Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக ஹிஸ்புல்லாவை நியமிக்காது விட்டால் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகப்போவதாக அரசை மிரட்டியிருந்தனர். ஆனால் அரசு அந்த மிரட்லுக்கு செவிசாய்க்கவில்லை. எனவே தன்மானம் இருந்தால் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகட்டும் என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  2. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் இன்று புதன்கிழமை கேணல் ரமணனின் 2 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 919 views
  3. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுக் கவிதை

  4. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுக் கவிதை

  5. யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினரால் நால்வர் கடத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேற்குலக இராஜதந்திரிகள் செயற்படுகின்றனர் என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  7. ஐரோப்பிய சுற்றுலாவுக்கு தயாராகும் பிள்ளையான்! Wednesday, 21 May 2008 கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஐரோப்பாவவை சுற்றி வருவதற்கான ஒழுங்களை ஜனாதிபதி செய்து வருவதாக ஜனாதிபதி செயலகத்தலிருந்து தெரிய வருகிறது. இச் சுற்றுப் பயணத்தின் நோக்கம் கிழக்கு மாநிலத்தின் ஒரு தமிழரை முதலமைச்சராக்கி அவரை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்வதோடு சிறீலங்காவின் தேசிய பிரச்சனைக்கு முடிவு காணும் முதல் முயற்சியாக தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கி விடை காண முயலுவதாக உலகுக்கு எடுத்தியம்பவே என தெரிய வந்துள்ளது. http://www.ajeevan.ch/content/view/2879/1/

  8. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 900 views
  9. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.05.2008 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

  10. அமைச்சு பதவி தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படாமையினால் ஹிஸ்புல்லாவின் பதவியேற்பு தாமதம் அமைச்சு பதவிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக ஹிஸ்புல்லாவின் பதவிப் பிரமாணம் தாமதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. எனினும், சுகாதார அமைச்சுக்குப் மேலதிகமாக வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை .............. தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8437.html

  11. எமது கலை, பண்பாடுகள் விடுதலை உணர்வுகளை வளர்ப்பவையாக விளங்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 775 views
  12. வவுனியா மாவட்டத்தில் உள்ள கூமாங்குளத்தில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 586 views
  13. மட்டக்களப்பில் தொடர்ச்சியாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் குழுவினாரால் இளம் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த மோர்ணிங்க் லீடர்" தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பில் இரவு நேரங்களில் இளம்பெண்கள கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது பற்றி காவல்துறையினரிடம் முறைப்பாடுகள் செய்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். வெள்ளை வானில் வரும் இந்த ஆயுதக்கும்பல்களுக்கு இளம் பெண்களின் பெயர் முதல் சகல விபரங்களும் தெரிந்திருக்கின…

    • 5 replies
    • 1.6k views
  14. யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் எறிகணைவீச்சு பீரங்கி நிலை மீதும், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடும் இடம் மீதும் இன்று காலை 6 மணிக்கு விமானப்படையினர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளி;ன் பிரதேசத்தினுள் முன்னேறுகின்ற படையினருக்கு வான்வழி சூட்டு ஆதரவு வழங்கிவரும் விமானப்படையின் எம்.ஐ24 ரக தாக்குதல் ஹெலிக்கப்டர்களே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விமானப்படையின் விங் கமாண்டர் அன்றூ விஜேசூரிய கூறியுள்ளார். முகமாலை இராணுவ முன்னரங்கத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்…

  15. ஆர்ப்பரித்த பேரினவாத பூதத்தை, பூதத்தின் ஆணவத்தை தலைவனுடன் தோள்கொடுத்து ஆர்ப்பரித்த பூதத்தின் உச்சந்தலையியே பேரிடியை இறக்கி சிதறடித்த எங்கள் மூத்த தளபதி காலதேவனின் அழைப்பில் எங்களிடம் சொல்லாமலே சென்றுவிட்டீர்கள். "நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும்" எனும் எங்கள் தலைவனின் கருத்துக்கு செயல்வடிவம் கொடுத்த தளபதி, எம்மக்களையும்,எம்மண்ணையும் தனதுயிரினும் மேலாக நேசித்த வீரன், குடாரப்பில் முப்பத்தைந்து நாட்களாக எதிரியுடன் அவன் மடியிலேயே எவ்வெளியுலகத் தொடர்புமின்றி சமராடி இத்தாவில், பளை ஈடாக ஆனையிறவு வெல்லப்படும் வரை வெங்களமாடி தமிழினத்தை, தமிழர்தம் வீரப்போரை உலகறியச்செய்தவர். நீங்கள் …

    • 2 replies
    • 2.3k views
  16. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தேர்தல் இன்று: கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் களத்தில் இலங்கை! தெரிவு குறித்து முழு நம்பிக்கை கொழும்பு அரசுக்கு ஆனால் வீழ்த்துவதில் பொது அமைப்புகள் மும்முரம் சர்வதேச ரீதியில் தனக்கு எதிராகக் கிளர்ந்துள்ள கடும் எதிர்ப்பு அலைகளுக்கு மத்தியில் இலங்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் மீண்டும் உறுப்புரிமை பெறுவதற்கான தேர்தலில் போட்டியிடுகின்றது. நியூயோர்க்கில் நடைபெறும் இத்தெரிவில் வெற்றி கிட்டும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக இலங்கை அரசுப் பிரதிநிகள் உறுதி வெளியிட்டுள்ள போதிலும், இலங்கையை எப்படியும் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதில் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளும் சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட தரப்புகளு…

    • 0 replies
    • 1.1k views
  17. ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இலங்கை தெரிவு செய்யப்படுவதை நிராகரிக்குமாறு மூன்று கண்டங்களைச் சோந்த நோபல் பரிசு பெற்ற பிரமுகர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக, வினைத்திறன் வாய்ந்த மனித உரிமைகள் பேரவைக்கான அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் கூட்டணி நேற்று முன்தினம் திங்கள் அன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூட்டு, ஆர்ஜன்ரீனாவின் அடொல்போ பெரஸ் எஸ் கியூவல், அமெரிக்காவின் ஜிம்மி காட்டர் ஆகிய நோபல் பரிசுகளை வென்றேடுத்த மூன்று பிரபல்யமானவர்களே இலங்கையின் மனித உரிமை மீறல் பதிவுகளின் அடிப்படையில் பேரவையின் உறுப்பினாராக இலங்கை தெரிவு செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் பேரவைக்கான உறுப்பினர் தேர்தல…

  18. தற்சமயம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆய்வுக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் கடந்த 13 ம் திகதி ஆரயப்பட்ட போது இலங்கைக்கு இந்தியா முதுகு கொடுத்து முழு அளவில் உதவி அளித்துக் காப்பாற்றியிருக்கிறது. இலங்கைக்கு இந்தியா முழுமையான ஆதரவு வழங்கியமையாலேயே இலங்கை சர்வதேச சமூகத்தின் கண்டனங்களில் இருந்து தப்பியுள்ளது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் கடும் விமர்சனங்களில் சிச்காமல் தப்புவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையை காரணமாகக் கொண்டே, மனித உரிமைக் கவுன்ஸிலில் மீண்டும் உறுப்புரிமை பெறலாம் என்ற நம்பிக்கை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்றது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி கூட்டத்தில், இலங்கiயில் இடம்பெறும் கண்மூடித்தனமான …

  19. Posted on : Wed May 21 7:40:24 EEST 2008 கனடா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இலங்கையில் கனேடியப் பத்திரிகை தகவல் கனடா, பிறம்டன் பகுதியில் இளம் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இலங்கைத் தமிழர் ஒருவர் இலங் கையில் தலைமறைவாகி யிருக்கின்றார் என்று கனடாப் பொலிஸாரை மேற்கோள் காட்டி கனடா நாட்டின் "ஸ்ரார்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. கனடா, ரொரன்டோ நகரில் வசித்து வந்த விஜயராஜா மாணிக் கவாசகர் (வயது 26) என்ற இளைஞனே, பிறம்டன் பகுதியில் வசித்த அம்மிரித்தா (வயது 20) என்ற யுவதியை கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி கொலை செய்து விட்டுத் தலைமறைவாகி இருந் தார் என் றும், அவர் தற்போது தனது சொந்த நாட்டிலேயே தலைமறைவாகி வசித்து வருகிறார் என்றும் அந்தப் …

  20. ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் ஐ.நாவில் அங்கத்துவம் பெற்றுள்ள சகல நாடுகளும் இன்று பங்குபற்றுகின்றன. ஜெனிவாவில் நடைபெறும் இத்தேர்வில் ஆசியப் பிராந் தியத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் நான்கு உறுப்பு நாடுகளின் இடத்துக்கு ஆறு நாடுகள் களத்தில் உள்ளன. பஹ்ரைன், ஜப்பான், பாகிஸ்தான், தென்கொரியா, கிழக்கு திமோர் ஆகியவற்றுடன் இலங்கை இப்போட்டியில் களத்தில் உள்ளது. இலங்கைக்கு இன்றைய தேர்தல் ஒரு முக்கிய சோதனைக் களம் என்று கூறப்பட்டாலும், அதை விடவும் ஐ.நா.மனித உரி மைகள் கவுன்ஸிலுக்குத்தான் இத்தேர்தல் பெரும் சோதனைக் களமாக வந்து அமைந்திருக்கின்றது என்பதே உண்மையாகும். இதுவரை காலமும் "ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு' என்று இய…

    • 0 replies
    • 1.1k views
  21. கண்டி ரயில்வே பாலத்தில் குண்டு வெடிப்பு: ரயில் சேவைகள் இடைநிறுத்தம் Wednesday, 21 May 2008 மத்திய மாகாணத்தில் கண்டி கட்டுக்கஸ்தோட்டை பகுதியில் ரயில்வே பாலம் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்டி – மாத்தளை ரயில் சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நேற்றிரவு 11.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியிலுள்ள ரயில்வே பாலத்தில் பொது மக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியிலேயே இக்குண்டு வெடித்ததாகத் தெரிவித்துள்ள கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் இதனால் பாரிய சேதங்கள் எத…

  22. கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் அங்கு தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  23. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தொடர்ந்து வாசிக்க

  24. தந்திரிமலை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியாளரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் துப்பாக்கி சூட்டுக் காயங்களுக்குள்ளான இந்த பயிற்சியாளர் தந்திரிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் 35வயதான கோப்ரல் என். தஸநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் சுமார் 50 பேர் வரையில் இருந்தும் இவரை சுட்டவர் யார் என்பதை பொலிஸாரினால் உறுதிசெய்ய முடியவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் முழு அளவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பயிற்சியில் பங்குபற்றியவர்களின் துப்பாக்கிகள் விசாரிக்கப்பட்டன என்று இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது. http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.3k views
  25. சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய சுமார் 4,000 பேர் கடந்த 2 வாரங்களில் மீண்டும் இராணுவத்தில் இணைந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.