ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143409 topics in this forum
-
இந்த தளத்தில் இந்திய பிரதமருக்கு மின்னஞ்சல்களை அனுப்பி தமிழக உறவுகளின் முயற்சியில் நாமும் பங்கெடுக்கலாம் http://pmindia.nic.in/write.htm
-
- 9 replies
- 2.2k views
-
-
கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 3.9k views
-
-
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கருணா வெளியேற்றப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை: இலங்கைப் பாரளுமன்றத்தில் கருணா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களை புரிந்துள்ள கருணா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக் கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் கருணா நியமிக்கப்பட்டுள்ளார். கடத்தல்கள், படுகொலைகள், சிறுவர் போராளிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் க…
-
- 4 replies
- 1.3k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பான நிகழ்வுகளும் வட இந்திய ஊடகங்களும் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 08:44 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான தி.மு.க.வின் விளக்கப் பொதுக்கூட்டத்தை வட இந்திய ஊடகங்கள் எவ்வாறு வெளியிட்டுள்ளன என்பதை தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி விவரித்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: உடன்பிறப்பே, தொடர்ந்து உனக்கு "நாட்டு நிலவரங்கள் - கழகத்தின் நிலை - மாற்றுக்கட்சியினர் கருத்துகளுக்கு மறுப்பும் விளக்கமும்" - என்ற வகையில் கடிதம் எழுதும் நான், இன்றைக்கு இலங்கைத் தமிழர் இன்னல் துடைத்திடவும், அங்கே போர் நிறுத்தம் ஏற்படவும், மத்திய அரசின் த…
-
- 1 reply
- 724 views
-
-
http://isooryavidz.blogspot.com/2008/10/gt...sri-lankas.html GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-2 GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-3
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர் உள்ளிட்ட 13 பேரை அந்நாட்டு குடிவரவு குடியகல்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சாண்டோஸ் கைத்தொழில் பேட்டையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேடுதலில் குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான தொழில் வீசா அற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 20 அதிகாரிகளினால் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உக்ரேய்ன் போன்ற நாடுகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தொழில் புரிவோருக்கு 10,000 ஸ்ரேலிங் பவுண்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் நேற்று நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். இலங்கைப் பொலிஸாரின் விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியாது என்றும் அவர் சொன்னார். மேற்படி குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றியபோது ரணில் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஜானக பெரேராவுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கப்படாமையே அவர் கொல்லப்பட்டமைக்குக் காரணம். இவருக்கு புலிகளிடமிருந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடமிருந்தும் கொலை அச்சுறுத்தல் உள்ளது என்று நாம் பாதுகாப்பு அமைச்சிடம் தெரிவித்த…
-
- 0 replies
- 545 views
-
-
இலங்கையில்; சமாதானம் இல்லை. கொலை கலாசாரம் துரித கதியில் வளர்ந்து வருகிறது - திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்: இயற்கை அனர்த்தங்களை விட மனிதனால் ஏற்படும் அனர்த்தங்கள் அதிகரித்து விட்டது. இலங்கையில்; சமாதானம் இல்லை. கொலை கலாசாரம் துரித கதியில் வளர்ந்து வருகிறது. சமீபத்தில் அனுராதபுரம் குண்டுத்தாக்குதல், வன்னியில் மக்கள் இடம்பெயர்ந்து வாழ வழியின்றி தத்தளித்துக்கொண்டிருக்கிறா
-
- 0 replies
- 658 views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியாவின் உதவிக்கு 80.8 விழுக்காடு எதிர்ப்பு: "தினமணி" நாளேடு [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 11:24 மு.ப ஈழம்] [கி.தவசீலன்] சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி செய்வது ஏற்கத்தக்கதல்ல என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேட்டின் இணையத்தளத்தின் வாக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணி நாளேட்டின் இணையத்தளத்தில் "சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி செய்வது" தொடர்பான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதில் இந்தியா உதவி செய்வது ஏற்புடையது- 13.8 விழுக்காடு ஏற்கத்தக்கதல்ல- 80.8 விழுக்காடு கருத்து இல்லை- 5.38 விழுக்காடு என்று தமிழர்கள் வாக்களித்துள்ளனர். புதினம்
-
- 1 reply
- 713 views
-
-
கருணா- தமிழர் பிரதிநிதியா: "தினமலர்" நாளேடு சாடல் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 11:17 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவை மகிந்த ராஜபக்ச அரசு நியமித்திருந்தாலும் தமிழர் பிரதிநிதியாக அவர் செயற்படுவாரா? என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "தினமலர்" நாளேடு சாடியுள்ளது. இன்று புதன்கிழமை வெளிவந்த "தினமலர்" நாளேட்டின் தலைப்புச் செய்தி: தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்திய சிறிலங்கா இராணுவம், இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து உடனடியாக பணிந்தது. கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்த, இராணுவத்துக்கு சிறிலங்கா அரசு உத்தரவிட்டதாக தெரிகிறது. …
-
- 0 replies
- 788 views
-
-
கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு மருத்துவர் இராமதாஸ் ஆதரவு [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 09:13 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுகின்ற ஒரு விடயத்திலாவது இங்குள்ள தமிழர்கள் ஒன்றுப்பட்டிருப்போம். நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை. எல்லோரும் ஒன்றுபட்ட நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகுவோம் என்று முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள வேண்டுகோளை மு…
-
- 0 replies
- 434 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக புழல் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 09:12 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னை மத்திய சிறையான புழல் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களில் ஒருவரான குணங்குடி அனீபா, இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலைக்குள்ளேயே அவர் ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். புதினம்
-
- 0 replies
- 600 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என சர்வதேச யுத்த ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பழுத்த அனுபம் மிக்கதும், யுத்த தந்திரோபாயங்களை நுட்பமாக முன்னெடுக்கக்கூடியதுமான அமைப்பாக விடுதலைப் புலிகளை குறித்த ஆய்வேடு சித்தரித்துள்ளது. மேலும், இராணுவப்படையினர் சற்று அயரும் சந்தர்ப்பத்தில் மிக மோசமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்தே படையினர் வேகமான முன்நகர்வுகளை தவிர்த்து நிதமானமாக தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. விடுதலைப்புலிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெறும் வரை அரசாங்கத்திற்கு, யுத்தத்தை முடிவுக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையின் போது ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துச் செல்வதையிட்டு இந்தியா கவலை அடைந்துள்ளது. எனவே இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படாதிருக்க கவனம் செலுத்த வேண்டும். இந்திய மத்திய அரசாங்கத்தின் மேற்படி நிலைப்பாடு நேற்று இலங்கைக்கு உத்தி யோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. புதுடில்லியில் உள்ள இலங்கையின் பதில் தூதுவர் பாலிதகெனகொடவை தமது அலுவலகத்துக்கு நேற்று அழைத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராய ணன் இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உத்தியோக பூர்வமாகத் தெரிவித்தார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கைக்கு உடனடியாகத் தெரியப்படுத் தும்படியும் அவரிடம் நாராயணன் கூறி யுள்ளார். இலங்கையில் நிலைமை மோசமட…
-
- 3 replies
- 1.1k views
-
-
'வன்னியில் இடம் பெறும் யுத்தத்ற்கு பயந்து வன்னியிலுள்ள மக்கள் வவுனியாவிலுள்ள படையினரின் 'கொலை' வலையத்திற்குள் செல்லமாட்டார்கள்'. என கஜேந்திரன் எம்.பி நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். மேலும் : வன்னியில் இராணுவத்தினர் நடத்திக் கொண்டிருக்கும் யுத்தத்தால் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானதல்ல. இறுதியில் இந்த யுத்தம் முறியடிக்கப்படும். படையினர் பாரிய தோல்வியைச் சந்திப்பர். தமிழ் தேசியம் ஒன்றை அடையும் எமது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ் தேசத்தில் உள்ள படையினர் அரசுடன் விலகிக் கொண்டு தனித்தேசம் அமைக்க இடம் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் நாம் விரைவல் தமிழீழம் அமைப்போம். இது நிச்சயம் நடக்கும். வன்னியில் யுத்தத்தை ந…
-
- 1 reply
- 907 views
-
-
இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இலங்கை இராணுவத்தில் 1,60,000 பேர் உள்ளனர். மேலும் நாற்பதாயிரம் பேரை இராணுவத்தில் புதிதாக இணைத்து படையினரின் எண்ணிக்கையை இரண்டு இலட்சமாக்க இராணுவத் தலைமையகத்துக்கு பாதுகாப்ப அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. படையினரின் எண்ணிக்கை உயர்த்தப்படும் போது மேலும் புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக இராணுவத்திற்கு புதிதாக 14,000 பேரை சேர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் வரை இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இடம் பெறவுள்ளது. இராணுவத்திலிருந்து பெருமளவானோர் தப்பியோடிவரும் இந்நிலையில், இராணுவத்தின் எண்ணிக்…
-
- 0 replies
- 564 views
-
-
தன் சொந்த மக்களை பட்டினி போட்டு அவர்களின் மீது தாக்குதல் நடத்தும் ஒரே அரசு இலங்கையாகத்தான் இருக்க முடியும் என ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவனத தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் ஈழத்தமிழரின் பிரச்சனையில் கருணாநிதியின் போர்க்குரல் 8 கோடி தமிழர்களின் உணர்ச்சிக் குரலாய் பிரதமருக்கு தந்திகளாக குவிந்து தலைநகர் டில்லி அதிரட்டும். எனக் கூறியுள்ளார். மேலும் : நம் அண்டை நாடான இலங்கை பேரின அரசு தம் சொந்த மக்கள் மீது முப்படை தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதும் அதை உலக நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அளவு கடந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாக உள்ளது. ஏ9 பாதையை வெகுநாட்களுக்கு முன்பே அப்பேரினவாத அரசு மூடி விட்;டதா…
-
- 0 replies
- 790 views
-
-
புலிகளுக்கு எதிரான போரில் படையினர் வெற்றி பெறுவது நிச்சயம்: சிறிலங்கா பிரதமர் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 02:19 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் படையினர் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் பயங்கரவாதத்தை வெற்றி கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:30 நிமிடத்துக்கு தொடங்கியது. வழமையான நாட் பணிகள் முடிவடைந்ததும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து ரட்ணசிறி விக்கிரமநாயக்க உரையாற்றினார். குண்டுத்தா…
-
- 2 replies
- 1k views
-
-
இன்று ஸ்ரீலங்கா முகம் கொடுத்திருக்கும் நிலைமை 1940 ஆம் ஆண்டு தசாப்தங்களில் ஜப்பானும் தாய்வானும் சீன ஆதிக்கத்திற்கு முகம் கொடுத்தது போன்ற நிலைமையாகும். அந்தக் காலகட்டத்தில் சீன ஆதிக்கத்தினால் ஏற்பட்ட பல்வேறு சவால்களை ஜப்பானும் தாய்வானும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. படை பலம் வாய்ந்ததும் பெரும் கண்டப்பரப்பைக் கொண்டதுமாகிய சீனாவின் கண்டப்பரப்பின் கரையோரத்தில் பலமற்ற ஜப்பான் சிறிய நாடாகவும் அதைவிடச் சிறியதும் பலமற்றதுமான நாடாக தாய்வானும் இருந்தன. 1940 தசாப்தங்களில் சீனாவின் ஆட்சி அமைப்பும் பொருளாதார கூட்டமைப்புகளும் கம்யூனிஸ அடிப்படையில் மாறிக் கொண்டிருந்தவேளை ஜப்பானும் தாய்வானும் சீனாவின் ஆதிக்க அழுத்தத்திற்கு எதிராக பெரும் இக்கட்டுகளுக்கு மத்தியில் கம்யூனிஸத்துக்குள் சிக்காம…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தொடரும் யுத்தத்தில் கடந்த செப்ரம்பர் மாதம் படைத்ததரப்பில் 200 பேர் கொல்லப்பட்டு 997 பேர் காயமடைந்துள்ளதாகவும் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்ததாகவும் பிரதமர் ரட்ணகசிறி விக்கிரமநாயக்கா நாடாளுமன்றத்தில் இன்று (ஒக்07) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பினனர் அவசரகாலச்சட்டம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆற்றிய உரையின் போதே பிரதாமர் இந்தப் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சரணடைந்தால் மட்டுமே இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்யும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கைப்படையினரினால் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைகளை தடுப்பதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்மானால் விடுதலைப் புலிகளின் தலைவர் சரணடைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்தியர்களாகிய தமது கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-31-03
-
- 18 replies
- 2.8k views
- 1 follower
-
-
ஜானக பெரேராவின் படுகொலைக்கு அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும் -ரணில் வீரகேசரி நாளேடு 10/7/2008 9:44:54 PM - நாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்த இராணுவ வீரர் ஜானக பெரேராவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாமையே அவரது படுகொலைக்குக் காரணமாகும். மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலைக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜானக பெரேராவின் படுகொலை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை தொடர்பான அரசாங்கத்தின் விசாரணைகளில் ஐ.தே.க.வுக்கு துளியளவும் நம்பிக்கையில்லை என்றும் அவர் மேலும் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்து பேசுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு அவ…
-
- 0 replies
- 788 views
-
-
அவசரகாலச் சட்டம் 84 மேலதிக வாக்குகளால் மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணையை பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசுடன் இணைந்து தேசிய சுசந்திர முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.வாக்களிப்பின்ப
-
- 1 reply
- 752 views
-
-
மோதலில் காயமடையும் சகல படையினருக்கும் சிகி;ச்சையளிக்கும் வகையில் நாளை முதல் அனைத்துப் பிரதான வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் விமல் ஜயமான்ன தலைமையில் விசேட குழுவொன்று இதன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 500 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறும் வகையில் வைத்தியசாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமல் ஜயமான்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் இந்த அறிவிப்பானது வடமுனையில் மோதல்கள் நாளை முதல் அதிகரிக்கலாம் என உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அனுராதபுரம் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அல…
-
- 7 replies
- 1.4k views
-