ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
அழுத்து http://puspaviji.net/page121.html
-
- 0 replies
- 780 views
-
-
பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிக ளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரை அரச படையினர் மிகவும் அண்மித்து விட்டனர். அடுத்த வாரம் அளவில் அந்த நகரத்தின் மீது முதலாவது தாக்குதலை தொடுக்க எதிர்பார்த்திருக்கிறோம். இவ்வாறு இராணுவத்தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். நேற்று கொழும்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டது போல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அடுத்தவாரம் அளவில் கிளிநொச்சி நகர் மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள முடியும…
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 2 லட்சம் மக்கள் ஆபத்தான நிலையிலுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புகள் அபாயக் குரலெழுப்பியுள்ளன. இலங்கையில் செயற்படும் ஐக்கிய நாடுகளினது முகவர் அமைப்புகளையும், முக்கிய அரச சார்பற்ற அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஐ.நாவின் குழு வெளியிட்டுள்ள தனது வாராந்த அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் அநேகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ள மனிதாபிமான அமைப்புகள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் விமானக் குண்டுவீச்சும்,ஷெல் தாக்குதலும், சிறு ஆயுத பிரயோகமும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 734 views
-
-
மீனுக்குப்பஞ்மா? அல்லது மானுக்குத்தான் பஞ்சமா? காய்கறிக்குப் பஞ்சமா? பழவகைக்குப்பஞ்சமா? என்ன வளம் இல்லை எங்கள் எங்கள் ஊரில். காலையானால் ஆட்டுப்பாலில் கோப்பி கலந்து குடிப்போம், மதியமானால்கைக்குத்தரிசிச்ச
-
- 0 replies
- 1.2k views
-
-
நோர்வேயில் எதிர்வரும் திங்கள் அடையாள உண்ணாநிலை போராட்டம் [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 10:33 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நோர்வேயில் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன. நோர்வே நாடாளுமன்ற முன்றலில் எதிர்வரும் திங்கட்கிழமை (29.09.08) காலை 8:00 மணிமுதல் அடுத்த நாள் பிற்பகல் 3:00 மணி வரையான 32 மணித்தியாலங்களில் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மர…
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்மோகன்சிங் பிரதமரானது இந்திய நாட்டின் துரதிர்ஷ்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன் இலங்கையில் அரை நூற்றாண்டிற்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஓக்டோபர் மாதம் இரண்டாம் திகதியன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் இப்போரட்டத்திற்கான அவசியம் குறித்து, அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன், "வீரகேசரி' நாளிதழுக்காக வழங்கிய விசேட செவ்வி.... இப்பிரச்சினைக்காக சி. பி. ஐ உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் என்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு …
-
- 0 replies
- 657 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ். ஆயரின் செயலாளர் அருட்தந்தை எஸ்.ஏ.ரொசான் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 488 views
-
-
மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று நியூயோர்க்கில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தினைத் தொடர்ந்து அமெரிக்கப் பிரதிநிதி றிச்சர்ட் பௌச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 623 views
-
-
கனடா அரசின் முடிவானது பொறுப்பற்றது: விக்கிரமபாகு கருணாரட்ன [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 09:52 மு.ப ஈழம்] [பி.கெளரி] கனடா அரசு தனக்கு நுழைவு அனுமதி அளிப்பதற்கு மறுத்துள்ளதானது அதன் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதுடன் ஆபத்தானதும் கூட என்று இடதுசாரி கட்சியின் தலைவரும், நவசமாஜ கட்சியின் பொதுச்செயலாளருமான விக்கிரமபாகு கருணாரட்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கனேடிய தூதுவருக்கு எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது: பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து எனக்கு கனடாவுக்கான தற்காலிக நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் லண்டனில் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்கள…
-
- 0 replies
- 624 views
-
-
யுத்தம் ஒரு வருடத்திற்குள் முடிவடைந்துவிடுமென இராணுவ தளபதி சரத் பொன்சேகா கருதுகிறார். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண லேவண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் தேசிய தலைமைத்துவம் உள்ளது. எமக்கு வழங்கபட்ட இலக்கு பயங்கரவாதத்தை அழிப்பதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். கனடாவின் 'நாஷனல் போஸ்ட்' பத்திரிகையாளர் ஸ்ரெவார்ட் பெல்லிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியிலேயே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார். 'இலங்கையின் உட்புறம் யுத்தத்துக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வு' எனும் தலைப்பில் ஸ்;ரெவாட் பெல் போர் முன்னரங்க நிலைகளுக்கு தான் சென்று வந்த அனுபவங்களையும் பேட்டிகளையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய ஆறு பகுதி தொடர் கட்டுரையின் 5 ஆவது அங்கத்தில் சரத் பொன்சேகாவின் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஓர் இனததிற்கான விடுதலைக்காக பல தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதம் என்ற இலக்கணத்தை கற்பிப்பதற்கு மஹிந்தவும், கூட்டமைப்பு அரசும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். என்று த.தே.கூபின் பா.உ. மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழர்களின் விடுதலைப் போரட்டத்தை பயங்கரவாதம் எனும் இலக்கணத்திற்குள் கொண்டு வந்து பயங்கரவாதத்தை அழிப்பதாகவும் அதற்கு சாவதேசத்தின் ஆதரவை பெற்றறுக் கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் மேலும் சொன்னார். ஐ.நா சபையின் 63ம் கூட்டத் தொடரில் மஹிந்த ஆற்றிய உரை தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் கருத்தைக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைகளை …
-
- 0 replies
- 735 views
-
-
வீரகேசரி நாளேடு - நோர்வேயின் மத்தியஸ்தத்தை உதாசீனப்படுத்தி உதைத்துத் தள்ளிய சிங்கள பேரினவாத அரசாங்கம் இன்று வன்னித் தமிழர்களைக் காட்டி சர்வதேசத்திடம் கையேந்தி அவர்களின் காலில் விழுந்து கிடப்பது தமிழ் சமூகத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகின்ற வித்தையாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. யும் பாராளுமன்ற குழுவின் பிரதித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுடனான நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் விசேட தூதுவர் ஹன்சன் பௌயர் ஆகியோரின் சந்திப்பு குறித்து கேட்டபோதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, தமிழர் பகுதிகளில் சிங்களப் பேரினவாதம் கட்…
-
- 0 replies
- 621 views
-
-
வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைககள் முடிவடைந்த பின்னரே காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிக்க முடியும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றப் படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை முடிந்த பின்னரே பாதுகாப்பு அமைச்சு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தவிர காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இராணுவத்தினர் தங்கியிருப்பதால் நினைத்தது போல் உடனடியாக …
-
- 0 replies
- 894 views
-
-
தவறு இழைக்கிறார் கருணாநிதி "எமது சகோதரர்களான ஈழத் தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் ஈவிரக்கமற்ற அரக்கத்தனமான மனிதநேயமற்ற முறையில் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு இந்திய அரசு இராணுவ உதவியையும் ஆயுதங்களையும் தாராளமாக வழங்கி வருகின்றது. ""எனவே, இதற்குப் பிறகும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி மௌனம் காக்கக்கூடாது. உடனடியாகத் தனது மௌனத்தைக் கலைத்து, இலங்கைக்குப் படையை அனுப்பும் மத்திய அரசை அதற்காக எச்சரிக்க வேண்டும். ""குண்டு மழைக்கு நடுவினிலும், குருதி மழை நடுவினிலும் நின்று தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும்.'' இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் நேரடியாக வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார். தமிழக முதல்வரின…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயத்தால் நடுங்கும் பிள்ளைகளுக்குத் தாமும் நடுங்கியபடி ஆறுதல் கூறும் தாய்மார்களை வன்னியில் கண்டேன் தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர் கண்ணீருடன் பி.பி.ஸிக்கு அளித்துள்ள பேட்டி இது சிறுவர்கள் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதேபோல் பயத்தினால் நடுங்கியபடியே தாய்மார்கள் தம் குழந்தைகளை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதை என் இருகண்களினாலும் கண்டேன். இவ்வாறு மனமுருகி தெரிவித்திருக்கிறார் வன்னியிலிருந்து வெளியேறியுள்ள தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர். அங்குள்ள நிலைமை குறித்து பி.பி.ஸி. தென் ஆஸியசேவை அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது. தொண்டுநிறுவன பணியாளர் கூறியிருப்பது வருமாறு; புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினர் த…
-
- 0 replies
- 1k views
-
-
வெகுவிரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தேசியக்கொடியுடன் கிளிநொச்சிக்கு செல்வார் அந்த காலம் வெகுதொலைவில் இல்லை என அவரின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டின் தலைவர் எவரும் இலங்கையின் தேசியக்கொடியுடன் கிளிநொச்சிக்குச் செல்லவில்லை. தற்போது இலங்கையில் யாருடைய அழுத்தத்திற்கும் உட்படாத ஒருவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விளங்குவதாக பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். www.tamilwin.com
-
- 10 replies
- 2.7k views
-
-
கிளிநொச்சி நகரத்தின் மீது அடுத்த வாரமளவில் முதலாவது தாக்குதலை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பில் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடக்கே யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகாலக் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டதுபோல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் அளவில் கிளிநொச்சி மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
-
- 1 reply
- 2.2k views
-
-
-
தமிழர்கள் மீது தனக்குப் பரிவு அதிகம் என்பதைப் பறைசாற்ற, பந்தாவாக ஐ.நாவில் தமிழில் உரையாற்றியிருக்கின்றார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இது ஐ.நாவில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அரசாங்க முதல்வர்களுக்கும் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தலைமுறைக் கணக்கில் சிங்கள்ப் பேரினவாதிகளின் பேதம்நிறை இப் பெரும்பாசம் பாதியும் உண்மையில்லை எனப் பலமாகவே புரியும். காலங் காலங்காலமாக கயமைத்தனத்துடன் அவர்கள் கழித்த கோலங்கள்தான் எத்தனை. புலம்பெயர் சூழலில் வாழும் தமிழர்களின் நிகழ்ச்சிகளில் உரையாற்ற வரும் வெளிநாட்டவர்கள், எம்மோடு உறவாடுதாகக் காட்டிக்கொள்ள, மரியாதைக்குச் சொல்லும் ஒருவார்த்தையை, மற்க்காது பாடமாக்கி வந்து மழலைத் தமிழில் சொல்லிவிட்டுச் செல்வார்கள். …
-
- 14 replies
- 4.1k views
-
-
வீரகேசரி நாளேடு 9/25/2008 8:37:58 AM - ஆயுதங்களை கீழே வைத்து போர்த் திறன்களை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறி நாட்டை கூறுபோடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் சிறுவர் போராளியாகவிருந்த ஒருவரே இன்று கிழக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணத்தை விடுவித்து ஒரு வருடகாலத்துக்குள் நாம் இவற்றை நிறைவேற்றியுள்ளோம். பயங்கரவாதத்துக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. இதனை நாம் நிரூபித்துக் காட்டியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயலாளர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்றவகையில் டி.எம்.வி.பி கட்சியை வழி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செயலாளரின் வழி நடத்தலில் சில சந்தர்ப்பங்களில் பிள்ளையான் அரசாங்கத்திற்கு எதிராக கூறிய உள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறி;த்து கருணா, பிள்ளையானிடம் கருத்துக் கேட்டதை அடுத்து இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. சிவநேசத்துரை சந்திரகாந்தன், செயலாளரின் ஆலோசனைகள…
-
- 6 replies
- 2.8k views
-
-
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஊரங்குச்சட்டம் பிறப்பிக்கப்படும்; பட்சத்தில் அந்த மூன்று நாட்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைத்திருக்கும்படி இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் பணிபுரியும் ஐ.நாவின் மனிதாபிமான அமைப்புக்கள் உட்பட அனைத்து மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களுக்கும் எச்சரித்துள்ளது. விடுதலைப்புலிகள் படையினருடைய முன்னணிக் காவலரண்களையோ அல்லது யாழ்.குடாநாட்டின் மீதோ சில நாட்களில் தாக்குதல் தொடுக்கக் கூடும் என இலங்கை இராணுவம் கருதுகிறது. இதன்போது ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்படும் நிலை தோன்றலாம் எனவும் இராணுவம் எச்சரித்துள்ளது. இதேவேளை கரும்புலிகள் குழுவொன்று யாழ்; குடாநாட்டுக்குள் ஊடுருவியிருக்க்pறார்கள் என்றும் இதன்காரணமாக தொடர்ச்சியாக மூன்று நாட…
-
- 2 replies
- 2.8k views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்று வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் சந்தித்து கலந்துரையாடினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 953 views
-
-
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வேண்டுகோள் [வியாழக்கிழமை, 25 செப்ரெம்பர் 2008, 11:35 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த வேண்டுகோளை வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திலிருந்து விடுக்கின்றோம். இத்தீவில் தற்போது வாழ்ந்து வரும் தமிழ் மக்கள், சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் ச…
-
- 0 replies
- 746 views
-
-
எலோரும் கேட்கவேண்டிய கவிதை. அதில் சில வரிகள்: மானாட மயிலாடுகிறது தமிழகம் தான் வாழ போராடுகிறது தமிழீழம் கவிஞர் புலம்பெயர் தமிழனை குறிப்பிடவில்லையாயினும், புலம்பெயர்ந்த எமக்கும் அது பொருந்தும். இங்கு மானாட மயிலாட மட்டுமா?.. இன்னும் எத்தனை எத்தனை கூத்துக்கள்.... இதோ கவிதை: http://www.tamilnaatham.com/audio/2008/sep...du_20080922.m3u
-
- 1 reply
- 1.8k views
-