Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம்- எறிகணைத்தளம் மீது விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் [புதன்கிழமை, 04 யூன் 2008, 04:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் எறிகணை ஏவுதளம் ஆகியவற்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று இலக்கு வைத்து நடத்திய எறிகணைத் தாக்குதலில் அழிவைச் சந்தித்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: முகமாலைக் களத்தின் முதன்மைப் பின்தளமாக உள்ள எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் மோட்டார் எறிகணைகளை ஏவும் தளம் ஆகியன இன்று புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் …

  2. வீரகேசரி இணையம் - யாழ்ப்பாண நிலைவரம் குறித்த தகவல்கள் எவற்றையும் வெளியிடக் கூடாது என யாழ்.படைத்தளபதி டி.ஏ சந்திரசிறி அதிகாரிகள்,மதகுருமார், மற்றும் மனிதநேய அமைப்புக்களின் பணியாளர்களுக்கு பணித்துள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். படைத் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு குடாநாட்டு மக்களின் குறைகளை ஆராயும் மாநாட்டிற்கு வருமாறு அழைத்திருந்த யாழ் . அரச அதிபர், ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், மனித நேய அமைப்புக்களின் பிரதிநிதி பரமநாதன், யாழ் மேலதிக நீதவான் ஆர்.ரி விக்கினராசா, யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி சிவராஜசிங்கம் ஆகியோரிடமே படைத் தளபதி சந்திரசிறி இத் தகவலை தெரிவித்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.

    • 0 replies
    • 1k views
  3. வவுனியாவில் எறிகணை வீச்சு: 2 பொதுமக்கள் காயம் [புதன்கிழமை, 04 யூன் 2008, 04:24 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வவுனியா மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான நெடுங்கேணி, ஒலுமடு, சேனைப்புலவு, பட்டிக்குடியிருப்பு ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான எறிகணை வீச்சுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை மதியம் 12:00 மணியளவில் நடத்தப்பட்ட இந்த எறிகணை வீச்சுத் தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் நெடுங்கேணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் நெடுங்கேணி 2 ஆம் மைல் கல்லைச் சேர்ந்த சிறி விஸ்வநாதன் (வயது 30) பட்டைப்பிரிந்தகுள…

    • 0 replies
    • 708 views
  4. தமிழர் தாயகம் உட்பட சிறீலங்காவின் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்புக்களைத் தொடர்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்குரிய இழிநிலைப் புள்ளிகளைக் குறியிடும் Z- புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடப்பரப்புகளுக்குமான மாவட்ட ரீதியான புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறீலங்காவில் தற்போது பாடப்பரப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 20,000 ற்கும் மேல் என்று ஆக்கப்பட்டுள்ளது. எனினும் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறுவதற்கான இழிவுப் புள்ளிகளைப் பெற்றோர் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை ஆகும்..! மாவட்ட அடிப்படையிலான.. பாடப்பரப்புகளுக்குரிய Z- score விபரங்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளது. இது 2007/08…

  5. காத்தான்குடியில் நான்காவது நாளாக இன்றும் கடையடைப்பு [புதன்கிழமை, 04 யூன் 2008, 10:35 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் நான்காவது நாளாக இன்று புதன்கிழமையும் கடையடைப்பு மேற்கொள்ளப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நிலவும் பதற்றம் நீடித்து வருகின்றது. மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிமகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்தே இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடையப்பு மேற்கொள்ளப்படுவதால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம் கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்திருக்கும் முஸ்லிம் இ…

    • 0 replies
    • 661 views
  6. அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க மனித உரிமை மற்றும் தொழில் விவகார துணைச் செயலாளர் எரிக்கா பார்க்ஸ் ரகல்ஸ், சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணல்: உங்களின் சிறிலங்காப் பயணத்தின் நோக்கம் என்ன? மனித உரிமை சூழ்நிலை குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடனும், பொதுமக்கள் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான் இங்கு பயணம் செய்தேன். பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கம் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பாக அரசாங்கத்துடனும், பொதுமக்கள் சமூகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவதும் எனது பயணத்தின் மற்றுமொரு நோக்காகும். அப்படியானால் மிக முக்கியமான நோக்கம் ம…

    • 0 replies
    • 1k views
  7. தமிழர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்க விரும்பினால் பின்வரும் இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு விரும்பிய ஒரு தமிழரை சிபரிசு பண்ணவும். இந்த இணையத்திற்கு சென்று http://www.tamilnobellaureate.com/ அங்கே கீழே உள்ள Please send your suggestions by filling in the Nomination Page. என்பதை கிளிக்பண்ணி தெரிவிக்கலாம்.

    • 10 replies
    • 2.5k views
  8. "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' போல "உலக்கை தேய்ந்து உளிப்பிடியான' மாதிரி இலங்கையில் 2006 இற்குப் பின்னர் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் செயற்பாடும் குன்றிக் குறுகிப் போய்விட்டது. ஆள்கடத்தல்கள், பலவந்தமாகக் காணாமற் போகச் செய்தல், சட்ட விரோதப் படுகொலைகள், ஊடகங்கள் மீதான அராஜகங்கள், சிறுபான்மைத் தமிழருக்கு எதிரான அட்டூழியங்கள் என்று இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றமை குறித்து சர்வதேச ரீதியில் கடும் கண்டனமும், அதிருப்தியும், சீற்றமும், விசனமும் எழுந்திருப்பது தெரிந்த விடயம்தான். தற்போதைய ஆட்சிப் போக்கின் சீத்துவம் பகிரங்கமாகத் தொடங்கியதும் அதைச் சமாளிப்பதற்காக கண்துடைப் …

    • 0 replies
    • 626 views
  9. எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்ச்செய்திதான்: புலித்தேவன் [புதன்கிழமை, 04 யூன் 2008, 10:28 மு.ப ஈழம்] [ப.தயாளினி] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நோர்வே அனுசரணையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்தான் என்று புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டுக்கு இன்று புதன்கிழமை (04.06.08)அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்: நோர்வேயின் அனுசரணையின்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் எதுவித அமைதிப் பேச்சுக்களும் நடைபெறுவதற…

    • 0 replies
    • 1.2k views
  10. நடக்காதென்பார் நடந்துவிடும் [ திங்கட்கிழமை, 02 யூன் 2008, 12:46.12 PM GMT +05:30 ] மற்றுமொரு எண்பத்துமூன்றுக்கு (83) இடமளிக்கப் போவதில்லை எனத் திரு.மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வாசஸ்தலத்திற்கு ஊடகங்களின் ஆசிரியர்களையும் பொறுப்பதிகாரிகளையும் அழைத்துக் காலை விருந்தளித்துப் பேசுகையிலேயே சிறீலங்கா ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கிறார். அத்தோடு எந்தவிதமான அழுத்தங்கள் வந்தாலும் யார் கூறினாலும் எத்தனை அழிவுகள் ஏற்பட்டாலும் யுத்தத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் சூளுரைக்கின்றார். பொதுமக்களை இலக்கு வைத்து அடிக்கடி நடத்தப்படுகின்ற குண்டுத் தாக்குதல்கள் மூலம் தெற்கிலே ஒரு கலவரத்தைத் தூண்டுவதற்குப் புலிகள் முயற்சித்து வருவதாக திரு.மகிந்த…

  11. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஊடக சுந்திரத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஆயுத படையினருக்கு எதிரான ஊடக துரோகத்தனத்தை நிறுத்துங்கள் என தலைப்பிட்டு, நீண்ட கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. த நேசன் பத்திரிகையின் இணையாசிரியர் கீத் நோயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் படையினருக்கு தொடர்பு இருப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்த இணையத்தில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பாரிய யுத்தம் ஒன்றை முன்னெடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், இராணுவ நடவவடிக்கை, இராணுவ தளப்பாடங்கள் கொள்வனவு, இராணுவ பதவி உயர்வுகள் குறித்து ஊடகங்கள் மேற்கொள்ளும் விமர்சனங்கள், எத…

    • 0 replies
    • 689 views
  12. நோர்வே அனுசரணையாளர்களின் பங்களிப்பின்றி இலங்கை அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையென தமிழீPழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நோர்வேயின் முக்கியஸ்தர்களான எரிக் சொல்ஹேய்ம், நோர்வேத் தூதுவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதுடன், எதிர்கால சமாதானப் பேச்சுவார்;த்தைகள் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அவர்களின் கிளிநொச்சி வருகையை எதிர்பார்த்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத் தலைவர் எஸ்.புலித்தேவன் கூறியுள்ளார். “இலங்கை அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் நோர்வே அனுசரணையாளர்களுடன் பல்வேறு விட…

    • 0 replies
    • 756 views
  13. சார்க் அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரத்துடன் 'சார்க் உணவு வங்கி' விரைவில் இயங்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன. அதேவேளை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏனைய உறுப்புநாடுகளின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாகவும், உணவு வங்கி ஸ்தாபிக்கும் பிரகடனத்திற்கு அவை அங்கீகாரம் வழங்கியதுடன் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 2007 ஏப்ரல் 3ஆம் திகதி இந்தியாவில் கடைசியாக இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டில் சார்க் உணவு வங்கியை உருவாக்குவதற்கான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப…

  14. ஜெனீவாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.06.08) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 8 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. மனித உரிமை சபையில் தனது உறுப்புரிமையை இழந்த பின்னர் சிறிலங்கா அரசு பங்குபற்றுவது இதுவே முதற் தடவையாகும். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 573 views
  15. இன்றைய ஆட்சியாளர்களால் சமாதனத்திற்குப் பதிலாக யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரவளித்து உதவி வழங்குவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். என்று இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். இன்று நாட்டில் வாழும் மக்கள் இரண்டு எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒன்று பணவீக்கம், இரண்டாவது யுத்தம். பணவீக்கம் தொடர்வாக அரசு கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும். எரிபொருள் விலையேற்றம் போன்ற சர்வதேச காரணிகளை அரசு பணவீக்க நிலைக்கு காரணமாகக் கூறுகின்றது. எரிபொருள் விலையேற்றம் போன்றவற்றால் 10வீத பணவிக்கம் ஏற்படலாம். உலகில் ஏனைய நாடுகளில் அவ்வாறே ஏற்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் 30 வீ…

    • 0 replies
    • 673 views
  16. உடன்படி க்கைகள் மூலமாகவன்றி புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு புதியதொரு அரசியல் யாப்பை வரையும் பணிகளை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மேற்கொள்ளுமென்று அமைச்சர் விதாரண தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் தீர்வு முறையை ஒத்தவாறு தீர்வொன்றைத் தயாரிப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து புதிய அரசியல் யாப்பொன்றைத் தயாரிக்கும் பணிகள் துரிதப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். சர்வகட்சிப் பிரதிநிதிக…

    • 0 replies
    • 623 views
  17. வீரகேசரி நாளேடு - ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவத்தை இலங்கை இழந்தமை அரசாங்கத்திற்கு விழுந்த முதல் அடியாகும். இந்த அடி இத்தோடு முடிவதில்லை. அது ஆரம்பமாகும். இனிமேல் பல அடிகள் விழுவதற்கு காத்திருக்கின்றன. இவ்வாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார். எமது நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நன்கு அவதானித்துக்கொண்டிருக்கிறா

    • 0 replies
    • 526 views
  18. வீரகேசரி நாளேடு - இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமை மீறல்களை நாமும் சுயாதீனமாக இயங்கும் மனித உரிமைகள் அமைப்புகளும் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறான நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் எங்கள் மீதான தடையை நீக்கி எங்களை அங்கீகரிக்கும் நிலை வரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். லண்டன் பி.பி.சி செய்தி சேவைக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் …

    • 0 replies
    • 733 views
  19. நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம் [புதன்கிழமை, 04 யூன் 2008, 06:05 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவில் உள்ள நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நோர்வேயில் இருந்து வெளிவரும் ஆஃப்ரன்போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளதாவது: தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சம் உள்ள நாடுகளில் சிறிலங்கா உட்பட 6 நாடுகளில் உள்ள தமது தூதரகங்களின் பட்டியலை நோர்வே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சூடான், அல்ஜீரியா, பலஸ்தீனத்தின் அல்-ராம் பகுதி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறும் நோர்வே வெளிவிவகார அமைச்ச…

    • 0 replies
    • 463 views
  20. ஜெனீவாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.06.08) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 8 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. மனித உரிமை சபையில் தனது உறுப்புரிமையை இழந்த பின்னர் சிறிலங்கா அரசு பங்குபற்றுவது இதுவே முதற் தடவையாகும். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 740 views
  21. ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் நடத்திய வாகன கவன ஒலி போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றுள்ளனர். அரசாங்கம் இந்தப்போராட்டத்தை நிறுத்த பல வழிகளிலும் முயற்சித்தது எனினும் அவையாவும் தோல்வி கண்டன. முதலில் அச்சுறுத்தலை விடுத்த அரசாங்கம் பின்னர் காவல்துறையினரை கொண்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு முனைந்தது எனினும் நீதிமன்றம் இந்தப்போராட்டம் கருத்துச்சுதந்திரத்தின் அடிப்படையில் இடம்பெறுவதாக கூறி அதனை தடுக்கமுடியாது என தீர்ப்பளித்தது. இந்தநிலையில் சில இடங்களில் காவல்துறையினர் போராட்டத்தில் பங்கேற்ற வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பம்பலபிட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கிழக்கு அமைப்பாளர் ரோசி சேனாநாயக்க மீது காவல்துறையினர் த…

    • 0 replies
    • 728 views
  22. புலித்தேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் என்பவரை பிரபாகரனின் நேரடி பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு உட்பூசல்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. Tamil Tigers place senior leader under house arrest: military Mon Jun 2, 4:32 PM ET COLOMBO (AFP) - The elusive head of the Tamil Tigers in Sri Lanka has placed a senior rebel leader under house arrest over a worsening internal dispute, the defence ministry said Monday. Seevaratnam Prabaharan, alias Pulidevan, who is attached to the Tigers' peace secretariat, has been placed under arrest on the direct orders of the Tiger supremo, Velupillai Pra…

  23. 'ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதல்கள் இலங்கை இராணுவத்தின் பலவீனமே'- ப. நடேசன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதலானது இலங்கை இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுவதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடக்கும் கிளெமோர் தாக்குதல்கள் குறித்து தமிழோசையிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஆழ ஊடுருவும் அணியினர் உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது உங்கள் அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லையா என்று கேட்டதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி…

  24. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னைநாள் தலைவரும், இலங்கையின் முதலாவது பிரதமருமாயிருந்த காலம் சென்ற டி.எஸ்.சேனநாயக்காவின் பெறாமகன் ருக்மன் சேனநாயக்கவின் தலைமையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியானது இரண்டாக உடைந்துள்ளது. புதிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக காமினி அபயரட்ண நியமிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் இந்திய சார்பான நிலைப்பாடே இந்த கட்சி உடைவுக்கு மூல காரணம் என அறியப்படுகிறது. மேலதிக விபரங்கள் விரைவில். http://www.orunews.com/

    • 5 replies
    • 1.9k views
  25. கொழும்பு நிர்வாகம் குறிப்பிடுவது என்ன?. 01.06.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.