ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
அமெரிக்கா வாழ் தமிழ் பேசும் மக்களே எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போமா http://www.pearlaction.org/rally.php
-
- 9 replies
- 2.3k views
-
-
சக்திவாய்ந்த குண்டு தங்காலையில் மீட்பு காலி, தங்காலை பிரதான வீதியில் அமைந்துள்ள மாலை சந்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குப் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றைப் பொலிஸார் நேற்றுமுன்தினம் மாலை கண்டுபிடித்து மீட்டிருக்கின்றனர். தங்காலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றை யடுத்து, அங்கு வந்த பொலிஸார் இந்தக் குண்டைக் கண்டுபிடித்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரை வரவழைத்துச் செயலிழக்கச் செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் அந்தப் பகுதியில் பொலிஸார் மேலதிக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனவும் கூறப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்களா ஒன்று தங்காலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். http:…
-
- 0 replies
- 968 views
-
-
28-05-2008 அன்றைய நாள்: நேரம் காலைப்பொழுதைக் கடந்து நண்பகலை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது..., கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய அந்த நெய்தல் மண் சுறுசுறுப்பாகியது. ஆங்காங்கே சுடுகருவி ஏந்திய போர் வீரர்களின் நடமாட்டம். போர்ச் சூழலுக்குள் கால் பதித்து விட்டதை உள்ளுணர்வு உணர்த்தியது. வான்குண்டுத் தாக்குதல்களாலும், எறிகணை வீச்சுக்களாலும் தலைகள் சாய்க்கப்பட்ட பனை, தென்னை மரங்களும், கொப்புகளை இழந்து எலும்புக்கூடாய் நிற்கும் நெய்தல் நில மரங்களும் போரின் தாக்கத்தைத் தெளிவாகப் பறைசாற்றின. பல்குழல் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததற்கான தடயங்களாக வீதிகளில் ஆங்காங்கே குழிகள். போர் முகத்துக்குள் இருந்தாலும், வீரம்மிக்க போராளிகளைத் தன் மடியில் சுமந்திருந்ததனால் மிடுக்கோட…
-
- 3 replies
- 2.6k views
-
-
1905லே யாழ்ப்பாண வாலிபர் சங்கம் என்ற அமைப்பில் எமது முன்னோர் தமிழருக்குத் தனியான சுதந்திரம் வேண்டும் என பிரித்தானிய அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். அன்று அந்தப் பொங்கலை கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைவர்கள் சார்பாகப் பேசி முழு இலங்கைக்குமான சுதந்திரக் கோரிக்கையாக போராடச் செய்தார். அதனால் அன்றையப் பொங்கலைச் சிங்களம் பறித்துப் போனது. ஈழத் தமிழினத்தை முடிவில்லாத அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாக்கியது கொழும்புத் தமிழரின் தலைமை. விபரம் http://www.swissmurasam.info/
-
- 1 reply
- 1.4k views
-
-
மிகின் லங்கா விமானசேவையின் பணியாளர்கள் தமது வேதனத்தை பெறமுடியாமல் பல மாதங்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமது வேதனங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கோரி மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே உயர் மட்ட அரசியல் தலைவர்களின் ஆதரவுடன், அரசாங்க வேலைத்திட்டமாக இந்த விமான சேவை நடத்தப்பட்டுவந்தது, இந்த நிறுவனத்திற்காக அரசாங்கத்தின் பல வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமையும், மிகின் லங்காவின் அதிகாரியும், ஜனாதிபதி மகிந்தவின் இணைப்பாளருமான ஷஜின் டி வாஸ் குணவர்த்தனவின் முகாமைத்துவ துஸ்பிரயோகங்களால் வங்குரோத்து நிலையை இந்த நிறுவனம் அடைந்துள்ளமையும் குறிப்படத்தக்கது. http://isoorya.b…
-
- 0 replies
- 822 views
-
-
மன்னாரில் சிறீலங்கா படையினர் குடியிருப்புக்கள் நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதல்! மன்னாரில் சிறீலங்கா படையினர் குடியிருப்புக்கள் நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக, இலுப்பைக்கடவை மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை முதல் இடம்பெறும் இந்த ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களால், தமது அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத அச்சநிலை காணப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர் என தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிருபர்:சிறிதரன் http://www.tamilseythi.com/srilanka/mannar-2008-07-07.html
-
- 0 replies
- 791 views
-
-
அமெரிக்க வல்லரசால் கூட புலிகளுக்கு தீய பழக்கங்களை ஏற்படுத்த முடியவில்லை. நமது மண்ணின் மீது வெறி வேண்டும். விடுதலை உணர்ச்சி வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சங்கராபுரம் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொருளாளர் எடிசன் தவமணி ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளாக மக்களை நெறிப்படுத்தி வருகிறேன். இன்னும் எதிர்பார்த்த அளவு ஆதிதிராவிட சமுதாயம் முன்னேற வில்லை. 15 வயதிலேயே இளைஞர்கள் குடிக்க பழகி 40 வயதில் மனைவியே மதிக்காத ஒரு நிலை ஏற்படுகிறது. விஜயகாந்த் சொன்னால் கேட்கனும் என்ற நினைப்பு ஒரு சிலருக்கு உள்ளது. கட்சியை வளர்க்…
-
- 0 replies
- 1.7k views
-
-
இதுவரை காலமும் சிறீ லங்காவில நடைபெறும் போரினால ஆக 70,000 பேர்தான் இறந்து உள்ளார்கள் என்று சர்வதேச ஊடகங்களில சொல்லப்பட்டு வருகிது. ஆனால் Washington and Harvard Medical School செய்த ஆய்வுகளின்படி இந்த எண்ணிக்கை ஆகக்குறைஞ்சது 215,000 இருக்கும் எண்டு சொல்லப்படுகிதாம். மேலும் இந்த எண்ணிக்கை 338,000 வரை கூட இருக்கலாம் எண்டு கூறப்பட்டு இருக்கிதாம். பி/கு: இந்த செய்தி Asiantribune.com, Sunday Leader, TamilCanadian.com ஆகிய ஊடகங்களில எழுதப்பட்டு இருக்கிது. யாழில ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கிதோ தெரியாது.
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ஊடகவியலாளர்கள் இன்று திங்கட்கிழமை தந்தி அனுப்பும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 834 views
-
-
சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த பணிப்புறக்கணிப்பில் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 721 views
-
-
எட்டியாந்தோட்டை கித்துல்கல, புளத்கொவ்பிட்டிய, அவிசாவளை பகுதிகளில் நேற்றிரவு பறந்த மர்ம விமானம் குறித்து முக்கிய நபர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகி இருப்பதாக கேகாலை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வில்பர்ட் மஹாநாம தெரிவித்துள்ளார். களணி கங்கையில் இறக்கப்பட்டதாக கூறப்படும் இந்த விமானம் வெளிச்சமற்ற இரவு வேளைகளிலும் கொழும்பின் எந்த இடத்திற்கும் ரகசியமான முறையில் பறந்து செல்ல கூடியது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை தாம் கடந்த ஒருவருடமாக கேட்டுள்ளதாகவும் காவற்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.5k views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாறம்பைக்குளத்தில் இன்று திங்கட்கிழமை காலை எரியூட்டப்பட்ட நிலையில் இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 548 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓமந்தை சோதனைச்சாவடி ஒருவார காலத்திற்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை மாலை மீண்டும் பயணிகள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 568 views
-
-
உலகத்திலேயே ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக உலக பத்திரிகைகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடு ஈராக் எனவும், அதற்கு அடுத்த மோசமான நாடு சோமாலியா எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்வதில்லையென ஊடக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 12 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருப்பதுடன், ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருப்பத
-
- 0 replies
- 630 views
-
-
வா.கி.குமார் 7. ஜூலை 2008 வன்னியிலிருக்கும் விடுதலைப் புலிகள் யாழ் குடாநாட்டுக்குத் திருப்புவதைப் பற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என யாழ் மாவட்டத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் எல்.பி.ஆர்.மார்க் தெரிவித்துள்ளார். வன்னிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் மாறிமாறி விடுதலைப் புலிகள் செல்லும் நிலைமை முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட
-
- 1 reply
- 1.6k views
-
-
டி.எம்.வி.பி சார்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் சிவகீதா பிரபாகரன் சர்வகட்சிப் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. டி.எம்.வி.பி சார்பில் சிவகீதா பிரபாகரனின் பெயரை கட்சி அனுப்பி வைத்துள்ளதாக சர்வகட்சிப் பேரவையின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இதன்படி, தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வகட்சிப் பேரவையின் நடவடிக்கைகள் மீண்டும் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
- 0 replies
- 873 views
-
-
கம்பஹாவில் காஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளதாகவும் அதில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் பஸ் வண்டியில் வெடிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். Gas shop explosion injures 4 in Sri Lanka, no bus explosion www.chinaview.cn 2008-07-07 16:47:25 Print COLOMBO, July 7 (Xinhua) -- Four people were injured when a gas shop was caught in an explosion in central Sri Lanka on Monday, officials said, denying report that a bus was exploded. The explosion happened at Pasyaja town, about 60 km north of the capital Colombo. As the shop was beside a crowded road, earlier it was reported that a bu…
-
- 4 replies
- 1.7k views
-
-
பொங்கு தமிழ் நிகழ்வு போன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசு தனது தூதரகங்களுக்கு அறிவுறுத்தல் [ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 02:35 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் பொங்கு தமிழ் நிகழ்வுகளால் சீற்றமடைந்திருக்கும் சிறிலங்கா அரசு, இப்படியான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு உலகெங்கும் உள்ள தனது தூதரங்கங்களுக்கு அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் எதனையும் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று வெளிநாடுகளில் இயங்கும் சிறிலங்கா தூதரகங்களை கடிந்துள்ள சிறிலங்கா வெளிவிகார அமைச்சு, நிகழ்வுகளை உட…
-
- 0 replies
- 602 views
-
-
எதிர்வரும் 48 மணித்ததியாலங்களிற்குள் நாட்டில் எப்பகுதியிலேனும் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர் எனவும், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறும் ஊடக அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் எப்பகுதியிலேனும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். எனவே பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் போன்ற நடவடிக…
-
- 18 replies
- 3.6k views
-
-
சுவிட்சர்லாந்தின் தமிழ் பாடசாலைகளில் வரலாறு பாடத்தில் ஈழ வரலாறு கற்பிக்கப்பட்டு வருவதாகவும், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சுவிட்சர்லாந்து மக்கள் புதிய இலங்கைத் தூதுவர் ரி.பி. மடுவேகெதரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கைத் தூதுவர் சுவிட்ஸர்லாந்து வாழ் இலங்கையர்களை சந்தித்த போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படங்களுடன் கூடிய வரலாற்று நூல்களைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கப்படுவதாக அந்நாட்டு இலங்கையர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுவிட்சர்லாந்துக்கான புதிய இலங்கைத் தூதுவர் அந்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகார…
-
- 9 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் தலைமையில் 200 விடுதலைப்புலிகள் கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் இயங்கி வருவதாக ""லக்பிம'' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தை அரசு கைப்பற்றிய போதும் அங்கு முழுமையான நிர்வாகத் தை ஏற்படுத்த முடியவில்லை. அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்கு டிச்சாறு அடர்ந்த காட்டுப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஜூலை முதலாம் நாள் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷவினை ஏற்றி வரச் சென்ற பெல்412ரக உலங்குவானூர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு நடை பெற்றுவரும் தாக்குதல்களின் பிந்திய தகவ லாகும். அறுகம்குடா பாலத்தை திறப்பதற்குச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்த, அரசாங்கத்தரப்பில் உள்ள சிலர் முயற்சிப்பதாக கருணா தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்திதாளுக்கு அவர் வழங்கிய செவ்வியில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்த, அரசாங்கத்தில் உள்ளோர் முயற்சிக்கும் விடயம், ஜனாதிபதிக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார். தாம் பிரித்தானியாவுக்கு போலியான கடவுச்சீட்டின் மூலம் சென்றது, தமது மனைவியையும் பிள்ளைகளையும் பார்ப்பதற்காகவே என குறிப்பிட்டுள்ள அவர், தமக்கு அங்கு அடைக்கலம் கோரும் எண்ணம் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார். பிரித்தானிய அதிகாரிகளின் விசாரணைகளின் போது போலியான கடவுச்சீட்டை தமக்கு தயார்ப்படுத்தி தந்தது பாதுகாப்பு அமைச்சின் செயல…
-
- 2 replies
- 1.6k views
-
-
6000 - 9000 = 5000 இது புலிகளின் தற்போதைய எண்ணிக்கை பற்றிய சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகாவின் புதிய சமன்பாடு. இச்சமன்பாட்டை எவ்வாறு சீர்செய்வது என்பது எமக்குத் தெரியாது. சிறிலங்காவின் இராணுவத் தளபதி இச்சமன்பாட்டை எந்த இராணுவக் கல்லூரியில் கற்றுக்கொண்டார் என்பதும் எமக்குத் தெரியாது. ஆனால் சிறிலங்காவிலுள்ள பாடசாலையிலோ அன்றி பல்கலைக்கழகங்களிலோ இத்தகையதொரு சமன்பாட்டை அவர் கற்றுக்கொண்டிருக்க முடியாது. இப்புதிய சமன்பாடும் அது பற்றியதான விளக்கமும் கடந்த திங்கட்கிழமை இராணுவத் தலைமையகத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் அளிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, இச்சந்திப்பில் மேலும் இரண்டு விடயங்களையும…
-
- 0 replies
- 979 views
-
-
Posted on : Sun Jul 6 7:05:54 EEST 2008 .சிங்களவருக்கும் தமிழருக்கும் சமமான அரசியல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் தீர்வுக்கு அதுவே ஒரே வழி என்கிறார் பிரான்ஸிஸ் இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சமநிலையற்றுக் காணப்படுவதே இனப்பிரச் சினைக்கு காரணம். தமிழர்களுக்கு உரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப்படுவதன் ஊடாகவே பிரச்சினைக்குத் தீர்வு காண லாம். ஒக்ஸ்போர்டைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ""கிறைசிஸ்'' அமைப்பின் பணிப்பாளர் பிரான்ஸில் ஸ்டுவாட் அம்மை யார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "கியூமன் ரைற்ஸ் ரிபியூன்' என்ற இணை யத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வரு மாறு. அரசியல் ரீதி யான அதிகாரங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே சமநிலையற்றுக…
-
- 0 replies
- 701 views
-