ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
வன்னியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம் முன்பாக மக்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் பின்னர் அவர்களின் நேற்றைய பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 603 views
-
-
உலக வல்லாதிக்க சக்திகளை அம்பலப்படுத்திய விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல்: பா.நடேசன் [சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2008, 06:22 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலானது தமிழின அழிப்புக்கு உலக வல்லாதிக்க சக்திகள் சிங்களத்துக்கு செய்கின்ற ஒத்துழைப்புகளை அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். வன்னி சிறிலங்கா படை நடவடிக்கை தலைமை மையமான வவுனியா படைத்தள அழிப்பில் வீரகாவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்கக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: எமது மக்கள் விடுதலைக் குறிக்கோள…
-
- 2 replies
- 798 views
-
-
முக்கியக் கட்டத்திற்குள் நுழைந்திருக்கும் வன்னிப் போர் - மனோகரன் வெள்ளி, 12 செப்ரம்பர் 2008 [பதிவு நிருபர்] வன்னிப் போர் தொடர்பான எதிர்வு கூறல்கள் , ஊகங்கள், அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் எல்லாம் மிகஉச்ச நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை ஊடகங்களில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. புலம்பெயர் தமிழர்களின் ஊடகங்களிலும் மனங்களிலும் கூட இத்தகைய நிலையே இன்னும் உள்ளது. தவிர படைத்துறை இதழ்களிலும் சர்வதேச படைத்துறை ஆர்வலர்கள் வன்னிப் போர் (விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசுபோர்) குறித்து எழுதிவருகின்றனர். ஆக, வன்னிப்போர் இன்று முக்கியமானதொரு விவகாரமாகியிருக்கிறது. அதிலும், குறிப்பாக இலங்கை இனப்பிரச்சனையில் இந்தப் போர் ஒரு தீவிரமான பாத்திரத்தை வகிக்கவும் போகிறது. …
-
- 0 replies
- 937 views
-
-
மனிதாபிமானமின்றி தமிழ் மக்களை நடாத்தும் இலங்கைக்கு எதிராக ஐ.நா. தடைகளை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் விடுக்க வேண்டுமென்று அந்நாட்டு சர்வகட்சிப் பாராளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் பெயரால் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சண்டையில் தமிழ் மக்கள் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இது மனிதாபிமானமற்றதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்தில் கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் மக்கள…
-
- 0 replies
- 618 views
-
-
இன்று சிங்கள மக்களிடையே தினமும் வந்து சேரும் இராணுவத்தினரின் சடலங்களால் அரசும் இராணுவமும் கிலி பிடித்துப் போய் இருக்கிறது. காயப்பட்ட இராணுவத்தால் நிரம்பி வழியும் வைத்திய சாலைகள். இறந்த இராணுவத்தினரின் உடல்களால் நிரம்பி வழியும் பிரேத கூடங்களும் இறுதிச் சடங்கு மலர்ச் சாலைகளும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுமோ என அஞ்ச வேண்டி உள்ளது. இந்த நிலை மேலும் அதிகரிக்கும் நிலை அல்லாது குறையும் சாத்தியம் இல்லாத நிலையே தெரிகிறது. இதுவரை புலிகளுக்கு எதிரான போரைச் சொல்லிச் சொல்லியே தேர்தல்களை நடத்தி வயிற்றை வளர்த்து வந்த அரசுக்கு ஆப்பு வைத்து விடுவது போன்று போரின் போக்கு அமைவது தெரிகிறது. இதனால் அரசின் பாதுகாப்பு அமைச்சின் ஊடகத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்களை வெளியேற்றுதல் என்பது பட்டினிச் சாவையும், துன்பியல் வாழ்க்கையையும், தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதற்கு சமனானது'' இவ்வாறு கிளிநொச்சி பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்பிய மனுவில் கருத்து வெளியிட்டுள்ள பொது அமைப்புக்களின் ஒன்றியம், உதவி அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி அச்சம் தருவதாகவுள்ளது. இந்த அறிவிப்பானது பட்டினிச்சாவையும், துன்பியல் வாழ்க்கையையும், தமிழ் மக்களுக்கு பரிசளிக்கின்றது. அத்துடன் அரசு மேற்கொள்ளும், தமிழினப் படுகொலைகளுக்கு சாட்சிகள் இல்லாமல் செய்யும் நிலைப்பாட்டையும் இது உருவாக்கியுள்ளது. இலங்கை அரசு மண்ணின் மீதும், மக்கள் மீதும் …
-
- 0 replies
- 454 views
-
-
புலிகளின் மும்முனை தாக்குதலில் இந்திய இராணுவ தொழில் நுட்பபிரிவினர் நேரடியாக சம்மந்தபட்டிருப்பது அம்பலமாகியதை அடுத்து வை.கோ மன்மோகன் சிங்கிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் ஈழத்தமிழர்களை அழித்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபடும் இலங்கை அரசுக்கு இந்தியா நேரடியாக இராணுவ உதவி வளங்கியுள்ளதை வன்மையாக கண்டித்திருக்கும் வை.கோ, இது ஒரு துரோச்கச்செயல் என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 4 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 75 வாகனங்கள் கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சகல அமைப்புகள் மற்றும் வாகனங்களை வன்னியில் இருந்து விலகி கொள்ள கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனங்கள் உள்ளிட்ட தன்னார்வ நிறுவனங்கள் இலங்கையில் இயங்கினாலும் இயங்காவிட்டாலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தற்போதைய அரசாங்கம் அதிகபட்ச செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள் எதனைக் கூறினாலும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை பாது…
-
- 0 replies
- 548 views
-
-
வன்னியில் இருந்து நேற்று முதல் வெளியேறிவரும் மனிதநேய அமைப்புக்களின் பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டு பணியாளர்களின் ஊர்திகளுடன், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளுர் பணியாளர்களின் ஊர்திகளும் மிகக் கடுமையான சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உள்ளுர் பணியாளர்களின் சொந்த இடம், முகவரி, உறவினர்கள் பற்றிய விபரங்கள் என்பன சேகரிக்கப்பட்ட பின்னரே, ஓமந்தை ஊடாக வவுனியா செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுவரை சுமார் 75 ஊர்திகள் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களில் இருந்து வவுனியாவிற்கு வந்திருப்பதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் வவுனியாச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை, எவ்வாறான இடர் ஏற்பட…
-
- 0 replies
- 546 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்;சி அல்வாய் பிரதேசத்தில் இருந்து மொனராகலை வெல்லவாய பிரதேசத்திற்குச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு பணியகத்தில் நேற்று (12) வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெல்லவாய பிரதேசத்தில் உள்ள உறவினரின் வர்த்தக நிலையத்தில் பணியாற்றி வரும் இவர் தனது பெற்றோருக்கு பணம் அனுப்புவதற்காக வெல்லவாய நகரில் உள்ள வங்கிக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் மனித உரிமை பணியகத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான சிவநாயகம் பார்;த்திபன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் வங்கிக்குச் செல்லும் போது தனது அடையாள அட்டையைக் கொண்டு செல்ல மறந்துள்ளத…
-
- 0 replies
- 519 views
-
-
வன்னியில் பேரவல நிலைக்கு வழி செய்யும் குரூர உத்தரவு 13.09.2008 போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான அவசர, அவசிய மனிதநேயப் பணிகளை ஆற்றிவந்த அனைத்துலகத் தொண்டர் அமைப்புகளையும், ஐ. நா. நிறுவனங்களையும் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு விடுத்திருக்கும் உத்தரவு, சர்வதேச மனிதாபிமான நெறிமுறைகளையும், அவலப்படும் மக்கள் தொடர்பான சர்வதேசத்தின் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகளையும் தடுத்து மீறும் செயற்பாடாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டும். ""இலங்கையில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இலங்கை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரினால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த சர்வதேச அமைப்பு…
-
- 0 replies
- 476 views
-
-
வவுனியாவில் வீரவரலாறு படைத்த கரும்புலி மாவீரர்களின் வித்துடல்கள் விதைப்பு [சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2008, 06:08 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் வீரவரலாறு படைத்த கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு புதுக்குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றதுடன் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டன. இராஜன் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் குமரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புத்தளபதிகளில் ஒருவரான இரட்ணம் பொதுச்சுடரை ஏற்றினார். வித்துடல்களுக்கு பெற்றோர், உடன்பிறப்புக்கள் ஈகச்சுடர்களை ஏற்றி மாலைகள் சூட்டினர். மலர்மாலைகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சிறப்புத் தளபதி இரட்ணம் வடபோர்முனை …
-
- 0 replies
- 601 views
-
-
http://www.tamilnaatham.com/articles/2008/...mar20080912.htm
-
- 0 replies
- 809 views
-
-
வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானத்தை செலுத்திச் சென்றவர்கள் வெளிநாட்டு விமானிகளாகவிருக்கலாம் எனும் சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு எழுந்துள்ளதாக டெய்லி மிறர் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தெரிவித்துள்ளார். விமானப் படை விமானங்கள், புலிகளின் விமானத்தைப் பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானங்கள், கடல் மட்டத்திற்கு தாழப்பறந்து சென்றதாகவும், சுப்பர் சொனிக் விமானத்தினைச் செலுத்தக்கூடியவர்களாலன்றி அவ்வாறு தாழப்பறந்து சிறிய ரக விமானங்களை செலுத்த முடியாது எனவும், புலிகளின் விமானங்களைப் பின்தொடர்ந்து சென்ற எப்-7 விமானத்தின் விமானி விமானப்படைத் தலைமையகத்துக்கு அற…
-
- 6 replies
- 3.5k views
-
-
இலங்கை கடற்படையினரின் சிறப்பான செயற்பாடுகளின் காரணமாக, கடற்புலிகளின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். " முன்னர் கடற்புலிகளின் பலம் பற்றி அதிகம் எடைபோட்டிருந்தோம். ஆனால் தற்போது அவர்களது சகலவிதமான பலமும் அழிக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினர் கடற்புலிகளின் பலத்தினை வெற்றிகரமாக ஒழித்துள்ளனர்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். வெலிசர கடற்படைத்தளத்தில் நடைபெற்ற, கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 100வது 'அரோ' எனும் பெயரிலான தாக்குதல் படகை பார்வையிடும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். "விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை தாக்கியழித்ததன் மூலம், புலிகளின் ஆயுத விநி…
-
- 14 replies
- 3k views
-
-
வவுனியா கூட்டுப்படை தலைமையம் மீதான தாக்குதலில் பங்கேற்ற 10 கரும்புலிகளினதும் வெலிஓயாப் பகுதிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 போராளிகளினதுமாக 14 போராளிகளின் உடலங்களை அரசு விடுதலைப்புலிகளிடம் ஐ சி ஆர் சி ஊடாக கையளித்துள்ளது. இச்செய்தியை.. பிபிசி/தமிழ் பிரசுரித்துள்ளது. வீரகாவியமான வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.
-
- 13 replies
- 3.3k views
-
-
பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 12 Sep 2008 09:18 pm இந்தியா என்றால் அது தமிழர்களுக்கு ஆதரவான அரசு என்ற மாயை தமிழீழத்தமிழரிடம் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. நேரு முதல் இந்திரா காந்தி, இராசீவ் காந்திவரை, இடையில் லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய், நரசிம்ம ராவ், வி.பி. சிங், சந்திரசேகர் என எல்லோருமே தமிழக - தமிழீழத் தமிழர்களை மட்டும் அல்ல மலையகத் தமிழர்களையும் கிள்ளுக்கீரையாகவே பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டகம் செய்து வந்திருக்கிறார்கள். நேரு காலத்தில் பத்து இலட்சம் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர் வாளா இருந்தார். லால் பகதூர் சாத்திரி காலத்தில் அவரும் சிறில்ங்கா பிரதமர் சிறிமா பண்டாரநாயக்காவும் செய்த உடன்பாட…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிக்சிக்கு நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சீன வெளிவிவகார அமைச்சருடன பேச்சு நடத்தினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியுடனான சந்திப்பு அலரிமாளிகையிலும் பிரதமருடனான சந்திப்பு பிரதமர் அலுவலக…
-
- 2 replies
- 2.1k views
-
-
உண்மையில் புதுடில்லி தூங்குகின்றதா? அல்லது பாசாங்கு பண்ணுகின்றதா? 12.09.2008 தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகின்றமை போல வவுனியாவில் பாதுகாப்புப் படையினரின் தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், இலங்கை விவகாரத்தில் புதுடில்லித் தரப்பின் இரட்டை வேடத்தை குட்டை ஒரேயடியாக அம்பலப்படுத்திவிட்டது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இலங்கை அரசுப் படைகளுக்கு இந்தியா வெறும் ஆயுதத் தளபாட மற்றும் தகவல் வசதிகளை மட்டும் வழங்கி உதவவில்லை, நேரடியாக ஆளணி உதவிகளையும் வழங்குகின்றது என்ற விடயத்தை அத்தாக்குதலில் இந்திய விமானப்படையின் சார்ஜன்ட் தரத் தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்தமை நிரூபித்துவிட்டது. ஏற்கனவே, ஆழ்கடலி…
-
- 5 replies
- 1.3k views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தை சிங்களப் பிரதேசத்திற்கு தரைவார்க்கும் நடவடிக்கைக்கு கிழக்குப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் திரு. பத்மநாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.பந்மநாதன், விஞ்ஞானபீடாதிபதி திருமதி.தேவதாசன், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி அன்றூ ஆகிய மூவரும் தீடீரென கொழும்புக்குச் சென்றுள்ளனர். கொழும்பு சென்ற இவர்களுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. சந்திப்பின் போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்றை மொனராகலை மாவட்டத்தில் உள்ள புத்தல எனும் சிங்கப் பகுதியில் திறப்பதற்கு துணைவேந்த ஒப்புதல் அளித்துள்ளார். இச்சந்திப்பை நிறைவு செய்த இவர்கள், உள்ளுர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னி மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதி சேகரிப்பு [சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2008, 12:09 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நடவடிக்கையினால் வன்னிபெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக வழங்குவதற்கான நிதி சேகரிப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொந்த நிதியில் முதற்கட்டமாக சேர்த்த மூன்று இலட்சம் ருபாவை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர். கத்தோலிக்க திருச்சபையின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பில் தங்கியுள்ள யாழ். ஆயர் தோ…
-
- 0 replies
- 625 views
-
-
இலங்கையில் இராணுவத்துக்கு உதவியாக இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் பொறியியலாளர்கள் கடமையாற்றுவது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மத்திய அரசு தமிழ் மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும். இலங்கையில் பசி பட்டினியால் தமிழர்கள் வாடுகின்றனர். ஆனால் இந்தியா இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப பொறியியலாளர்கள் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் இலங்கை அரசின் கூலிப்படையாக செயற்படுகின்றன என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். அண்மையில் வவுனியா நகரிலுள்ள கூட்டுப் படை தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் இரு இந்திய பொறியியலாளர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடுக…
-
- 0 replies
- 897 views
-
-
சிறீலங்கா அரசும், பிள்ளையானும் தம்மை ஏமாற்றியிருப்பதாகக் குற்றம் சுமத்தி, கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சுமார் 300 வரையிலான பட்டதாரிகள் மட்டக்களப்பில் ஒன்றுகூடி நேற்று முதல் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசும், பிள்ளையானும் உரிய பதில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கிய போதிலும், இதுவரை தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை என உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர். துணைப்படைக் குழுவின் துணைத் தலைவரும், கிழக்கின் முதலமைச்சருமான பிள்ளையான் தேர்தல் போட்டியிட்டபோது தமக்கு வாக்குறுதி வழங்கியபோதிலும், அந்த வாக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியான யுத்தம், இடம்பெயர்வு போன்ற காரணிகளினால் சிறுவர்கள் பாரியளவில் மன உளைச்சலுக்கு உட்படக் கூடும் என சுட்டிக்காட்டப்படுகிறது. நல்லூரில் அண்மையில் நடைபெற்ற ஓவிய மற்றும் கைப்பணிக் கண்காட்சியொன்றின் படைப்புக்கள் மூலம் சிறுவர்களது பாதிக்கப்பட்ட மனோ நிலை வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லூரைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறித்த கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்கப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் அதிர்வு பாலர் மனதில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 600 views
-
-
சிறீலங்கா படைகளில் ஏற்பட்டுள்ள ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கடுமையான ஆட்சேர்ப்பு இடம்பெற்று வருகின்றது. 60 ஆயிரம் பேர் வரையில் முப்படைகளுக்கும் இணைக்கப்பட்டிருப்பதால், தமது நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை 6 வீதமாகக் குறைவடைந்திருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வன்னி களமுனைகளில் சிறீலங்கா படயினர் நாளாந்தம் கடுமையான இழப்புக்களை சந்தித்து வருகின்ற போதிலும், அவை பற்றி செய்திகள் முழுமையாக வெளியாகுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 0 replies
- 1.4k views
-