ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143326 topics in this forum
-
Published By: NANTHINI 07 MAY, 2023 | 04:57 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் இன்புலுவன்ஸா வைரஸ் பரவும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாருக்காவது காய்ச்சல் பரவிவருவதாக இருந்தால் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். அவர்கள் வீட்டுக்குள்ளேயே முகக்கவசம் அணிந்திருப்பது பாதுகாப்பானதாகும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து பரவிவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் …
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
ஆதிவாசிகள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் கலந்துரையாடல்! மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர், குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்ப…
-
- 12 replies
- 984 views
-
-
வெடுக்குநாறி மலை ஆலயத்தில் சரத் வீரசேகர தலைமையிலான குழு …! முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் சிங்கள மக்கள் சிலர் தற்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 27ம் திகதி வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அங்கு வைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும், அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் பொலி…
-
- 2 replies
- 219 views
- 1 follower
-
-
2023 ஜனவரி முதல் மார்ச் வரை இலங்கையில் இருந்து சீனாவின் இறக்குமதிகள் 93.74 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளன, சீனா 93.74 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இலங்கையிடமிருந்து இறக்குமதி செய்துள்ளதுடன் இது 3.9 சதவீத வீழ்ச்சியாகும். எனினும் சீனா 759.80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதிகளை குறித்த மூன்று மாதங்களில் இலங்கைக்கு மேற்கொண்டுள்ளது. இதில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் மின்சாரப்பொருட்களும் அடங்குகின்றன. சீனாவுடனான இந்த ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளாக நிலவுகின்றபோதும் இன்னும் அது நிவர்த்திக்கப்படவில்லை. அதேநேரம் சீனாவின் இந்த வர்த்தக உறவுடன் ஒப்பிடும் போது, அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு வர்த்தக…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
ஈரானில் இருந்து இலங்கைக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் ! ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளது. ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நன்கொடையின் கீழ், நாட்டில் புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்து…
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கைக்கு ஜப்பான் ஆதரவு! இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இருதரப்பு கடன் வழங்குனர்களை ஒருங்கிணைத்து இந்தக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை மேற்கொள்ள எதிர் பார்ப்பதாக ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி சுஞ்சி சுட்டிக்காட்டுகிறார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் 56 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்கால கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு கடன் தரவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவது அவசியம் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் கடன்…
-
- 0 replies
- 255 views
-
-
இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாகியுள்ளது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பல அபாயங்கள் காரணமாக அடுத்த சில வருடங்களில் அது 25 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பொருளதார நெருக்கடியானது வறுமைக் குறைப்பு மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டும் அதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது, இதன்படி நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.3 சதவீதம்…
-
- 0 replies
- 576 views
-
-
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விடுத்த கோரிக்கை! மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்…
-
- 2 replies
- 525 views
-
-
கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்காவிடின் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பை புறக்கணிப்போம் May 7, 2023 ஐனாதிபதியுடனான சந்திப்பினை கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்காவிட்டால், வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். …
-
- 0 replies
- 150 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தனி பல்கலைக்கழகமாக மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.குறித்த வளாகம் புலிகளின் பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்து அதனை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளோம்.அங்கு நான்கைந்து வளாகங்கள் வந்துள்ளது. கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றித் தருவோம் என கிளிநொச்சி பொன்னகர் கிராம…
-
- 0 replies
- 164 views
-
-
Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 03:12 PM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திற்கமைய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கமைய சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி , மத்திய வங்கி , நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரால் கடன் மறுசீரமைப்பிற்கான திட்டமிடல்கள் மே மாதத்தில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப…
-
- 4 replies
- 669 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 06 MAY, 2023 | 10:18 AM (எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைப்போன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பாரிய விடயங்கள் எதுவும் இல்லை. உலகில் ஏனைய நாடுகளில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு நிகரான சட்டமூலமே தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் சட்டமூலத்தில் ஒரு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே …
-
- 1 reply
- 237 views
- 1 follower
-
-
07 MAY, 2023 | 08:02 AM முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு ஞாயிற்றுக்கிழமை (07) காலை புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெளிநாட்டு விஜயத்தில் பசில் ராஜபக்ஷவுடன் அவரது மனைவியும் பயணமாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸுக்கு சொந்தமான EK-649 என்ற விமானத்தில் இருவரும் துபாய்க்கு புறப்பட்டனர். https://www.virakesari.lk/article/154676
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 07 MAY, 2023 | 11:39 AM கட்டுநாயக்கவிலிருந்து சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் (ஸ்கை மார்ஷல்) துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போக்குவரத்துப் பயணிகள் முனையத்துக்கு வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அவரது துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக விமானம் சுமார் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு விமானத்திலும் விமானம், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஒரு பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கியை பா…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
சமஷ்டி அடிப்படையில் பேச்சுக்கு தயார் என ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் – கஜேந்திரகுமார் நிபந்தனை அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை சமஷ்டி அடிப்படையில் முன்னெடுப்பதற்கு தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் அவருடன் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு தயராக உள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். வடக்கு தமிழ் எம்.பிக்களுடன் அதிகாரப்பகிர்வு, அபிவிருத்தி உள்ளிட்ட வடக்கு மக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் 11ஆம் திகதி முதல் பேச்சு நடத்த ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், அந்த அழைப்ப…
-
- 0 replies
- 228 views
-
-
கிழக்கு எம்.பிகளுக்கு அழைப்பில்லையேல் ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிப்போம் – தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு. கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை என்றால் அவருடன் இடம்பெறவுள்ள சந்திப்பை வடக்கு எம்.பிக்கள் புறக்கணிப்பர் என தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பங்காளி கட்சிகள் மற்றும் இதர தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். 11ம் 12ம் 13ம் திகதிகளில் அதிகாரப் பரவலாக்கல், வடக்கிலுள்ள பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தம…
-
- 0 replies
- 253 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 MAY, 2023 | 04:13 PM (எம்.நியூட்டன்) வலிகாமம் வடக்கு வசாவிளன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. எவ்வித அனுமதியும் இன்றி இந்த வைத்தியசாலை கட்டப்பட்டு வருகிறது என வலிவடக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ச.சஜிவன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலி வடக்கு தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுவருவது தொடர்பில் பிரதேச சபைக்கூட்டத்தில் கலந்துரையாடி அதனை நிறுத்த வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதேபோல் வசாவிளான் பகுதியில் 245 கிராம சேவையாளர் பிரிவில் இராணுவ வைத்தியசாலை கட்டப்பட்டு வருகின்றது.…
-
- 2 replies
- 208 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 06 MAY, 2023 | 02:35 PM ரஷ்ய வரலாற்றின் வெற்றி நாள் கடந்த வியாழக்கிழமை (4) கொழும்பு பொது நூலக வளாகத்தில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது பிரபல ரஷ்ய திரைப்பட நட்சத்திரமான சோஸ்லான் ஃபிடரோவ் மற்றும் தேசிய முன்னணி தன்னார்வலர் அலியோனா போஸ்டோவலோவா ஆகியோரால் தேசபக்தி திட்டமான 'தி ஃபிளேம் ஒஃப் மெமரி'யின் ஒரு பகுதியாக சுடர் கொண்டுவரப்பட்டு ஏற்றப்பட்டது. இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாபெரும் தேசபக்தி போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், ரஷ்யர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இது மிகவும் சிறப்பான …
-
- 3 replies
- 722 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAY, 2023 | 02:03 PM யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பருத்தித்துறையில் இருந்து நேற்று வியாழக்கிழமை, முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளை பார்க்கவென பெண்ணும், இரண்டு ஆண்களும் கீரிமலை பகுதிக்கு வந்துள்ளனர். கீரிமலையில் முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்த…
-
- 5 replies
- 766 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 MAY, 2023 | 03:19 PM தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று சனிக்கிழமை காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 244 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று ஆண்குழந்தை ஒரு பெண் குழந்தை உட்பட 10 பேர் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து ந…
-
- 2 replies
- 363 views
- 1 follower
-
-
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் அவர்கள் வழமையை விட அதிகமாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னேஹக்க தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களை விட கடந்த சில மாதங்களில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சடுதியாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெளிப்படையாக கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதாலும், அரச சேவைக்கு புதிதாக ஆட்களை இணைத்துக் கொள்ளாத அரசா…
-
- 0 replies
- 608 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 06 MAY, 2023 | 10:25 AM (எம்.மனோசித்ரா) நாட்டின் மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் மற்றும் அதன் வினைத்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர , ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மின்சக்தி துறையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் , மின் உற்பத்தி நிறுவனங்களாக மேம…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளது. ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நன்கொடையின் கீழ், நாட்டில் புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இவ்வாறான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வது பெரும் நிவாரணம் அளிப்பதாகவும், அதற்காக ஈரான் மக்களுக்கும் ஈரான் …
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
தையிட்டி விகாரை விவகாரம் : அத்துமீறல்கள் இடம்பெற்றிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் Published By: Digital Desk 5 05 May, 2023 | 10:44 AM தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். வியாழக்கிழமை (04) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 10 replies
- 881 views
- 1 follower
-
-
பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவிக்கு பசில் ராஜபக்ஷ ?? – கட்சிக்குள் முரண்பாடு மே தினக் கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவிற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து பொதுஜன பெரமுனவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக காட்சிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பதாகையில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பசில் ராஜபக்ஷவின் படம் காட்டப்பட்டிருந்தது. இதனை கட்சியின் நன்மதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக கருதுவதால், இந்த விடயம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் ஆட்சேபணைகள் எழுப்பப்பட்டுள்ளன. முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கோட்டாபய ராஜபக்சவின் படம் விளம்பரப்படுத்தப்பட்ட போதும் அவர் …
-
- 0 replies
- 277 views
-