Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி வன்னியை கைப்பற்றலாம் என சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் கனவு காண்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 759 views
  2. அடுத்த மாதம் இறுதியிலும் ஓகஸ்ட் முதல் வாரத்திலும் 'சார்க்' உச்சிமாநாட்டைக் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முராமாகச் செய்யப்பட்டு வந்தாலும், தென்னிலங்கையில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்தால் மட்டுமே அந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இந்தியப் பிரதமர் இலங்கை வருவார் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயத்தில் புதுடில்லியின் நிலைப்பாடு, கொழும்பு நிர்வாகத்திற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் ஏற்கனவே கோடி காட்டிப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. தென்னிலங்கையில் தொடர்ந்து குண்டு வெடித்து, சீர்கெட்ட நிலைமை நீடிக்குமானால் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யமாட்டார். என்று புதுடில்ல வட்டாரங்கள் தெரிவித்தன. 'பாதுகாப்பு நிலைமையே எல்லாவற்றையும் விட கர…

    • 0 replies
    • 636 views
  3. கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு விடுதலைப்புலிகளுக்கு மலேசியாவிலிருந்து சிலர் அறிவுறுத்தல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக மலேசிய அரசு விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது. இந்த விடயம் குறித்து முழுமையான விசாணைகளை அரசு மேற்கொள்ளுமெனவும் விடுதலைப்புலிகளுடன் மலேசியர்கள் எவருக்காவது தொடர்புகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மலேசிய உள்துறை அமைசர் சையத ஹமித் அல்பார் கூறியுள்ளார். கடந்த வாரம் வத்தளையில் வெடிபொருட்களுடன் கைது செய்யபட்ட 6 சந்தேக நபர்கள் கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்காக மலேசியாவிலிருந்த தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்கள் கிடைக்குமென காத்திருந்ததாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிரு…

    • 0 replies
    • 887 views
  4. இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றி சிறிதும் கவனத்திற் கொள்ளாது, இங்கு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவிவரும் உலகத் தமிழ்ர் அமைப்பை தடை செய்ததானது இலங்கை அரசின் செயல்களுக்குப் பெரிதும் ஊக்கமளிப்பதாகவுள்ளதாக 'உலகத் தமிழர் அமைப்பு' கவலை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி கனேடிய அரசு உலகத் தமிழர் அமைப்பைத் தடை செய்தது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சின்னத்தம்பி சிற்றம்பலம் கூறுகையில் : கனேடிய அரசின் இந்த முடிவு மிகவும் தவறானது. என்ன அடிப்படையில் என் காரணங்களைக் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்தார்களோ அதனை நாம் முற்றாக மறுக்கிறோம். அதுமட்டுமல்ல இதற்கெதிரான த…

    • 0 replies
    • 685 views
  5. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக மகிந்த ராஜபக்ச கூறியதன் பின்னணி குறித்து கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் ஆய்வுக்கட்டுரையினை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 700 views
  6. சுப்பிரமணியன் சுவாமி ஓர் `அகாசுகா' பேர் வழி - தொல். திருமாவளவன் தி.மு.க. - பா.ம.க. பிரச்னை ஒருபுறமிருக்க, `ராஜீவ்காந்தி படுகொலையில், வெளிநாட்டு சதிவலைத் தொடர்புகள் உள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.ஐ.யின் டீம் ஒன்று, ஜெர்மன் நாட்டிற்குப் பயணிக்க உள்ளது. அங்கே கே. பத்மநாபன் என்பவரிடம் விசாரணை நடத்தவுள்ளது. இந்த கே. பத்மநாபன் வேறு யாருமல்ல; விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நிர்வாகப் பொறுப்பாளர். `கே.பி.' என்று புலிகளால் அன்போடு அழைக்கப்படுபவர். அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத நபர்! இப்படிப்பட்ட `கே.பி.'யைத்தான் டாக்டர் ராமதாஸ் ரகசியமாகச் சென்று சந்தித்துப் பேசினார். எனவே, ஜெர்மன் சென்று கே.பி.யை விசாரிக்கப் போவதாகச் சொல்லும் சி.பி.ஐ., அதற்கு முன்பு டாக்டர் ராமதாஸி…

  7. வீரகேசரி நாளேடு - இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றி விரைவில் இனப்பிரச்சினையில் தலையிடும் என்று தாம் நம்புவதாக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் போகொல்லாகம இவ்வாறு கூறியுள்ளார். அடுத்த மாதம் இறுதியில் கொழும்பில் ஆரம்பமாகவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உத்தியோகபூர்வ அழைப்பிதழை வழங்குவதற்காக புதுடில்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் …

  8. தேங்காய்க்குள் மறைத்து வைத்து வெடிபொருட்கள் கடத்தப்படுகின்றன - படைத்தரப்பு புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வெடிபொருட்கள் தேங்காய்க்குள் மறைத்து வைக்கபட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். வடக்கிலிருந்து தெற்கிற்கு வெடிபொருட்கள் தேங்காய்க்குள் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அண்மையில் வத்தளைப் பகுதியில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரை விசாரணை செய்த போது இத்தகவல் கிடைக்கப் பெற்றதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. தேங்காயை உடைத்து அதனுள் வெடிபொருட்களை நிரைப்பி பின்னர் அடைக்கப்படுவதாக படைத்தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.co…

  9. Canada puts Tamil group on terrorist list 16 Jun 2008 18:41:38 GMT Source: Reuters (Adds comments, details) TORONTO, June 16 (Reuters) - The Canadian government added the World Tamil Movement to its list of terrorist groups on Monday, describing it as a front organization which raised funds for the Tamil Tigers in Sri Lanka. The group's assets will be frozen and Canada's banking regulator said that Canadian financial institutions must review their records and immediately report to the federal police any transactions made by the World Tamil Movement. The directive covers Canadian banks, insurance companies and credit unions and is part of Canada's effo…

    • 15 replies
    • 3.7k views
  10. பொது மக்களின் காணிகளில் இரவில் தங்கும் படையினர் 18.06.2008 / நிருபர் எல்லாளன் தென்மராட்சியிலுள்ள படைமுகாம்களிலிருந்து இரவு நேரங்களில் விலகி படையினர் பொது மக்களின் காணிகளில் தங்கிவருகின்றனர். தென்மராட்சிப் பகுதியில் உள்ள கனகம்புளியடி படைமுகாம், டச்சுவீதி படைமுகாம், மந்துவில் படைமுகாம் என்பவற்றில் இரவில் தங்குவதை படையினர் தவிர்த்து வருகின்றனர். இரவு நேரத்தை பொதுமக்களின் காணிகளிலும் இரவுப் பொழுதை கழித்துவருகின்றனர். பயத்தின் காரணமாகவே படையினர் தமது முகாம்களில் இரவில் படுப்பதைத் தவிர்த்து வருகின்றனர். sankathi.com

  11. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும். தங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள். ஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை! மாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! தமிழ்த் தேசியம் என்கின்ற சொல்லாக்கம் குறித்துப் பல விதமான கருத்…

    • 2 replies
    • 1.1k views
  12. பேரூந்தில் கைக்குண்டு மீட்பு புதன், 18 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] தன்னிச்சையாக வெடிக்ககூடிய வகையில் கறுவாத்தோட்டப்பகுதியில் பேரூந்த ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 122 ம் இலக்க பேரூந்திலேயே இக்கைக்குண்டு காணப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. pathivu

  13. இலங்கையில் சமூக சேவகியாகத் திகழ்ந்த தங்கம்மா அப்பாக்குட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். "தமிழ்ப் பண்டிதை" என்று ஈழத் தமிழர்களால் அழைக்கப்பட்ட தங்கம்மா அப்பாக்குட்டி முறைப்படி தமிழ் கற்று ஆசிரியையாக இருந்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் சமூக சேவகியாகவே வாழ்ந்தவர். நூலகம் ஒன்றை தொடங்கிச் சிறந்த நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்த அவரின் இழப்பு ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் தமிழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி தனது இரங்கற் செய்தியில் கூறியுள்ளார்

    • 1 reply
    • 1k views
  14. மட்டக்களப்பு மாவட்டம் நாவலடியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவனின் சடலம் வாவிக்குள் இருந்து இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 955 views
  15. யாழ். மற்றும் கிழக்குப் போன்று தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  16. கால நீட்சியுடைய விடுதலைப் போராட்டத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது: எரித்திரிய பிரதிநிதி [செவ்வாய்க்கிழமை, 17 யூன் 2008, 07:43 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] கால நீட்சியுடைய விடுதலைப் போராட்டத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று நோர்வேயில் உள்ள எரித்திரிய அமைப்பின் பிரதிநிதியான சாம் யாறட் தெரிவித்துள்ளார். நோர்வேயில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் உங்களோடு எனது நேரத்தைச் செலவிடுவதில் மகிழ்வடைகின்றேன். தமிழ் மக்களின் கோரிக்கைகள், தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை, நீதியான சமாதானத்தின் மீதான அவர்களின் நாளாந்த தேடல்…

  17. கடந்த சில தினங்களில் மன்னார், வவுனியா மாவட்டக் கள முனைகளில் பலியாகி இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட 6 விடுதலைப் புலிப் போராளிகளின் உடலங்களை சிறீலங்கா அரச படைகள் வவுனியாவில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளன. இவ்வாண்டில் இதுவரை இவ்வாறு நூறு வரையான உடலங்கள் சிறீலங்கா அரசால் கையளிக்கப்பட்டுள்ளதாக முன்னர் இராணுவப் பேச்சாளர் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. போர்க்களத்தில் தமக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சிறீலங்கா அரசு அண்மைக் காலமாக வெளி உலகுக்கு கூறிவருவதுடன் கனடா ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற அமெரிக்க சார்பு நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டவும் படுகின்றன.

  18. யாழ்ப்பாண குடாநாடு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப்போவதாக எழுந்துள்ள அச்ச நிலையைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டுக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  19. யாழ் முழுவதையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றுவது என்பது அவர்களது கனவாக மட்டும் தான் இருக்க முடியும். என இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். குடாநாட்டின் மீதான விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும தெரிவிக்கையில் : விடுதலைப் புலிகளால் குடா நாட்டு மக்களை இலக்கு வைத்து கிளைமோர் வைக்க முடியும், பிஸ்டல் குழுவாக இயங்க முடியும். இவை தவிர எதுவுமே செய்ய இயலாது. என தெரிவித்தார். நன்றி : உதயன்

  20. சிறிலங்கா இராணுவம் மோதல்களில் வெற்றி பெற்று வருவதனால் எமது பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.1k views
  21. காவலரண் மீது கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் : படைச்சிப்பாய் பலி ஒருவர் காயம். 18.06.2008 / நிருபர் எல்லாளன் மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் உள்ள காவலரண் மீது இன்று அதிகாலை 2.05 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் மற்று துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை தொடர்ச்சியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தின் போது ஒரு சிறிலங்காப் படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பொலிஸ் சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் அருகிலிருந்த வீடுகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த படையினரின் சடலம் மன்னார்…

  22. லங்கா நியூஸ் ஆசிரியர், செய்தி ஆசிரியர் சி.ஐ.டி.யினரால் விசாரணை Wednesday, 18 June 2008 கொழும்பில் செயற்படும் லங்கா நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகத்துக்குச் சென்ற சி.ஐ.டி.யினர் குறிப்பிட்ட இணையத் தளத்தின் ஆசிரியரையும் செய்தி ஆசிரியரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட இணையத்தளத்தில் வெளியாகியிருந்த இரண்டு கட்டுரைகள் தொடர்பாகவே இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு கட்டுரைகளும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்ததையடுத்தே இந்த விசாரணைகள் இடம்பெற்றிருக்கின்றன. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷமன் ஹலுகல்லவின் பணிப்பின் பேரிலேயே சி.ஐ.டி.யினர் இவ்விருவரையும் விசாரணைக்கு உட்படுத்த…

  23. அரசியல் சமாளிப்புகளுக்கும் கைகொடுத்து உதவும் யுத்தம் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து 366 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடுத்த மாதம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித் துள்ளன. இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் பேச்சு மூலமாக தீர்வு காண்பதில் உடன்பாடற்ற இலங்கை அரசுத் தலைமை, தமிழரை இராணுவ ரீதியில் அடக்கி, ஒடுக்கி, அவர்களின் பேரம் பேசும் வலுவைச் சிதறடித்த பின்னர், தான் விரும்பிய முடிவை அவர்கள் மீது தீர்வாகத் திணிக் கும் ஒரே இலக்கில் செயற்படுகின்றது. அதனால் போர்த் தீவிர முன…

  24. முன்னொரு போதுமில்லாதவாறு இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக இடம் பெறுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறந்து பேசுவதற்கு அஞ்சும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவுவதற்கான இராஜதந்திர நடவடிக்கையே சாட்சிகளை பாதுகாப்பும் சட்ட மூலமாகும். என த.தே.கூட்டணியின் பா.உ வான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். அரசின் சட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டமூலம் சர்வதேச சமூகத்தை முட்டாள் ஆக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது வெட்கக்கேடான செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றில் நேற்று இடம் பெற்ற குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவா…

    • 0 replies
    • 843 views
  25. திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு தொண்டர் அமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பு தொண்டர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள அனைத்துலக விசாரணைக்குழு அவசியம் என்று பட்டினிக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 422 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.