ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணியில் மேலும் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் வெள்ளைவானில் சென்ற பிள்ளையான் அணியினர் இந்த இளைஞர்களைக் கடத்திச் சென்றதாக முஸ்லீம்காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பிள்ளையான் தரப்பில் இருந்து உத்தியோக பதில்கள் வெளிவரவில்லை. இதனை அடுத்து அப்பகுதியிலும் பதட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பதற்ற சூழ்நிலையினையடுத்தே இப்பிரதேசத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள…
-
- 4 replies
- 1.1k views
-
-
அட்டாளைச்சேனை பிரதேசசபை தலைவர் மசூர் சின்னலெப்பை அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான தாக்குதலுக்குள்ளான இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசாங்க அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களாலேயே இவர் தாக்கப்பட்டிருப்பதாக பிராந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தார். இதேவேளை, ஏறாவூரில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து ஏறாவூரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால் ஏறாவூர் பகுதியின் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 22ஆம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்ற வன்…
-
- 0 replies
- 825 views
-
-
-
சிறிலங்கா அரசின் கேவலமான தோற்றப்பாட்டை மறைத்து வந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கான உறுப்புரிமையும் தற்போது பறிபோய் உள்ளது. எம்மால் அதனை தக்கவைக்க முடியவில்லை. எனவே நாம் எங்கு போகின்றோம்? என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 972 views
-
-
திறந்த வெளிக்கள்முனைக்கு செல்லும் மன்னார் யுத்தம்-தினக்குரல் விதுரன் வன்னியில் திறந்தவெளிக்களமுனை ஒன்றுக்குள் படையினர் நுழையப் போகின்றனர். மன்னாரில் நடைபெறும் கடும் சமரானது இவ்வாறானதொரு புதிய களமுனையைக் காணப்போகிறது. கரையோரப் பகுதியை இலக்கு வைத்து நகரும் படையினர் அந்தப் பகுதிக்குள் செல்வதற்குள் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கப் போகின்றனர். ஆனாலும், இந்தக் களமுனையில் இதுவரையான சாதக நிலைமையை இனியும் பயன்படுத்த முடியுமெனப் படைத்தரப்பு கருதுகிறது. வடக்கே நான்கு முனைகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. வன்னிக்குள் மூன்று களமுனைகளும் யாழ்.குடாவில் ஒரு முனையும் திறக்கப்பட்டுள்ளன. வன்னியில், மன்னார் களமுனையே தற்போதைய நிலையில் தங்களுக்குச் சாதகமாயிருப்பதாக படைத்தர…
-
- 0 replies
- 1.7k views
-
-
வீட்டுக்குள் வேளாண்மை செய்யும் தொழில்நுட்பத்தை மகிந்த கண்டுபிடித்துள்ளார்
-
- 2 replies
- 1.8k views
-
-
மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை ரத்து செய்வதற்கு அரசாங்கம் ஊடகங்களின் மூலம் சூழ்ச்சி செய்வதாகத் தெரியவருகிறது. வெளிநாட்டில் உள்ள சில இலங்கைத் தூதுவர்களின் மூலம் பாதுகாப்பு தகவல்கள் கசிவதாக ஞாயிறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்வது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாட்டு சக்திகளின் நிதியுதவியில் இயங்கும் ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். உதலாகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைளை ஈடுபட்ட பகவதி குழுவினரின் செயற்பாடுகள் குறித்தும் அர…
-
- 0 replies
- 714 views
-
-
கடந்த சில வருடங்களாக மலேசியாவில் வசித்து வந்த இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த இளங்க{ரன் என இயற்பெயருடையடி தமிழர் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பம் முகவாரக போலியாக காட்டி பல தமிழர்களிடம் பணம் பெற்றது தெரியவந்துள்ளது இதன்படி இவர்தனது பயணிகளான நால்வரை தனது இருப்பிடத்தில்; உள்ள அறை ஒன்றினுள் அடைத்து வைத்திரு;நததாகவம் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விரக்தியான நிலையில் அறையில் அடைபட்டிருந்த இஞைர்கள் அறைக் கதவை உடைத்து வெளியெ வந்து குறித்த போலி முகவர் பேர்வழியான சுரேஸ் என மலேசியாவில்அறியப்பட்ட இள்ங்கீரனைய}ம் அவரது மனைவியையும் பலமாகத்தாக்கியதில் சுரேஸ் கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு ம…
-
- 0 replies
- 1.8k views
-
-
மீசையில் மண் படவில்லை? [24 - May - 2008] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் மீண்டும் உறுப்புரிமையைப் பெறுவதற்கு இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. கடந்த இரண்டரை வருடகாலமாக படுமோசமாக அதிகரித்துவந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் காரணமாக சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது குவிந்திருந்த நிலையில் நியூயோர்க்கில் ஐ.நா. சபையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கிடைத்திருக்கும் தோல்வி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஒரு பின்னடைவேயாகும். ஆனால், விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்ற தோரணையில் அரசாங்கத்தரப்பினர் பேசிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக 2006 இல் …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை அங்கத்துவத்தை சிறிலங்கா இழந்ததைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 825 views
-
-
மட்டு.மாவட்டத்தில் கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாகரைப் பகுதியில் இராணுவத்தின் சிவில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் வாகரை ஊரியான் காட்டுப் பகுதியில்; அரசுக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலப்பரப்பில் பிரதேச செயலகக் கட்டிடம், பயிற்சிக் பட்டறைக் கட்டிடம் பலநோக்குக் கூட்டறவுச் சங்க கட்டிடம் போன்ற பல்வேறு அரச கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் புத்தளம், சிலாபம் பகுதியில் இருந்து கலகுடா மற்றும் வாகரைப் பகுதிக்கு வர்ண மீன், கடல் அட்டை பிடிப்பதற்காக வரும் சிங்கள மீனவர்களை இந்த நிலப்பரப்பில் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கபடுகின்றது. கதிரவெ…
-
- 2 replies
- 1.2k views
-
-
நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் இயந்திர மனிதனை(ரோபோ) இலங்கை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருப்பதுடன் அதற்கு 'முரளி' என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை தினக்குரலுக்கு உறுதிப்படுத்திய விஞ்ஞான தொழில்நுட்ப அமைசசர் இக்கண்டுபிடிப்பு நாட்டுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் எனவும் வர்ணித்தார். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பாதிப்புகளுக்குள்ளாகி ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பலர் தமது அவயங்களை இழந்துமுள்ளனர். வெளிநாட்டு அரசுகள் சில புதைக்கபட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஒத்துழைப்புகள் வழங்குகின்றன. உள்ளுர் அரச சார்பற்ற பிரதிநிதிகளும் இதில் பங்காற்றுகின்றனர். இந்நிலையில…
-
- 14 replies
- 2.6k views
-
-
யாழ்ப்பாண குடாநாட்டை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படையினர் மக்களை திசை திருப்பும் நோக்கோடு செயற்பட்டு வருகின்றனர். எனவே இவர்களின் செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டாமென எல்லாளன் படை யாழ் குடாநாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிந்தித்து செயற்படுங்கள் யாழ்ப்பாண களியாட்டம் யாருக்கு? என்ற தலைப்பில் எல்லாளன் படை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படைகளால் திறந்த வெளிச் சிறைச்சாலை யாக்கப்பட்டிருக்கும் குடாநாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களையும் மக்கள் மீதான படுகொலைகளையும் மூடி மறைக்கும் நோக்கோடும் குடாநாட்டில் மக்கள் எதுவித பிரச்சினைகளுமின்றி இருப்பதாகக் காட்டும் ந…
-
- 1 reply
- 1k views
-
-
கிழக்கிலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத் மீண்டும் தலைதூக்கி உள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்ததாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 860 views
-
-
மல்லாவியில் ஆழஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் இருவர் பலி; 2 பேர் காயம் [24 - May - 2008] முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு ஆழ ஊடுருவும் படையினர் அம்புலன்ஸ் மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில், மன்னார் மாவட்ட உதவிக் கடற்றொழில் பணிப்பாளரும் மற்றொருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளாங்குளம் - துணுக்காய் வீதியிலேயே வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் மன்னார் மாவட்ட உதவிக் கடற்றொழில் பணிப்பாளரான ஜோசப் யூலியன் (55 வயது) என்பவரும் அவருடன் சென்ற ஜோசப் சாந்தகுமார் என்பவருமே கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதியும் மற்றொருவரும் இத்தாக்குதலி…
-
- 0 replies
- 700 views
-
-
சிறிலங்கா இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியாக 61 ஆவது படையணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றது என்று அந்நாட்டின் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
வெளிநாட்டு அமைப்புகள் இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை ஆராயத் தடை – அரசாங்கம் வெளிநாட்டு அமைப்புக்கள் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக காண்காணிப்பதற்கோ அல்லது ஆராய்வதற்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாதென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தடையுத்தரவு தொடர்பாக ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவைக்கு நேற்றைய தினம் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதென திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் போலிப் பிரசாரங்களுக்கு மனித உரிமைகள் பேரவை செவிசாய்த்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ் சாட்டியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்…
-
- 1 reply
- 758 views
-
-
23.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான ஆங்கில மொழியிலான ஆவணப்பதிவு
-
- 0 replies
- 954 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான மீளும் நினைவுகள் நினைவு கூர்பவர்கள்: திருமதி யமுனா - தாக்குதல் தளபதி (மாலதி படையணி) செல்வி சஞ்சனா - போர்ப்பயிற்சி ஆசிரியர் திரு கோபிநாத் - சிறப்புத் தளபதி (சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி) திரு பொட்டம்மான் பொறுப்பாளர் - புலனாய்வுத்துறை
-
- 5 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்புரிமையை சிறிலங்கா இழந்தமை குறித்து சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 876 views
-
-
http://www.orunews.com/?p=1022
-
- 0 replies
- 1.6k views
-
-
பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்களைக் களைவதன் மூலம் மட்டுமே கிழக்கில் முஸ்லிம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று கூறுகிறார் கிழக்கு மாகாண அமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா. அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட காத்தான்குடியில் மீரா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தொழுகையை அடுத்து அங்குள்ள மக்கள் மத்தியில் கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களையச் செய்வதற்குத் தாம் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும், இது தொடர்பாக அரசுடனும், பொலிஸ் மா அதிபருடனும் தாம் பேசியிருக்கின்றார் எனவும் அங்கு அவர் கூறியிருக்கின்றார். இதேபள்ளிவாசலுக்கு நேற்று மதியம் கிழக்கு மாகாண முதலமைச்சர்…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தெரிவுசெய்யப்படாமையானது ‘ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும்’ என்ற செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருப்பதாக படுகொலைகள் மற்றும் காணாமல்போதல்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாகச் செயற்படுகிறது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விடயங்களைத் தவிர்த்து இலங்கை விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுநாடுகள் இரட்டை வேடம்போடுவதாகக் குற்றஞ்சாட்டுவதற்கே இலங்கை விரும்பியது. “எனினும், அந்த நாடுகள் சர்வதேச ரீதியில் அரசியல் சக்திவாய்ந்த நாடுகள். ஆனால், எமது விடயத்தில் அவ்வாறு இல்லை. அங்கு சிறுபான்மையினர் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளத…
-
- 0 replies
- 943 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடைபெற்ற மோசடிகள் மற்றும் அநீதிக்கு எதிராக எதிர்வரும் வாரம் தலைமை நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர உள்ளதாக சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 829 views
-