Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1 பில்லியன் டொலர் கடனை நீடிக்க இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று கைச்சாத்திட்டுள்ளது. இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் 2023 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய 1 பில்லியன் டொலர் கடனில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் 576.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்…

  2. Published By: DIGITAL DESK 3 30 MAY, 2023 | 03:58 PM வடமாகாணத்தில் மே மாதத்தில் திங்கட்கிழமை 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 10 பேரும் , கிளிநொச்சியில் 03 பேரும் மன்னார் , முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தலா ஒருவருமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் , யாழ்ப்பாணத்தில் அதிகாரிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயவுள்ளதாகவும், அதன்போது , போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவற்றினை…

  3. நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுக்க ஜனாதிபதி உத்தரவு !! நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு தரப்பினரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்கள் தொடர்பில் சில புலனாய்வு தகவல்கள் ஜனாதிப…

    • 1 reply
    • 328 views
  4. கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபட்ட ஒருவர் மட்டு மாமாங்கம் ஆலையத்தில் உயிரிழப்பு ! கதிர்காமத்திற்கு சந்நதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்த யாத்திக்கார் ஒருவர் இன்று திங்கட்கிழமை (29) ஆலையத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 6ம் திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரை யாழ் சந்நதி முருகன் ஆரலயத்தில் ஆரம்பித்த பாதையாத்திரை குழுவில் பங்கேற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்து ஆலைய வளாகத்தில் த…

  5. மேலும் 2 விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் Arkia ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணிப்பதால், இதற்கு முன்னர் இலங்கையில் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆர்க்கியா எயார்லைன்ஸ் இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ள…

  6. Published By: VISHNU 29 MAY, 2023 | 10:18 PM வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இணைவழி மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரக…

  7. Published By: DIGITAL DESK 3 29 MAY, 2023 | 01:07 PM இலங்கை மத்திய வங்கியால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான 'பண வரம்பு தேவை' (பண வரம்பு) வரம்பை நீக்கியுள்ளது. இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/156434

  8. பட மூலாதாரம்,MR GAMAGE 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் கிடைத்த உலகிலேயே மிக பெரியதாக அறியப்பட்ட கொத்தணி என கூறப்பட்ட ரத்தினக்கல் கொத்தணி, முன்பு குறிப்பிடப்பட்ட பெறுமதியை விட மதிப்புக் குறைவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் கோப் குழுவில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது. ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் செயற்பட்ட விதமானது, அதன் நிபுணத்துவத்திற்கு ஏற்புடையது அல்ல என்…

  9. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் உத்தேசம் இப்போது இல்லை Posted on May 28, 2023 by தென்னவள் 35 0 தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தற்போது இந்தியாவுக்கு அரசியல் ரீதியான விஜயத்தை மேற்கொள்ளும் உத்தேசம் இல்லை என்றும் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. …

    • 1 reply
    • 218 views
  10. பொது நினைவுத் தூபியை ஏற்றுக் கொள்ள முடியாது ! Posted on May 28, 2023 by தென்னவள் 35 0 அரசாங்கம் முன்மொழிந்துள்ள அனைத்து நபர்களையும் நினைவு கூருவதற்கான பொது நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன், பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு என்பதோடு போரை மேற்கொண்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே இடத்தில் நினைவு கூர முனைவதானது முரண்நகையாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்த பொதுமக்கள், முப்படையினர் மற்…

    • 1 reply
    • 295 views
  11. Published By: DIGITAL DESK 3 29 MAY, 2023 | 05:42 PM (எம்.நியூட்டன்) பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்றால் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை கல்வியால் உச்சத்திற்குக் கொண்டுவர முடியும் என செஞ்சோற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்தார். செஞ்சோற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அறநிதிய சபை நடாத்தம் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்படத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பேராசிரியர்கள் சமுகப்பொறுப்பாளர்கள் சான்றோர்கள…

  12. நாடு திரும்பிய ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி நேற்று (27) இரவு நாட்டை வந்தடைந்ததாக ´அத தெரண´ விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்கிழமை நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, சிங்கப்பூருக்கு விஜயம் செய்த பின்னர் ஜப்பான் சென்றிருந்தார். ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். அத்துடன், அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல வர்த்தக சந்திப்புகளில் கல…

    • 5 replies
    • 613 views
  13. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார். அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் …

  14. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வரவு செலவுத் திட்ட ஆதரவை வழங்குவதற்காக 350 மில்லியன் அமெரிக்க டொலர் விசேட கொள்கை அடிப்படையிலான கடனுதவிக்கு அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டிற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் தொகுக்கப்பட்ட நிதி உதவியின் ஒரு பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது என ADB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, இது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், பொருளாதார மீட்சி மற்றும் நிலையான அபிவிருத்திக்கு அடித்தளம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடி மற்றும் இலங்கை மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள், குறிப்பாக பெண்கள் மீது அதன் தாக்கம் குற…

  15. சம்பந்தனிடம் சஜித் கூறியது என்ன? வெளியான தகவல்! எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தற்பொழுது தகவல்வெளியாகியுள்ளது. இதற்கமைய, இனப்பிரச்சினை விவகாரத்தில் பிளவுபடாத நாட்டுக்குள் நியாயமான முறையில் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சகல தரப்பினருடனும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்குத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலும் விரிவாகக் கலந்த…

    • 8 replies
    • 686 views
  16. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, அதியுயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் கருவிகளை பிரமுகர் முனையத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் ஸ்கேனிங் சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், விஐபி முனையத்தைப் பயன்படுத்துபவர்களின் பொருட்கள் மற்றும் பைகளை ஆய்வு செய்ய அத்தகைய இயந்திரங்கள் எதுவும் இல்லை. சுங்கத்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இது நிறுவப்படவுள்ளது. https://thina…

  17. Published By: RAJEEBAN 29 MAY, 2023 | 12:21 PM வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது என அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.மலையமக்களும் நீண்டகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும்இன அழிப்பிற்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் மலைகய மக்கள்இனப்படுகொலையையும் சந்தித்துக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மலையக மக்களின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் மலையக மக்களின் மாண்பினைப் பாதுகாக்கும் அமைப்பு சார்பாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கை…

  18. Published By: NANTHINI 29 MAY, 2023 | 01:47 PM யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமொன்றும் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, கனரக வாகன சாரதி கைதான சம்பவம் இன்று திங்கட்கிழமை (29) மதியம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, முட்டாஸ் கடை சந்திக்கு அருகாமையில் நடந்த இவ்விபத்து தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் யாழ் நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனமொன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மீசாலையைச் சேர்ந்த இராஐரட்ணம் அபிதாஸ் என்கிற 29…

  19. நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது! நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து வருகைத் தந்த அவர் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் வருகை தந்த நிலையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது சுங்கப்பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1332599

  20. Published By: NANTHINI 14 MAY, 2023 | 02:28 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக தேசிய கடன்களை மறுசீரமைப்பது மிகக் கடினமான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள பொருளியல் நிபுணர்கள், இருப்பினும் கடன் மறுசீரமைப்பு என்பது ஒரு சத்திர சிகிச்சையை போன்றது என்றும், அதனை ஒரே முறையில் சரியாக செய்து முடிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்திட்டத்தின் கீழ், சுமார் 3 பில்லியன் டொலர் கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் எட்டப்பட்ட நிலையில், கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்றிட்டத்தை ஏப்ரல் …

  21. வாகனங்களை எடுத்து பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் வாடகை அடிப்படையில் வாகனங்களை எடுத்துச் சென்று அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ சிப்பாய் எனவும் மற்றைய சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் எனவும் போலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் வியாபார நோக்கத்திற்காக பதுளை மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து வாகனங்களை வாடகை தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, வான் என பல வாகனங்கள் இவ்வாறு வாடகைக்கு விடப்பட்டு வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் இவ்வாறு வாடகை அடிப்படைய…

  22. சிறைச்சாலை கூரை மேலேறி கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது. மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=173735

  23. Published By: VISHNU 28 MAY, 2023 | 04:39 PM திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரனை தொடர்பான நடமாடும் சேவை ஞாயிற்றுக்கிழமை (28) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த விசாரனையினை காணாமல் போன அலுவலகம் முன்னெடுத்திருந்தது. காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களது சாட்சியோடு காணாமல் போனோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். இதில் கிண்ணியா,கந்தளாய்,தம்பலகாமம் ஆகிய பிரதேச பகுதிகளை உள்ளடக்கியவர்களில் சுமார் 40 க்கும் மேற்போட்டோர்கள் கலந்து கொண்டு சாட்சியங்களை வழங்கினர். இதில் காணாமல் போன அலுவலக உயரதிகாரிகள்,தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிர…

  24. Published By: RAJEEBAN 28 MAY, 2023 | 12:14 PM சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது என வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடா நாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றுகையில் இந்திய வெளிவி…

  25. சீனக் குற்றச்செயல்களின் கேந்திரமாகும் இலங்கை? அண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர். அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் குறித்த குழுவினர் தங்கியிருந்ததாகவும், பல்வேறு தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டபோது, சீனப் பிரஜைகள் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவை பொலிஸாரால் கைப்பற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.