ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
ஜயகாந்தன் ராமநாதன் எனும் இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவிடம் இலங்கை பொய் கூறியுள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். அதனை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஜயகாந்தன் ராமையா எனும் 25 வயது இளைஞர் கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கடவத்தை நகரில் வைத்து வெள்ளைவானில் வந்த இரகசியப் பொலிசாரால் கடத்தப்பட்டார். இது குறித்து கடத்தப்பட்டவரின் சகோதரர் 2007 மார்ச் 22 ஆம் திகதி கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்" எனவும் மனோ கணேசன் குறிப…
-
- 4 replies
- 1.2k views
-
-
தொடர்புபற்றிய ஆதாரம் கீழே வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது பார்க்கவும் * கொழும்பிலுள்ள தூதரக வட்டாரங்கள் டிட்டோ குகன் இந்தியா சார்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையானை எவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொடர்பு கொண்டிராத நிலையில், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி விவகாரத்தில் இந்தியாவை இழுத்து விடுவது என்பது ஆதாரமற்ற விடயமென இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு விடயத்தில் அதை உள்ளே இழுத்து விடுவது ஏற்புடையதாக இல்லையென்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கருத்து வெளியிட்டார். கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பிள்ளையான் தெரிவானது இந்தியா திரைமறைவிலிருந்து செ…
-
- 8 replies
- 2.5k views
-
-
வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாணசபைகான தேர்தல் இடம்பெற்ற கடந்த 10 ஆம் திகதி முதல்,கிழக்கில் விடுதலை புலிகளின் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் சற்று தீவிரமடைந்து வருவதாக கொழும்பில் இயங்கும் சிங்கள நாளேடுகளும், இணையதளங்களும் செய்திகளை வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. தேர்தலுக்கு முன்னிரவு அம்பாறையில் ஹொட்டேல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, இக் குண்டு தாகுதலை யார் மேற்கொண்டது என்பது தொடர்பில் இதுவரை தெளிவு இல்லை.தேர்தல் தினத்தன்று, திருகோணமலை அஸ்ரப் துறைமுக பகுதிக்குள் நிறுத்தபட்டிருந்த MV-Invincibile-520 என்ற கப்பல் மூழ்கடிப்பு, அதே தினத்தில் அம்பாறை பகுதியில் விடுதலை புலிகளால் நடத்தபட்டதாக தெரிவிக்கபடும் எறிகணை வீச்சு, அதனை தொடர்ந்து தற்போது கிழக்கில் இடம்பெ…
-
- 1 reply
- 1.3k views
-
-
விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கொள்கைகளை வகுக்க புத்தி ஜீவிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் ஜீ.எச்.பீரிஸ் தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழு இந்த கொள்கை தொடர்பான ஆவணத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை வகுப்பு தொடர்பில் இந்த குழு பரிந்துரைகளை சமர்பிக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை சில சந்தர்ப்பவாதிகளின் தேவையின் அடிப்படையில், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாரியளவில் கட்சிக்கு இல்லாமல் போயுள்ளதாக ஜே.வீ.பீயின் ஜப்பானிய குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பானிய குழுவின் அமைப்பாளர் சமன் பிரியங்கர ஜே.வீ.ப…
-
- 0 replies
- 581 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார். மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
'இலங்கை கிழக்குப் பகுதியை புலிகளிளிடமிருந்து மீட்டெடுத்து எங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இங்கு அமைதி நிலவுகிறது. புலிகைளை நாங்கள் அழித்து விட்டோம் என்று இலங்கை அரச அதிபர் மஹிந்த கூறுகிறார். இவையனைத்தும் முழுப் பொய். புலிகள் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி பெறுவார்கள்.' என்று தமிழக மூத்த அரசியல்வாதியும் , ஈழத்தமிழர் ஆதரவாளரும், ம.தி.மு.க பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார். சென்னையில் வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த கிழக்கை கைப்பற்றி விட்டோம் என்று மார் தட்டுகிறார். அங்கிருந்து புலிகளை முற்றக தூரத்திவிட்டோம், கிழக்கு மக்களை பயங்கரவாத்தின் பிடியிலிருந்து மீட்டு, அங்கு அமைதியை நிலைநாட்டியுள்ளோம் என்று கூறுக…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் போலி அடையாள அட்டை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளவத்தையில் வசிக்கும முஸ்லீம் ஒருவரின் பெயரில் இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் விலாசம் என்பன போலியானது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாள அட்டையை தயாரிக்க உதவிய கிராம சேவகர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதுடன் இது தொடர்பாக பலரிடம் இதுவரை விசாரணைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. தற்கொலை தாரியின் வாகன அனுமதி பத்திரமும் குறித்த அடையாள அட்டையின் தகவல்களின்படியே பெறப்பட்டுள்ளது. சிறப்பு குழுக்கள் அமைக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நடத்தியுள்ள தாக்குதல் ஒன்றில் மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்திருக்கின்றார்க
-
- 8 replies
- 2.3k views
-
-
கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக ஹிஸ்புல்லாவை நியமிக்காது விட்டால் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகப்போவதாக அரசை மிரட்டியிருந்தனர். ஆனால் அரசு அந்த மிரட்லுக்கு செவிசாய்க்கவில்லை. எனவே தன்மானம் இருந்தால் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகட்டும் என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் இன்று புதன்கிழமை கேணல் ரமணனின் 2 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 921 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுக் கவிதை
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுக் கவிதை
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினரால் நால்வர் கடத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 901 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேற்குலக இராஜதந்திரிகள் செயற்படுகின்றனர் என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐரோப்பிய சுற்றுலாவுக்கு தயாராகும் பிள்ளையான்! Wednesday, 21 May 2008 கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஐரோப்பாவவை சுற்றி வருவதற்கான ஒழுங்களை ஜனாதிபதி செய்து வருவதாக ஜனாதிபதி செயலகத்தலிருந்து தெரிய வருகிறது. இச் சுற்றுப் பயணத்தின் நோக்கம் கிழக்கு மாநிலத்தின் ஒரு தமிழரை முதலமைச்சராக்கி அவரை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்வதோடு சிறீலங்காவின் தேசிய பிரச்சனைக்கு முடிவு காணும் முதல் முயற்சியாக தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கி விடை காண முயலுவதாக உலகுக்கு எடுத்தியம்பவே என தெரிய வந்துள்ளது. http://www.ajeevan.ch/content/view/2879/1/
-
- 3 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 903 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.05.2008 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1.2k views
-
-
அமைச்சு பதவி தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படாமையினால் ஹிஸ்புல்லாவின் பதவியேற்பு தாமதம் அமைச்சு பதவிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக ஹிஸ்புல்லாவின் பதவிப் பிரமாணம் தாமதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. எனினும், சுகாதார அமைச்சுக்குப் மேலதிகமாக வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை .............. தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8437.html
-
- 1 reply
- 899 views
-
-
எமது கலை, பண்பாடுகள் விடுதலை உணர்வுகளை வளர்ப்பவையாக விளங்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 778 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள கூமாங்குளத்தில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 590 views
-
-
மட்டக்களப்பில் தொடர்ச்சியாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் குழுவினாரால் இளம் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த மோர்ணிங்க் லீடர்" தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பில் இரவு நேரங்களில் இளம்பெண்கள கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது பற்றி காவல்துறையினரிடம் முறைப்பாடுகள் செய்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். வெள்ளை வானில் வரும் இந்த ஆயுதக்கும்பல்களுக்கு இளம் பெண்களின் பெயர் முதல் சகல விபரங்களும் தெரிந்திருக்கின…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் எறிகணைவீச்சு பீரங்கி நிலை மீதும், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடும் இடம் மீதும் இன்று காலை 6 மணிக்கு விமானப்படையினர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளி;ன் பிரதேசத்தினுள் முன்னேறுகின்ற படையினருக்கு வான்வழி சூட்டு ஆதரவு வழங்கிவரும் விமானப்படையின் எம்.ஐ24 ரக தாக்குதல் ஹெலிக்கப்டர்களே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விமானப்படையின் விங் கமாண்டர் அன்றூ விஜேசூரிய கூறியுள்ளார். முகமாலை இராணுவ முன்னரங்கத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆர்ப்பரித்த பேரினவாத பூதத்தை, பூதத்தின் ஆணவத்தை தலைவனுடன் தோள்கொடுத்து ஆர்ப்பரித்த பூதத்தின் உச்சந்தலையியே பேரிடியை இறக்கி சிதறடித்த எங்கள் மூத்த தளபதி காலதேவனின் அழைப்பில் எங்களிடம் சொல்லாமலே சென்றுவிட்டீர்கள். "நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும்" எனும் எங்கள் தலைவனின் கருத்துக்கு செயல்வடிவம் கொடுத்த தளபதி, எம்மக்களையும்,எம்மண்ணையும் தனதுயிரினும் மேலாக நேசித்த வீரன், குடாரப்பில் முப்பத்தைந்து நாட்களாக எதிரியுடன் அவன் மடியிலேயே எவ்வெளியுலகத் தொடர்புமின்றி சமராடி இத்தாவில், பளை ஈடாக ஆனையிறவு வெல்லப்படும் வரை வெங்களமாடி தமிழினத்தை, தமிழர்தம் வீரப்போரை உலகறியச்செய்தவர். நீங்கள் …
-
- 2 replies
- 2.3k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தேர்தல் இன்று: கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் களத்தில் இலங்கை! தெரிவு குறித்து முழு நம்பிக்கை கொழும்பு அரசுக்கு ஆனால் வீழ்த்துவதில் பொது அமைப்புகள் மும்முரம் சர்வதேச ரீதியில் தனக்கு எதிராகக் கிளர்ந்துள்ள கடும் எதிர்ப்பு அலைகளுக்கு மத்தியில் இலங்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் மீண்டும் உறுப்புரிமை பெறுவதற்கான தேர்தலில் போட்டியிடுகின்றது. நியூயோர்க்கில் நடைபெறும் இத்தெரிவில் வெற்றி கிட்டும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக இலங்கை அரசுப் பிரதிநிகள் உறுதி வெளியிட்டுள்ள போதிலும், இலங்கையை எப்படியும் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதில் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளும் சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட தரப்புகளு…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இலங்கை தெரிவு செய்யப்படுவதை நிராகரிக்குமாறு மூன்று கண்டங்களைச் சோந்த நோபல் பரிசு பெற்ற பிரமுகர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக, வினைத்திறன் வாய்ந்த மனித உரிமைகள் பேரவைக்கான அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் கூட்டணி நேற்று முன்தினம் திங்கள் அன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூட்டு, ஆர்ஜன்ரீனாவின் அடொல்போ பெரஸ் எஸ் கியூவல், அமெரிக்காவின் ஜிம்மி காட்டர் ஆகிய நோபல் பரிசுகளை வென்றேடுத்த மூன்று பிரபல்யமானவர்களே இலங்கையின் மனித உரிமை மீறல் பதிவுகளின் அடிப்படையில் பேரவையின் உறுப்பினாராக இலங்கை தெரிவு செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் பேரவைக்கான உறுப்பினர் தேர்தல…
-
- 3 replies
- 1.4k views
-