Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கின் முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்படாவிடின் அரசில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் உடனடியாக பதவி விலகுவார்களென்ற எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் அது பிசுபிசுத்து விட்டது. அமைச்சர் அதாவுல்லா ஒத்துழைப்பு வழங்காததாலேயே இந்நிலையேற்பட்டதாக தெரிவித்த முஸ்லிம் அமைச்சர்கள் அத்தாவுல்ல தமது முதுகில் குத்திவிட்டதாகவும் விசனம் தெரிவித்தனர். பிள்ளையானை முதலமைச்சராக்கினால் தாம் இராஜினாமா செய்வதென்ற தீர்மானத்தை முன்னதாக முஸ்லிம் அமைச்சர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலைப்பாட்டுக்கு அமைச்சர் அதாவுல்லவும் முதலில் உடன்பட்டிருந்தார். எனினும், இறுதித் தருவாயில் தனது கட்சி சார்பில் தெரிவான 4 உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு அவர் பதவியேற்பு நிகழ…

  2. சிங்களத்தின் புகழ் பூத்த இரண்டு டிவிசன் படையாட்களை முன்னகர்த்திப் புலி வேட்டைக்குப் புறப்பட்ட சிங்களப் படைத் தலைமை, எமது வீரர்கள் களத்தில் காட்டிய வீரத்தின் முன் நின்றுபிடிக்க முடியாது எதிர்பாராத தோல்வியோடு அவமானத்துடன் தமது படைகளை பின்வலித்துக் கொண்டனர். ஒரே நேரத்தில் முகமாலையின் வலதும் - இடதுமாகக் கைகளை அகல விரித்தாற் போல நீண்டு கிடக்கும் புலிகளின் முன்னரங்கத்தின் பல இடங்களிலும் உடைப்பை ஏற்படுத்திப் படைகளை உள்நுழைப்பதே படைத்தலைமையின் நோக்காகும். சிங்கள மரபுப் போர்ப் படைக்கு வலுவூட்ட ஆட்லறி - மோட்டார் மற்றும் டாங்கிகளின் உயர் சூட்டாதரவுடன் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படை எத்தனிப்பைப் புலி வீரர்கள் தமது முன்னரங்குகளிலேயே முறியடித்து விட்டனர். இரவு…

    • 0 replies
    • 1.3k views
  3. இரண்டு மாதங்களின் பின் மடுத் திருத்தலப் பிரதேசத்தை ஆலய நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு படைத்தரப்பு இணக்கம் தெரிவித்திருக்கின்றது என மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் தெரிவிக்கின்றார். கடந்த மார்ச் மாதம் படைத்தரப்பு மடுப்பிரசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக மடுத் திருத்தலப்பகுதி யுத்தப் பிரதேசமாக மாறி இருந்த நிலையில் திருத்தலத்தில் இருந்த மடு அன்னையின் திருச் சொரூபத்துடன் ஆலய குருக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தேவன் பிட்டி தேவாலயத் தில் தஞ்சமடைந்திருந்தனர். இந்நிலையில் மடுத் திருத்தலத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பன உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்களுக்கும் இடையில் வவுனியாவில் இடம் பெற்ற…

  4. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 2009 ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'எச்.எவ்.எம்.' வானோலிச் சேவை நாளையிலிருந்து 3 நாட்களுக்கு (18,19,20 ஆம் திகதிகளில்) 96.1 பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஒலிபரப்புச் சேவை குறித்து கல்லூரியின் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் : இந்துவின் மைந்தர்கள் வெறுமனே புத்தகப் பூச்சிகளாக மட்டுமன்றி, இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்தவர்கள் என்பதனை வெளியுலகிற்கு பறைசாற்றும் ஒரு முயற்சியாகவும் எம்மவர்களின் பலவேறுபட்ட திறமைகளை வெளிக் கொணரும் ஒரு களமாகவும இந்த 'எச்.எப்.எம்' ஒலிபரப்புச் சேவை அமைந்துள்ளது. எமது இந்த முயற்சியானது ஏனைய வானொலிச் சேவ…

  5. கிழக்கில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட தேர்தல் "கன்னி வெற்றி" குறித்து மகிழ்ச்சியடைய முடியாத சூழ்நிலை ஒன்றே அங்கு நிலவுவதாக "எக்கொனமிஸ்ற்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 657 views
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வானூர்தி வன்னியில் உள்ள இரணைமடு வானூர்தி ஓடுபாதையை அண்டிய பகுதியில் பறப்பில் ஈடுபட்டதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  7. கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக துணைப்படைக் குழுத்தலைவர் பிள்ளையான் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அரச தலைவர் செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 821 views
  8. சிறிலங்கா கடற்படை மீது எந்த நேரத்திலும் எதிர்பாராத திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள் கடற்புலிகள் என்று இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கொமோடோர் வாசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 838 views
  9. இன்று சிறீலங்கா தலைநகரில் நடந்த குண்டுவெடிப்பின் போது அதில் சிக்கிக் கொண்ட சிறீலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே காயங்கள் இன்றி அதிஷ்டவசமாகத் தப்பியுள்ளார். ஆனால் அவருடைய கார் சாரதி பலியாகியுள்ளார். இத்தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது..! Sri Lanka's sports minister, Gamini Lokuge, was caught up in the blast but escaped unhurt. His driver was among the dead, police said. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7404147.stm

  10. லங்கா டிசென்ட் இணையத்தளத்திற்கு இன்று காலை முதல் தொழில்நுட்ப தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது முழுமையாக அரசியல் பழிவாங்கல் என லங்கா டிசேன்ட்டின் ஆசிரியர் குழாம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் கொழும்பு சாட்டட் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட அலுவலகம் ஒன்றில், நிபுணர்கள் குழு ஒன்று இயங்கிவருகிறது. இது இணையத்தளங்களை எவ்வாறு தடைசெய்யலாம் என்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் லங்கா டிசென்ட் ஆசிரியர் குழுக்ம் குறிப்பிட்டுள்ளது. லங்கா டிசென்ட் முன்னாள் அமைச்சரும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியுமான மங்கல சமரவீரவுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் இணையத்தளமாகும். ஆரசாங்கத்தின் இந்த நடவடிக்…

  11. 14.05.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு

  12. கிழக்கில் நடத்தப்பட்ட தேர்தல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ச ஆகியோரினது கொடும்பாவிகளை எரித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  13. போரும் அதன் வலியும் கொடியது கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரம் தான் எத்தனை எத்தனை? தமிழர்களுக்கு அவலத்திற்கு மேலாக அவலத்தைக் கொடுத்தாய் அதே அவலம் உன் முற்றத்தில் நிகழும் போது பதை பதைத்து புலம்புகிறாய். எங்கள் மண்ணில் குண்டு போடுவதை எங்கள் மக்களை ஏதிலிகளாக்கியும் தொடர்ந்தும் அவலத்தை கொடுப்பாயானால் அதே அவலம் உனக்கும்தான். மனிதர்களுக்கு உறவுகளும் அது சார்ந்த வட்டங்களும் தான் முக்கியம் அவ் அடிப்படை சித்தாந்தத்தையே சின்னாபின்னமாக்கி தமிழினத்தையே இத்தீவிலிருந்து முற்றாக அழித்தொழிக்க நினைக்கும் உனக்கு அதாவது தமிழனுக்குத்தான் வலிக்கும் சிங்களவனுக்கு வலிக்காது என்றும் கேடு கெட்ட இனவாதத்தை விட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக…

    • 4 replies
    • 2.4k views
  14. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹின் தலைமையில் வெற்றிப்பெற்ற மூன்று உறுப்பினர்களும் தனித்து இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் இந்த நிலையில் தமது ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மையை பெறமுடியாது என சுட்டிக்காட்டியுள்ளனா. அதனால் முதலமைச்சர் தெரிவுக்குறித்து தம்முடன் கலந்தாலோசிக்கவேண்டும் என அந்தக்கடிதத்தில் அவர்கள் கோரியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவின் தலைமையில் ஜவாஹிர் மொஹமட் அலி மற்றும் எம் எஸ் சுபைர் ஆகியோர் போட்டி…

    • 12 replies
    • 2.6k views
  15. மன்னார் மாவட்ட கூராய்க்கும் சிராட்டிக்குளத்திற்கும் இடையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் மீன் வியாபாரி ஒருவர் அவ்விடத்திலேயே உடல்சிதறிப் பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மு.ப 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆத்திமோட்டை கூராய்ப் பகுதியில் வசிக்கும் செல்லத்துரை (வயது 42 ) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். இவர் ஆத்திமோட்டைப் பகுதியிலிருந்து மீனுடன் தனது உந்துருளியில் நட்டாங்கண்டல் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்து வருகையில் சிராட்டிக்குளத்திற்கும் கூராய்க்குமிடையில் இராணுவத்தினர் கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவரின் உடல் மல்லாவி வைத்தியசாலையில் சடல அறையில் வைக்கப்பட்டு உறவினரால் அடையாளம் காணப்பட்டது.…

    • 0 replies
    • 1.4k views
  16. மட்டக்களப்பு மாவட்டம் கல்லடியில் காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காத்தன்குடி காவற்துறையைச் சேர்ந்த 32 வயதுடைய அசங்க என்ற இந்த கான்டபிள் தனது மோட்டார் செக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்த பிறிதோரு இனம்தெரியாத மோட்டார் சைக்கிள் நபர் 7 வரையிலான வேட்டுக்களை தீர்தபின் தப்பிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 953 views
  17. திருகோணமலைத் துறைமுகம் பாதுகாப்பானதா? இலங்கையிலுள்ள ஏனைய துறைமுகங்கள் பாதுகாப் பானவையா? என்ற கேள்விகளைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் முன்வைக் கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இவ்வாறு ""த பொட்டம் லைன்'' ஆங்கில வார ஏடு கேள்வி எழுப்பி யுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற் றின் முக்கிய பகுதிகள் வருமாறு: திருகோணமலை துறைமுகத் தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த விநியோகக் கப் பல் மூழ்கடிப்பட்டமையானது இலங் கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான படையி னர், தமது காவல் அரண்களில் கடந்த சனிக்கிழமை காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால்,விடுத லைப் புலிகளின் லெப்.கேணல் க…

    • 0 replies
    • 1.2k views
  18. இலங்கையில் மிக மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை அரசு, அதை எதிர்கொள்வதற்குப் படாதபாடு படுகின்றது. இவ்வாரம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்து உதறப்பட்டபோது அதைச் சமாளித்துத் "தாஜா' பண்ணுவதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் மிகுந்த சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது என்கின்றனர் அக்கூட்டத்தொடரின் பார்வையாளர்கள். இலங்கை நிலைவரம் பற்றிய விவகாரம் இன்று சர்வதேச மட்டத்தில் பரகசியமாகி விட்டதால் மனித உரிமை மீறல் சம்பவங்களில் சிலவற்றையேனும் ஒப்புக்கொண்டு "சடையும்' நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். ""தற்போதைய இக்கட்டான சூழலில் சில தனி ந…

    • 0 replies
    • 765 views
  19. புறக்கோட்டையில் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று... Friday, 16 May 2008 சற்று நேரத்திற்கு முன்னர் புறக்கோட்டை பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. http://www.ajeevan.ch/content/view/2743/1/

  20. ஐ.சூர்யா குற்றப்பார்வை-(15.05.2008) பொன்னாலையில் மனைவி வெட்டிக் கொலை தலைமறைவான கணவன் தேடப்படுகிறார்: யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் தனது மனைவியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாகக் கூறப்படும் கணவனை பொலிஸார் தேடி வருகின்றனர். மூளாய் மேற்கு, சுழிபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ரவி தங்கமலர் (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே படுகொலை செய்யப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கணவன், மனைவியும் பொன்னாலைக் குளத்துக்குச் சமீபமாக கட்டப்பட்டிருந்த தமது வளர்ப்பு மாட்டுக்கு தண்ணீர் வைத்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளனர். மாலை 4 மணியாகியும் இருவரும் வீடு திரும்பாததால் வீட்டார…

    • 0 replies
    • 1.2k views
  21. விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்தது வெள்ளி, 16 மே 2008 [நிருபர் அ.மயூரன்] விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்துள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாக காண்பித்து அரசியில்நடத்தும் கட்சிகளின் அழுத்தங்கள், றோ மற்றும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் அழுத்தங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் மீது இருந்துவந்த தடையை மேலும் இருவருடங்கள் இந்திய அரசு நீடித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்ப்பில் இந்திய உள்த்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீடித்து வருகிறமை இங்கே குறிப்பிடத்தக்கது. pathivu.com

  22. ஆயுதம் தரித்த ஜே.வி.பி உறுப்பினர்களால் முக்கியபுள்ளியொருவரின் இரகசிய ஆவணங்கள் இன்று இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தன்னையும்,மனைவியயும் கட்டிவத்துவிட்டு ஆவணன்கள் திருடப்பட்டுள்ளன.................. ஆங்கிலத்தில் தான் உள்ளது தெரிந்தவர்கள் மொழிமாற்ற உதவிசெய்யுங்கள் தொடர்ந்து வாசிக்க.................... http://esoorya.blogspot.com/2008/05/two-jv...eal-secret.html

    • 3 replies
    • 1.5k views
  23. மேற்குலகின் கருத்துக்களை புறக்கணித்து வரும் சிறிலங்கா அரசு தற்போது மேற்குலகம் விரும்பாத பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் உதவிகள் எவையுமின்றி தம்மால் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதாக சிறிலங்காவின் நகர்வுகள் தற்போது தீவிரம் பெற்று வருகின்றன. தமிழ்மக்களின் விடுதலைப் போரட்டத்தை நசுக்குவதில் மேற்கு நாடுகள் நிபந்தனை எதனையும் விதிக்காமல் தாங்கள் கேட்கும் உதவிகள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்பதே சிறிலங்காவின் எதிர்பார்ப்பு. போரினூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சாத்தியமில்லை என்பதையும் பேச்சு வார்ததைகள் மூலம் தீhவுகாணப்பட வேண்டும் எனவும் மேற்கு நாடுகள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வந்த போதில…

    • 0 replies
    • 1.1k views
  24. வடக்கு கிழக்கு தமிழர்தாயகப்பிரதேசம் என்ற நிலைப்பாட்டை மாற்றும் பிரதான நோக்கத்துடனே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தி முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று இடது சாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டள்ளது. மேலும் : கடந்த 26வருடங்களுக்கு முன்னர் பானை, விளக்கு என சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இலங்கை வரலாற்றில் மிக மோசடியான வாக்கெடுப்பாக இது அமைந்திருந்தது. வடமேல் மாகாண சபைத் தேர்தலும் மிக மோசமாக சந்திரிகா அரசால் நடத்தப்பட்டது. 1981 இல் யாழ். மாவட்டத்தில் மாவட்ட சபைத் தேர்தலும் அநியாயங்கள், அட்டூழியங்கள் நிறைந்த தேர்தலாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இவை யாவற்றையும் விட மிக மோசமான அடாவடித்தனமான மோசடிகள் மிக்க தேர்தல் ஒன்றை கிழக்கு மாகாணத்தில் மஹிந்த…

    • 0 replies
    • 834 views
  25. விடுதலைப் புலிகளை விரைவில் அழித்தொழிக்க முடியுமென தெரிவித்த இரட்ணசிறி, அரசின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பூரண ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன். இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையெனவும் பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே இருப்பதாகவும் அவர் உறுதியாக தெரிவித்தார். தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் : கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றபட்டது தவறு என்ற நிலைப்பாட்டிலேயே நான் தொடர்ந்தும் உள்ளளேன். எமது மன வருத்தத்தினையும் இதற்காக தெரிவித்தோம். அச்சம்பவம் தவறுதான் என நீதிமன்று கூடத் தீர்ப்பளித்துள்ளது. தமிழர் வெளியேற்றம் தொடர்பில் ஜெயராஜ்புள்ளே தெரிவித்த கூற்றுக்கள் அவரின் தனிப்பட்ட அபிப்பிராயம். அது அரசின் நிலைப்பாடு அல்ல. எமது முன்னைய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.