Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக இந்திய விமானப்படையின் உயர் மட்டக் குழுவொன்று மிக விரைவில் கொழும்பு வரவுள்ளது. கொழும்பில் ஆகஸ்ட் 2ம் 3ம் திகதிகளில் சார்க் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் எட்டு சார்க் நாடுகளில் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பை இந்திப் படைகளே மேற்கொள்வதால் அதற்கான சில முன்னேற்பாடுகளில் இந்தியப் படையினர் இறங்கியுள்ளனர். இதனொரு கட்டமாக முதலில் இந்திய விமானப்டையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று மிகவிரைவில் கொழும்பு வந்து பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ப விமானப்டையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது. இலங்கையின் தற்போதைய பாதுக…

    • 3 replies
    • 919 views
  2. பொய்க்குற்றச்சாட்டு வழக்குகளுக்கு நான் அஞ்சப் போவதில்லை –முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நான் அமைத்துக் கொடுத்த அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது. பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி எனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து என்னை நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ள நான் வளர்த்துவிட்ட சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் என்னிடம் பதில் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார். தனது 63 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 29ம் திகதி இரவு அத்தனகல்ல ரன்பொக்குனுகம விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத வழிபாட்டுச் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்ட…

    • 3 replies
    • 1.2k views
  3. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஊடகவியலாளர் எஸ்.ஜே. திஸ்ஸநாயக்கத்தை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு நீதிமன்றிற்கு அருகாமையில் இன்று (ஜூன் 30) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக சேவையாளர் சம்மேளனம், முஸ்லிம் ஊடகப் பேரவை, தமிழ் ஊடகப் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு அகியவை இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.மனித உரிமை அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்தை உருவப்படத்தை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 100 நாட்களுக்கு அதிகமாக வழக்…

    • 0 replies
    • 729 views
  4. புலிகளின் மரபுவழி போர்த்திறனை முற்றாக அழித்து விட்டோம்: சிறிலங்கா இராணுவத் தளபதி [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 06:12 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழீழ விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது. எமது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் தமது இராணுவ பலத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் இன்னமும் எமது படைகளுடன் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் முன்பிருந்த எதிர்ப…

  5. இலங்கை முன்னர் ஸிம்பாப்வேயிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஸிம்பாப்வே ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 1997 ஆம் ஆண்டு ஸிம்பாப்வே பாதுகாப்பு நிறுவனம், இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 1997 ஆம்ஆண்டு லிபிய கப்பலில் ஸிம்பாப்வே இலங்கைக்கு அனுப்பிவைத்த 32 ஆயிரத்து 400 மோட்டர்கள், நடுக்கடலில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை முகாபேயின் ஸிம்பாப்வே அரசாங்கம் இன்னமும் ஆபிரிக்க நாடுகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 1 reply
    • 1.2k views
  6. கிழக்கை முழுமையாக விடுதலைப் புலிகளின் கரங்களில் இருந்து மீட்டெடுத்து விட்டோம் என சிங்கள அரசு மேற்கொண்டு வந்த மித மிஞ்சிய பிரசாரங்களின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. அண்மைக்காலமாக கிழக்கில் அதிகரித்து வரும் கரந்தடிப் பாணியிலான தாக்குதல்கள் அரச படைகளை மட்டுமன்றி கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, நிதிப்பிச்சை கேட்டு வரும் அரசாங்கத்தையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றது. கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் 1840 மில்லியன் டொலர்களை திரட்டி தனது யுத்தச் செலவீனத்தை ஈடுகட்ட முயற்சிகளை அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில் புலிகளின் தாக்குதல்கள் அரசின் நோக்கத்தைக் குழப்புவதாய் அமைந்திருக்கின்றன. இம்மாதம் 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் தமிழ் ஒலிபர…

    • 13 replies
    • 3k views
  7. சிங்கள அரசுக்கு பாதுகாப்பளிக்க 3000 இந்திய ஜவான்களும் அவர்களின் படைக்கலங்களும் கொழும்புக்கு விரைந்துள்ள நேரத்தில்.. இந்திய இறையாண்மைக்குள் வாழும் தமிழர்களுக்கு இக்கதி... --------------- இலங்கை கடற்படை தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம் ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் சித்திரவதையில் சிக்கி ராமேஸ்வரம் ம்ீனவர் படுகாயமடைந்துள்ளார். ராமேஸ்வரத்தில் மீண்டும் ஒரு கண்ணீர் கதை. இயற்கை மரணம் என்பதை விட இலங்கை கடற்படையின் வெறிக் கரங்களில் சிக்கி இறக்கும் நிலையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நேற்று மேலும் ஒரு அடி விழுந்தது. ராமேஸ்வரத்திலிருந்து 722 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டி…

  8. வவுனியா பாலமோட்டையில் நடைபெறும் உக்கிர மோதலில் 3 படயினர் பலியாகி எண்மர் காயங்களுக்கு ஆளாகி உள்ளனர் என் விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளனர். இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்த மோதல் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. http://tamilnet.com/art.html?catid=13&artid=26209

  9. தமிழ்நாட்டை தமது இரண்டாம் தாயகமாக்கொண்ட ஈழத் தமிழ் மக்கள் மீதான முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெறுப்புணர்வு தற்பொழுது வெளிப்படுத்தப்படுவதாக, பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு எதிராக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்து, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். சிங்கள இன வெறியர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு கருணாநிதி விதித்துள்ள தடை, வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் செயல் என இந்த அறிக்கை கண்டிக்கின்றது. தமிழ்நாட்டை மலையாளிகளும், மார்வாடிகளும், குஜராத்தி…

  10. இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க இணங்கியுள்ளதாக த ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் முதற் தடவையாக 500 க்கு மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களிலான படையினர் இந்தப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கலகத் தடுப்பு போரியல், காடுகளில் போரிடும் முறைமை, விசேட கடல்சார் பயிற்சி, தகவல், தகவல் வழிகாட்டி, நீர்மூழ்கி எpதிரத் தாக்குதல் முறைமை என பலதரப்பட்ட போரியல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்த இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 1 reply
    • 764 views
  11. வீரகேசரி இணையம் - கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்புக்கென சுமார் மூவாயிரம் இந்தியத் துருப்பினர் இலங்கை செல்லவுள்ளனர். இவர்களைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசு திட்டம் தீட்டியுள்ளது என பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற போர்வையில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியப் படைவீரர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும் முதல் கட்டமாக 1,500 வீரர்கள் கொழும்பு சென்றுவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்…

    • 3 replies
    • 915 views
  12. சிங்களப் பேரினவாத அரசாங்கத்துக்கு தமிழினம் விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத்தளபதி அமுதாப் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற லெப். கேணல் வாணன், மேஜர் ஜெயசீலன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்கவுரை ஆற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் வாணன், மேஜர் ஜெயசீலன் ஆகிய மாவீரர்கள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் முதன்மைப் பங்கு வகித்தவர்கள். எதிரியுடன் நேருக்கு நேர் மோதி சிறப்புப் படையணியின் மரபுக்கேற்ப வீரச்சாவடைந்தவர்கள். இம் மாவீரர்களின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம். இன்றைய அரசியல் சூழலை எடுத்து…

    • 0 replies
    • 857 views
  13. மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளத்தில் இன்று நிகழ்ந்த புலிகளின் குரல் முத்தமிழ் கலை அரங்க நிகழ்வில் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி லக்ஸ்மன் அவர்கள் பேசிய போதே தேசிய தலைவரின் திட்டத்தினை உரிய நேரத்தில் சிறீலங்காப் படையினர் கற்றுக் கொள்வர் என்று குறிப்பிட்டுள்ளார். மகிந்த போரின் மூலம் தீர்வைத் தேடுவாராக இருந்தால் இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோம். இடம்பெயர்ந்த நிலையிலும் படையினரின் வன்பறிப்புக்கள் மத்தியிலும் உறுதி குலையாது மன்னார் மாவட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதானது உற்சாகமளிப்பதாக மேலும் தளபதி குறிப்பிட்டுள்ளார். புலிகளின் குரல் - இரவுச் செய்தி. (29-06-2008) : http://www.pulikalinkural.com/

    • 3 replies
    • 1.5k views
  14. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அடையாளம் தெரியாதோரால் ஊடகவியலாளர் நமால் பெரேரா மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரி ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலை பிரித்தானிய தூதரகம் கண்டித்துள்ளதுடன் நீதி விசாரணைக்கும் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 595 views
  15. நிலவரம்:வன்னித்தம்பி தங்கரத்தினம் 30. ஜூன் 2008 18:50 1987 இல் சிறி லங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா போட்ட அரசியல் கூழ் முட்டையே இலங்கையின் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஆகும்;. பரம்பரை பரம்பரையாகத் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே இந்தக் கூழ் முட்டையும். நேர்மையான தீர்வு காணும் எண்ணம் சிங்களத் தலைமைக்கோ ஜே.ஆருக்கோ இருந்திருக்குமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த மக்களவையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமாகத் தமிழர் தாயகத்தை பிரகடனப் படுத்தியிருக்கலாம். அப்படியான ஒரு வற்புறுத்தலை பிராந்திய வல்லரசு என நாட்டாண்மை பேசும் இந்திய அரசின் பிரதமரான ராஜீவ் காந்தியாலும் மேற்கொள்ள முடியவில்லை, அல்லது அந்த அளவுக்கு அவரிடம் ஜே.ஆர். ம…

  16. ஆசியாவில் பணவீக்கம் கூடியநாடாக சிறீலங்கா திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] ஆசிய பிராந்தியத்தின் அதிகூடிய பணவீக்க வீதம் இலங்கையில் நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் மாதத்தில் பணவீக்க வீதம் சுமார் 25 விழுக்காட்டை எட்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வரலாறு காணாத வகையில் இலங்கையில் பணவீக்க உயர்வடைந்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் கொள்கைத் திட்டமிடலில் காணப்படும் குறைபாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்.எஸ்.பி.சீ. வங்கியின் ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1532

  17. இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் போன்றவை காரணமாக இலங்கை அரசு நீண்ட காலத்திற்கு இராணுவ நடவடிக்கையைத் தொடர்வது கடினமானது என இலங்கைக்கு வலியுறுத்திக் கூறியுள்ள இந்தியா, யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக மாறுவதைத் தவிர்ப்பதற்காகப் பேச்சு மூலமான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்குமாறும் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இந்திய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சார்க் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இலங்கை அரசு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுள்ள இந்தியக் குழுவினர், இல்லாவிடில் இந்தியப் பிரதமரின் "சார்க்' உ…

    • 6 replies
    • 1.2k views
  18. இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் ராஜதந்திரி Mahendra Ratnaweera வும் உள்ளூர் பத்திரிகையாளரான Namal Perera வும் கொழும்பில் கடுமையாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். UK diplomat attacked in Sri Lanka A British High Commission employee in Sri Lanka's capital, Colombo, has been attacked along with a local journalist. Political officer Mahendra Ratnaweera and reporter Namal Perera were travelling by car together when they were stopped and attacked. The Sri Lanka Press Institute said a group of people carried out the assault. It is not clear who they were. Mr Perera is the latest of a number of journalists in th…

  19. துணுக்காய் உதவி அரச அதிபர் படுகொலை: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டனம் [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 08:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் படுகொலை செய்யப்பட்டதனை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டித்துள்ளது. இது தொடர்பில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் முனைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் உதவி அரச அதிபர் மீது நடத்தப்பட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் இக்கொடூரமான தாக்குதலை மனிதாபிமானப் பணிபுரியும் முன்னணி அமைப்பு என்ற ரீதியில் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரச படைகளின் நகர்வுகளினாலும் எறிகணை வீச்சுக்களினாலும் ஆயிரக்கணக்க…

    • 0 replies
    • 593 views
  20. துணுக்காய் உதவி அரச அதிபரின் இறுதி வணக்க நிகழ்வு [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 08:25 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் பலியான துணுக்காய் உதவி அரசாங்க அதிபரான நாகலிங்கம் நந்தகுமாரின் இறுதி வணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. நாகலிங்கம் நந்தகுமாரின் புகழுடல் துணுக்காய் உதவி அரச அதிபர் செயலக மண்டபத்தில் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு, கந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வணக்க நிகழ்வு, கந்தபுரம் உதவி அரச அதிபர் துணைப் பணிமனை அலுவலகர் மகேந்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் உரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன்…

    • 0 replies
    • 807 views
  21. அறுகம்பே பாலம் நாளை திறக்கப்படவுள்ளது திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] பொத்துவில் மற்றும் அறுகப்பே பகுதிகளை இணைக்கும் அறுகம்பே பாலத்தை நாளை(ஜூலை 01) பொதுமக்களின் பிரயாணத்திற்கு திறந்துவிடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கிழக்கு உதயம் திட்டத்திற்கமைய 2004ஆம் அண்டு ஆழிப்பேரலையினால் தேமடைந்த இந்ப்பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தப்பாலம் திறக்கப்படவுள்ளமை, இப்பகுதிமக்களின் மீன்பிடி, மற்றும், விவசாய என்பதுடன், உல்லாசப்பயணத்திற்கும் மக்களின் இலகுவழிப் பயணத்திற்கும் உதவியாக இருக்கும் என சிறி லங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். http://w…

  22. ஹிக்கடுவ பகுதியில் தொடரூந்து தடம்புரண்டதில் மூவர் பலி: 5 வரை காணவில்லை திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] றுகுணு குமாரி என அழைக்கப்படும் புகையிரம்; கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்றதாகவும் வழியில் ஹிக்கடுவ பகுதியில் பாதையை விட்டு விலகியுள்ளதாகம் தெரியவருகிறது. இதன்போது மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டும் ஜந்து பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவருகிறது. இப்புகையிரதம் பாதையை விட்டு விலகியமைக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என அறியமுடிகிறது http://www.pathivu.com/?p=1529

  23. தமிழீழத் தனியரசை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் இல்லையேல் தமிழர்களை சர்வதேசம் தேடிவரும் காலம் வெகுவிரைவில் உருவாகும். என மட்டு. த.தே.கூட்டமைப்பின் பா.உ எஸ்.ஜெயனந்தமூர்த்தி ஜேர்மனியில் பொங்குதமிழ் நிகழ்வில் தெரிவித்தார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் அரச படைகளுக்கும் அதனை வழி நடாத்திச் செல்லும் உயர்அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டுவதற்கு விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளது. இன்னும் 27 கிலோமீற்றர், 18 கீ.மிற்றர் என நீளங்களை அளவிடும் இராணுத் தளபதி மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் மதவாச்சி நோக்கி செல்ல இருக்கும் கிலோ மீற்றரின் தூரத்தை கணக்குப் போட தவறிவிட்டார். பொறுமையோடு, நீண்ட கால அமைதியைக் காத்துவிட்டோம். …

    • 3 replies
    • 2k views
  24. தமிழ்மொழி பயிற்சிகளை முடித்துக்கொண்ட சிறீலங்கா படையினர் சனி, 28 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொத்மலை இணைப்புசேவை பயிற்சி நிறுவனத்தில் இருந்து தமிழ்மொழிப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 82 பேர் அடங்கிய காவல்துறை மற்றும் முப்படை அதிகாரிகள் கொண்ட 75 அவது பிரிவினர் வெளியேறியுள்ளனர். கடந்த புதன்கிழமை இந்த பயறிச்சி நெறிகளை வெற்றிகரமாக முடித்தக்கொண்ட முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குரிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. பாதுகாப்பு அமைச்சின் உப செயலாளர் டபிள்யூ.எம்.ஏ.எஸ். விக்கிரமசிங்க இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்தகொண்டார். 100 நாட்கள் பயிற்சித் திட்டமாக உள்ள இந்த தமிழ்மொழிப்பயிற்சியின் பரீட்சையை இலங்கை பரீட்சைத்திணைக்கள மொழிப் பிரிவு நடத்…

    • 6 replies
    • 1.6k views
  25. இலங்கையின் மன்னர் பகுதியில் உள்ள ஆண்டான்குள நரை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படம் இலங்கை ராணுவ இணையம் Sri Lankan military: Soldiers capture Tamil rebel-held town, fighting kills 43 The Associated PressPublished: June 28, 2008 COLOMBO, Sri Lanka: Government troops captured a Tamil Tiger rebel-held town in war-ravaged northern Sri Lanka while infantry clashes across the region killed 40 rebels and three soldiers, the military said Saturday. Fighting has escalated in this Indian Ocean island in recent months as government forces try to fulfill a pledge to crush the insurgents by th…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.