ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடைபெற்ற மோசடிகள் மற்றும் அநீதிக்கு எதிராக எதிர்வரும் வாரம் தலைமை நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர உள்ளதாக சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 828 views
-
-
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27.05.08) நடைபெறவுள்ள ஜே.வி.பி.யின் 5 ஆவது தேசிய மாநாட்டின் போது அக்கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தற்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 899 views
-
-
சிறிலங்காப் பயங்கரவாத அரசு நேற்று கிளைமோர்த் தாக்குதலை நடத்தி பலியெடுத்த 6 சிறார்கள் உட்பட்ட 16 பேரின் உடல்கள் இன்று சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் மக்களின் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உதலாகம ஆணைக்குழு வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதனால் ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். இந்த ஆணைக்குழுவின் மூலம் நியாயமானதும், சுயாதீனமானதுமான அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியுடன் இயங்கும் இந்த ஆணைக்குழு அந்த நாடுகளுக்கு தேவையான வகையில் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புக்களுடன் இந்த ஆணைக்குழு கைகோர்த்து செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உதலாகம ஆணைக்குழு…
-
- 0 replies
- 854 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையை தக்கவைத்துக்கொள்ள இலங்கை தவறியிருப்பதால் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காமல் விடுவதற்கான அபாயம் காணப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்த்தன, இனியும் மனித உரிமை மீறல்களை தடுத்துநிறுத்தாவிட்டால் இலங்கை பொதுநலவாய ஒன்றியத்தின் உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளார். சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆசனத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வெளிவிவகார அம…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்திற்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்காக உரிமையாளருக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகை எனக் கூறி பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையினால் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுத் தொகையாக 3007 மில்லியன் (3007,034,646) ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், 2008-04-10 என்ற திகதியிடப்பட்ட 250749ம் இலக்க காசோலை எழுதப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த காசோலை மக்கள் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போதிலும், ஹம்பாந்தோட்டை மக்கள் வங்கி கிளைக்கு இந்தப் பணம் கிடைக்கப் பெறவில்லை என வங்கியின் முகாமையாளர் தெரிவித்தார். மேலும், ந…
-
- 0 replies
- 952 views
-
-
ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவையை ரத்து செய்யுமாறு பிரதமர் உத்தரவு Saturday, 24 May 2008 ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் சேவையை ரத்து செய்யுமாறு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க ஆட்பதிவு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய அடையாள அட்டையை பிணையாக வைப்பது சட்டவிரோதமான செயல் என பிரதமர் தெரிவித்துள்ளார். அது 1968ம் ஆண்டு 32ம் இலக்க ஆட்பதிவு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும், அடையாள அட்டையை பிணையாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். தற்போது இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகில் மனித உரிமைகள் பேணப்படுகின்ற நிலைமை குறித்து ஆராய்கின்ற உயர் சபையான ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு உறுப்புரிமை பெறும் தகுதியோ, அருகதையோ அற்ற நாடு இலங்கை என்று கருதி, இலங்கையை உலக தேசங்கள் நிராகரித்து 24 மணி நேரத்துக்குள் அந்தத் தீர்மானம் சரியானதே என்பதை நிரூபிக்கும் மற்றொரு சம்பவம் இந்த நாட்டின் தலைநகரில் கொழும்பில் நடந்தேறியிருக்கின்றது. கொழும்பின் பிரபல ஆங்கில வார இதழ் ஒன்றின் பிரதி ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவருமான கீத் நொயர், தெஹிவளையில் உள்ள தமது வீட்டு வாசலில் வைத்துப் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். உலக தேசங்களின் தீர்ப்பு புதனன்று இரவு வெளியானது. நொயர் அடுத்த நாள் வியாழன் இரவு கடத்தப்பட்டிருக்கின்றார். கடுமையாகத் தாக்கப்பட…
-
- 0 replies
- 711 views
-
-
மட்டக்களப்பில் இளம் பெண்களை வெள்ளை வானில் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக் கொடூரங்களில் ஈடுபட்டமையாலே சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் 24 மணி நேரத்தினுள் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் இராணுவத்தின்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், விடுதலைப் புலிகளின் இந்தக் குற்றச்சாட்டு, இராணுவத்தினருக்கு இழுக்கு ஏற்படும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற பொய்ப்பிரசாரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.1k views
-
-
மணலாறில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். படைக்கலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் களமுனைகளில் எதிரிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து பெரும் வெற்றித் தடங்கள் பதித்தவர் பிரிகேடியர் பால்ராஜ் அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் சோகத்தையும் உண்டு பண்ணியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "பிரிகேடியர் பால்ராஜ் போரியல் அனுபவங்கள் நிறைந்த முதுநிலை தளபதி. அவர் வடபோர் முனைகளில் பல களங்கள் கண்டு எதிரிக்கு படு தோல்விகளை ஏற்படுத்தி பெரும் இழப்பை உண்டுபண்ணியவர். அனேகமாக அவர் காணாத களமுனைகளோ பெரும் சண்டைகளோ கிடையாது என்றே கூறவேண்டும். அவ்வாறானதொரு …
-
- 0 replies
- 889 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி அக்கராயன் வீதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 17 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 20 replies
- 6.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைநகர் மற்றும் முள்ளியவளைப் பகுதிகளில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் http://www.eelatamil.com/gallery2/categories.php?cat_id=37
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் நினைவுக் கவிதை - 3 (ஒளிப்பதிவு)
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழத் தேசியதத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மல்லாவி, கிளிநொச்சி பிரதேசத்தில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வுகள். குறிப்பு: இவ் ஒளிப்பதிவின் இறுதிப் பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கோளாறினால் இறுதியில் சில நிமிடங்கள் காண்பிக்காது இப்பதிவு நின்று விடுகின்றது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மா வீரம், பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான ஆவணப் பதிவு
-
- 0 replies
- 1.4k views
-
-
நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது வீரவணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
போனஸ் ஆசனத்தைப் பெற மறுக்கிறார் மௌனகுருசாமி Monday, 19 May 2008 கிழக்கு மாகாண சபைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேர்தலின் மூலம் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனகுருசாமி அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.3k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வடராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கற்பாட்டுப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 2 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
வி.புலிகள் பிரிகேடியர் பால்ராஜு அவர்களுக்கு கொடுக்கும் கடைசி மரியாதை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று மாலதி படையணி சிறப்புத் தளபதி கேணல் யாழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 992 views
-