ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 656 views
-
-
உலங்குவானூர்தி மீது சத்தமற்ற தாக்குதலை நடத்திய புலிகள்: அமைச்சர் கேகலிய [புதன்கிழமை, 02 யூலை 2008, 07:53 பி.ப ஈழம்] [வவுனியா நிருபர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மெலாக இருந்த பகுதிகளை படையினர் கைப்பற்றியிருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். நெல் விளையும் பாரிய நி…
-
- 8 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா வான்படையின் தாக்குதலையடுத்து ஏ-9 வீதி போக்குவரத்து நிறுத்தம் [புதன்கிழமை, 02 யூலை 2008, 05:42 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் ஓமந்தை சூனியப்பிரதேசத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் பணியாற்றும் பகுதியில் நேற்று நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலையடுத்து ஓமந்தை சூனியப்பிரதேசத்தில் பணியாற்றுவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஓமந்தை சூனியப்பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சிறிலங்கா வான்படையியின் வானூர்திகள் கடும் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தின. இதனால் பாதுகாப்பு போதியளவு இல்லை என்று தெரிவித்து நேற்றிரவு முதல் அப்பகுதியிலிருந்து விலகுவதாக செஞ்சிலுவைச் சங்கத்தினர் அறிவ…
-
- 0 replies
- 576 views
-
-
வவுனியாவில் உள்ள அம்பலாங்கொடல்ல என்ற இடத்தில் சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் அதிகாரியின் வீட்டிலிருந்து வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 546 views
-
-
கரும்புலிகள் நாளையொட்டி சிறப்பு கலையரங்கம் [புதன்கிழமை, 02 யூலை 2008, 06:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி பாரதிபுரம் வடத்தில் தொண்டமனாறு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று கரும்புலிகள் நாளையொட்டிய சிறப்பு கலையரங்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பாரதிபுரம் வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திருமாறன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார். பொதுக்கரும்புலிகளின் திருவுருவப்படத்திற்கு தூயவன் அரச அறிவியல் கல்லூரி முதல்வர் அரசண்ணா சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினார். கரும்புலி கப்டன் மில்லரின் திருவுருவப்படத்திற்கு தரைக்கரும்புலி மேஜர் யாழினியின் உடன்பிற…
-
- 0 replies
- 543 views
-
-
இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் பணியாளரும் ஊடகவியலாளருமான நாமல் பெரேரா, பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றும் மகேந்திர ரட்ணவீர ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 545 views
-
-
கிளிநொச்சியிலும், புதுக்குடியிருப்பிலும் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நா.நந்தகுமார் மீது சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலினைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 555 views
-
-
ஊடகவியலாளர் நாமால் பெரேரா மற்றும் பிரித்தானிய அரசியல் பிரிவின் ஊடக அதிகரி மகேந்திர ரத்னவீர ஆகியோர் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஊடக அமைப்புகள் இன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கடந்த 30 ஆம் திகதி இந்த இருவர் தாக்கப்பட்டமை கண்டிப்பதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். இன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக சேவையாளர் சங்கம், இலங்கை முஸ்லிம் ஊடகப் பேரவை, இலங்கை தமிழ் ஊடகப் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு ஆகிய இணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிகள், வெகுசன அமைப்புக்கள…
-
- 0 replies
- 631 views
-
-
சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் முஷாரப்பின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தானிய படைகள் வரவில்லை! இலங்கையில் நடைபெறவுள்ள 15 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தானிய படைகள் வரவில்லை என தூதுவராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் ஜனாதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரம் இந்த விஜயத்தின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்கு 3000த்திற்கும் மேற்பட்ட இந்திய படையினர் இலங்கை வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய அனைத்து அரச தலைவர்களின் பாதுகாப்பிற்காகவும் இந்திய படையினர் விசேட பாதுக…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமும், ஹசன் அலியும் மீண்டும் நாடாளுமன்றப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 743 views
-
-
எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை தோற்கடிப்பேன்! சிறிலாங்கா ஜனாதிபதி அப்பாவிப் பொது மக்களை விட்டுவிட்டு என்னை பயங்கரவாதிகள் தமது இலக்காகக் கொள்வார்களானால் அதனை ஒரு சவாலாக நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி எமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளேன் என ஊடகங்களுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியதகாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மததிய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். அ…
-
- 9 replies
- 1.8k views
-
-
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் கறுப்பு ஜூலை கலவரத்தை அனுஷ்டிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக சிங்கள நாளேடு புலனாய்வுத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதற்காக சுமார் 21 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொழும்பிற்குள் ஊடுறுவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவினர் எதிர்வரும் நாட்களில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் இந்தத் தாக்குதல் குழு ஐந்து பிரிவுகளாக பிரிந்து தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊடகவியலாளரும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் மான நாமல் பெரேராவை தாக்கியவர்கள் தொடர்பான விபரங்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் ரூபா பரிசு வழங்கப்படும் என்று இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பத்திரிகை வெளியீட்டாளர்கள் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவலை அவர்கள் வெளியிட்டனர். காலை 10.30 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்களான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், விஜயா நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், உபாலி நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், தினக்குரல் பப்ளிகேசன்ஸ் பிறைவேட் லிமிட்டட், சுமதி பப்ளிகேசன…
-
- 0 replies
- 890 views
-
-
Posted on : Wed Jul 2 8:42:43 EEST 2008 "மொபிரெல்' தொலைபேசிச் சேவை குடாநாடு முழுவதும் விஸ்தரிக்கப்படுகிறது 19 கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன யாழ்.குடாநாட்டின் சகல பிர தேசங்களுக்கும் "மொபிரெல்' கைய டக்கத் தொலைபேசிச் சேவை விஸ் தரிக்கப்படவுள்ளது. இதற்கென 19 தொலைத்தொடர்புக் கோபுரங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இது பற்றி நேரடியாக மதிப்பீடு செய்து பணிகளை ஆரம்பிப்பதற் கென உயர்மட்டத் தொழில் நுட்பக் குழுவொன்று கடந்தவாரம் யாழ்ப் பாணம் விஜயம் செய்திருந்தது. இந்தக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக 9 தொலைத் தொடர்புக் கோபுரங்கள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன. யாழ்.நகரை அண்டிய பகுதிகளிலும் கோப்பாய்ப் பிரதேசத்திலும் இந்தக் கோபுரங்கள் அமையவுள்ளன. இதற் கான உபகரணங்களி…
-
- 0 replies
- 836 views
-
-
ஜனநாயகத்தின் பெயரால் அராஜகம் அளவு மீறி அரங் கேறும் தேசமாக மாறி வருகின்றது இலங்கைத் தீவு. ஜனநாயகத்தின் நான்காவது காவலர்கள் என்று கூறப்படும் ஊடகவியலாளர்களை, வன்முறை அராஜ கங்கள் மூலம் குரூரமாக அடக்கி, அவர்களின் குரல் வளையை ஒடுக்கும் திட்டமிட்ட "அரச பயங்கரவாதம்' இந்தத் தேசத்தின் அன்றாட வழக்கமாகி விட்டது. இம்முறை இலங்கைப் பத்திரிகை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும், இராணுவ விடயங்கள் பற்றிய உள்வீட்டுத் தகவல்களை நடுநிலையில் நின்று கட்டுரைகளாக வரைபவரும், பல தரப்பினராலும் அதி கம் மதிக்கப்படுகின்றவருமான நாமல் பெரேரா இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார். அவருடன் கூட அச்சமயம் பயணம் செய்த பிரிட்டிஷ் தூதரகத்தில் அரசியல் அலுவலராகப் பணிபுரிகின்ற மகேந்திர ரட்ணவீரவும் கடும் தாக்குதல…
-
- 0 replies
- 582 views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் கேளிக்கை நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாகத் தவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு கட்டமாக, உலக சுகாதார நிறுவனத் தலைவராகத் தாம் தெரிவானமையைக் கொண்டாடும் முகமாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நடத்திய விருந்துபசாரம் அமைந்திருந்தது. இதில் இரண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கை சேர்ந்த ஒருவரும் பங்கேற்றதுடன் களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், குடிபோதையில் “என்னடி ராக்கம்மா” என்ற பாடலை பாடி விருந்துக்கு வந்தோரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். இதனைப்பார்த்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழ்மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது தமிழ…
-
- 10 replies
- 2.8k views
-
-
தேங்காய்களுக்குள் சி4 வெடிப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாம் தேங்காய் வியாபாரியான பெண்ணும் பஸ் சாரதி நடத்துனரும் கைது வவுனியா நிருபர் 7/2/2008 9:01:07 AM - வவுனியா சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த பஸ் வண்டியொன்றில் வியாபாரத்திற்காகக் கொண்டுவரப்பட்ட தேங்காய்கள் சிலவற்றில் சி4 வெடிப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் கோவிலருகில் உள்ள சுடலை வீதிச் சந்தி பொலிஸ் வீதிச்சோதனை நிலையத்தில் இடம்பெற்ற சோதனைய்pன் போது இது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், தேங்காய் கொண்டு வந்த பெண்மணியான வியாபாரியையும், அவர் பயணம் செய்த பஸ் சாரதி மற்றும் நடத்துனரையும் பொலிசார் கைது செய்துள…
-
- 2 replies
- 866 views
-
-
[புதன்கிழமை, 02 யூலை 2008, 06:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையுடன் இணைந்து செயற்பட்டு வரும் பிள்ளையானை அழிப்பதற்கு முன்னாள் துணைப்படைத் தலைவரான கருணா முயற்சித்து வருகின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைப் புரிந்து பிள்ளையானை அழிக்கப்பேவதாக கருணா தெரிவித்துள்ளார் என்று கிழக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவின் குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக அங்குள்ள தடுப்பு முகாமில் கருணா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கிழக்கில் நடைபெற்ற தேர்தலை கருணா எதிர்த்ததுடன், பிள…
-
- 6 replies
- 1.8k views
-
-
இந்தியாவிலுள்ள பல்வேறு இராணுவப் பயிற்சி முகாம்களில் 500 க்கும் மேற்பட்ட இலங்கை படையினருக்குப் பயிற்சிகள் வழங்கபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மிசோரம் மாநிலத்தில் வனபயிற்சி நிலையத்திலும், மாரட்டிய மாநிலம் தேவலாவியில் உள்ள பீரங்கிப் போர் பயிற்சி நிலையத்தில் போர் பயிற்சியும் அளித்து வருகின்றது. இலங்கை படைவீரருக்கு தனது இராணுவ பயிற்சி முகாம்களின் அனைத்து கதவுகளையும் இந்தியா திறந்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தகவல் தொழில்நுட்பம், நீர்மூழ்கிக் கப்பல் போர் பயிற்சி போன்ற பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்பட…
-
- 2 replies
- 1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொடரணியில் முக்கிய பிரமுகர்களை ஏற்றிச்செல்லும் பெல்-412 உலங்குவானூர்தியே சேதமாகியுள்ளது என்று சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் சதியாகும்: மகிந்த பிரபல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் சதித்திட்டமொன்று செயல்பட்டு வருவதாக சிறிலாங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கிழக்கில் புதிதாக அமைக்கப்பட்ட அறுகம்பை பாலத்தைத் இன்று திறந்து வைத்து உரையாற்றும்போதே சிறிலாங்கா ஜனாதிபதி மகிந்த இவ்வாறு கூறினார். கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக சேதமடைந்த இப்பாலம் 1140 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிதாக நிருமானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்துள்ளதோடு பாலம் அமைப்பு பணிகளில் அமெரிக்க தொழில்நுட்ப…
-
- 0 replies
- 950 views
-
-
35 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம். 01.07.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 35 கைதிகளை 10-05-2008 அன்று மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு கைதிகளுக்கான போதிய வசதிகள் இன்மையாலும் கைதிகளின் உறவினர்களோ, சட்டத்தரணிகள் எவரையும் சந்திக்கமுடியாத நிலை காணப்படுவதால் அவர்களின் பிரச்சினை குறித்து கவனத்தில் எடுக்கப்படாததால் மீண்டும் தங்களை கொழும்பிலுள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றம் செய்யக்கோரியும் அல்லது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக மேற்கண்ட 35 கைதிகளும் தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்களது சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை நாளை (02-07-2008) காலை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். sankathi.com
-
- 29 replies
- 3.3k views
-
-
ஆட்கடத்தல், கப்பம் அறிவிடுதலை இல்லாதொழிக்க நடவடிக்கை - புதிய காவல்துறை மா அதிபர் செவ்வாய், 01 ஜுலை 2008 [நிருபர் அ.மயூரன்] ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதுடன், ஆட்கடத்தல் கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய விசேட நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக தமது பதவிகளை பொறுப்பேற்றவுடன் ஊடகவிலாளர்களிடம் கருத்து வெளியட்ட புதிய பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கரமரட்ன தெரிவித்துள்ளார். நாட்டின் குரலாக இருக்கும் ஊடக சுதந்திரத்தை மதிப்பதுடன் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பொலிஸாரை ஈடுபடுத்துவதுடன், நாட்டில் குற்றச்செயல்களை தடுத்து மக்களை அச்சமின்றி நடமாடும் பொருட்டு சகல நடவடிக்கைகளும் இனிவரும் காலங்களில் எடுக்கப்படும் எனவும், குறிப்பாக ஆட்கடத்தல் சம்பவங்கள் இன்று நாட்ட…
-
- 1 reply
- 645 views
-
-
இராணுவ வலுச் சமநிலையும் தமிழர் விடுதலைப் போராட்டமும் -தாரகா- ஈழத்தமிழ் விடுதலைப் போராட்ட வரலாற்றை உற்று நோக்கினால் அது ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருப்பதை காணலாம். ஆரம்பத்தில் கோரிக்கை அரசியலாகவும் (Appeal politics) வேண்டுகோள் (Request politics) அரசியலாகவும் இருந்த நமது அரசியலானது, பின்னர் ஒரு ஆயுத வழி விடுதலைப் போராட்ட அரசியலாகத் தோற்றம் பெற்றது. நமது அரசியல் வெறும் கோரிக்கைகளாகவும், வேண்டுகோள்களாவும் இருந்த காலத்தில் தமிழர் தேசம் என்ற கருத்துநிலை பெருமளவிற்கு வலுவடைந்திருக்கவில்லை. இதனை இன்னும் சற்று விளக்கமாகப் பார்த்தால், தமிழ் மக்கள் இலங்கைத் தேசியம் என்ற பொதுநிலைக்குள் ஒரு உப தேசியமாக வாழ முடியுமென்ற நம்பிக்கையி…
-
- 0 replies
- 980 views
-
-
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது தமக்குத்தாமே மரண அத்தாட்சிப் பத்திரத்தை எழுதுவதற்குச் சமமாக அமைந்துவிடும் என தேசிய சுதந்திர முன்னணி, எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை இடைநிறுத்தினால் அது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு முடிவுகாலமாக அமைந்துவிடும் என பத்தரமுல்லவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். “அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக மக்கள் முறைப்பாடுகள் எதனையும் செய்யவில்லை. மோதல்களைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்புத் தன்மை தங்கியுள்ளது…
-
- 1 reply
- 1.1k views
-