ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக, ஆளும் கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு? அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக விசேட நபர் ஒருவரின் ஊடாக ஜனாதிபதி, ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி 4 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த முடியும். எவ்வாறாயினும் பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவருக்கு தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த சந்தர்ப்பம் வழங்கப்பட மா…
-
- 0 replies
- 92 views
-
-
பௌத்த மயமாக்கலுக்கு எதிராக தெற்கில் போராடினால் இணைந்து கொள்வோம் – யாழ். மாணவர்கள் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை தெற்கில் செய்துகாட்டினால் இணைந்து போராடத் தயார் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், வசந்த முதலிகேவிடம் தெரிவித்துள்ளனர். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவத்தை கண்டித்து நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் பின்னரே அவர்கள் இந்த நிபந்தனையை முன்வைத்துள்ளனர். அண்மையில் தம்மால் கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என வசந்த முதலிகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இருப்பினும் தங்களது தரப்பில் இருந்து பத்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இரா.தர்ஷன் தெ…
-
- 0 replies
- 115 views
-
-
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய மீண்டும் இந்தியாவிடம் கடன் கோரும் இலங்கை நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்தியாவில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் உரங்களை கொண்டு வர இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி வழங்கப்பட்டது. நாட்டிற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவை பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை திருப்பிச் செலுத்த …
-
- 1 reply
- 193 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய Published By: T. SARANYA 25 MAR, 2023 | 12:45 PM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதற்கட்டமாகப் பெற்றுக் கொண்ட 330 மில்லியன் டொலரில் , 121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். இவ்வாறு கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளமையானது , கடன் ஸ்திரத்தன்மையை பேணுவதற் உதவுவதோடு , எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையை காப்பாற்றுவதில் சாதகமான தாக்கத்தை செலுத்தும் என்றும் நிதி இராஜாங்க அமைச…
-
- 5 replies
- 341 views
- 1 follower
-
-
சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு நன்கொடை ! இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சின் செயலாளர் பன்கஜ் ஜேன் உள்ளிட்ட குழாத்தினரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக லங்கா IOC அதன் விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஜெக்கட் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இதன்போது வழங்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ள…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை விற்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:08 PM (எம்.மனோசித்ரா) இலாபமீட்டும் நிறுவனங்கள் அல்லது சொத்துக்கள் மீதே முதலீட்டாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். எனவே தான் அதிக இலாபமீட்டக் கூடிய வகையிலும், பாரிய கடன்களை மீள் செலுத்தக் கூடிய வகையிலும் சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளயர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்…
-
- 8 replies
- 937 views
- 2 followers
-
-
7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் - ஜனாதிபதி Published By: PRIYATHARSHAN 20 MAR, 2023 | 10:51 PM சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். …
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
டிசம்பரிற்கு முன்னர் தேர்தல் -மகிந்த Published By: RAJEEBAN 27 MAR, 2023 | 03:50 PM 2023 டிசம்பரிற்கு முன்னதாக தேர்தலொன்று இடம்பெறலாம் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனது கட்சி எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளது என அவா குறிப்பிட்டுள்ளார். டிசம்பரிற்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் என நான்கருதுகின்றேன் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தனது கட்சி மீண்டும் ஐக்கியப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/151516
-
- 0 replies
- 537 views
- 1 follower
-
-
பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் !!! வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமனான பர்வத விகாரை என பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பிற்பாடு மக்கள் இம் மலைக்குச் சென்று சிவமூர்த்திகளை வழிபட தொடங்கியிருந்தனர். இந்நிலையில் அங்கு வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்த போதும் அத்தடைகளை தாண்டி மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவந்தனர். …
-
- 2 replies
- 913 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை தடையின்றி நடைமுறைப்படுத்த அயர்லாந்து பாணியில் புதிய பிரிவு - ஆராய்கின்றது அரசாங்கம் Published By: RAJEEBAN 27 MAR, 2023 | 11:11 AM சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் எந்த தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அயர்லாந்து பாணியிலான நடைமுறைப்படுத்தும் பிரிவொன்றை ஏற்படுத்துவது குறித்து ஆராய்ந்துகின்றது. தடைகள் காரணமாக சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் இடை நிறுத்தப்படுவதை தவிர்ப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது. இதனை தவிர்ப்பதற்காக விசேட அதிகாரங்களுடன் விசேட பிரிவொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது. குறிப…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் - ஜனாதிபதி Published By: Rajeeban 27 Mar, 2023 | 09:17 AM அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் சீனாவுடனான ஈடுபாடுகள் குறித்தும்இலங்கை அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹவார்ட் பல்கலைகழகத்துடனான மெய்நிகர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் என்ற அச்சத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். துறைமுகம் சீனாவிற்…
-
- 0 replies
- 652 views
-
-
வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை – சர்வதேச நாணய நிதியம் அரசாங்க வருமானம் பாதிக்கப்படாத வகையில் வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம், இந்நாட்டின் தொழில் நிபுணர்களுக்கு உறுதியளித்துள்ளது. வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதி தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது. வரி சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களை தொடர்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328615
-
- 0 replies
- 298 views
-
-
600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த முயற்சி; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த இடமளிக்கப் போவதில்லை - இ.பெ.கூ சேவை சங்கம் Published By: NANTHINI 26 MAR, 2023 | 04:46 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புக்களை இழப்பார்கள் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்க தலைவர் ஜகத் விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். துறைமுகம், மின்சாரம் மற்றும…
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல் “இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இது பௌத்த சிங்கள நாடு. இப்படி இருக்கும் போது நாட்டின் எந்தப் பகுதியும் தமிழருக்கு…
-
- 12 replies
- 1k views
-
-
வேற்று நாட்டவர்கள் மதமாற்ற எண்ணத்துடன் செயற்பட்டால் விரட்டியடிக்கப்படுவார்கள்- மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை March 25, 2023 சைவ சமயத்தவர்களை மதமாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ நடவடிக்கைகள் மேற்கொண்டால் விரட்டியடிக்கப்படுவார்கள் என மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (25) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில் , இராவணன் ஆண்ட சிவ பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக சைவ சமயத்தினை பின்பற்றுகின்ற மக்களின் மரபுகளை அழித்து இல்லாதொழிப்பதற்காக கடந்த 400 ஆண்டுகளாக வேறு நாடுகளிலிருந்து வருகை தருகின்றன…
-
- 20 replies
- 1.1k views
-
-
100-150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருப்பினும், இது மாற்று விகிதங்கள், அந்நிய கையிருப்பு அல்லது பணவீக்கத்தை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றால் மட்டுமே ஏற்படும். கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற மின்னணு சாதனங்கள், அத்துடன் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், உணவு, ஆடைப் பொருட்கள், தோல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் அதேவேளை தொழில்கள், விவசாய உபகரணங்கள், குளியலறை சாதனங்கள…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு புதிய துறைத் தலைவர் நியமனம் Published By: NANTHINI 26 MAR, 2023 | 06:12 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று சனிக்கிழமை (25) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின்போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில், ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்க…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
அரச சம்பளத் தொகையில் பெரும்பகுதி இராணுவத்திற்கே செல்கிறது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்) பெரும்பகுதி பொலிஸ் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு செலவிடப்படுவதாக பேராதனை மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 69,491 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க மாத்திரம் 33,940 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தலைமையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேர…
-
- 1 reply
- 554 views
-
-
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணையில்லா வழக்குகளை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் தலைமையக கட்டளைத் தளபதிகள், நிலையத் தளபதிகள் மற்றும் போக்குவரத்து திணைக்கள கட்டளைத் தளபதிகளை அழைத்து வாய்மொழியாக அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த பிறகு, அவர்கள் இரண்டு முறைகளில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் அந்த சாரதிகளை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் தலைமையகம் மற்றும் நிலையத் …
-
- 1 reply
- 431 views
- 1 follower
-
-
அரச சேவையாளர்களின் வேதனம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் – அமைச்சர் நளின் வலியுறுத்தல் அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜா எல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் வேதனம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் வேதனமும் அதிகரிக்கப்பட வேண்டும். அதனூடாக மக்களின் வருவாயை அதிகரித்து நாட்டின் பொருளாதா…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் அம்பலமாகிறது பிள்ளையானின் படுகொலைகள் மற்றும் ஊழல்கள் - பழிவாங்கப்படும் அரச அதிகாரிகள்! Vhg மார்ச் 25, 2023 தேர்தல் விதிமுறைகளை மீறி சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான் ) தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரச அதிகாரிகளை அடக்கி பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட சந்தனமடு ஆற்றுப்பகுதியை கடப்பதற்கான வள்ளம் ஒன்றினை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் மூவரும் பிள்ளையானுக்கு ஆதரவாக செயல்படும் அரச அதிகாரிகள் இருவருமாகச் சென்று நேற்றைய தினம் கையளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலைய…
-
- 0 replies
- 748 views
-
-
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை போரின் போது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கடும் கரிசனையை வெளியிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கான பொறுப்புக் கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்கள் மற்றும் இனங்காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டது. ஐக்க…
-
- 0 replies
- 540 views
-
-
வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் - சம்பிக்க ரணவக்க Published By: DIGITAL DESK 5 25 MAR, 2023 | 08:10 PM சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மொத்த நிதி தேவையை 13 சதவீதத்திற்கு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் தேசிய கடன் அறவீட்டை குறைந்த மட்டத்தில் இரத்து செய்ய நேரிடும். இதனால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் வங்கி வைப்பாளர்கள் ஏதாவதொரு வழியில் பாதிக்கப்படுவார்கள், ஆகவே நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதையிட்டு பட்டாசு வெடித்து, கொண்டாடுவது அவசியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவி…
-
- 0 replies
- 636 views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது முறிந்து விழுந்த மரம் : மயிரிழையில் தப்பிய தாய்மார் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 11:05 AM வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்தமையால் மயிரிழையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் உயிர் தப்பியுள்ளனர். நேற்று (24) மாலை வவுனியாவில் மினி சூறாவளியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2225 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகைக்கு மேலே அருகில் இருந்த மரம் ஒன்றின் பாரிய கிளை ம…
-
- 2 replies
- 309 views
- 1 follower
-
-
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:53 PM (எம்.மனோசித்ரா) நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குற…
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-