ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143386 topics in this forum
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் டாங்கி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 858 views
-
-
வன்னி மற்றும் திருகோணமலையில் இடம்பெற்ற தாக்குதல்களிலும் மிதிவெடிகளிலும் சிக்கி இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 645 views
-
-
சமாதான பேச்சுக்கு புலிகள் தயாரென பா.நடேசன் தெவித்துள்ளதாக சிபி இணையத்தளம் செய்தி சிபி இணையத்தளம் 7ஃ11ஃ2008 3:32:17 Pஆ - யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தி சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியிலிருந்து ஒளிபரப்பாகும் "ரைம்ஸ் நெளவ்" தொலைக்காட்சிக்கு தொலைபேசிவாயிலாக வழங்கிய நேர்காணலின் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளமான சிபி செய்தி வெளியிட்டுள்ளது.இந்த நேர்காணலின் போது அவர் மேலும் தெர்வித்துள்ளதாவது விடுதலை புலிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல என தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய அரசும் அதன் தீர்மானிக்கும் சக…
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவியில் மக்கள் குடியிருப்பை நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 658 views
-
-
பஸ்ஸில் பணம் கொடுக்காமல் ஓசி பயணம் செய்த இளைஞனிடம் பணத்தை நடத்துநர் கேட்டபோது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் வேப்பொத்துவ என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சமன் கொடித்துவக்கு (29 வயது) என்ற இளம் பஸ் நடத்துநரே கொலை செய்யப்பட்டவராவார். மாத்தறையில் இருந்து வலஸ்முல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸில் ஏறிய இந்த நபர் ரிக்கெட் பெறாது இடைவழியில் இறங்க முயன்றார். அதன்போது நடத்துநர் அவரிடம் ஏன் ரிக்கற் எடுக்கவில்லை என்று பணத்தைக் கேட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு ஏனைய பயணிகளால் விலக்குப் பிடித்து சமாதானப்படுத்தப்பட்டனர். நடத்துநர் மாலை வேலை முடிந்து வீடு செல்லும்போது வேப்பொத்துவ என்ற இடத்தில் அவரை மறித்த சந்தேக …
-
- 0 replies
- 1.2k views
-
-
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்கொலை வீரகேசரி இணையம் 7/11/2008 9:09:26 AM - கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று காலை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 3 replies
- 1.2k views
-
-
கொழும்பில் சிகை அலங்கரிப்பு தொழிலாளி சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 11 யூலை 2008, 02:54 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள மட்டக்குளியில் சிகை அலங்கரிப்பு தொழிலாளி ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 895 views
-
-
வேல் இருந்த இடத்தில் விகாரை….கதிர்காமம் கதிரமலையில் இனவிரோத சம்பவம் ஜ வெள்ளிக்கிழமைஇ 11 யூலை 2008இ 07:51.36 யுஆ புஆவு +05:30 ஸ வேல் இருந்த இடத்தில் விகாரை கட்டியெழுப்பட்டுள்ளது. கதிரமலை உச்சியில் அரங்கேறியுள்ள இவ் இனவிரோதச் சம்பவம் பற்றி உணர்வுள்ள இந்துக்கள் மனம் புழுங்குகின்றனர். கடந்த 02 வருடங்களாக இவ் விகாரை கட்டப்பட்டு வந்தது. அப்போதும் தமிழின அரசியலாளர்கள் குரல் கொடுக்கவில்லை. இப்போதும் குரல் கொடுக்கவில்லை. காலாகாலமாக அங்கிருந்த வேல் இன்று பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. வேலிருந்த இடத்தில் பாரிய விகாரையும் முன்னால் புத்த சிலையும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. நன்றி:- தமிழ்வின்
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜே.வி.பியினருக்கும் புலிகளுக்கும் முடிச்சுப் போடும் கோமாளித்தனம் தன்னுடைய "கோயபலஸ்' அரசியல் பிரசாரங்களுக் காக "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச் சுப் போடக்கூட' பின்னிற்காதவர் இலங்கை அரசின் பாது காப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. அவருடைய கோமாளித்தனமான அரசியல் கருத்து வெளிப்பாடுகளால் அவரை அரசியல் விதூஷகராக விமர்சித்துக் கிண்டல் செய்யவும் ஆய்வாளர்கள் தவறு வதில்லை. அந்த வகையில் இப்போதும் ஒரு கருத்து வெளி யிட்டிருக்கின்றார் அவர். யுத்த வெறிப் போக்கை மட்டுமே தனது அரசியலுக் கான மூலதனமாகக் கொண்டு, ஆட்சியைக் கொண்டி ழுக்கும் இந்த அரசு, தான் எதிர்நோக்கும் எந்த அரசியல் நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கு யுத்தம் என்ற கவசத்துக்குப் பின்னால் போய் ஒளி…
-
- 2 replies
- 981 views
-
-
புத்தல கதிர்காமம் வீதியில் கலகே என்னும் இடத்தில், புத்தலவிலிருந்து கதிர்காமம் நோக்கிச் பயணித்த பேருந்து இன்று காலை 10:30 மணியளவில் 144 வது மைல் கல் அருகில் துப்பாக்கிச் சுட்டிற்கு இலக்காகியுள்ளது. இத் துப்பாக்கிச் சுட்டில் இரு பெண்கள் உட்பட 3பேர்கள் ஸ்தலத்திலே கொல்லப்பட்டதாகவும், 26 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக கதிர்காம, அம்பந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். இவ் வீதி தற்போது பாதுகாப்பக் காரணங்களுக்காக போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
-
- 3 replies
- 1.5k views
-
-
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டித்தும் சம்பள உயர்வு மற்றும் முக்கிய பல கோரிக் கைகளை முன்வைத்தும் நேற்றுப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது வேலை நிறுத்தப் போராட்டம் சோபிக்கவில்லை களைகட்டவில்லை. நாட்டின் பல பகுதிகளிலும் ஒருசில அரச அலுவலகங்களில் ஊழியர் வரவு மந்தமாகக் காணப்பட்டாலும், பெரும்பாலான அரச அலுவலகங்கள் வழக்கம் போலவே இயங்கின என்று தகவல்கள் தெரிவித்தன. பாடசாலைகள் பலவற்றிலும் மாணவர் வரவு குறை வாகவே காணப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டது. கொழும்பு நகரில் வாகனப் போக்குவரத்துக் குறைவாகக் காணப்பட்டபோதி லும் அரச அலுவலகங்களும், பொதுச் சேவை களும் வழமைபோல இடம்பெற்றன. ரயில் சேவைகள் வழமைபோல இடம் பெற்றன எனக் குறிப்பிட்ட ரயில்வேத் திணைக்களத் தலைவர் லலித் சிறி குண ருவன…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கை-இந்தியா இடையே பொருளாதார உடன்படிக்கை "சார்க்' வேளையில் கைச்சாத்தாகும்! கொழும்பில் 15 ஆவது சார்க் உச்சி மாநாடு இடம்பெறும் வேளையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது. சார்க் உச்சி மாநாட்டின் போது இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் இந்தப் பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள் என இந்தியாவின் வர்த்தக செயலாளர் கோபால் கே.பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையின் மிகப் பெரிய சம அந்தஸ்துள்ள பொருளாதார சகாவாக இந்தியா மாறியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை அடுத்த மூன்று வருடங்களில் படிப்படியாக அமுல்படுத்தப்படும் எனவும் கோபால் பிள்ளை தெரிவி…
-
- 0 replies
- 787 views
-
-
2002 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பின்னர் சிறீலங்காப் படையினர் 2006ம் ஆண்டில் இருந்து தமிழர் தாயகப் பிரதேசங்களை வன்பறிப்புச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்சியாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல இராணுவப் படையணிகளின் உதவியுடன் திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் மன்னார் வவுனியா மணலாறு யாழ்ப்பாணம் போர் முன்னரங்க நிலைகளுடனான நில ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இராணுவம் மன்னார் - வவுனியா சார்ந்த களமுனை தவிர ஏனைய இரண்டு கள முனைகளில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்ட முடியாத நிலையில் இருப்பது அவர்களின் விளக்கங்களைக் கொண்டு அறிய முடிகிறது. இதற்கிடையே இன்னும் சில காலங்களின் பின் கிளிநொச்சியில் சிறீலங்காவின் தேசிய விளையாட்டு விழாவை நடத்தக் கூட…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
வெள்ளைப் புலி பச்சைப் புலியென விமர்சித்த அரசு தற்போது ஜே.வி.பி.யையும் புலியேன முத்திரை குத்தியுள்ளதாக த.தே.கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பா.உ எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவி;த்துள்ளர்ர். அங்கு மேலும் அவர் : நாட்டில் தொழிலாளர்கள் சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகளையும் மறந்து அரசுக்கு எதிரான பாரிய போராட்டத்தில் ஈடுபட்டமை பாராட்டத்தக்கதாகும். வெள்ளைப் புலி பச்சைப் புலி, சிங்களப் புலி என விமர்சித்த அரசு ஜே.வி.பி.யையும் புலியேன கூறுகிறது. ஜே.வி.பி.யை நீங்கள் புலிகளென்று கூறுவீர்களாயின் மஹிந்த புலிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றார் என்று ஒத்துக் கொள்வீர்களா? சிறுபிள்ளைகளுக்கு பூனை வருகிறது, நாய் …
-
- 0 replies
- 879 views
-
-
முதற் கடற்கரும்புலிகளின் 18 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு [வெள்ளிக்கிழமை, 11 யூலை 2008, 06:22 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முதற் கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் மற்றும் கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காந்தரூபன் அறிவுச்சோலையில் நடைபெற்றது. போராளி இளவழகன் தலைமையில் காலை 8:30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ்ச்சோலை பாடசாலை முதல்வர் ஏற்றினார். தமிழீழ தேசியக் கொடியினை லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் தேவன் ஏற்றினார். கடற்கரும்புலிகளின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் தமிழன்பன் ஏற்ற, மலர்மாலையினை தமிழீழ தேசிய தொலைக்காட்சி…
-
- 0 replies
- 703 views
-
-
நவாலி தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் 13 வது நினைவுத்தினம் நேற்று நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயம், மற்றும் நவாலி சின்னக்கதிர்காம முருகன் கோயில் ஆகியவற்றில் நினைவுக்கூறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நவாலி தேவாலயம் மீது இலங்கை வான்படை 1995 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி குண்டு வீசியதில் 147 பேர் பலியாகினர்.சுமார் 360 பேர் காயமடைந்தனர். இதன்போது பல்வேறு உதவு நிறுவனங்களை சேர்ந்த 40 தொண்டர்களும் நவாலி வடக்கு கிராமசேவையாளர், ஹேமலதா செல்வராஜா, சில்லாலை கிராமசேவையாளர் பிலிப்புபிள்ளை சவேரியார்பிள்ளை ஆகியோர் ஆபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கியிருந்தனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot…
-
- 0 replies
- 928 views
-
-
பெருமளவிலான வளப்பற்றாக்குறையுடன் 2,120 வரையிலான மாணவர்கள் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர் என்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 537 views
-
-
தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிகின்றனர் - கடற்படைப் பேச்சாளர் வியாழன், 10 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழ்நாட்டு மீனவர்களை அத்துமிறிவந்து சிறி லங்கா கடற்படையினர் சுட்டுக்கொலை செய்கின்றனர் என தெரிவிக்கப்படும் செய்திகள் அப்பட்டமான பொய்யாகும். உண்மையில் இங்கு நடக்கும் சம்பவங்கள் அப்படி அல்ல. தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடி என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் உபகரணங்கள் மற்றும் எரிபொருட்கள் என்பவற்றை தமிழ்நாட்டில் இருந்து கடத்திவந்து கொடுத்துவருகின்றனர். இது மறுக்கப்படமுடியாத ஒரு உண்மை என சிறி லங்கா கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தஸநாயக்க தெரிவித்துள்ளார். உதாரணமாக கடந்த ஜூன் மாதம் சிறி லங்கா க…
-
- 0 replies
- 987 views
-
-
பத்திரிகை நிறுவன அதிகாரி தாக்கப்பட்டமை குறித்து சுவீடிஸ் அதிகாரிகள் அரசாங்கத்துடன் பேச்சு வியாழன், 10 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] இலங்கை பத்திரிகை நிறுவன அதிகாரியான, நாமல் பெரேராவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், பத்திரிகை நிறுவனத்திற்கு நிதியளிக்கும் நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக, சுவீடிஸ் மற்றும் பின்லாந்து அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளுடன் நேற்று பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது நாமல் பெரேரா மீதான தாக்குதல் தொடர்பில், உரிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். http://www.pathivu.com/?p=1913
-
- 0 replies
- 768 views
-
-
அரசாங்கம் புலியை விற்று பிழைப்பு நடத்துகின்றது சபையில் ரவி எம்.பி. குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 7/10/2008 11:02:24 PM - பிளாஸ்டரை ஒட்டி ஊசிகளை ஏற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் புலியை விற்று பிழைப்பு நடத்துகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதியமைச்சின் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவகாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: வைத்தியசாலைகள் முற்றாக செயலிழந்துள்ளன. குடுலால் போன்றவர்கள் வைத்தியசாலைகளில் உள்ளனர். அவர்கள் மருந்து வாங்கச் சென்…
-
- 0 replies
- 758 views
-
-
புலிகளின் அடுத்தகட்ட நகர்வு என்ன?: கொழும்பு ஊடகத்தின் எதிர்வுகூறல் [புதன்கிழமை, 09 யூலை 2008, 07:57 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினரின் தற்போதைய பரவலான களமுனைகளை எதிர்த்து, தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்த்தாக்குதல்களை தீவிரப்படுத்தலாம் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இருந்து தாக்குதல்களை தொடங்குவது என்ற திட்டத்தை படைத்தரப்பு கடந்த வருடம் தொடங்கியிருந்தது. படையினரின் இந்த திட்டத்தின் முக்கிய இலக்குகளில்…
-
- 7 replies
- 1.6k views
-
-
வீரகேசரி இணையம் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இன்றைய தினம் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். யுத்த செலவுகளை கட்டுப்படுத்தவும், படைவீரர்களுக்கு வழங்கப்படும் நிதியை குறைப்பதற்கும் விடுதலைப் புலிகள் இவ்வாறான சூழ்ச்சித் திட்டம் தீட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தினம
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசாங்கத்தின் போர்த் தந்திரோபாயங்களை இலங்கையர்கள் எதிர்க்கக் கூடும் - புலும்பெர்க் இணையத்தளம் [ வியாழக்கிழமை, 10 யூலை 2008, 06:12.35 AM GMT +05:30 ] அரசாங்கத்தின் போர்த் தந்திரோபாயங்களை இலங்கையர்கள் எதிர்க்கக் கூடும் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளதாகப் புலும்பெர்க் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் பொதுமக்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் படைபலம் குறிப்பிடக் கூடியளவு வலுவிழந்துவிடவில்லை எனச் சர்வதேச பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான ஜேன்ஸ் பாதுகாப்பு …
-
- 0 replies
- 1k views
-