ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
யாழ்ப்பாணம் சுழிபுரம் சத்தியக்காட்டுச் சந்தியில் நேற்று காலை கடை ஒன்றுக்குள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 685 views
-
-
155 இலக்க மொரட்டுவ மட்டகுளி பஸ்ஸில் குண்டுவெடித்தது
-
- 13 replies
- 2.9k views
-
-
திருகோணமலை செல்வநாயகபுரத்தில் நான்கு தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட வீதி சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 529 views
-
-
அழுத்து http://puspaviji.net/page102.html
-
- 0 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மானையும் கைது செய்யும் வரை யுத்தம் தொடரும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும். ஆனால், நிச்சயமான கால எல்லையினை இதற்கென கூற முடியாது. இராணுவ நடவடிக்கைகள் மிகவும் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகள் பலவீனம் அடையும் போது யுத்தநிறுத்தத்தை கோருவதால் தற்போதைக்கு யுத்த நிறுத்தத்திற்கான வாய்ப்பேதும் இல்லை. விடுதலைப் புல…
-
- 0 replies
- 1.5k views
-
-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் தம்மை தெற்கில் உள்ள பல்லைக்கழகங்களில் இணைக்குமாறு கோரி பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணியகத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 58 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஒலுவில் சென்று துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாவதை விட ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்து மடிவது மேலானது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர் தெரிவித்து;ள்ளார். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது எனினும் அங்கு வன்முறைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த மாணவர் இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு விட்டதென எப்படி கூறமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 2k views
-
-
இந்தியாவின் "உதவி" மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது: மகிந்த ராஜபக்ச [செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 09:19 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவுக்கான இந்தியாவின் "உதவி"கள் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான வெளிநாட்டு ஊடகவியலாளர்களை மகிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடபகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக எமது படைத்தளபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்போம். இருப்பினும் படையினரின் வெற்றி…
-
- 0 replies
- 583 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களின் கடைசிப் பணியாளரும் வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 656 views
-
-
இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் 50,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளது. முதலமைச்சர்கள் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பீஹாரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரொமேஸ் ஜயசிங்க, டெல்லியில் உள்ள பீஹார் பிரதிநிதியிடம் குறித்த நன்கொடைக்கான காசோலையை கையளித்ததார்.. பீஹாருக்கான டெல்லிப் பிரதிநிதி சீ.கே. மிஸ்ரா இலங்கை அரசாங்கத்திற்கு பீஹார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=10…
-
- 0 replies
- 676 views
-
-
ராடர் கட்டமைப்பை இயக்குவதற்கு இந்திய அதிகாரிகளை பயன்படுத்துவது தேசிய பாதுகாப்பை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என ஜே.வீ.பீ தெரிவித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ராடர் கட்டமைப்பை இயக்க இந்திய அதிகாரிகளின் உதவியைப் பெற்று கொண்டதன் மூலம் அரசாங்கம் தேசிய பாதுகாப்பைக் காட்டிக் கொடுத்துள்ளதாக ஜே.வீ.பீயின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் குற்றம்சுமத்தியுள்ளார். இந்தியாவிடம் இருந்து ராடர் கட்டமைப்பைப் பெற்றுகொண்ட பின்னர் அது தொடர்பான பயிற்சிகளைப் பெற இலங்கை அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கலாம். அரசாங்கம் இந்த விடயத்தில் உரிய முறையில் செயற்படாது, தொடர்ந்தும் அதனை தவிர்த்து வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு தனது அதிக…
-
- 0 replies
- 904 views
-
-
புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: பெண்கள் இருவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 07:51 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு வமாட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பாடசாலைக்கு அருகாமையிலும், உடையார் கட்டுப்பகுதியிலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:45 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை நடத்தின. இதில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் இருந்து உடையார்கட்டுக்கு தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த க.இராஜேஸ்வரி (வயது 52) என…
-
- 0 replies
- 397 views
-
-
தாயகத்தில் பராமரிக்கப்படும் செஞ்சோலைச் சிறார்களின் நல்வாழ்வுக்காக நல்வாய்ப்புச் சீட்டு மூலமான நிதித்திட்டம் கடந்த ஆண்டு நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகளில் முன்னெடுக்கபபட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 502 views
-
-
அக்கராயன் தெற்கில் கடும் மோதல். படையினரது உடலங்கள், ஆயுதங்கள் மீட்பு - விடுதலைப் புலிகள் [ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 11:08.40 AM GMT +05:30 ] வன்னியில் அக்கராயன் தெற்கு பிரதேசத்தில் சிறீலங்கா படையினர் புதிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும், அதற்கு எதிராக கடுமையான முறியடிப்புத் தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அக்கராயனிற்கு தெற்காக 6 கிலோமீற்றர் தூரத்தில் ஆரம்பித்துள்ள இந்த முன்னகர்வு முறியடிப்பில் சிறீலங்கா படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கொல்லப்பட்ட படையினரது பல உடலங்களும், ஆயுத தளபாடங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. http://www.tamilwin.com/view.php…
-
- 14 replies
- 4.1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் விவசாயி ஒருவர் இணைந்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு இந்த மனுவை ஆராய்ந்தது. மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். வடக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந…
-
- 0 replies
- 529 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், பொற்கேணி ஆகிய கிராமங்களில் இருந்து தமிழ் இளைஞர், யுவதிகள் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதாக தெரிவிக்கிப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில் முறிகண்டியில் இன்று காலை சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 557 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தமிழ்ச் சமூகம் அழிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை நசுக்கி அடக்கி ஒடுக்குவதன் மூலம் அரசாங்கத்தினால் விரோதத்தை மட்டுமே சம்பாதிக்க முடியுமே தவிர சமாதானத்தை காண முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த காலங்களில் அப்பாவித் தமிழர்களை பஸ்களில் ஏற்றி வவுனியாவுக்கு கொண்டு சென்றதுபோல் மீண்டும் ஒருமுறை அதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிகின்றது. இது அடிப்படை உரிமை மீறலாகும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றது என்றும் அவர் கூறினார். காரணங்கள் இன்றி தலைநகரில் தங்கியிருப்போரை வெளியேற்றுவது என அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றமை தொடர்…
-
- 0 replies
- 834 views
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், துணைப்படை T.M.V.P குழுவின் மாவட்ட பொறுப்பாளருமான இனியபாரதி அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்தமை தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றது. இதில் கொலை அச்சுறுத்தலின் மத்தியிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கொழும்பில் இருந்து சென்று கலந்துகொண்டிருந்தார். நீதியாளர் மொகைதீன் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினருக்காக வாதாட இருந்த முஸ்லீம் சட்டவாளர் ஒருவர் அச்சம் காரணமாக நீதிமன்றுக்கு செல்லாது…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டியில் இன்று காலை 10.10 மணியளவில் இடம்பெற்ற விமான தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களது சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை தரப்பினர் தெரிழவித்துள்ளனர். எனினும் தாம் புலிகளின் இலக்குகள் மீதே தாக்குதலை மேற்கொண்டதாக அரச படையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இடம்பெயர்ந்து முறிகண்டிக்கும், 55வது கட்டைக்கும் இடையில் தங்காலிகமாகத் தங்கியிருந்த இவர்கள், சிறீலங்கா படையினரது ஆக்கிரப்பு பட…
-
- 1 reply
- 965 views
-
-
The United Nations staff completely withdrew from Kilinochchi this morning (Sept. 16th), UN spokesman in Colombo, Gordon Weiss confirmed. The final UN convoy carrying staff from the northern town had left at around 10 am and is expected to reach the Omanthai entry point by this afternoon, he added. Citing a statement issued by him, BBC Sandeshaya reported the UN has received assurances from the LTTE that UN and humanitarian agency staff remaining in Kilinochchi can leave. “We intend moving those staff in a single convoy at 10 am tomorrow morning, Mr. Weiss has said. http://www.orunews.com/?p=1983
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையினர்.. சிறீலங்கா அரச படைகளின் பயங்கரவாதத்துக்கு மதிப்பளித்து வன்னியை விட்டு வெளியேறியதும்.. வன்னியில் இன்று மதியம் வரை அடையாளம் காணப்பட்ட இலக்குகள் என்று சுமார் 4 தடவைகள் அகோர விமானத்தாக்குதல்கள் பரவலாக நடத்தப்பட்டுள்ளன..! இவற்றில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தேச விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இதைவிட கிளிநொச்சி மருத்துவனை மற்றும் ஏ9 நெடுஞ்சாலை மீதும் கிளிநொச்சி நகரப்பகுதிகள் மீது பல்குழல் மற்று ஆட்லறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. செய்தி ஆதரம்: டெயிலிமிரர் மற்றும் வீரகேசரி.
-
- 8 replies
- 2.2k views
-
-
பிரபாகரனை உயிரோடு பிடித்தால் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பேன் - ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வன்னிக் காட்டுப் பகுதிகளின் எந்தப் பிரதேசத்தில் பிரபாகரன் மறைந்திருக்கின்றார் என்பது குறித்து தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் பாராட்டுக்குரியதென ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்…
-
- 5 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி மருத்துவமனை சூழ கடும் எறிகணை தாக்குதல்கள். நோயாளிகள் அல்லோலகல்லோலம் கிளிநொச்சி மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் கடும் எறிகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால் - அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நோயாளிகள் பெரும் பீதிக்கு உள்ளாகியதாக கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களையடுத்து மாடியில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்புக்காக மருத்துவ மனையின் தளப்பகுதியில் வந்திருந்தனர். பொழுது விடிந்ததும் இஙகு தங்கியிருந்த சிகிச்சை பெற்ற பல நோயாளர்கள் தமது வீடுகளுக்குச் சென்று விட்டதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மரு…
-
- 6 replies
- 1.8k views
-
-
கொழும்பில் லொட்ஜுகள் மற்றும் தற்காலிக வசிப்பிடங்களில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பல பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை முதல் லொட்ஜுகள், தற்காலிக வசிப்பிடங்களில் தேடுதல் நடத் திய பொலிஸாரும் படையினரும் இவர்களைக் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர். பேலியகொடவில் 9 பேரும், டாம் வீதியில் 8 பேரும், ஆட்டுப்பட்டித்தெருவில் 9 பேரும், மருதானையில் 8 பேரும், கொட்டாஞ்சேனையில் 6 பேரும், கிராண்ட்பாஸில் 6 பேரும், தெமட்டகொடயில் 7 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என முறையிடப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசின் உத்தரவை நிராகரித்து விட்டுத் தொடர்ந்தும் வன்னியில் செயலாற் றும் ஐ.நா. அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். அந்நிறுவனங்கள் இம்மாதம் 29ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறாவிட்டால் அவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. அரசின் இந்த நிலைப்பாட்டை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: வன்னியில் இருந்து வெளியேறுமாறு நாம் விடுத்த உத்தரவை ஏற்று பல அரசசார்பற்ற நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி அரசகட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியாவுக்கு வந்துள்ளன. சில நிறுவனங்கள் இன்னும் அங்கு தங்கியுள்ளன. வெளிநாடுகளில்இருந்து வந்து வன்னியில் செயற்படும் அரச சா…
-
- 2 replies
- 1.1k views
-