ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் அங்கு சென்றடைந்துள்ளனர். மாநாட்டின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலிக்கு சென்றுள்ளõர். இந்த மாநாட்டில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சீ.பி. ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். மாநாட்டில் 93 நாடுகளின் அரச தலைவர் உட்பட 3000 பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர். உலக உணவு மாநாட்டில் இத்தாலி ஜனாதிபதி, ஐக்கிய, நாடுகள் சபையின் செயலாளர் நாயகம…
-
- 0 replies
- 547 views
-
-
நேற்று முந்தினம் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை ராஜசிங்க வீதி அருகில் தமிழர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டும், பத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலானது சிவிலுடையில் நின்றிருந்த சிறிலங்கா படையினர் ஒருவராலேயே நடத்தப்பட்டதாகவும், குண்டை வீசி எறிந்த கொலையாளி, வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் நோக்கி ஓடிச் சென்று மறைந்ததாகவும், குண்டு வெடிப்பை அடுத்து அப்பகுதியில் கடமையில் நின்ற பொலிஸாரோ, படையினரோ பெரிதாக அலட்டிக் கொள்லவில்லை என நேரில் கண்ட தன்னை அடையாளம் காட்ட விரும்பாத ஒருவர் குறிப்பிட்டார். இக்குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து வெள்ளவத்தை பொலிஸார் அவ்விடத்தில் நின்றோர…
-
- 1 reply
- 1.5k views
-
-
எரிபொருள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு தொடர்பான கதைகளை பின்னுக்கு தள்ளி விட்டு, நாட்டை குறித்தே பேச வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. நாட்டை குறித்து பேசும் தலைப்பை ஜாதிக ஹெல உறுமயவே முன்னெடுத்து வந்துள்ளதாக அதன் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஹெல உறுமயவின் 5 வது மாநாட்டில் உரையாற்அவர், இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனநாயக குழு, ஈ.பீ.டீ.பீ மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி என்பன வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தன. ஜாதிக ஹெல உறுமய ஆத்ம லாபத்திற்காக அரசியலில் ஈடுபடவில்லை. பஞ்சீல கொள்கையின் மூலமே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினையில் இருந்து வெற்றி பெற முடியும். ????? பௌத்த கலாசாரத்தின் புத்த பூமி கிழக்கு மாகாணமாகும். …
-
- 1 reply
- 1k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கிழக்கில் தம்வசம் ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என சிங்கள பாதுகாப்பு அதிகாரி இன்று அக்கரைபற்றில் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் (பிள்ளையான் ஒட்டுக்கும்பல்) இடையேயான பேச்சுவார்த்தை ஒன்று அக்கரைப்பற்று இராணுவ முகாமில் இன்று நடைபெற்றது. ஆயுதங்களை கொண்டு செல்ல தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கோரினர், இதற்கு படையதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாகவும் பிரதேசத்தில் ஆயுதங்களை தம்வசம் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி நுண்கலைக் கல்லூரியின் 3 ஆகவை நிறைவின் இயலிசை நாடக நிகழ்வு [திங்கட்கிழமை, 02 யூன் 2008, 08:43 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நுண்கலைக் கல்லூரியின் மூன்றாவது அகவை நிறைவின் இயலிசை நாடக நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் தமிழர்களின் பண்பாட்டு ஊர்வலம் கிளிநொச்சி நுண்கலைக் கல்லூரியில் இருந்து தொடங்கி நிகழ்விடத்தை வந்தடைந்தது. பொதுச்சுடரினை தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார். மாவீரர்களின் பொதுத்திருவுருவப்படத்திற்க
-
- 0 replies
- 647 views
-
-
ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் காணப்படுமாயின் பிராந்தியப் பத்திரிகைகளை நிறுத்தவேண்டி ஏற்படுமென வடஇலங்கை ஊடகவியலாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது. கொழும்பு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் யாழ் பிராந்திய ஊடகவியலாளர் பி.தேவகுமார் படுகொலை செய்யப்பட்டமையை அந்த அமைப்பு கண்டித்திருப்பதுடன், தற்பொழுது யாழ் குடாநாட்டில் இயங்கிவரும் பத்திரிகைகள் செய்திகளுக்காக இணையத்தளங்களையும், கொழும்புச் செய்திகளையும் நம்பியிருக்கவேண்டி ஏற்பட்டிருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தேவகுமாரின் படுகொலை தொடர்ப்பாக அதிர்ச்சியும், அவரின் குடும்பத்தினருக்கு கவலையையும் தெரிவித்திருக்கும் வடஇலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம், ஊடகப்பணியாளர்கள் செயற்படுவதற்கு உரிய சூழலையு…
-
- 0 replies
- 618 views
-
-
கிளிநொச்சியில் கப்டன் எல்லாளன் நினைவாக அணியிசைப் போட்டிகள் [திங்கட்கிழமை, 02 யூன் 2008, 08:17 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு இன்று கப்டன் எல்லாளன் நினைவாக பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான அணியிசைப் போட்டிகள் நடைபெற்றன. கிளிநொச்சி மத்திய கல்லூரித்திடலில் இன்று திங்கட்கிழமை போட்டிகள் இடம்பெற்றன. தொடக்க நிகழ்வில் கப்டன் எல்லாளனின் திருவுருவப்படம் தாங்கிய அணிவகுப்பு நடைபெற்றது. மாணவர் அமைப்பைச் சேர்ந்த சஞ்சீவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஏற்ற…
-
- 0 replies
- 805 views
-
-
ஓட்டம் -சேனாதி- முன் நாட்களில், மாகோச் சந்தியில் இருந்து கொழும்பு நோக்கித் தொடர்வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில், நட்பாகப் பழகும் பாமரத் தோற்றம் கொண்ட சிங்களவர்கள் இருவர் அல்லது மூவர், மூன்றாம் வகுப்புப் பயணிகளின் ஊடாக நடந்து, தனியாகப் பயணிக்கும் கொஞ்சம் நாகரிகமான, கையில் பணமுள்ளவர் போலத் தெரியும் ஒருவரின் அருகே உட்காருவார்கள். அவரின் இருக்கைக்கு அருகே தரையில் உட்காருவதும் உண்டு. அவ்வாறு உட்கார்ந்த பின் தங்களுக்குள்ளே சீட்டுக்களைப் பிரித்து சில்லறைகளை வைத்துச் சூதாட ஆரம்பிப்பார்கள். நமது நாகரிகர் இவர்களைக் கொஞ்ச நேரம் ஓரக்கண்ணால் பார்ப்பார். இவர்களின் சுவாரசியமான உரையாடல்களால் ஈர்க்கப்படுவார். நீங்களும் விளையாட வருகிறீர்களா என்று இவரையும் அழைப்பா…
-
- 0 replies
- 899 views
-
-
குடாநாட்டு கரையோரங்களில் திடீர் ஊரடங்குச் சட்டம் [திங்கட்கிழமை, 02 யூன் 2008, 06:42 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணம் குருநகரில் இன்று முற்பகல் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து கொழும்புத்துறை முதல் பாசையூர் வரையான கரையோரப் பகுதிகளில் திடீர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத
-
- 0 replies
- 691 views
-
-
காத்தான்குடி பதற்றத்தால் மக்கள் மீண்டும் இடம்பெயர்வு [திங்கட்கிழமை, 02 யூன் 2008, 05:33 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையையடுத்து காத்தான்குடி மற்றும் ஏறாவூர் எல்லைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்றைய நாள் மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்முறைகள் இடம்பெற்றன. இதனால் அச்சமுற்ற இப்பகுதியில் உள்ள எல்லைப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். எனினும் கடந்த வியாழக்கிழமை இவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருந்தனர். இந்நிலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இதனையடுத்து மீண்…
-
- 0 replies
- 651 views
-
-
கருணாவிடம் காசு கொடுத்து வாங்கிய ஆயுதத்தால் பிள்ளையானுக்கு எதிராக ஜிகாத் என்ற அமைப்பு போராடுகிறது என்று ஜிகாத் உறுப்பினர் ஒருவர் நிதர்சனத்திற்கு தெரிவித்தார். கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியுள்ளோம், கிழக்கில் முஸ்லீம் ஊர்காவல் படையினை பிறேமதாச உருவாக்கியதால் தமிழர் கிழக்கில் இருந்து அடித்து விரட்டபட்டனர், தற்போது கருணாவிடம் ஆயுதம் வாங்கிய முஸ்லீம் இழைஞர்கள் பிள்ளையான் குழுவிற்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மதிகெட்ட நுட்பத்தால் உருவாகிய தமிழர் ஆயுதப்போராட்டமும் , பிறேமதாசாவின் மதி நுட்பத்தால் உருவாகிய முஸ்லீம் ஊர்காவல் படையும், மகிந்தவின் அரசியல் மதிநுட்பத்தால் இண்று உருவாகியுள்ள ஜிகாத் குழுவினரும் இலங்கையில் ஆயும் ஏந்தியுள்…
-
- 1 reply
- 1.6k views
-
-
13 வயது சிறுமியை இராணுவ அதிகாரியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கொழும்பின் சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தொழில் வழங்குவதாகக் கூறி களுத்துறை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிறுமி மிக மோசனமான வகையில் வல்லுறவில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்த பாதகச் செயலுக்கு இரண்டு பெண்கள் உடந்தையாக இருந்ததாகவும், அதில் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. குறித்த சிறுமி தற்போது களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இராணுவ அதிகாரி மற்றும் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றைய பெண் என்போரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் ஏழாலை கிழக்குப் பகுதியில் மூன்று சிறுவர்கள் ஆட்கள் இல்லாத வீடொன்றின் முன்றலில் விளையாடிக்கொண்டிருந்ததாகவு
-
- 1 reply
- 761 views
-
-
பிள்ளையான் குழுவின் களுவாஞ்சிகுடி பிரதேச சபையின் உதவி தலைவரும் , அவரது உதவியாளரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஆதாரம் டெய்லி மிரர்.
-
- 4 replies
- 1.8k views
-
-
கந்தானவில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு [திங்கட்கிழமை, 02 யூன் 2008, 04:02 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் கம்பஹா மாவட்டம் கந்தானவில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்படாத இந்த சடலங்கள் இரண்டும் சுமார் 20 வயது முதல் 25 வயதுடைய இளைஞர்களுடையது என்று கந்தான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலங்கள் இரண்டிலும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. நான்கு நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே கந்தான சதுப்பு நிலப்பகுதியில் இருந்து இந்த சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.…
-
- 0 replies
- 654 views
-
-
மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்புப் போர் ஒன்றை புலிகள் விரைவில் தொடங்கக்கூடும்! [ சனிக்கிழமை, 31 மே 2008, 11:05.57 AM GMT +05:30 ] அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்,கடலிற் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதையே அவதானிக்க முடிகிறது. சமீப காலமாகக் கடற்புலிகள் நடத்தியுள்ள மூன்றுக்கு மேற்பட்ட தாக்குதல் வெற்றிகள் இவற்றுக்கு ஆதாரமாக உள்ளன. இத் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவருகின்ற செய்திகள் ஊடாக விடுதலைப்புலிகளிடம் அதி நவீன கடற்கலங்களும், நவீன போர்த் தளபாடங்களும் உள்ளதை மறைமுகமாகவோ,நேரடியாகவோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதேவேளை இவ்வாறான தாக்கு…
-
- 8 replies
- 2.1k views
-
-
துணைப்படை டக்ளசின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன?: பட்டியலை வெளியிட்டார் ஆனந்தசங்கரி [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 01:20 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் டக்ளஸ் குழுவின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன என்பதனை சிறிலங்கா அரசாங்கத்தின் மற்றொரு ஆதரவாளரான வீ.ஆனந்தசங்கரி அம்பலப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளார். தமிழர் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கு - கிழக்கைப் பிரித்த மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள இருவரும் சிங்களவரிடம் விசுவாசமாக இருந்தமைக்காக "அதிகாரம்" தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் மோதிக்கொண்டு வருகின்றனர். இம் மோதலின் ஒரு பகுதியாக டக்ளசின் தமிழின விரோத நடவடிக்கைகளை ப…
-
- 10 replies
- 2k views
-
-
இலங்கையில் இன்று இடம்பெறுவது அராஜகச் செயல்களாகவே நோக்கப்படுகின்றன..எனினும் இலங்கை அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ இதனை அராஜகம் என்றில்லாமல் நாட்டைக்காக்கும் செயல்கள் என்றே கருதுகின்றனர். இதில் சிங்கள ஊடகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. சிங்கள ஊடகங்கள் ஒவ்வொன்றும் வெளியிடும் போர் சம்பந்தமான செய்திகள் எந்த ஒரு கட்டத்திலும் படையினரைப் பாதித்து விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன. குறிப்பாக போர்க்கள நிலவரங்களைப் பொறுத்தவரையில் சிங்கள ஊடகங்கள் படையினருக்கு வெற்றி என்ற வகையிலேயே அதனைக் காட்டுகின்றன. ஒருபோதும் அவை செய்தியின் அடிப்படை அம்சமான “சமநிலை” என்ற வகையில் மறுத்தரப்பின் செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. இது சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் செயல்களாகவே சிங்கள ஊடகங…
-
- 0 replies
- 850 views
-
-
1987 இல் இலங்கையில் அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையொன்றில் தான் கொல்லப்பட்டு விட்டதாக கூறி காப்புறுதி நிறுவனத்திடம் காப்புறுதித் தொகையான S$331,341 ($243,600) சிங்கப்பூரில் பெற்றுக் கொண்ட இலங்கையர் ஒருவருக்கு 3 வருட ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் சுப்ரமணியம் காந்தரூபன் (வயது-60) என்ற இந்த நபர் அவரின் கார் வாடகைத் தொழில் நஷ்டத்தில் இயங்கியதாலும் கடனாளிகளிடமிருந்து தப்பிப்பதற்காகவும் சிங்கப்பூரை விட்டு தப்பி ஓடினார்.......... Singapore jails man for faking his death: report Sat May 31, 2008 12:07am EDT SINGAPORE (Reuters) - A Singapore man was jailed…
-
- 4 replies
- 1.7k views
-
-
வெள்ளவத்தையில் சற்றுமுன் குண்டொன்று வெடித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Blast in Wellawatte Blast in Wellawatte...Await details Three injured in explosion At least three people were injured following a minor explosion along the Galle road in Wellawatte a short while ago. Initial reports suggest the blast was caused by a hand grenade. ஆதாரம் Dailymirror
-
- 12 replies
- 2.8k views
-
-
"வேலியில் போன ஓணானை மடியில் தூக்கிப் போட்டுக் கட்டிக்கொண்டு "குடையுது! குடையுது!' என்றானாம்'' என ஒரு பேச்சுமொழி நம்மத்தியில் உண்டு. ஜே.வி.பித் தலைவர்கள் இப்போது கூறும் கருத்துகள் இந்தப் பேச்சு மொழியைத் தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன. மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்றுவதற்காகத் தலையால் கிடங்கு கிண்டுவதற்கும் தயங்காத ஜே.வி.பியினர், இப்போது அவரது ஆட்சி அதிகாரத்தின் கொதிப்பைத் தாங்க முடியாமல் "சுடுகுது மடியைப் பிடி' என்ற மாதிரித் துள்ளிக் குதிக்கின்றார்கள். இந்த ஆட்சி அதிகார பீடத்தை எப்படியும் வீழ்த்தியே தீருவோம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இப்போது கட்சியின் தேசிய மாநாட்டில் சூளுரைத்துப் பிரகடனம் செய்கின்றார். கட்சியின் தலைவர் சோமவன்ஸ …
-
- 0 replies
- 889 views
-
-
பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராக்கப்பட்டதற்கான தகுதிகள்! கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சராகத் தயாரிக்கப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை அரசின் படைப் பிரிவினருடன் கூட்டுச் சேர்ந்தும் தனியாகவும் பலதரப்பட்ட கொலைகளையும், கொள்ளைகளையும் நடத்தியுள்ளார். இவர் படுகொலை செய்தது அனைவருமே ஏறக்குறைய வட மகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், சமூகசேவகர்கள் மற்றும் ஒரு சிங்கள வர்த்தகருமாவார். ஆரம்பத்தில் கருணாவின் உத்தரவுகளை மட்டும் செயற்படுத்தி வந்த பிள்ளையான் பின்நாளில் தானே முடிவெடுத்தும் சிங்கள உளவுத்துறையின் உத்தரவுகளையும் ஏற்று கொலை கொள்ளைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். கெந்த விதாரண என்ற சிங்கள உளவுத்துறை அதி…
-
- 0 replies
- 2.6k views
-
-
திருக்கோவில் விசேட அதிரடிப்படைமுகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் விசேட அதிரடிப்படைமுகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்படுத்தப்பட்டிருந்த சகல வீதிச் சோதனைச்சாவடிகளும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்பு அகற்றப்பட்டிருநதது. வழமையான சாவடிகள் இயங்கி வருகிள்றன http://www.tamilwin.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
சம்பூர் அனல்மின் திட்டத்தின் பின்னணியில் பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களும் இந்தியாவின் இராஜதந்திரமும்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:41 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான சம்பூரில் இந்தியா உதவியுடன் சிறிலங்கா அரசாங்கமானது அனல் மின் திட்டத்தை அமைப்பதன் பின்னணி குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. "லக்பிம" ஏட்டில் வெளியாகியுள்ள அக்கட்டுரையின் தமிழ் வடிவம்: சம்பூர் அனல் மின் திட்டம் உத்தேசிக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பாரியளவிலான பொதும…
-
- 4 replies
- 1.2k views
-
-
பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த முறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும். மேலும் இலங்கையில் நடைபெறும் போரில் மக்கள் பெருமளவில் கொல்…
-
- 4 replies
- 2.1k views
-