவுகளைச் சந்தித்து மண்மேடாகி பின் குறுகிய காலத்தில் புதுப் பொலிவுடன் நிமிர்ந்து நிற்கிறது. தமிழர்களின் கடும் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் சான்று பகரும் நகரம். ஆனால் அதன் துரதிர்ஷ்டம் என்னவோ மீண்டும் அதன் மீது ஊழிப் பெருங்காற்று வீசத் தொடங்கிவிட்டது. கடந்த வாரத்திலிருந்து ஆட்லறிப்பல்குழல் எறிகணைகளும், விமானப்படைக் குண்டுவீச் சுக்களும் கிளிநொச்சி நகரத்தின் பெரும் பாலான கட்ட டங்களை அழித்துக்கொண்டிருக் கின்றன. இக் கட்டுரை எழுத…

    • 3 replies
    • 2.7k views
  10. கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கருகில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது. வைக்கப்பட்டுள்ள விளம்பரப்பலகையில் படம்..... http://www.tamilseythi.com/tamilnaadu/peri...2008-10-12.html தமிழகத்தில் இருந்து வ.அகரன்

  11. கிழக்கு தொடர்பில் பேச பசில் ராஐபக்சவுக்கு எந்தவித உரிமையும் கிடையாது: த.தே.கூ. கண்டனம் [ஞாயிற்றுக்கிழமை, 12 ஒக்ரோபர் 2008, 05:57 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] மகிந்தவின் சகோதரர் பசில் ராஐபக்சவுக்கு இலங்கையின் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (12.10.08) வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்கு மாகாண மக்கள் தமது அரசியல் மற்றும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து என்றுமே தளர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் எந்தவொரு சலுகைகளுக்கும் சோரம் போபவர்களும் கிடையாது. ஆனால் சிங்கள பேரினவாத அரசைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பின…

    • 0 replies
    • 564 views
  12. ஜானக இலக்கு வைக்கப்பட்டது ஏன்? [12 - October - 2008] விதுரன் வடக்கில் யுத்தம் தீவிரமடைகிறது. யுத்தத்தின் பலாபலன்களைப் பெறுவதில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்த யுத்தம் அரசியலுக்கு எந்தளவு தூரம் பயன்படுகிறதோ அந்தளவு தூரம் அரசியலில் எதிரிகளைப் பழிவாங்கவும் பயன்படுகிறது. இதன் உண்மை நிலையை அறியாது மக்கள் குழப்பமடைகையில், இடம்பெறும் சம்பவங்களுக்கு எவர் மீது குற்றஞ் சுமத்துவதென்பது எவருக்குமே தெரியாதுள்ளது. இதனால்தான், நடைபெறும் படுகொலைகளுக்கான சூத்திரதாரிகள் யாரென்பது தெரியாது மக்கள் குழம்புகையில் அடுத்த கொலை நடந்துவிடுகிறது. முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரியும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் வடமத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் …

  13. புத்தக வெடிகுண்டு வைத்திருந்ததாக பண்டாரவளையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 710 views
  14. அம்பாறை மாவட்டத்தில் உள்ள வம்மியடியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நால்வர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 792 views
  15. புத்தகத்துக்குள் குண்டு வைத்திருந்ததாக ஆசிரியை கைது வீரகேசரி இணையம் 10/12/2008 1:38:56 PM - மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் புத்தகக்குண்டு ஒன்று தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையிலான ஓட்டைக்குள் வெடிமருந்துகள் பொருத்திய நிலையில் இந்த குண்டு தயாரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த ஆசிரியை கடந்த 20 வருடங்களாக பண்டாரவளையில் வசித்து வருவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

  16. விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து அகற்றி அதனை முற்றாக மீட்டுவிட்டதாக சிறீலங்கா கேக் வெட்டி பெரும் கொண்டாட்டங்களை நடத்தி முடித்துவிட்ட நிலையில், தற்போது கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிறீலங்காவின் கிழக்கின் உதயம் பிரச்சாரத் திட்டத்தை நொருக்கும் வகையில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் உதயம் அதிகரித்துள்ளது. தினந்தோறும் நடைபெறும் தாக்குதல்களால் சிறீலங்கா அரச படைகளும் அதன் துணை இராணுவக் குழுக்களும் பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருவதால் அச்சமடைந்துள்ளன. இந்நிலையில், சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும…

  17. http://www.uktamilnews.com/index.php?optio...60&Itemid=1

  18. கிழக்குமகாணத்தில் மதுபானம் மற்றும் கட்டிட ஒப்பந்தகார் ஆகியோரிடம் பெறும்தெகையான சட்டரீதியற்ற வரிவிதிக்கபடுவதாகவும் மாத குறைந்தது மூன்றுகோடிக்குமேல் அரசியல்கட்சிக்கு மக்கள்செலுத்துவதாகவும் தெரியவருகிறது . இப்பணத்தை வசூலிப்பவர்கள் பிள்ளையானின் வலது கரம் என கூறப்படும் சீலன் மற்றும் கருணாவின் விசுவாசியும் தமிழ்மக்கள் விடுதலை புலிகளின் பிரதி தலைவருமான ஜெயம் மாஸ்டர் என தெரியவருகிறது அரசு இவற்றை அறிந்தபோதிலும் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

  19. கிழக்கு மக்களை தேசியரீதியில் அங்கீகரிக்கவே கருணாவுக்கு எம்.பி. பதவி: பசிலின் கருத்துக்கு த.தே.கூ. கண்டனம் கிழக்கு மக்களுக்கு தேசிய ரீதியில் அங்கீகாரம் வழங்கவே கருணாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக ஐனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஐபக்ச தெரிவித்துள்ள கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. அரச ஊடகமொன்றுக்கு பசில் ராஐபக்ச மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- கிழக்கு மாகாண மக்கள் தமது அரசியல் மற்றும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து என்றுமே தளர்ந்தவர்கள் அல்லர். …

  20. தப்புக் கணக்கு சிங்களப் பிள்ளையள் கொடுக்கிற புலிச் சாவுக் கணக்கைப் பார்த்து உலகமும் ஒரு நாள் சிரிக்கும் எண்டது சரியாய்தான் போச்சுது. நாளுக்கு நாள் இவை கொல்லுற புலியளின்ரை சாவுக் கணக்கை பார்த்து சந்தோசப்பட்டவையும் இப்ப சலிப்படைஞ்சு போயிருக்கினம். சொன்ன கணக்குக்கு இப்ப புலியள் மட்டுமில்லை, தமிழரும் ஒட்டு மொத்தமாய் அழிஞ்சு போயிருக்க வேணும் எண்டதுதான் அவையளின்ரை கணக்கு. இதிலை பிரபல சர்வதேச ஊடகமொன்று சரியாய்தான் அதிர்ச்சியடைஞ்சிருக்குது. இவையள் சொல்லுற புலி அழிப்புக் கணக்கை நாளுக்கு நாள் போட்டு கூட்டிக்கொண்டு வந்த அந்த ஊடகம், இப்ப கூட்டின கணக்குத் தொகையைப் பார்த்து மிரண்டுபோய் நிக்குது. கடந்த ஜனவரியிலை இருந்து இவையள் கொன்ற புலியளின்ரை கணக்கு மட்டும் ஏழாயிரத்தை க…

  21. யுத்தத்தை நியாயப்படுத்த அமைச்சர் ரோஹித்த இந்தியாவிற்கு அவசர விஜயம்: தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தத்தை நியாயப்படுத்தும் நோக்கில், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம இந்தியாவிற்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் இடம்பெற்றும் வரும் பாரிய மனிதப் பேரவலம் குறித்து தலைநகர் டெல்லியிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து அமைச்சர் இந்தியா செல்லவுள்ளார். இந்திய வெளிவிவாகர அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயண் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வடக்கில் இடம்பெற்றுவரும் இராணுவ முன்நகர்வுகள் மற்றும் மனிதாபிமான பணிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு இதன் போது விளக்கமளிக்கப்படவ…

    • 1 reply
    • 885 views
  22. கனடா தேசத்து `நேஷனல் போஸ்ட்' என்கிற பத்திரிகைக்கு, சிறீலங்காவின் இராணுவத் தளபதி வழங்கிய செவ்வி, சிங்களத்தின் ஆழ்மன பேரினவாதச் சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தது. சிறீலங்கா நாடானது, சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதெனத் தான் திடமாக நம்புவதாக, மகாவம்ச வரலாற்று விளக்கமொன்றை அவர் அளித்திருந்தார். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, இவையன்றும் புதிய விடயமல்ல. ஏற்கனவே சிங்கள மரத்தில் படரும் செடிகொடிகள்தான் தமிழினமென்று கூறிய டி.பி.விஜேயதுங்காவை விட, இராணுவத் தளபதியின் விளக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்படாத யூலை - இன அழிப்பு சூத்திரதாரி ஜே.ஆரும், தமிழர் தோலில் செருப்புத் தைக்கப் புறப்பட்டவர்களும், விட்டுச் சென்ற பேரினவாதப் பாதையில் மகிந்த…

  23. தற்போதைக்கு ஆயுதங்கள் களையப்பட மாட்டாது – TMVP: தற்போதைய பாதுகாப்பற்ற சூழ்நிலையில் ஆயுதங்கள் களையப்பட மாட்டாதென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அத்துடன், எதிர்வரும் தேர்தல்களில் கருணா தலைமையில் TMVP போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திடீரென ஆயுதங்கள் களையப்பட்டால் சுமார் 3000த்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா போன்ற முக்கிய இராணுவத் தலைவருக்கே பாதுகாப்பளிக்க முடியாத நிலையில் சாதாரண போரளிகளது பாதுகாப்பை எவ்வாற உறுதிப்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் பொதுத…

  24. எப்பிடி இருந்த நான் இப்படி மாறிட்டன்

  25. சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைமை அதிகாரி ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவுக்கு வழங்கப்பட்டிருந்த 15 கடற்படையினரின் பாதுகாப்பு விலகிக் கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. சரத் வீரசேகர சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளராக நியமிக்கப்படும் போது, அமைச்சரவைப் பத்திரம் மூலம், அவர் ஏற்கனவே கூட்டுப்படை அதிகாரியாக கடமையாற்றிய போது வழங்கப்பட்டிருந்த வாகனங்கள், பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும் என கடற்படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் கிராமங்களில் பாதுகாப்பு குறித்து ஆராயும் நோக்கில் அடிக்கடி அந்த பிரதேசங்களுக்கு செல்லும் வீரசேகரவுக்கு புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.