ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143394 topics in this forum
-
கொழும்பில் தமது வாழ்விடங்கள் இடித்து, அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் தொடரூந்துகளையும், வீதிகளையும் வழிமறித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.இன்று மாலை காலியிருந்தும், புறக்கோட்டையில் இருந்தும் சென்ற தொடரூந்துகள் கொம்பனித்தெருவில் வழி மறிக்கப்பட்டதால், மாலை நேர பயணித்தில் ஈடுபட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொம்பனித்தெரு பகுதியிலுள்ள குடியிருப்புக்கள், வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு எதிரான சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கிய போதிலும், அதனையும் மீறி அரச அதிகாரிகள் குடியிருப்புக்களை தகர்த்துள்ளனர்.இதனால் கோபமடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங…
-
- 0 replies
- 688 views
-
-
வவுனியா, மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் மோதல்கள் மற்றும் தமிழீழ புலிகளின் எறிகணை வீச்சு ஆகியவற்றால் 17 சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காத் தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 745 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 449 views
-
-
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்காவின் தாக்குதல்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 506 views
-
-
சட்டவிரோத குடியிருப்புக்களை அகற்றும் விசேட அதிகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உண்டு என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: சட்டவிரோதமான குடியிருப்புக்களை அமைப்பது தவறான செயலாகும். கொம்பனி வீதி கிளனி பெசேஜில் இவ்வாறான சட்டவிரோதமாக அத்துமீறி கட்டப்பட்ட வீடுகளேயே அப்புறப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தால் வீடுகளை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக எதுவிதமான கருத்தையும் கூற நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். http://puspaviji.blogspot.com/
-
- 0 replies
- 655 views
-
-
தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தை 2வருடங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் இன்று கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து உரையாடிய போதே இராணுவத்தளபதி இவ்வாறு கூறியுள்ளார். நிலப்பரப்பைக் கைப்பற்றுவது மாத்திரம் அரசாங்கத்தின் நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ள சரத்பொன்சேகா ஜனநாயகத்தை ஸ்தாபித்து மக்களை மீளக் குடியமர்த்துவதற்குச் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இராணுவத் தளபதி சரத்பொன்சேகா இந்த வருட இறுதிக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது. இதற்கிடையில் விடுதலைப்பலிகளின் மூன்றில் இரண்டு வீதப்பலத்தை படையினர் குறைத்துள்ளதாக கு…
-
- 0 replies
- 606 views
-
-
சார்க் மாநாட்டுக்கு வருகை தரும் தலைவர்களின் பாதுகாப்புக்காக வரும் பாதுகாப்புத் தரப்பினரின் சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் செயற்படுவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது அதேநேரம் இலங்கையின் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அமைய இவர்கள் செயற்படுவார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது இலங்கையின் மேல் மாகாண சிரேஷ்ட காவல்துறை அதிகாரி நிமல் மெதிவக்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் படையினர் முதலில் தமது ஆயுதங்களை இலங்கையின் அதிகாரிகளுக்கு காண்பித்த பின்னர் தமது ஆயுதங்களுடன் செயற்பட அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://puspaviji.blogspot.com/
-
- 0 replies
- 483 views
-
-
புத்தளம் 9மைல்கல் கல்லடி எனும் இடத்தில் சுமார் 15அடிநீளமான முதலை சட்டவிரோதமாக அறுக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வேளையில் சுற்றிவளைத்த பொலிஸார் குறித்த இறைச்சியையும் அறுக்க பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றியதை படங்களில் காணலாம்.. (செய்தி & படங்கள்.. ரொம்ப முக்கியம் http://puspaviji.blogspot.com/2008/07/blog-post_19.html
-
- 0 replies
- 790 views
-
-
யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறுவு! யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 அகவையுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறுவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறு
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 1.7k views
-
-
தமிழக கடற்றொழிலாளர்களை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்வதைக் கண்டித்தும் இது தொடர்பில் சிறிலங்கா அரசை இந்திய அரசு கண்டிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று உண்ணாநிலைப் போராட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 959 views
-
-
ஈழப்பிரச்னை, போரை தமிழ்நாட்டு, இந்திய ஊடகங்கள் இன்று அணுகும் முறை பற்றி உங்களுக்கு வரலாற்றுரீதியான விமர்சனப்பார்வை இருக்குமல்லவா… இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்கள் உங்கள் சமுதாயத்தின் பிரச்னையை அணுகுவது, இலங்கைப்பிரச்னையை அணுகுவது எப்படிங்கறதுக்கு முன்னால இதற்குப் பின்னணியாக ஒரு முக்கிய விஷயத்தைப் பார்க்கணும்… பொதுவாகவே தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு ஒரு சர்வதேசப்பார்வையோ, வீச்சோ கிடையாது. ஏன், இந்தியாவிலேயே. டில்லி, பெங்களூரை விட்டா இந்திய நகரங்களிலேயே அதுக்கெல்லாம் நிருபர்கள் இல்ல. தென்னாசியாவை எடுத்துக்கிட்டீங்கன்னா, தமிழ்நாட்டு ஊடகங்கள் பலதுக்குக் கொழும்புல முழுநேர நிருபர்கள் இல்ல. மலேசியாவில், சிங்கப்பூரில் முழுநேர நிருபர்கள் இல்ல. தினமணிக்கு மாத்திரம் ஒருகாலத…
-
- 0 replies
- 783 views
-
-
கிழக்கின் உதயம்.. ஒரு வருடப் பூர்த்தி....! போர் செய்து போர் செய்து தமிழனின் உரிமைகளை தட்டிப்பறிக்கும் சிங்களம்.. நயவஞ்சகத் தமிழ் குழுக்களுடன் இணைந்து கண்டுவிட்ட கிழக்கு விடிவு.. சாதாரண மக்களுக்கு எந்த விடிவையும் தரவில்லை..! சிறீலங்கா அரசாலும் அதனோடு இணைந்து இயங்கும் துணைப்படைக் கும்பல்களாலும் விடிந்து விட்டதாகச் சொல்லப்படும் கிழக்கில் விடியாத உணர்வைத் தாங்கும் கிழக்கு மக்கள். பிபிசியின் பார்வையில்.. எங்கும் இராணுவம் நிற்கிறது. சோதனைச் சாவடிகளில் சந்தேகத்தில் சோதனைகள் தொடர்கின்றன. மக்கள் எல்லோருமே புலி என்று சந்தேகிக்கப்படுகின்றனர்.. அச்ச சூழலிலேயே வாழ வேண்டி இருக்கிறது. இப்படிச் சொல்கிறார்கள் கிழக்கு மக்கள். "அவர்கள் ( ஆமி) எனது மகனைப் …
-
- 2 replies
- 956 views
-
-
வடக்கு, கிழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் தென்பகுதிச் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர
-
- 0 replies
- 605 views
-
-
மன்னாரில் படையினர் நால்வர் மீது பதுங்கிச் சூட்டுத்தாக்குதல் [சனிக்கிழமை, 19 யூலை 2008, 10:01 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் கட்டாடிவயல் பகுதியில் சிறிலங்காப் படையினர் நால்வர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கிச் சூட்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். மன்னார் வடக்கு முதன்மைச்சாலையை அண்டியை கட்டாடிவயல் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை சிறிலங்காப் படையினருடன் மோதல் இடம்பெற்றது. இம் மோதலின் போது படையினர் நால்வர் மீது விடுதலைப் புலிகள் பதுங்கிச் சூட்டுத்தாக்குதலை நடத்தினர். புதினம்
-
- 0 replies
- 750 views
-
-
தென்மராட்சி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் பலி [சனிக்கிழமை, 19 யூலை 2008, 09:33 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். சாவகச்சேரி மடத்தடிப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படை அரண்மீது இரவு 7:30 மணிக்கும், மீசாலை வேம்பிராய்ச் சந்தியில் உள்ள படை அரண்மீது இரவு 8:30 மணிக்கும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இந்த இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். புதினம்
-
- 0 replies
- 716 views
-
-
மன்னாரில் படையினரின் நடவடிக்கை முறியடிப்பு: 7 படையினர் பலி- 15 பேர் காயம் [சனிக்கிழமை, 19 யூலை 2008, 08:49 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் மாவட்டத்தில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் நடவடிக்கை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். குருந்தன்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் நடைபெற்று படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். …
-
- 0 replies
- 615 views
-
-
படைத்தளபதியாரே ரெலிகொம் முகாமையாளரே பதில் கூறுங்கள் கடந்த யூன் மாதம் நடுப்பகுதியில் இருந்து யாழ்மாவட்டத்திற்கான சீ.டி.எம்.ஏ தொலைபேசி சேவை செயலிழந்திருக்கின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயம். குறித்த தொலைபேசி இணைப்பினை பெறுவதற்கு நமது யாழ் மக்கள் எதிர்கொண்ட நடைமுறைகள் மற்றும் அலைச்சல்களும் நீங்கள்; அறிந்ததே. இதுவரை சிறீலங்கா ரெலிகொம் நிறுவனம் இது குறித்து மக்களுக்கு முறைப்படி எதுவும் அறிவிக்கவில்லை இது விடயத்தில் தொடர்ந்தும் பொறுப்பற்றவகையில் மௌனம் சாதித்துக்கொண்டிருப்பது சிறீலங்கா ரெலிகொம்மினது யாழ் பிராந்திய முகாமையாளருக்கு அழகான விடயமல்ல. மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்கனவே பல வசதியீனங்களுடன் வாழும் யாழ் மக்களுக்கு பெர…
-
- 0 replies
- 989 views
-
-
கடந்த வாரம் கொழும்பிலிருந்து ஒரு கோஸ்டி சென்னைக்கு வந்தது. அந்தக் கோஸ்டியில் பழைய கெடுப்பாளர் டொக்டர். விக்கினேஸ்வரன், நிஜாம் காரியப்பர், மைக் பெரேரா, வீ.எம்.எஸ். விக்னேஸ்வரன் (விக்கி) ஆகியோர் முக்கியமான நபர்களாக சவேரா உயர்தர ஓட்டலில் அலைந்து கொண்டிருந்தனர். செய்தி கேள்விப்பட்டதும் ஓட்டலுக்கு விரைந்து வினவியதில், ராஜபக்சேயின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றிதான் கிழக்கு மாகாண சபை என்றும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அது கிடைத்தது என்றும், இந்தியாவில் இருப்பவர்கள் அந்தச் சபைக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று பார்ப்பவர்களிடத்து புலம்பிக்கொண்டிருந்ததாகவும
-
- 0 replies
- 1.1k views
-
-
-
on : 2008-07-20 குடாநாட்டு மக்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் விதிமுறைகள் " ஏ 9' கண்டி வீதி ஊடான போக்குவரத்துப் பாதையை மூடி யாழ். குடாநாட்டு மக்களைத் திறந்த வெளிச் சிறை யில் அடைத்துள்ளது அரசு என்பது வெளிப்படையான விடயம். அப்படிச் "சிறை' வைக்கப்பட்டிருக்கும் குடாநாட்டு மக்களுக்கு மேலும் மேலும் தொந்தரவு கொடுக்கும் கெடுபிடிகள் அநேகம். ஊரடங்குகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், சந் திக்குச் சந்தி தடை நிலைகள், சோதனைச் சாவடிகள், வாக னப் பதிவுகள் என்று சாதாரண வாழ்க்கை யையே வாழவி டாமல் இம்சிக்கும் கட்டுப்பாடுகள் அதி கம், அநேகம். அந்த வகையில் ஒன்றுதான் யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கு பயண அனுமதிப்பத்திரம் (பாஸ்) பெற வேண்டும் என்ற விதிமுற…
-
- 0 replies
- 532 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேலும் இரண்டு வருடங்கள் தேவை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
ஒரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் வைத்து ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்ட வர்த்தகரான தேவதாசன் சுரேஷ்குமார் சடலமாக ஈ.பி.டி.பி.அலுவலகத்தில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளார் இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த நால்வர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் மேலும் இரு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர் கொடுத்த தகவலின் பிரகாரம் வர்த்தகரான சுரேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ஈ.பி.டி.பி.யின் பாவனையில் உள்ள காணி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சடலமாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 7 படையினர் பலி- 13 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 18 யூலை 2008, 08:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக பிற்பகல் 1:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான முறியடிப்புத் தாக்…
-
- 1 reply
- 813 views
-
-
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள சார்க் தலைவர்கள் மாநாட்டை குழப்புதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த சதித்திட்டத்திற்கு பட்டாளி மக்கள் கட்சி பூரண ஆதரவு வழங்கி வருவதாக அந்த நாளேடு கூறுகிறது. இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதல்களுக்கு முகங்ககொடுக்கும் வகையில் விசேட கப்பலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களே விடுதலை புலிகளை உசுப்பேத்தி விடுவார்கள் போல கிடக்குது???? http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya…
-
- 0 replies
- 2k views
-