Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 581 views
  2. மன்மோகன் கொண்டாடும் மகிந்த சகவாசம்: தன்மானம் இழப்பதா? தமிழ்மானம் காப்பதா? -குலோத்துங்கன்- ஈழ விடுதலைப் போராட்டத்தை தனது அரசியல், இராணுவ, பிராந்திய நலன்களின் முன்வைத்து கபடி விளையாடும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆட்டத்தின் பிந்தைய நிலவரம் தான் அண்மையில் கொழும்பு வந்து சென்ற அந்நாட்டு உயர்மட்டக்குழுவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்பது போலவும் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்பது போலவும் காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்பது போலவும் வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்பது போலவும் இந்தியாவும் இந்தியா சார்ந்த இடமும் பிரச்சினை என்ற வரைவிலக்கணத்துக்குள் வந்துவிட்ட அளவுக்கு அந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையாளர்கள் கா…

  3. இந்தியாவின் ஈழத் தமிழர் மீதான கரிசனை மாயையும் உண்மையும் -தாரகா- சமீபத்தில் இந்தியாவின் மூவர் அடங்கிய உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியா குறித்த ஊடக அக்கறை அதிகரித்தது. இந்தியா அவ்வப்போது இலங்கை குறித்து தெரிவிக்கும் அபிப்பிராயங்கள் எல்லாமே மிகுந்த அரசியல் முக்கியத்துவமுடையவை போன்ற தோற்றமொன்று நம் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றது. பின்னர் சில நாட்கள் போக எல்லாமே புஸ்வாணமாகி விடுகின்றன. அப்படியான ஒன்றுதான், சமீபத்தில் இந்திய உயர்மட்டக் குழு இலங்கை வந்து சென்ற போதும் எற்பட்டது. அந்த வருகை முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டதற்கு இன்னொரு காரணம் அதில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் இடம்பெற்றிருந்…

  4. யுத்தம் நடைபெறும் நாடொன்றில் கடத்தல்கள், கொலைகள் சகஜம் * அமைச்சர் ராஜித சேனாரட்ன யுத்தம் தீவிரமாக நடைபெறும் நாடொன்றில் கடத்தல்கள், கொலைகள் இடம்பெறுவது வழமையானதெனத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததைவிட பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லையெனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இன்று ஐ.தே.க.விற்குள் அதன் தலைமைத்துவத்திற்கெதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டுமென நான் ஆசீர்வதிக்கின்றேன். அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யுத்தத்தை நாடுவத…

  5. பயங்கரவாதிகளுக்கும், சுதந்திரப் போராளிகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருப்பதாக கனடாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன தெரிவித்திருப்பதாக கனேடியப் பத்திரிகையான ‘நஷனல் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை தனியான சுதந்திர அலகாகப் பிரகடனப்படுத்தவேண்டுமென கனடாவின் டவுன்ஸ் வியூ மைதானத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் முக்கிய உரையாற்றிய அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன கூறியிருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இதனைவிட இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு இல்லை” என அவர் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலங்குவானூர்திகள் குண்டுத் தாக…

  6. Posted on : 2008-07-09 இந்தியாவே! இந்தக் கொடுமை ஏனோ? "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' பொறுப்பற்ற போக்கில் இந்தியா செயற்படுகின்றது என்று விசனப்படு கிறார்கள் ஈழத் தமிழர்கள். இப்படி ஐந்து வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் எழுதியிருந்தோம். அதை உறுதிப்படுத்துவது போல நடந்து கொள்கின் றது பாரத தேசம். இந்தியா தனது உயர்மட்ட அதிகாரிகள் மூவரைக் கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் திடுதிப்பென சத்தம் சந்தடி யின்றி விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பிய போது, அதை அறிந்து ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மன தில் மகிழ்ந்துதான் போனார்கள். தென்னிலங்கைச் சிங்களத்தின் பேரினவாதப் பிடியில் சிக்கிப் பெரும் கோரயுத்த அழிவை எதிர்கெண்டு நிற்கும் ஈழத் தமிழினத்துக்காகக் குரல் எழுப்பும் நன்ன…

  7. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் தலைவர்கள் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநாட்டின் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார். சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமருக்கு 3000 இந்திய படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும், கடல் மற்றும் வான் பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டி…

    • 8 replies
    • 1.5k views
  8. சிறிலங்காவில் நாளை பாரிய வேலை நிறுத்தம்: தடுத்து நிறுத்துவதற்கு அரசு கங்கணம் [புதன்கிழமை, 09 யூலை 2008, 05:27 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவில் சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது போக்குவரத்துச் சேவைகளை முடிந்தால் முடக்கிப் பார்க்கப்பட்டும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சவால் விடுத்துள்ளார். போக்குவரத்துச் சேவைகளை நாளை நிறுத்திக் காட்டாவிடின் தனது தொழிற்சங்க தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவருமான லால் காந்த பதிலுக்கு சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் சிறிலங்காவில் பெரும் பூதாகார…

    • 6 replies
    • 1.3k views
  9. வன்னிக் களமுனையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 840 views
  10. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்படின் எந்த நடவடிக்கைக்கும் அரசு தயங்காது - கெஹெலிய வீரகேசரி நாளேடு 7ஃ9ஃ2008 7:59:32 Pஆ - விடுதலைப் புலிகள் தெற்கில் ஊடுருவி அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக அழிவுகளை விளைவிக்க எந்தவிதமான சந்தர்ப்பங்களையும் அரசாங்கம் வழங்கமாட்டாது. அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று தேசிய பாதுகாப்பிற்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது: வாழ்க்கைச் செலவிற்கு நிவாரணம் கோரி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் இ…

  11. முல்லைத்தீவில் தொடர் எறிகணை வீச்சு: 18 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடு சீர்குலைவு [புதன்கிழமை, 09 யூலை 2008, 05:02 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மாந்தை கிழக்கு, துணுக்காய்ப் பகுதிகளில் உள்ள 18 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன. சிறிலங்காப் படையினர் மாந்தை கிழக்குப் பகுதியை இலக்கு வைத்து தொடரான எறிகணை வீச்சினை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலால் பாண்டியன்குளம், துணுக்காய்ப் பகுதி மக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக மாந்தை கிழக்குப் பகுதியில் 13 பாடசாலைகள் ஏற்கனவே செயல் இழந்திருந்தன. இந்நிலையில் துணுக்காய்ப் பகுதியில் 5 பாடசாலை…

    • 1 reply
    • 971 views
  12. ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இராணுவத்தளபதியின் கீழ் இயங்கும் குழு ஒன்று செயற்படுமாயின் அது தொடர்பிலான தகவல்களை பெயர் முகவரியுடன் வெளியிடுமாறு ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பா, இன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (யூலை8) நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை ஆற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னனியில் இராணுவத் தளபதியின் கீழ் இயங்கும் குழுவொன்று சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தியிருந்தார். சிறப்புரிமைகளுக்காக பொய்யான பிரசாரங்களை செய்ய வேண்டாம் என ஊடகத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாடுகளில…

    • 0 replies
    • 918 views
  13. சர்வதேச ரீதியில் இலங்கையின் நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படக் கூடிய செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி. கட்சி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளினால் இலங்கை படைத்தரப்பினர் மீது சர்வதேச அரங்கில் பாதகமான எண்ணக்கரு உருவாகியுள்ளதென ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் இழப்பதற்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த நியாயமான வேண்டுகோளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப…

    • 0 replies
    • 1.3k views
  14. வடபகுதியிலுள்ள 16 ஆயிரம் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஏனைய பகுதி மக்களுடன் தொடர்புகொள்ளமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டிருப்பத

    • 0 replies
    • 878 views
  15. எதிர்வரும் 48 மணித்ததியாலங்களிற்குள் நாட்டில் எப்பகுதியிலேனும் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர் எனவும், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறும் ஊடக அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் எப்பகுதியிலேனும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். எனவே பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் போன்ற நடவடிக…

    • 18 replies
    • 3.6k views
  16. மாந்தை கிழக்குப் பகுதிகளை நோக்கி தொடர் எறிகணை வீச்சு [புதன்கிழமை, 09 யூலை 2008, 03:47 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்குப் பகுதிகளை நோக்கி இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த எறிகணைகள் பாண்டியன்குளம், மாந்தை கிழக்குப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்து வருவதால் அயல் கிராம மக்கள் இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர். எறிகணை வீச்சினால் செல்வபுரம், சிவபுரம் பகுதி வீடுகள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பல பயன்தரு மரங்களும் அழிந்துள்ளன. புதினம்

    • 0 replies
    • 523 views
  17. கிளிநொச்சியில் கணனி வள நிலையம் திறப்பு [புதன்கிழமை, 09 யூலை 2008, 03:30 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை கணனி வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் பொதுச்சுடரினை ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.பத்மநாதன் ஏற்ற, தமிழீழத் தேசியக் கொடியினை கணனிநுட்ப கூட்டு நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் கமலதர்சன் ஏற்றினார். கணினி வள நிலையத்தின் பெயர்ப்பலகையினை தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் திரைநீக்கம் செய்தார். கணினி வள நிலையத்தினை கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா நாடாவை வெட்டித்திறந்தார். கணனி வகுப்பறைகளை மருதங்கேணி கோட்டக்கல்வி அலுவலர் துரை சத்தியசீலன், பிரதிக்கல்விப் பணிப்பாள…

    • 0 replies
    • 826 views
  18. கரையோரப் பகுதிகள் மீது வான்குண்டுத் தாக்குதல்: 8 படகுகளும் 5 வீடுகளும் சேதம் [புதன்கிழமை, 09 யூலை 2008, 02:09 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கரையோரப் பகுதிகள் மீது இன்று சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இருதடவை குண்டுத்தாக்குதலில் 8 படகுகளும் 5 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இக்குண்டுத் தாக்குதல் வான்படையின் வானூர்திகளால் இன்று புதன்கிழமை காலை 7:30 மணிக்கும் முற்பகல் 9:00 மணிக்கும் இரு தடவை நடத்தப்பட்டன. இதில் கடல் தொழிலாளர்களின் 8 படகுகள் சேதமடைந்துள்ளதுடன் 5 வீடுகளின் கூரைகளும் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பு வழிகளைத் தேடிக்கொண்டதால் உயிர்தப்பிக் கொண்டனர். கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடல் தொழிலாளர்கள் வலைகளை போட்டுவிட…

    • 0 replies
    • 507 views
  19. 31 குண்டு துழைக்காத வாகனங்கள் இறக்குமதி: பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதா? செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா அரசாங்கம் 31 குண்டு துழைக்காத வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த வாகனங்கள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பைக் கருதிற்கொண்டு வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆயுததாரியும் முதலமைச்சருமான பிள்ளையானுக்கு குண்டு துழைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன கிழக்கு மாகாணசபையின் ம…

  20. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தடை போடாதீர்கள்:ரட்னசிறி விக்ரமநாயக்க உரை! மனித உயிர்களைப் பாதுகாத்துக்கொண்டு பயங்கரவாதத்தை எமது நாடு ஒழித்துக்கட்டும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இவ்வேளையில் அதற்கு தடைகளை ஏற்படுத்தாமல் அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும் என சிறிலங்கா பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க கூறியுள்ளார். அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையைச் சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கூறியதாவது..... அரசியலில் பல்வேறுபட்ட கருத்துக்கள், முரண்பட்ட கொள்கைகள், விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் இரு…

    • 1 reply
    • 799 views
  21. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்! அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் இன்று மாலை (08-07- 2008) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். பிரேரணைக்கு ஆதரவாக 111 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசாங்கத் தரப்பு கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஐ.தே.கட்சி இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/sri-la...2008-07-08.html

    • 1 reply
    • 692 views
  22. அரசாங்கம்,விடுதலைப் புலிகளுடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும்: த.தே.கூட்டமைப்பு இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுடனேயே நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்தார். விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியொன்றில் தீர்வொன்றைக்காண அரசாங்கம் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். “ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வுகாணப்படவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்…

    • 0 replies
    • 550 views
  23. அரசியல் இலாபங்களுக்கான போராட்டங்கள் கவலைக்குரியது – சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவப்படையினர் கொடுப்பனவுகளையோ அல்லது வேறும் ஏதாவது கொடுப்பனவுகளையோ எதிர்பார்க்காது நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் உயிர்த் தியாகம் மேற்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் இலாபங்களை கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் கவலைக்குரியதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க தொழிற்சங்க தலைவர்களுடன் நேற்று (ஜூலை 8) நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்த தலைவர் என்ற ரீதியிலும், தொழில் அமைச்சர் என்ற ரீதியிலும் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு தாம் எதிர்ப்பு…

    • 0 replies
    • 627 views
  24. கைதிகளைப் பரிமாறும் ஒப்பந்தம்: சிறிலங்காவும் இந்தியாவும் கைச்சாத்திடவுள்ளன Wednesday, 09 July 2008 கைதிகளைப் பரிமாறிக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தமொன்றில் சிறிலங்கா அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் கைச்சாத்திடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கு செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களே சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்திலும் உள்ளடக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தும், கடைசிக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், இறுதிப்படுத்தியதும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் தூதரக வட்டாரத் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.