Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முகமாலையிலுள்ள புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது விமானக் குண்டு வீச்சு. சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த 4 குண்டுவீச்சு விமானங்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் முகமாலையிலுள்ள புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. நீண்ட நேரமாக குடா நாட்டின் வான்பரப்பில் வட்டமிட்ட இந்த நான்கு விமானங்களும் அடுத்தடுத்து முகமாலையில் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியபின் தெற்கு நோக்கி சென்றதாக வடபகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்திய சிறிலங்காவின் விமானப்படைப் பேச்சாளர் ரெண்டாவது தடவையும் புலிகளின் முன்னரங்க நிலைகைளை தமது விமானங்கள் தாக்கிவருவதாகக் கூறியிருக்கிறார். நன்றி - தமிழ்நெட்.

  2. சகல அரசாங்க பாடசாலைகளும் நாளையும் மற்றும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளது. ஆசிரியர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஆசிரியர்கள் இல்லாதவிடத்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல ஏற்படும் என்ற காரணத்திற்காக அரச பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்

  3. கடந்த காலங்களில் தென்பகுதியில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது. மேலும் வடக்கில் அரச பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் கொலைகளுக்குப் பழிவாங்கும் செயலே இதுவென தெரிவித்துள்ளது. எல்லாளன் படையின் தொடர் தாக்குதல்கள் ஏன் நடத்தப்படுகின்றன என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரச படைகளால் அப்பாவிப் தமிழ்ப் பொதுமக்களை இலக்கு வைத்த நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தும் வரை இது தொடரும். Shady force speaks of revenge, claims responsibility for bus bombs [TamilNet, Tuesday, 10 June 2008, 10:19 GMT] 'Ellalan Force', a shady identity in whose name terror threats come from time to time in Colombo a…

    • 9 replies
    • 2.9k views
  4. தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக விரட்டியடிக்கப்படும் வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவேனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிள்ளையான் இதனைக் குறிப்பிட்டதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 18 replies
    • 3.9k views
  5. இரண்டு மாகாணசபைகளைக் கலைத்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவிசெய்வதாக ஜே.வி.பி.யினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மாகாணசபைகள் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்கள் கலைக்கப்பட்டமையானது சட்டவிரோதமான நடவடிக்கை. இதற்கு எதிராக சட்டநவடிக்கை எடுக்கவிருப்பதுடன், மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாக இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார். தற்பொழுது இரண்டு மாகாணசபைகளையும் கலைத்திருக்கும் அரசாங்கம் அங்கு தேர்தல்களை நடத்துவதாயின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்ப…

    • 0 replies
    • 849 views
  6. கழிவு எண்ணெய் ஊற்றி, கல்லெறிந்து ஜே.வி.பி.யினர் மீது தாக்குதல்; சிலர் காயம் [10 - June - 2008] சிலாபம் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை ஜே.வி.பி.யினர் நடத்திய ஆர்ப்பாட்டம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் சிலர் காயமடைந்துள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஊழல் மோசடிகளைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆராய்ச்சிக்கட்டு நகரில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இதன் போது அங்கு வந்த அரச ஆதரவாளர்கள் நடத்திய மிக மோசமான தாக்குதலில் ஜே.வி.பி. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அரசின் இந்த அராஜகத்தைக் கண்டித்து நேற்றுக் காலை ஜே.வி.பி.யினர் ஆராச்சிக்…

  7. பிள்ளையான் சென்றுவர கரையோர ரோந்துப் படகு [10 - June - 2008] கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) போக்கு வரத்துக்காக கரையோர ரோந்துப் படகொன்றை கடற்படையினர் அமர்த்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபை தலைமையகம் திருகோணமலையிலுள்ளதால் மட்டக்களப்பிலிருந்து பிள்ளையான் திருகோணமலைக்குச் சென்று வருவதற்காக இந்தப் படகை கடற்படையினர் அமர்த்தியுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து பிள்ளையான் திருகோணமலை சென்றுவர ஹெலிகொப்டரை வழங்க முடியாதிருப்பதாலேயே இவருக்கு கடல்வழிப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. திருகோணமலை கடற்படைத்தளத்திலிருந்தே இவர் இந்தப் படகில் மட்டக்களப்பிற்கான பயணத்தை மேற்கொள்வாரெனவும் தெரிவிக்கப்படுகிறத…

    • 0 replies
    • 1.2k views
  8. படைவீரர்கள் தினத்தில் இந்தியாவிற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இலங்கைப் படைவீரர்களுக்கு யுத்தத்தை வெற்றிகொள்ளும் இயலுமை இல்லை என இந்திய ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்றுவரும் குண்டுத் தாக்குதல்களின் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தோல்வியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பாதகமான கிரகநிலைக்கு பரிகாரம் பெற்றுக்கொள்ள ரணில் இந்தியா சென்றுள்ளதாக அந்த நாளேடு தெரிவித்துள்ளது. இதேவேளை, பேருந்துக் குண்டுத் தாக்குதல்களின் மூலம் சிவில் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்ப மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை முப்படையினர் மற்றும் காவற்துறையினரால் மாத்திரம் கட்டுப்படுத்த…

    • 0 replies
    • 808 views
  9. சிறிலங்காவின் இரு மாகாண சபைகள் ஓரே நேரத்தில் கலைப்பு [செவ்வாய்க்கிழமை, 10 யூன் 2008, 03:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கம் நேற்று நள்ளிரவு இரண்டு மாகாண சபைகளை ஒரே நேரத்தில் கலைத்துள்ளது. வட மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளையே நேற்று நள்ளிரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலைக்கும் உத்தரவை அரசுத் தலைமை வெளியிட்டுள்ளது. மேற்படி இரண்டு மாகாண சபைகளையும் கலைக்குமாறு அந்தந்த மாகாண சபை ஆளுநர்களுக்கு அரச தலைமை அறிவித்ததையடுத்தே மாகாண சபைகள் கலைக்கப்பட்டதாக மேற்படி மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். மேற்படி இரண்டு மாகாண சபைகள் கலைக்கப்பட்டமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படு…

    • 0 replies
    • 713 views
  10. அதிகாரப் பகிர்வு ஊடான அரசியல் தீர்வின் மூலம் மாத்திரமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தமுடியும் - இந்திய செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து சகல சமூகத்தினரிற்குமான நம்பகத்தன்மை மிக்க அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அதிகாரப் பகிர்வு ஊடான அரசியல் தீர்வின் மூலம் மாத்திரமே நிரந்தர சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் கருத்துத் தெரிவித்துள்ளார். கேரளாவின் குருவாயூர் ஐயப்பன் கோவிலுக்கு விசேட வழிபாட்டுக்காகச் சென்ற பின்னர் புதுடில்லிக்குத் திரும்பும் சமயம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர்இ எனினும் மஹிந்த ராஜபக்ஷ அரசினால் இவ்வ…

  11. மணலாறில் (வெலிஓயாவில்) கடந்த இரண்டு நாள்களாக, கொட்டும் மழையின் மத்தியி லும், அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில், இரவு பகலாகக் கடுஞ்சமர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருதரப்புக்களும் உத்வேகத்துடன் மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாக நேற்று நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் கிடைத்த களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. நான்கு முனைகளில் பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த அரசுப் படைகள், புலிகளின் முக்கிய படைத் தளமான "வன் போர்' மையத்தை முற்றுகையிட்டுள்ளன எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது. முன்னேற முயலும் படையினருக்கு எதிராகக் கடும் தாக்குதலை நடத்தி அரசுத் துருப்புகளுக்குத் தாங்கள் பேரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர் எனப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்ப…

    • 1 reply
    • 1.7k views
  12. கேரள சோதிட நிபுணரிடம் ரணில் முக்கிய ஆலோசனை! இந்தியாவின் கொச்சி நகருக்கு விஜயம் செய்த ஐ.தே.கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அங்கு மூடிய அறைக்குள் இரண்டு நாள்கள் பிரபல சோதிடர் ஒருவருடன் முக்கிய சோதிட சாஸ்திரப் பூஜை ஒன்றில் ஈடுபட்டிருந்தார் என இந்திய செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. கடந்த வியாழனன்று கொச்சின் வந்தடைந்த ரணில் விக்கிரமசிங்க கேரளத்தின் பிரபல ஜோதிடரான பரப்பனாங்காடிகிருஷ்ணபணிக்க

    • 6 replies
    • 2.4k views
  13. நடமாட்ட சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கை வடக்கில் யாழ். மாவட்டத்தில் சிவிலியன்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு இப்போது வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்ற

  14. வீரகேசரி நாளேடு - இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா தலையிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் கோரியுள்ளார். தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் சந்திரசேகரன் இலங்கை விவகாரம் குறித்து பல தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். தனது விஜயம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, நான் தமிழகத்திற்கு வந்து இருப்பதன் பிரதான நோக்கம் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவேயாகும். இதற்காக தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஆகியோரை ஏற்கனவே சந்தித்து பேசிவிட்டேன். அ.தி.மு.க. வை சேர்ந்த முன்னாள் அ…

    • 0 replies
    • 781 views
  15. வெள்ளை வான் கடத்தல்களுடன் சீருடை தரித்த பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பந்தப்பட்டுளமை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், தமிழர் மீதான கடத்தல்கள், கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். பொது மக்களை குறி வைத்து மேற்கொள்ளப்படும் குண்டு வீச்சுகளும் குண்டுத்தாக்குதல்களும் வடகிழக்கில் மட்டுமல்ல இலங்கையில் எந்தப் பாகத்திலும் இடம் பெறக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு. அரசும் விடுதலைப் புலிகளும் நடத்தும் வெற்றி கொள்ள முடியாத போருக்கு அப்பாவிப் பொதுமக்களே பலியாகி வருகிறார்கள். அதற்கு மேலாக சொல்லொணாத் துயரங்களிலும் கடத்தல் கைதுகளாலும் மக்கள் இம்சிக்கப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். …

  16. 'பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி வடபகுதி மக்கள் தென்பகுதிக்குள் வருவதைத்தடை செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்ககைள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். 'தமிழ் நாடாளுமன்று உறுப்பினா ஒருவர் வடகிழக்கு மக்களைத் தென்பகுதிக்கு வராதீர் எனக் கோரிக்கை விடுப்பது அரசு முன்னெடுத்துச் செல்லும் யுத்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் அறிவுரையாகவே நோக்க வேண்டியுள்ளது.' இடது சாரி முன்னணி பிரசாரச் செயலாளர் ஞானசிறி கொதிகொடவின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அரசு யுத்த வெறி கொண்டு இயங்குவதை மஹிந்தவின் பேச்சும், ரத்ணசிறியின் யுத்தம் பற்றிய விளக்கங்களும் நன்கு புலப்படுத்துகின்றன. அண்மைய தினங்களில் கொழும்பிலும், அதனை அண்டிய நகரங்களிலும் நடத்தபட்ட குண்டு வெடிப்புகளால் நூற்…

  17. வீரகேசரி நாளேடு - இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டியது அவசியமாகும். இலங்கையில் தற்போதைய நிலைவரம் கவலையளிப்பதாகவுள்ளது. அங்கு அமைதியற்ற சூழல் நிலவுவதனால் பொதுமக்கள் நிம்மதியின்றி சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை. ஊடகங்கள் மீது அரசாங்கம் நெருக்குதல்களை கொடுப்பதனால் உண்மைச் சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார். புதுடில்லிக்கு விஜயம் செய்யும் வழியில் நேற்று சென்னை விமான நிலையம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் கூறியதாவது: …

  18. மஹிந்தவின் லண்டன் விஜயத்தை ஒட்டி சர்வதேச மன்னிப்புச்சபை லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்புக்களின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பிரஜைகள் , மனிதநேய ஆர்வலர்கள் மற்றும் பலவேறு தரப்பினர் உட்பட கணிசமான எண்ணிக்கையிலானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள் என்பனவை குறித்தும் அவற்றைக் கவனத்ததுக்குக் கொண்டு வரும் நோக்கிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் என பி.பி.ஸி வானோலி சேவை தெரிவித்தது. …

    • 0 replies
    • 1.3k views
  19. தமிழை வளர்த்தோம் என்று கூறிவரும் கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்கவில்லை. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கைக் கடலில் சிங்கள இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழர்கள தினமும் செத்து மடிகின்றனர். கச்சதீவு நம்மிடம் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. இலங்கையில் தமிழர்கள் படும் அவலங்களையும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றமையும் கண்டும் காணதது போல் இருக்கிறார். தமிழர்களுக்கான பாதுகாப்பை வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அவர். என்று நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் ந…

  20. வவுனியாவிலும் மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 4 படையினர் பலி- 9 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 10 யூன் 2008, 05:56 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் நேற்று மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: பாலமோட்டைப் பகுதியில் இருந்து சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் நேற்று திங்கட்கிழமை காலை 6:00 தொடக்கம் பாரிய முன்நகர்வுகளை மும்முனைகளில் மேற்கொண்டனர். படையினரின் முன்நகர்வுகளை முறியடிக்கும் நடவடிக்கையினை விடு…

    • 0 replies
    • 658 views
  21. மன்னாரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் வெட்டிக்கொலை [செவ்வாய்க்கிழமை, 10 யூன் 2008, 06:02 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் எமில் நகரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்னர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். இராசு காந்தன் என்று அழைக்கப்படும் சுரேஸ் அல்லது காந்தன் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளராக செயற்பட்டு வந்த இவர், சுற்றிவளைப்புக்களின் போது காட்டிக்கொடுப்பது உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அதிகளவிலான மக்கள் இவரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி மக்களால் இவர் வெட்டிக்கொல்லப்பட்டு எமில் நகர் குளத்துக்குள் போடப்பட்டுள்ளார் என தெரி…

    • 0 replies
    • 964 views
  22. நான்காம் கட்ட ஈழப்போரை எதிர்கொள்ள புதிதாக நான்கு படையணிகளை அமைத்துள்ள சிறிலங்கா இராணுவம் தற்போது ஐந்தாவது படையணியை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 592 views
  23. மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 576 views
  24. தம்புள்ள மற்றும் அநுராதபுரத்தில் மூன்று எலும்புக்கூடுகள் மீட்பு திங்கள், 09 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] தம்புள்ளப் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. மீ்ட்கப்பட்ட எலும்புக்கூடு ஆணினுடையயது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அநுராதபுரத்ததில் ஆணினதும் பெண்ணினதும் இரு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவை 30 அகவைக்கும் 40 அகவைக்கும் இடைப்பபட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடுகள் காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/?p=1018

  25. நெடுந்தீவு படையினரால் சுற்றிவளைப்பு: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடும் தேடுதல் Monday, 09 June 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த சிறிலங்கா கடற்படையினர், இராணுவம் மற்றும் காவல் துறையினரின் ஆதரவுடன் அப்பகுதியில் கடுமையான தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கை பிற்பகல் வரையில் தொடர்ந்தது. இந்தத் தேடுதல் நடவடிக்கைக்காக நூற்றுக்கணக்கான படையினர் நேற்றுக்காலை படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு நெடுந்தீவில் இறக்கப்பட்டார்கள். நெடுந்தீவின் அனைத்துப் பகுதிகளும் சல்லடை போட்டுத் தேடப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.