ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
தனியார் பல்கலைக்கழக கல்விக்காக வட்டியில்லா கடனுதவியை வழங்கும் யோசனையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவான்வெல்ல பகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் குறித்த வட்டியில்லா கடனுதவி வழங்கப்படவுள்ளது. குறித்த வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்க…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 03:31 PM (எம்.மனோசித்ரா) வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து செய்யப்படவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெ…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது இராணுவ மயமாக்கல் தற்போது பௌத்த மயமாக்கலாக மாறி வருகின்றது என்றும் தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளை சட்டங்கங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்துள்ள எங்களின் பிரதேசத்தில் யுத்தம் நடைபெறுவதை போன்று இராணுவ மயமாக்கல் காணப்படுகின்றது. வீதிகள், அரச நிலங்கள் என …
-
- 3 replies
- 374 views
-
-
Published By: NANTHINI 27 MAY, 2023 | 05:32 PM மலையக மக்களது இலங்கை வருகையின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று (27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம் தலைமையேற்று நடத்திய இந்த நிகழ்வில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்று மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றினர். இதன்போது தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மலையக மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர். htt…
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
பொருளாதார நெருக்கடியானது ஆசியாவின் 20 ஏழ்மையான நாடுகளில் இலங்கையையும் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சைடர் மொங்கி என்ற தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை, வளர்ந்து வரும் ஒரு நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் நாணய மதிப்பிழப்பு, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாட்டால் மனிதாபிமான அவசரநிலை போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலைவரப்படி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள், இந்த அளவீட்டின் அடிப்படையி…
-
- 2 replies
- 486 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 03:13 PM (நா.தனுஜா) ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக சுமார் இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள் உள்ளிட்ட 72 பேர் அந்நாட்டுப்பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓமானில் பணிபுரியும் இலங்கைப்பெண்கள், தாம் மீண்டும் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த 8 ஆம் திகதி முதல் சுமார் இருவாரகாலமாக ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த 8 ஆம் திகதி சுமார் 10 பே…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
பயனற்ற முதலீடுகளை என்ன செய்யப்போகிறது இலங்கை? இலங்கை தற்போது மீண்டெழுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் 2.9மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானித்ததோடு, அதற்கான முதற்கொடுப்பனவையும் வழங்கியுள்ளது. சர்வதேச நாயண நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி கிடைத்திருந்தாலும் இலங்கை மீண்டெழுவதற்கு சரியான கொள்கையும், மறுசீரமைப்புக்களும் அவசியமாகின்றன.இலங்கை நெருக்கடிகளிலிருந்து ஒரளவு விடுபட்டிருப்பதற்கு இந்தியா, உள்ளிட்ட நாடுகள் கைகொடுத்து வருகின்றன. ஆனால் இந்த நிலைமை தொடரும் என்று கூற முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கை தனது சர்வதேச கடன்களை…
-
- 7 replies
- 649 views
-
-
Published By: RAJEEBAN 27 MAY, 2023 | 02:23 PM இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது. இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவைகள் ஆரம்பம் - செந்தில் தொண்டமான் 27 May, 2023 | 11:23 AM கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து விமான சேவ…
-
- 2 replies
- 487 views
-
-
இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கவலை பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நியாயமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கைய…
-
- 4 replies
- 288 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 09:50 AM கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் பீற்று தோட்ட லவர் ஸ்லிப் பிரிவில் விநாயக புரம் பகுதியில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை தம்பதியினரின் மகன் 5 வயதான ஹர்சித் என்ற குழந்தை உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் ஆங்கில மொழியில் கூறி புதிய சோழன் உலக…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – 18ம் திகதி நால்வர் கைது – மன்னிப்புச்சபை கவலை 27 May, 2023 | 11:43 AM பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக்…
-
- 0 replies
- 300 views
-
-
மூன்று மாணவர்களை தாக்கிய விவகாரம் : யாழில் ஆசிரியர் கைது யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1332889
-
- 0 replies
- 384 views
-
-
146 நாட்களில் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவு இந்த வருடத்தில் இது வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 273 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தின் 146 நாட்களுக்குள் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தால் …
-
- 0 replies
- 200 views
-
-
சம்பந்தனை சந்தித்தார் செந்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது, கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தனை-சந்தித்தார்-செந்தில்/175-317966
-
- 16 replies
- 1.1k views
-
-
சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டின் அடிப்படையில் அந்தப் பகுதி இராணுவ முகாமில் பணியாற்றிய இராமச்சந்திர ஆரியரட்ண என்ற இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். அவர் கடமையிலிருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்…
-
- 4 replies
- 329 views
-
-
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை திறப்பு! யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இரகசியமாக முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும் தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332760
-
- 9 replies
- 704 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 22 MAY, 2023 | 05:36 PM மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து எம்.பி. இன்று திங்கட்கிழமை (22) மதியம் அப்பகுதிக்கு விஜயம் செய்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்ப…
-
- 18 replies
- 1k views
- 1 follower
-
-
ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம் தமது மன்னிப்பை கோரியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்கொரணப்பட்ட இந்த திட்டம், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டது. இந்தநிலையில் டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு பாரிய திட்டங்களை உடன்பாடு இன்றி நிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில…
-
- 5 replies
- 678 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த இறைச்சியில் கொத்து ரொட்டி தாயரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்று 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது. கடந்த 09ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணம் , ஆணைப்பந்தி சந்திக்கு அருகில் உள்ள உணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய நபருக்கு பழுதடைந்த இறைச்சியில் கொத்து ரொட்டி தயாரித்து விற்பனை செய்ததாக பாதிக்கப்பட்ட நபரால் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து மறுநாள் 10ஆம் திகதி காலை மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , ஒரு தொகை பழுதடைந்த இறைச்சிகள் , உணவுகள் என்பன மீட்கப்பட்டதுடன் , உணவகத்தில் மேல…
-
- 0 replies
- 291 views
-
-
சிவிலியன்களின் போராட்டங்களை கையாளும் போது அரசாங்கம் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், சட்ட அமுலாக்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதலை மேலும் விரிவுபடுத்துவதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மின்னஞ்சல் முகவரியான rm.director.hr…
-
- 1 reply
- 307 views
- 1 follower
-
-
கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நன்கொடை அளித்த தமிழக யாசகர் பூல்பாண்டியன், தமது கடைசி நன்கொடையை தமிழக முதலமைச்சர் நிதிக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில், தனது கடைசி நன்கொடையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். தமிழக அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது என்ற நடைமுறையை 75 வயதான பூல்பாண்டியன் வழக்கமாக கொண்டுள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் பூல்பாணடியன் 50 லட்சம் ரூபாயை தமிழக அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிலையில், தமக்கு வயதாகிவிட்டதால் யாசகம் செய்வதை விடுத்து, கோயில்களுக்கு செல்வதன் மூலம், வாழ்க்கையை செலவிட திட்டமிட்டுள்ளதாக பூல்பாண்டியன் குறிப்பி…
-
- 3 replies
- 506 views
-
-
Published By: NANTHINI 25 MAY, 2023 | 09:34 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விகாரைகளில் சேவை செய்வதற்காக சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் இருந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் சேவை தொடர்பில் சரியான தகவல் எதுவும் இல்லை. இதற்காக வருடத்துக்கு 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்த நிலையை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னகோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25)இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 MAY, 2023 | 09:04 AM யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு இனந்தெரியாத குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/156183
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி! ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துடனுமான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் இலங்கை அரசாங்க அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் இருந்தனர். அந்தநிலையில் அண்மையில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவரும் சுதந்திர வர்த்தகம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் மிக விரைவில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட அதிக வ…
-
- 2 replies
- 264 views
-