Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் செல்ல அஞ்சுகின்றனர் - இரா.சம்பந்தன் வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யுத்த முன்னெடுப்புளால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயந்துள்ள நிலையில், மேலும் மூவாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து மரங்களில் கீழ் வாழுகின்றனர். இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தால் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தப்படுவார்கள் என அஞ்சுகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பாதுகாப்பான பிரதேசம் என்பது வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள…

  2. வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது – யோகி ( 8/28/2008 7:31:58 AM ) வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது என, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்க்கள ஆய்வுப் பொறுப்பாளர் யோகி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தொலைக்காட்சியின் தாயகக் கலையகத்திற்கு இன்று காலை வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். வன்னி மீதான சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு இறுகி வருகின்ற போதிலும், விடுதலைப் புலிகள் இதுவரை போர்க்கோலம் பூணவில்லை எனவும் யோகி சுட்டிக்காட்டியிருக்கின்றா

  3. யுத்தத்தை விற்று அதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முயற்சியும் கேவலமான இராஜதந்திர உத்தியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபைத் தேர்தல்களை வெற்றி பெறும் நோக்கில் கிளிநொச்சியை 24 மணித்தியாலத்திற்குள் பிடிக்க முடியும் என்ற பிரச்சாரத்திற்கு தற்போது என்னவாயிற்று என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தை காட்டி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்களின் போது அரசாங்க பயங்கரவாதத்தின் காரணமாக பல்வேறு இடர்களை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெர…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரால் அண்மையில் திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டுத் தாக்குதல்கள் நிராயுதபாணிகளாகச் சென்ற படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிராயுதபாணிகளாகச் செல்லும் இராணுவப் படையினரை ஏற்றிச் செல்லும் ஜெட்லைனர் என்ற கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக் காட்டப்படுகிறது. விடுமுறைக் காலத்தை முடித்து மீண்டும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபடச் செல்லவிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலகுரக விமானங்கள் பற்றிய ராடர் தகவல்கள் வழங்கப்பட்ட இரண்டு மூன்று நிமிடங்களில் புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப…

  5. இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிடவேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்துநிறுத்த உடனடியாக இந்திய மத்திய அரசாங்கம் தலையிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று புதன்கிழமை வலியுறுத்தியிருக்கிறது. சென்னையில் நிருபர்களிடம் நேற்று இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், வெறுமனே அவதானியாக இருக்காமல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாதென அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் குறி…

  6. வன்னியில் இடம்பெரும் மக்களுக்கு உதவ நிதி நெருக்கடி: உதவி வழங்கும் நாடுகளிடம் தொண்டர் அமைப்புக்கள் அவசர கோரிக்கை வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] போரினாரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கில் வன்னியில் இடம்பெயர்ந்துகொண்டிருக்கும

  7. பெரும் ஆப்பாக வருகின்றது ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை 28.08.2008 இலங்கை நிலைமை குறித்து நேரில் ஆராய்வதற்காக அண்மையில் இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் நகல் அறிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயவிருக்கின்றது. அதன் பின்னர் இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியப் பரிசீலனைக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, இங்கிருந்து புறப்பட முன்னர் தனது அவதானிப்புகள் குறித்துப் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் மேலோட்டமாகத் தகவல் வெளியிட்டிருந்தது. அப்போது அப்பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள் அவற்றுக்குரிய இராஜதந்திர மொழியில் அளவீ…

    • 4 replies
    • 1.7k views
  8. உணவு நஞ்சானதால் 202 படையினர் வைத்தியசலையில் அனுமதி.... Atleast 202 soldiers belonging to the Senanigama army camp in Dehiaththakandiya have been admitted to the Mahiyangana and Dehiaththakandiya hospitals due to what appeared to be food poisoning, Police Media spokesman confirmed. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=24642

  9. வானூர்தி தாக்குதலில் திருமலை துறைமுகத்தில் பாரிய அழிவு: விடுதலைப் புலிகள் [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 06:18 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையின் கிழக்கு தலைமையகத் தளத்தின் மீது வான் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 35-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: திருகோணமலை உட்துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது நேற்று முன்நாள் இரவு 9:15 மணிக்கு வா…

    • 0 replies
    • 2k views
  10. எதிர்வரும் காலங்களில் நடைபெறும் மோதல்களில் விடுதலைப்புலிகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை அதிகளவில் பயன்படுத்தக் கூடும் என காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திருகோணமலைத் துறைமுகத்தில் நேற்று விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் அந்த அதிகாரி இதனை குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கடற்படைமுகாம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வான் தாக்குதலில் 10 கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கடற்படையின் பதில் பேச்சாளர் எம்.பீ.கருணாரத்ன கூறியுள்ளார். எனினும் தமக்கு கிடைத்த தகவல்களின்படி 4 கடற்படையினர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த சிங்கள …

  11. கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.15 மணியளவில் தமிழீழு விடுதலைப் புலிகளின் வான்படையினர் திருகோணமலை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா கடற்படைக் கட்டளை மையத்தினை இலக்கு வைத்தே தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டும் 35 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இதன்போது தாக்குதலில் ஈடுபட்ட வான்னோடிகள் தளம் திரும்பியதை அடுத்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சந்தித்தபோது எழுக்கப்பட்ட புகைப்படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டுள்ளது. source:pathivu.com

  12. திருகோணமலை கடற்படைத்தளம் மற்றும் துறைமுகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் குறித்து சிறிலங்கா வான்படையினரும் கடற்படையினரும் தனித்தனி விசாரணைகளை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.2k views
  13. தென் தமிழீழத்தில் திருமலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புப் படையான சிறீலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தலைமையகம் மீதான வான் புலிகளின் வெற்றிகர தாக்குதலில் பங்கெடுத்த வான்புலிகளும் தேசிய தலைவரும். தாக்குதலின் பின் போராளிகள் வெற்றிகரமாக தளம் திரும்பி இருக்கின்றனர். தாக்குதலில் பங்கேற்ற வேங்கைகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக..! http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26765

    • 24 replies
    • 5.8k views
  14. காத்தான்குடியில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 01:19 மு.ப ஈழம்] [க.நித்தியா] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடிப் பகுதியில் நேற்று முன்நாள் இளம் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 602 views
  15. மீண்டும் நெடுநாள் இடைவெளிக்குபின் வருகிறேன், என்னைய்யா திருகோணமலை மலை சூட்டோட சூடா ஆள் வருகுதோ எண்டா பாக்கிறியள், இல்லை ஐயா, திருகோணமலையில பூசை நடந்தது சந்தோசம் தான், ஆனால் பாருங்கோ ஊரில பொடியள் கனகச்சிதமா வேலை பார்க்கினம், வெளியில நாங்கள் தான் காயுறோம், அதுவும் தமிழர் கோட்டையாம் கனடாவின்ட சுத்தம் சொல்லி வேலையில்லை, நான் தலைவர் இல்லை, நான் புலி இல்லை எண்டபடியால் கனடாக்காரர பகைச்சுகொள்ள பயப்பட தெவையில்லை பாருங்கோ. 23/8/2008 அன்று இந்த தமிழ்ர் கோட்டையில "மனச்சாட்சியின் குரல்" கேட்டது பாருங்கோ, உடன நாங்களும் அடியடா புடியடா என்டு ஓடிபோய் பார்த்தால், பேருக்கு பழய சிங்கள அரசங்கத்துக்கு குழப்படி பண்ணாதயுங்கோ எண்டு போட்டு, எங்க பொடியள போட்டு கிழிச்சிருக்கினம், உவயள்ட நோக்கம…

  16. வீரகேசரி நாளேடு 8/27/2008 10:54:57 PM - அடிப்படை உரிமைகளுக்காகவும் தனிமனித சுதந்திரத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. மனோகணேசனை பயங்கரவாதியாக சித்திரித்து அவரது செயற்பாடுகளை தடை செய்வதற்காக அரசாங்கம் மிகக் கேவலமான வழிமுறைகளைக் கையாளுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்கமே பயங்கரவாதிகளை உருவாக்கி வைத்திருக்கின்றது என்பதும் தீவிரவாதப் போக்கினை கடைப்பிடித்து வருகின்றது என்பதும் பாலித்த ரங்க பண்டாரவின் அலுவலகம் தாக்கியழிக்கப்பட்டதிலிருந்

  17. கிழக்குமாகாண மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கமே உள்ளதாக முதன்முதலாக ஏற்றுக்கொண்டுள்ளனர் ஒட்டுக்குழுவான பிள்ளையான்குழுவினர். கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்க கூறிவருகின்றபோதும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் பிள்ளையான்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலி புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என பிள்ளையான்குழுவின் பேச்சாளர் ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார். கஞ்சிகுடிச்சாறு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளுக்கு…

  18. வீரகேசரி நாளேடு 8/27/2008 8:09:38 PM - கடற்படையினரின் தாக்குதல்களையடுத்து தப்பிச் செல்லும் போதே புலிகளின் விமானம் இரு குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளது. விமானத் தாக்குதலில் 10 கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானம் ஒரு முறையே தாக்குதல் நடத்தியது. இதன் போது குறித்த விமானத்திலிருந்து இரு குண்டுகள் படைத்தளத்தை நோக்கி வீசப்பட்டுள்ளன. அவ்விரு குண்டுகளில் ஒன்று குறித்த தளத்தின் ஓதுக்குபுறமொன்றில் வீழந்து வெடித்தமையினாலேயே 10 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். திருகோணமலை கடற்படை தளம் மீதான புலிகளின் விமானத் தாக்குதல் குறித்து இர…

    • 7 replies
    • 2.9k views
  19. சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று காணாமல் போவோர் தொகை அதிகரிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 09:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அண்மைய நாட்களில் சிறிலங்காப் படையினரின் பகுதிகளிலும் அவர்களின் சோதனை நிலைகளிலும் காணாமல் போவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தொடர்பிலான முறைப்பாடு வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதன் விவரம் வருமாறு: 25.05.2008 அன்று வேலை தேடி மன்னாருக்குச் செல்வதாக கூறிச் சென்ற நாச்சிக்குடா கரியாலை நாகபடுவானைச் சேர்ந்த கணேஸ் குடியிருப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கதிரமலை சிறீதரன் என்பவர் வவுனியா சிறிலங்காப் படையினரின் முகாமைத் தாண்டிச் சென்ற பின…

    • 0 replies
    • 715 views
  20. ஊடகவியலாளர் சிவராம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்டிருந்த சிங்கள அறங்கூறுனர் சபையை கொழும்பு மேல் நீதமன்றம் கலைத்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் குறித்த விசாரணைகள் நேற்று(26) கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.ஏ.டி.ரத்னாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. சிங்கள மொழி பேசக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட அறங்கூறுனர் சபையின் எதிரில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த அறங்கூறுனர் சபையை மேல் நீதிமன்றம் நியமித்திருந்தது. எனினும் வழக்கின் 4வது சாட்சியாளரான பிரசாந்த புபுது ரத்னாயக்க என்பவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த அறங்கூறுனர் சப…

  21. திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருப்பது, இலங்கைப் படைத் தரப்பினர் மத்தியில் மனோநிலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பிராந்தியத்தை இந்த வருட இறுதிக்குள் தமது... கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையை மறுக்கவியலாது. மறுபுறத்தில் தமிழர்கள் மத்தியில் இந்தத் தாக்குதல் ஒரு தெம்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தமிழர்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குள் படைத்தரப்புப் பிரவேசித்திருப்பது சற்றுக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து விடுவார்களோ? என்ற அச்ச…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு, சிறீலங்கா அரசுத் தலைவரது சகோதரரும், ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ தன்னிடம் கேட்டிருந்த விடயம் தொடர்பாகவும், சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரது விசாரணையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியிருக்கின்றார். அத்துடன், சமாதான காலத்தில் வன்னிக்குச் சென்றமை தொடர்பாக தன்னிடம் அதிகம் விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மக்கள் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் மனோ கணேசனை சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்தவுடன், அடுத்த வாரம் சந்திக்க இருந்த சிறீலங்காவிற்கான நெதர்லாந்துத் தூதுவர், இன்று அவரை அவசரமாக அழைத்து சந்தித்துள்ளார். விடுதலைப…

  23. துணுக்காயில் கிளைமோர் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி; மூவர் காயம் [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 06:59 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் புத்துவெட்டுவானில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். துணுக்காய் பிரிவுக்கு உட்பட்ட புத்துவெட்டுவானில் இன்று புதன்கிழமை காலை தமது வீட்டுப்பொருட்களை ஏற்றச்சென்றவர்களின் உழுவூர்தி மீது ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதலை நடத்தினர். ஐயன்கன்குளத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்துவெட்டுவானில் தங்கியிருந்த குடும்பம் ஒன்று அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் அதன் பொருட்களை ஏற்றிச்சென்ற உழுவூர்தி மீது கிள…

    • 0 replies
    • 618 views
  24. "ஓயாத அலையாய் பொங்கியெழுவோம்" [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:13 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] நம்பிக்கையை நாம் இழக்கிலோம் ஓயாத அலையாய் பொங்கி எழுவோம் என்று யாழ் மாவட்ட உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் இணையம் அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓயாத அலையாய் எழுந்த எம் உறவுகளே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளையரின் வல்வளைப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்து 205 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைத்த்தீவுக் கோட்டையை தகர்த்தெறிந்து வெற்றிக்கொடி நாட்டிய மாவீரன் பண்டாவன்னியன் வரலாறு பதித்த வன்னி மண்ணில் நாம் வாழ்கின்றோம் என்பது பெருமையல்லவா! வெள்ளையர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆட்சி அதிகாரத்தை தமக்கே சாதகமாகப் பயன்ப…

    • 0 replies
    • 1.2k views
  25. நெருக்கடிக்குள் இடம்பெயர்ந்த மக்கள்: முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:20 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவில் ஐந்து உதவி அரச அதிபர் பிரிவுகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்று முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு திருமுறிகண்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற இடர்காலக் கூட்டத்தில் தலைமை உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது: நேற்று கிடைத்த தகவல்களின் படி முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் 31,959 குடும்பங்களைச் சேர்ந்த 1,32,993 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். எறிகணை வீச்சுக்களினால் நாள்தோறும் 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. உல…

    • 0 replies
    • 542 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.