ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்காது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான கொள்கைப்பிரிவு ஆணையாளர் பெனிற்றா பெரியோ வல்ட்னர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 949 views
-
-
மக்களின் துன்பங்களை கூறிய வவுனியா அரச அதிபர் இடமாற்றம் [செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 03:38 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் கருத்து கூறியதற்காக வவுனியா மாவட்டத்துக்கான சிறிலங்கா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மன்னார் மாவட்டத்துக்கான சிறிலங்கா அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளைக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கான பணியும் அரசினால் தற்போது வழங்கப்பட்டுள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நிக்கலஸ் பிள்ளைக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. சண்முகத்தின் இடமாற்றத்திற்கான சரியாக காரணங்கள் எத…
-
- 0 replies
- 615 views
-
-
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அனகொண்டா பாம்பு
-
- 4 replies
- 3.4k views
-
-
சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்களின் அடிப்படை மனித உரிமை, அரசியல் உரிமைகளை பாதுகாக்க உதவ வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 644 views
-
-
சிறிலங்கா படையினரின் பலமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2008, 05:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிக்களத்தில் சிறிலங்கா படையினர் பலமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றன. வன்னியின் பலமுனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தும் முனைப்பில் இருக்கும் சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. புதினம்
-
- 0 replies
- 2.2k views
-
-
நெருக்கடி மிகுந்த காலமொன்றில், எதிரியின் தலைமை 'நிர்வாக மையம்' நோக்கி அவள் நகர்த்தப்பட்டாள். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கு முன்னதாக ஒரு அனுபவத்தை அவள் பெற வேண்டுமென்பதே இந்தப் பயணத்தின் நோக்கம். முன்பின் அறிமுகமில்லாத எதிரியின் தளத்தில் அவள் நிலை பெற இந்தப் பயண அனுபவம், அவளுக்கு கைகொடுக்கக்கூடும். எந்தவேளையும் விழிப்போடு இருக்கும் பகைவரின் கண்களுக்குள் எத்துப்படாது நிற்க நிறைந்த திறமையும் - சாமாத்தியமும் வேண்டும். சிறு சந்தேகம் எழுந்தால் கூட அவளை மட்டுமல்ல - சூழவுள்ளவர்களையும் சேர்த்தே சிறையில் தள்ளிவிடக்கூடிய அல்லது கொன்றுவிடும் ஆபத்து அதிகம். ஆகவே, அந்தத்தளத்தின் அறிமுகத்தைத் தன்னுள் எடுத்துக் கொள்வது அவளுக்கு அதிக நன்மை பயக்கக்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிங்கள இனாவத அரசு தமிழ் மக்கள் மீது பாரிய இனஅழிப்பு நடவடிக்கையை தீவிரமாக முனைப்புப்படுத்தியுள்ளது. இது இன்று கூறித்தான் எவரும் புரிந்த கொள்ள வேண்டியதொரு விடயம் அல்ல. சர்வதேச சமூகம் புரிந்து கொண்டதானதொரு விடயம் தான் சர்வதேச சமூகம் இதனை வெளிப்படுத்தாமை அதன் அரசியல் சார்ந்த விடயமே தவிர புரிதல் சார்ந்த விடயம் அல்ல. இதேவேளை, சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ் மக்கள் மிகவும் தீவிரமிக்கதான போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதுவும் உலகம் அறிந்த விடயம் ஆகும். தமிழ் மக்கள் இப்போராட்டத்தை நடத்தாது போனால் இலங்கையில் தமிழ் இனத்தின் அடையாளம் இல்லாது போயிருப்பினும் கூட ஆச்சரியத்திற்குரிய தொன்றல்ல. இப்போராட்டத்தில் இன்று வன்னிப் பகுதியில் உள…
-
- 0 replies
- 1.2k views
-
-
றொபேட்டோ பிளக் - பிள்ளையான் சந்திப்பு: இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட்ஓ பிளக் இன்று மட்டக்களப்பில் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எவரும் இதன்போது அனுமதிக்கப்படவில்லை. இந்த சந்திப்பின் போது கிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை அமரிக்கத் தூதுவர் பிள்ளையானிடம் வலியுறுத்தி உள்ளதாக தெரியவருகிறது. குறிப்பாக கிழக்கில் மேலைநாடுகள் பல முதலீடுகளைச் செய்ய ஆர்வம் கொண்டுள்ள போதும் அங்கு நிலவும் ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம் பெறல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடராமல் இருக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக ரீ.எம்.வீ.பீயின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன…
-
- 3 replies
- 2k views
-
-
கனேடிய பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர்களின் செல்வாக்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது இலங்கைத் தமிழர்களின் வாக்குகள் ஆட்சியமைக்கும் கட்சிகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த 400இ000 த்திற்கும் மேற்பட்டோர் கனடாவில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு நிலவரத்தை மையமாகக் கொண்டு இலங்கைத் தமிழர்கள் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடாவின் லிபரல் கட்சி இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை ஓரளவு நியாயமாக அணுகக் கூடிய கட்சி எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஆட்சியில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி த…
-
- 14 replies
- 2.2k views
-
-
வத்திகானின் மக்கள் யாத்திரை கேந்திர நிலையத்தின் தலைவர் பிரான்சிஸ் அரின்சஸ் கர்தினால் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது, மடு தேவாலயம் குறித்தோ, அல்லது வேறு அரசியல் தலைப்புகளிலோ எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை என இலங்கையில் உள்ள வத்திகான் அபோஸ்தலர் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மடுதேவாலயத்தை இராணுவம் கைப்பற்றியமையை வத்திகான் பாராட்டியுள்ளது என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. வத்திகான் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்த போது மடு தேவாலயம் பற்றியோ, அரசியல் விடயங்கள் குறித்தோ எதுவும் பேசாத நிலையில் அரச ஊடகங்களின் ஊடாக ராஜபக்ஸ அரசாங்கம் அரசியல் லாபம் பெறும் நோக்கில் மத த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி டி பி விஜதுங்கா காலமானார். இவர் சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து சிறீலங்காவின் ஜனாதிபதியானார். சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா ஜனாதிபதி ஆகும் வரை இவரே ஜனாதிபதியாக அமர்ந்திருந்தார். தமிழ் மக்களை சிங்களப் பெரு விட்சத்தைப் பற்றிப் படரும் சிறுகொடிகள் என்று வர்ணித்ததுமின்றி.. புலிகள் அமைக்கப் போகும் தமிழீழத்தில் என்ன வளம் இருக்கிறது என்று கேள்வியும் கேட்டவர். இவருடைய ஆட்சிக்காலத்திலும் இவரும் சில இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு தோல்விகளை சந்தித்தவர் ஆவார். 1922 மாசித் திங்கள் 15 ம் நாள் பிறந்த இவர்.. சிறீலங்காவின் பிரதமராகவும் கடமையாற்றியுள்ளார…
-
- 5 replies
- 1.5k views
-
-
இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களிலும், சிறிலங்கா அரசு சீனாவுடன் நெருங்கிச் செல்வது குறித்து தனது அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. இதன் உச்சக்கட்டமாகத்தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளிப்படையான ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், இந்தியா ஒரு பிராந்திய சக்தி (Regional power)என்பதை வலியுறுத்திய நாராயணன், எமது வெளியுறவு கொள்கையின் வரம்புக்குள் அவர்களை இணைத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கின்ற நிலையில், இலங்கை தனது இராணுவ தேவைகளுக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு போவதை நிறுத்திக்கொள்ள வேண்டிய உச்சக்கட்டம் இதுவாகும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பின்னரும் மகிந்த நிர்வாகம் தமது சீனாவுடனான நெரு…
-
- 0 replies
- 1.5k views
-
-
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமையினால் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமெரிக்கா வீஸா வழங்க மறுப்பு பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருப்பதனால்இ ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கான வீஸாவை வழங்க முடியாதென அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னணி ஆங்கில செய்தித் தாள் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக விண்ணப்பித்த போது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த மறுப்பை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுசபை கூட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட முக…
-
- 6 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா படைக்கு ஆட்சேர்க்கும் படலம் மீண்டும் தொடங்கியது படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா படைத்தரப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மொனறாகலஇ அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் ஆட்சேர்ப்புக்கான நேர்முக பரிட்சைகள் முடிவடைந்த நிலையில் தற்போது இரத்தினபுரி மாவட்டத்தில் ஆட்சோப்புக்கான நடவடிக்கைகள் ஓக்ரோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் ஊடாக இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மாவட்டத்தில் உள்ள கிராம சேவகர் பிரிவுகள் மூலமாகவும் இளைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. பலாங்கொடஇ இம்புல்பே பிரதேச செயலக பிரிவுகளில் ஒக்ரோபர்…
-
- 0 replies
- 905 views
-
-
நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்த விட்டுள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை கண்டித்து நோர்வேயில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் முதல் பிற்பகல் 3:00 மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை அறிந்திருந்தும்இ பாராமுகமாய் இருக்கும் உலகின் மனச்சாட்சியை கே…
-
- 0 replies
- 751 views
-
-
இலங்கையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருடாந்தம் பாலியல் நோய்கள் சம்பந்தமாக 60 ஆயிரம் முதல் 89 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதுடன் இரண்டாயிரம் பேர் வரை ஊசியின் மூலம் போதை பொருளை உடலில் ஏற்றும் பழக்கத்தை கொண்டுள்ளதாகவும் அமைச்சின் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதேவேளை 40 ஆயிரம் பேர் வரை கஞ்சாவுக்கு அடிமையாகி இருக்கின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 845 views
-
-
அயலகத் தமிழர் கருத்தரங்கில் தொடக்க உரையாற்றிய மலேசிய நாட்டைச் சேர்ந்த திரு.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை: மலேசியத் தமிழர்கள் இரண்டு வகையான தமிழர்கள். வெள்ளைக் காரர்களால் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் - இலங்கை யில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என அங்கு இருப்பதாகவும். இந்தியாவி லிருந்து வந்தவர்கள் கூலி வேலைக்காக வந்ததாகவும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் ஓரளவு ஆங்கில அறி வோடு வெள்ளையர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்கள் என்றும் அறியலாம். பொறுப்பான சில பதவிகளில் இலங்கையில் இருந்து வந்தவர்கள் அமர்த்தப்பட்டார்கள். 1967ஆம் ஆண்டு மலேசிய நாடு விடுதலை பெற்றது. கடந்த ஆண்டு ஐம்பது ஆண்டு நிறைவு விழா நடந்த போது விடுதலை பற்றிய மறு ஆய்வுக்கு வாய்…
-
- 2 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி நகரிலிருந்து ஒரு சில நூற் மீற்றர்களுக்கு அப்பால் கிடுகளால் அமைக்கப்பட்டதும், வன்னியிலேயே மிகப் பெரியதுமான சமயலறை அமைந்திருக்கிறது.புலிகளால் நடத்தப்படும் இந்தச் சமயலறையில் புலிகளுக்கு மட்டுமல்லாமல், அண்மையில் அரசாங்கத்தால் வெளி நாட்டு அரச பிரதிநிதிகளோ அல்லது தனி நபர்களோ வன்னிக்குச் செல்வது தடை செய்யப்படும்வரை அவர்களுக்கும் கூட இங்கிருந்துதான் உணவு வழங்கப்பட்டு வந்தது.நீட்டுக் கைய்யுடைய சேட்டு அணிந்த பணியாட்கள் கடமை புரியும் இந்தச் சமயலறையில் தயாரிக்கப்படும் உண்வு கொழுமிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளின் உணவின் விலைக்கு ஒத்தது. இந்த வாரம் கிளிநொச்சியின் நகரப்பகுதிக்குள் செல்கள் வந்து விழத் தொடங்கியதால் புலிகள் இந்தச் சமயலறையை கழற்றி அதன் தளபாடங்களையும், உணவ…
-
- 4 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நோர்வேயின் அனைத்துலக விவகாரங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்கெய்மை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 902 views
-
-
மாத்தறை வெலிகமவில் இரு இனக் குழுக்களுக்கிடையில் மோதல் - பள்ளிவாசல் உள்ளிட்ட 7 கட்டடங்கள் சேதம் இலங்கையின் மாத்தறை மாவட்டம் வெலிகமப் பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (செப்21) சிங்கள மற்றும் முஸ்லீம் இனப் பிரிவுகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த மோதலால் 6 கடைகள் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையம், பள்ளி வாசல் என்பன சேத்திற்கு உள்ளாகி உள்ளன. இந்த நிலையில் நிலமையைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வர றபர்குண்டுத் தாக்குதல், கண்ணீர் புகைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 2 replies
- 1.2k views
-
-
வடக்கில் இருந்து வந்து கொழும்பில் மேல்மாகாணத்தில் தங்கியுள்ள 80 ஆயிரம் பேர் அரசின் அறிவுறுத்தலின் பிரகாராம் இன்று பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அரசு காலவரையறை விதித்துள்ள காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணிநேர இடைவெளியில் அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியான விடயமாகும். அரசின் அறிவிப்பு பெரும் களேபரம் ஒன்றை ஏற்படுத்தப் போகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரமுகரும் சட்டத்தரணியுமான க.யோகராஜன் இவ்வாறு கேள்வியும் சந்தேகமும் எழுப்பியுள்ளார். வடக்கிலிருந்து கடந்த 5 வருடங்களுக்குள் வந்து கொழும்பில் தங்கியுள்ள தமிழர்களை பொலிஸ் நிலை யங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது. ஒருநாளில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமா என…
-
- 0 replies
- 873 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்க ஜே.வி.பி தீர்மானம்: அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டங்களை முன்னெடுக்க ஜே.வி.பி. கட்சி தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகாமையில் எதிர்வரும் புதன்கிழமை (செப்24) இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடர்ச்சியாக மக்கள் வழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வரிகளை குறைத்தேனும் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், தற்ப…
-
- 0 replies
- 920 views
-
-
தமிழர்கள் பதிவு செய்யப்படுவது இன ரீதியான ஒடுக்குமுறை - மேலக மக்கள் முன்னணி வடக்கிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் கொழும்பிற்கு வந்த தமிழர்கள் மட்டும் பதிவு செய்யப்படுவது இனரீதியான ஒடுக்குமுறை என மேலக மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான பதிவு நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் பெரிதும் மன உலைச்சலுக்கு உட்பட்டிருப்பதாகவும், அடுத்து என்ன நேருமோ என்ற பீதியில் காணப்படுவதாகவும் மேலக மக்கள் முன்னணியின் பேச்சாளர் ஏ.என். குமாரகுருபரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்து வருவதன் காரணமாகவே வடக்கு தமிழர்கள் மேல் மாகாணத்தை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதிவுகள் நடைபெற…
-
- 0 replies
- 587 views
-
-
அப்பாவி தமிழ் மக்கள் மீது குண்டு மழை பொழியும் கொலைகார சிறிலங்கா அரசு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பில் கடந்த 5 வருடங்களாகத் தங்கியுள்ள வடக்குப் பகுதி தமிழர்கள் தொடர்பான பதிவுகள் சிறீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை 8:00 மணிமுதல் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் பதியப்பட்டன. சிறீலங்கா காவல்துறையினரது இந்த நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பதிவுகளை மேற்கொள்ள சென்ற காவல் நிலையங்களில், வட பகுதிகளைச் சேர்ந்த துணைப்படைக் குழு உறுப்பினர்களும், தமிழ் விரோத சக்திகளும் பொது உடையில் நின்று மக்கள் மத்தியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. பல்…
-
- 0 replies
- 1.2k views
-