Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும், சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 788 views
  2. வீரகேசரி நாளேடு 7/14/2008 11:19:55 PM - விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு இந்தியா இலங்கைக்கு வழங்கும் ஆதரவினை வரவேற்கிறோம். ஆனால், அதற்கு கப்பமாக இலங்கையின் வளங்களை சூறையாடுவதற்கு இடமளிக்க முடியாது. கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டின் போது இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கையினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். சார்க் மாநாட்டின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மேற்கொள்ளப்படவுள்ள சுதந்திர வர்த்தகம் மற்றும் முதலீட்டு நாடுகளுக்கிடையே மனித வளங்களை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையினால் இலங்கைக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லை…

  3. களத்தில் தமிழர்களின் பலம் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக, மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டு கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார் முழங்காவில் ஜெயபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிதுள்ளதாவது: ஜெயபுரம் மண்ணில் தமிழ் மக்கள் பற்றும் உறுதியும் திடமுமாக மகிழ்ச்சியான ஒன்றுகூடலில் பொழுதினை கழித்துக்கொண்ருக்கின்றனர். தமிழ் மக்கள் திடமான நிலையில் உறுதியுடன் எழுச்சிகொள்வதையும் இவ்வாறு நிகழ்வுகளை நடத்துவதையும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. …

  4. அண்மையில் அனுராதபுர வீடொன்றினுள் கொள்ளiயிடச் சென்ற காவற்துறை அதிகாரிகளுடன் சேர்ந்த கும்பலொன்றை கைதாகியுள்ளனர். இரு காவற்துறை உள்ளிட்ட 14 சிங்களக் காடையர்கள் கைதாகியுள்ளனர். கண்டி குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்நத ஒரு அதிகாரியும், காவற்துறை அதிகாரி ஒருவரும் இக் கும்பலில் உள்ளடங்குகின்றனர். இக் கும்பலை கெக்கிராவ நீதிமன்றில் ஆஜர் செய்ததாகவும், எதிர்வரும் 16ம் திகதி விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் தப்பிச் சென்றுள்ளதாகத் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/?p=2034

  5. அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  6. சிறீலங்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், ஆயுததாரியும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரும்,கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானை சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சந்திப்பு திருமலையில் நிகழ உள்ளது. இதற்கிடையே இதே பிள்ளையானை பிரிட்டன் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று முன்னர் ஒரு சிறிலங்கா விஜயத்தின் போது சந்திக்க மறுத்துவிட்டிருந்தது. அதற்கு பிள்ளையானும் அவரின் குழுவினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவினர் காரணமாகக் காட்டி இருந்தனர். ஆனால் பிரிட்டன் கருணா விடயத்தில…

    • 9 replies
    • 2.1k views
  7. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவுக்கு உதவிய ஓய்வுபெற்ற இந்தோனேஷிய இராணுவ ஜெனரல் ஒருவர் உட்பட நால்வருக்கு அமெரிக்க நீதி மன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற இந்தோனேஷிய இராணுவ ஜெனரல் எரிக் வெட்லோ (வயது 61) , சிங்கப்பூரைச் சேர்ந்த ஹனிஷா பீன் ஒஸ்மத், இந்தோனிஷியாவைச் சேர்ந்த ஹபி சுபன்தி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த திருநாவுக்கரசு வரதராசா ஆகியோரே இவ்வாறு சிறைத் தண்டனை பெற்றவர்களாவர். சேம் ஏவுகணைகள், தன்னியக்க சுடுகலன்கள் மற்றும் ஏனைய யுத்த தளவாடங்கள் என்பவற்றை விடுதலைப் புலிகளுக்காக கொள்முதல் செய்யவும் அவற்றை விநியோகிக்கவும் இரகசியமாகத் திட்டமிட்டு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களுக்கு இத்தண்டனை வ…

    • 0 replies
    • 1.3k views
  8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென இலங்கை கடற்படையினர் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடற்படை அதிகாரிகளை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடிக்கச் சென்றிருந்த தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இலங்கை கடற்படையினரே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக இந்தியத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும், இந்தச் சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென இலங்கை கடற்படையினர் தெரிவித்திருப்பதாகவும், சம்பவம் இடம…

    • 0 replies
    • 733 views
  9. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளாக தான் சிறையில் இருப்பதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நளினி தாக்கல் செய்த மனுவோடு, தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சுப்பிரமணியசுவாமி தாக்…

  10. சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அதிகாரத்திற்கு இப்போது சிறிலங்கா பாராளுமன்றம் ஒரு பலவீனமான விடயமாகவே இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அவர் எவ்வளவு தூரம் தன்வசம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு 'பெரும்பான்மை"யைப் பெற்றுக்கொண்டு விட்டபோதிலும் இது ஒரு நம்பிக்கையற்ற பலவீனமான பெரும்பான்மை என்பது அவருக்கு நன்கு தெரியும். ஏனெனில் அவரது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் சாம, பேத, தான, தண்டம் என்பனவற்றைப் பிரயோகித்தே இவர்களைத் தம்வசம் இழுத்துக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். மகிந்தவின் வசம் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றில் அவரது மிரட்டலுக்குப் பணிந்தோ அல்லது பணத்திற்கோ பதவிக்கோ பணிந்தோ அவருடன் இணைந்துள்ளனர். இதனால் அவர்களை தம்வசம் வைத்திருப்…

  11. மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வுமையக் கருத்துக்கணிப்பில் தெரிவிப்பு போரின் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று முப்பது வீதமான சிங்கள மக்களே நம்புகின்றனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. லண்டன் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் எரித்திரிய கற்கை நெறிகளுக்கான துறையினர் "சமாதான வாக்கெடுப்பு' என்ற தலைப்பின் கீழ் இலங்கையில் இயங்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்துடன் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு விபரத்தின் சில பகுதிகள் வருமாறு; தற்போது நடைபெறும் போர் பாரதூரமான பிரச்சினை என்று 37 வீதமான சிங்கள மக்களே தெரிவ…

  12. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான பரப்புரையில் ஒளிப்படங்களின் பங்கு அளப்பரியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 583 views
  13. கிழக்கில் பல விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் படையணிகள் ஊடுருவியுள்ளனர் – பிள்ளையான் திங்கள், 14 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்] தமிழீழ விடுதலைப்புலிகள் இப்போது மிகப்பலவீனமாக இருப்பதால் விரைவிலேயே சிறிலங்கா இராணுவத்தினர் வன்னிப் பிரதேசத்தையும் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடுவர் என தாம் நம்புவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆயுததாரியுமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான சண்டே ஒப்சேவருக்கு அவர் வழங்கியிருந்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்துவெளியிட்டுள்ள பிள்ளையான், கிழக்கு மாகாணத்தை தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவித்து அங்கு ஒரு ஜனநாயக ரீதியான சமுதாயத்…

    • 0 replies
    • 1.1k views
  14. மன்னார் களமுனையில் சிறப்பான களப்படப்பிடிப்பை மேற்கொண்டு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பாராட்டைப்பெற்ற போராளிப் படப்பிடிப்பாளர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 603 views
  15. முப்பது வீதமான சிங்கள மக்களே புலிகளை போரின் மூலம் நசுக்கலாம் என நம்பிக்கை போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று முப்பது வீதமான சிங்கள மக்களே நம்புகின்றனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. லண்டன் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் எரித்திரிய கற்கைநெறிகளுக்கான துறையினர், "சமாதான வாக்கெடுப்பு" என்ற தலைப்பின் கீழ் சிறிலங்காவில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்துடன் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு விபரத்தின் சில வருமாறு: தற்போது நடைபெறும் போர் பாரதூரமான பிரச்சினை என்று 37 வீதமான சிங்க…

    • 0 replies
    • 888 views
  16. யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் களமுனைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 675 views
  17. மீராவோடை குண்டு வெடிப்பில் ஒருவர் காயம் வீரகேசரி இணையம் 7/14/2008 3:59:28 PM - மட்டக்களப்பு மீராவேடை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இப்பகுதியிலுள்ள மின்மாற்றிக்கு அருகில் குண்டு வெடித்துள்ளதாகவும், இதில் மின்மாற்றிக்கு சேதம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் ஓட்டமாவடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  18. இம்மாதம் மூன்று பிரிவுகளாக இந்தியப்படையினர் கொழும்பு வருவர்! திங்கள், 14 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] எதிர்வரும் சார்க் மாநாட்டிற்கு இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு வரும்போது இந்திய படையினரின் பாதுகாப்புடனேயே வரவுள்ளார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. எனினும் பாதுகாப்பு வழங்க உள்ள இந்தியப்படையினரின் எண்ணிக்கை சிறி லங்காவில் உள்ள ஊடகங்கள் தெரிவுக்கும் அளவுக்கு பெருந்தொகையாக இருக்காது என தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை 3000 இந்தியப்படைகள் இந்த நடவடிக்கைகளுக்காக கொழம்பு வருவர் எனவும், இதன் முதல்க்கட்டமாக நாளை செவ்வாய்க்கிழமை (15 ஜூலை) இந்தியப்பாதுகாப்பு படையினரில் ஒரு தொகுதி படையினர் கொழும்பு வரவுள்ளதாகவும், எதி…

  19. சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இன்று காலை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவக்கீல்கள், உயர்நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் கூடினர். தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜபக்சேவின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் கொடும்பாவியை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களை வக்கீல்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கொண்டு வந்த தண்ணீரையும் தூக்கி தூர வீசினர். இதனால் பெரும் பரபரப…

    • 4 replies
    • 1.3k views
  20. கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ஒரு சைவ உணவகத்தில் சாப்பாட்டுத் தட்டில் போடப்படும் “லஞ்ச் சீட்” டுக்கும் இரண்டு ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது. இது எவ்வகையிலும் நியாயமில்லை எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். தண்ணீர் செலவைக் குறைக்கும் நோக்குடன் சாப்பாட்டுத் தட்டுக்களைக் கழுவாமல் மீண்டும் பரிமாற இந்த “லஞ்ச் சீட்” முறை துணை செய்கிறது. இருப்பினும் இந்த சைவக் கடையில் இது ஒரு மேலதிக கட்டணமாகவே அறவிடப்படுகிறது. மலிவாகச் சாப்பிட தோசைத் கடைக்குச் சென்றால் இப்படி கொள்ளையா? என்றும் மக்கள் கேட்கின்றனர். இதே கடையில் தோசை சாப்பிட்டு விட்டு மூன்று இடியப்பங்கள் கேட்டால் ஐந்து எடுக்குமாறு வெயிட்டர்கள் வலியுறுத்துகின்றனர். ஐந்து இடியப்பத்துக்கே கட்டணமும் அறவிடப்படுறது. இது மற்றும் ஒரு பகல் கொள்ளைய…

  21. சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரிக்கை ஞாயிறு, 13 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்] சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரித்துள்ளது. மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் ‘கெயன்’ நிறுவனமும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்தே சீனா இது தொடர்பில் இறுதி முடிவு எட்டும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ஈநியூஸி்ல் தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை சீனாவிடம் கையளிப்பதற்கே முன்னர் இலங்கை இணங்கியிருந்த நிலையில், இந்திய நிறுவனத்திடம் இந்தப் பணிகள் ஒப்ப…

    • 4 replies
    • 1.7k views
  22. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் 1942 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் இந்தியா பற்றிய சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்று டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார். 'விரும்பியோ விரும்பாமலோ (றுடைடல-Nடைடல) இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் இந்தியா பக்கம்தான் அமையமுடியும்" என்பதே. ஆனால், அவர் 1948 இல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பிரதமரான போது இந்தியாவிற்குப் பாதகமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டார். அதன்படி இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத்தளமும், கட்ட…

    • 3 replies
    • 1.2k views
  23. இலங்கை வாழ் தமிழர்கள் பாதுகாப்பற்ற ஓர் சூழ்நிலையை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அரசியல்வாதி சிறிசேன குரே தெரிவித்துள்ளார் வடகிழக்குப் பிரச்சினைக்கு முப்பரிமாண ரீதியில் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையான அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தினாலோ அல்லது பேச்சுவார்த்தைகளின் மூலமாகவோ இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வுஇ ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றின் மூலம் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்கள் பல்வேறு சிக்கல்…

    • 1 reply
    • 1.1k views
  24. தமிழக மீனவர்களை தாக்கும்போது கேட்க நாதியில்லை விஜயகாந்த் ஆவேசம் 14.07.2008 / நிருபர் எல்லாளன் வடமாநிலத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் ராணுவம் செல்கிறது. ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும்போது அதை கேட்க நாதியில்லை' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் நேற்று தே.மு.தி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது: தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு பகுதியான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க மத்திய அரசு முன் வந்த போது பதவியை காப் பாற்றுவதற்காக எதிர்ப்பு தெரிவிக்காத கருணாநிதி, தற்போது கடற்படைய…

  25. நேர்மையான போரை எடுத்துச்செல்ல முடியாத சிறிலங்கா அரசு, மக்கள் மீதுபோரைத் திணிக்கின்றன. 14.07.2008 / நிருபர் எல்லாளன் களத்தில் தமிழர்களின் பலம் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக, மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டு கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார் முழங்காவில் ஜெயபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிதுள்ளதாவது: ஜெயபுரம் மண்ணில் தமிழ் மக்கள் பற்றும் உறுதியும் திடமுமாக மகிழ்ச்சியான ஒன்றுகூடலில் பொழுதினை கழித்துக்கொண்ருக்கின்றனர். தமிழ் மக்கள் திடமான நிலையில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.